Sunday, April 16, 2017
அனைத்துக்கட்சி கூட்டம்
அனைத்துக்கட்சி கூட்டம்..
விவசாயிகள் பிரச்சனையை சட்டமன்றத்திலேயே பேசி இருக்கலாமே.. விவசாயிகள் பிரசிசனைக்கு காரணம் திமுக தான்.. கூட்டம் நாடகம்.. அரசியல் செய்வதற்காகவுமம கூட்டணியை உறுதிப்படுத்தவும்..
இப்படி சிலர் தங்கள் இயலாமையை மறக்க புழுங்குகிறார்கள்..
யார்.. இவர்கள் எதையாவது இதுவரை சாதித்திருக்கிறார்களா.. அல்லது தெளிவான சிந்தனையோ அல்லது தெளிவான கொள்கையையோ கொண்டிருக்கிறார்களா.. அல்லது மக்களின் செல்வாக்கை பெற்றவர்களா.. என்றால் இல்லை..
..
உண்மையில் திமுகவிற்குதான் அத்தனை தகுதியும் இருக்கிறது.. ஆம்.. விவசாயசங்க தலைவராக இருந்த நாராயணசாமி நாயுடு அவர்கள் விவசாயிகளுக்கு மின்இணைப்பிற்கான தொகை கூடுதலாக இருக்கிறது மின்அளவை மீட்டருக்கு ஐந்து பைசாவாவது குறைக்கவேண்டுமென்று கேட்டபோது .. கலைஞர்தான் இலவச மின்சாரத்தை தந்து இந்தியாவிற்கே வழிகாட்டினார்.. ஒட்டுமொத்தமாக ₹7000 கோடியை தள்ளுபடி செய்து மொத்தமாக தள்ளுபடி செய்யமுடியுமென இந்தியாவிற்கே வழிகாட்டினார்.. நிலவரி என்று வருடாவருடம் வசூல்செய்வதை நிறுத்தியவர்.. காவிரியில் தூர்வாரியது கூட (சோழர்காலத்திற்கு பிறகு) கலைஞர்தான் திமுக தான்..
காவிரியில் தடுப்பணைகள் கட்டி முறைபாசனத்திற்கு தண்ணீர் பெருமளவில் பயன்பட காரணம் திமுகதான்..
சொல்லிக்கொண்டே போகலாம்..
..
அரசியல்வாதிகள் என்ற பெயரில் அரசியல்வியாபாரிகள் முதலும்முடிவும் எது என்று தெரியாதவர்கள்.. எதற்கெடுத்தாலும் திமுகவை குறைகூறுகிறார்கள்.. வி.பி.சிங் ஆட்சியின் போதுதான் நடுவர்மன்றத்தை திமுக பலத்த எதிர்ப்புகிடையே கொண்டுவந்தது..அப்போது அதை எதிர்த்தவர்தான் ஜெயலலிதா.. அரசு மாறி மாறி வரும்போதெல்லாம் ஜெயலலிதா எதிர்நிலைப்பாட்டை எடுத்ததன் விளைவு இன்று தண்ணீருக்காகவும் பட்டகடனுக்காவும் உழவர்கள் போராட வேண்டியிருக்கிறது ..
இப்போதுகூட வங்கத்தை சேர்ந்த எம்பி தமிழகத்தில் 400 விவசாயிகள் மரணம் அடைந்திருக்கிறார்கள் மத்தியஅரசு கண்டுக்கொள்ளவில்லையென சரியான நிவாரணம் வழங்கவில்லை என பேசும் போது குறிக்கிட்டு தம்பிதுரை என்ற அடிமை
இறந்த விவசாயிகள் 17 பேர்தான் என மத்திய அரசிற்கு ஒத்தூதுகிறது..
..
#ஏப்ரல்25 பொது வேலைநிறுத்தம்..சில கட்சிகளும் பெயரில்லாதஇயக்கங்களும் புறக்கணிக்கலாம் ஆனால் மிக முக்கியமாக அங்கீகரிக்கப்பட்ட கட்சிகள்.. காங்கிரஸ் இடதுசாரிகள்.மற்றும்அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளும் சில அமைப்புகளும் போராட்டத்தில் கலந்துக்கொள்ளும் இது மக்களுக்கான போராட்டம். ஒரு மாதத்திற்கு மேலாக தலைநகரில் அம்மணமாய் அரைகுறை ஆடையோடும் போராடும் உழவனுக்காக என்பதை கருத்தில் கொள்ளவேண்டும்.. உணவு வழங்கிய உழவனை சந்திக்க மறுக்கிற பாசிச அரசை பணியவைக்க வெகுமக்கள் இந்த போராட்டத்தில் .. தாமாக முன்வந்து கலந்து கொள்ளவேண்டும்..
சில அரைகுறைகளும் விவரகேடுகளும் எதாவது உளறிக்கொண்டிருந்தாலும்.. நாம் நம் கடமையை செய்வோம்..
// 1,76,17,060 பேர் வாக்களித்த அதிமுக கூட்டாத காரணத்தால்.....
1,71,75,734 பேர் வாக்களித்த திமுக கூட்டுகிறது //
கட்டிவச்ச காசை திரும்ப பெற முடியாதவர்கள் கொக்கரிக்கிறார்கள்.. கூச்சலிடுகிறார்கள்.. பாவம் அழைக்கவில்லை என்ற ஆதங்கத்தில் ஏதேதோ பேசுகிறார்கள்..
#விட்டுதள்ளுங்கள்_கையாலாகாதவர்களை..
..
#ஏப்ரல்25_மாபெரும்போராட்டம்..
..
தோழர் ஆலஞ்சி..
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment