Thursday, August 31, 2017

செய்தவினை

மோடியின் தோற்றுப்போன பணமதிப்பிழப்பு .. #demonetiation.. இந்த அறிவிப்பு வந்தவுடன்.. புதிய இந்தியா பிறந்தது வாழ்த்துக்கள் மோடி ஜி புதிய இந்தியா பிறந்தது என தமிழக சூப்பர்ஸ்டார் ரஜினி சொன்னார்.. 50 நாட்கள் தாருங்கள் இல்லையெனில் என்னை எரித்துவிடுங்கள் என்றார் மோடி.. நடந்தது என்ன.. .. அன்றே .. பொருளாதார நிபுணர் பாரதபிரதமராக இருந்த மேன்மை மன்மோகன் சிங் பாராளுமன்றத்திற்கு வந்து எச்சரித்தார்.. புள்ளிவிவரத்தோடு நிதியமைச்சராக இருந்த ப.சிதம்பரமும். ரிசர்வ் வங்கி கவர்னர் ரகுராம் ராஜன் எச்சரித்தார்கள்.. யார் பேச்சையும் கேட்காமல் ஒற்றை இரவில் மக்களை நடுத்தெருவில் நிற்க வைத்த கோமாளியின் செயல் இன்றுதான் மக்கள் உணர்ந்திருக்கிறார்கள்.. 1% விகிதம் கூட கருப்புபணம் இல்லை.. வெட்கிதலைகுனிந்து மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டியவர்கள்.. மோடி மட்டிமல்ல.. மோடியை தூக்கிவைத்து கொண்டாடியவர்களும்தான்.. .. 16000 கோடி கருப்பு பணத்தை கண்டுபிடிக்க 26000 கோடி புதிய நோட் அடித்தவர்கள்.. இதிலிருந்து நாடு யாருடைய கைகளில் என புரிந்திருக்கும் விவரகேடுகளின் கையில் நாடு.. மாட்டை புனிதமென்கிறவர்களின் அறிவு வேறெப்படி இருக்கும்.. .. அதுசரி.. எச்.ராசா.தமிழிசை பொன்னர் ராகவன்.. யார் மண்ணெண்ணையை வாங்கி கொடுக்க போகிறார்கள்.. மயக்கும் பேச்சில் இருக்கும் கவனம் செயலில் இல்லை.. .. அறிவுசார் கூட்டத்தை வேண்டாமென வைத்து.. பொய்யை ரசித்து பேசி மயக்குகிற.. மதத்தின் பேரில் கட்டுகதைகளை நயம்பட சொல்லி நம்பவைக்கிற.. கடவுளைச்சொல்லி கதை பேசிய கயமை கூட்டத்தை.. வாய்ச்சொல் வீரரை. இல்லாத ஒன்றைச்சொல்லி ஊழல் ஊழல் என கூக்கிரலிட்டு கடைசியில் ஊதவாகரைகளை ஆட்சியில் அமர்த்தியிருக்கிறோம்.. #செய்தவினை .. #demonetiation_failure.. .. தோழர். ஆலஞ்சி

No comments:

Post a Comment