Monday, April 24, 2017

அரைவேக்காடு

அரசியலில் அரைவேக்காடுகள் அசிங்கங்கள்.. .. வேறெங்குமில்லாத அளவிற்கு இங்கே தமிழகத்தில் கட்சிகள் அதிகம் அதைவிட தலைவர்கள் அதிகம் அதையெல்லாம்விட அவர்களின் பேச்சுக்களும் செயல்களும் அருவருப்பாக இருக்கிறது.. முன் பேசியதை உடனே மறுத்து நான் பேசவே இல்லை என்கிற எச்.ராசா தொட்டு... பொதுதேர்தல் வந்தால் அன்புமணி முதல்வராவார் என்று உளறல்களும்.. பதவிக்காக நேற்று முன்தினம் பேசியதை மறந்து சின்னம்மா என்றாலே அருவருக்கிறது என்கிற அமைச்சர் வீரமணி .. மக்களின் கருத்துக்கேட்டு வாக்குபெட்டியெல்லாம் வைத்து எடப்பாடிக்கு வாக்களித்தவர் அன்சாரி.. திடீரென மாறி பேசும் அவலம்.. இடையிடையே தெர்மாகூல் வேறு.. .. எச்.ராசா போன்ற கேடுகெட்டவர்களுக்கு அவர்கள் மொழியிலேயே பதில் சொல்வதுதான் சரியென நினைக்கிறேன் நாகரீகம் பார்த்து எழுத்தில் அசிங்கத்தை ஏற்றாமல் சொன்னால் அவர்களுக்கு புரியாது.. அம்மணமாக ஏன் ஓடவில்லை என்கிறார்.. அது எங்களுக்குதெரியாது ஆனால் ஓசூரில் குண்டிக்காட்டி பாளையம் என்ற காரண பெயர் வந்ததற்கான வரலாறு தெரியும் எச்.ராசாவிற்கு தெரியவில்லையென்றால் #ராஜாஜியை முழுவதுமாக படித்து தெரிந்துக்கொள்ளலாம்.. .. விவசாயிகளுக்கு திமுக எதுவும் செய்யவில்லை.. இன்றைய பிரச்சனைகளுக்கு திமுக தான் காரணமென மதவெறி பாஜகவும் சாதிவெறி பாமகவும் சொல்வதிலிருந்தே.. அவர்கள் இன்னமும் தெளியாமல் இருக்கிறார்களென்பது புரிகிறது.. காவிரி பிரச்சனையில் நடுவர்மன்றம் அமைத்தது திமுகதான்.. மாநில அரசின் நிதிச்சுமையை ஏற்று ₹7000 கோடி விவசாயகடனை தள்ளுபடி செய்தது இலவசமின்சாரம் .. வி.பி.சிங்.. மற்றும் மன்மோகன் அரசை வலியுறுத்தி ஏறக்குறைய ₹70,000 கோடி கடனை தள்ளுபடி செய்ய வைத்ததும் திமுகதான்.. .. என்ன நடக்கிறது யார் எந்தநேரத்தில் எதை கதைப்பார்களென தெரியவில்லை.. முழுஅடைப்பன்று பள்ளிகள் இயங்காது.. ஸ்கூல் லீவிட்டது கூட தெரியாத.. அமைச்சர்.. அணிகளின் இணைப்பைப்பற்றி பேச குறுஞ்செய்தி அனுப்பியிருக்கிறோம் வைத்தி.. உண்மையிலேயே முடியல..அடிப்படை அறிவில்லாதவர்களை எல்லாம் அரசியல்வாதிகளாக நாம் பெற்றிருக்கிறோம்.. எழுபதுகளின் சினிமா கவர்ச்சியில் சீரழிந்த தமிழகத்தின் தாக்கம் இன்னும் விட்டபாடில்லை.. .. துடைத்தெறியப்படவேண்டியவர்கள்.. மதத்தாலும், சாதியாலும்,கவர்ச்சியாலும் பணத்தாலும் நம்மை சூழ்ந்தவர்கள் நிச்சயமாக அரசியலைவிட்டே ஒழிக்கப்படவேண்டியவர்.. நல்லவர்களை .. நமக்காக உழைக்கிறவர்களை அறிவும்,அனுபவமும் செயல்படுத்தும் திறமையும்..கொண்டவர்களை பின்துணைப்போம்.. .. #அறிவின்துணைக்கொண்டு.. .. தோழர் ஆலஞ்சி...

No comments:

Post a Comment