Wednesday, August 30, 2017
ஆட்சியை தொடர விட கூடாது
ஆளுநருக்கு தொல்லை கொடுக்ககூடாது பிஜேபி ராசா.. ஆளுநர் மாளிகையை அரசியல் மேடையாக்காதீர் தமிழிசை..
நன்று..
ஆளுநர் தனக்கு வழங்கப்பட்டிருக்கிற அதிகாரத்தை சரியாக பயன்படுத்துகிறாரா.. சசிகலா தனக்கு பெரும்பான்மை எம்எல்ஏக்கள் ஆதரவு இருப்பதாக சொன்ன போது நியாயமாக நடந்துக்கொண்டாரா. பக்கா அரசியல்வாதியை போல நடந்துக்கொள்ளவில்லையா.. பாஜக ஆளும் மாநிலங்களில் உத்ரகாண்டில் நடந்ததென்ன.. அரசியல் விளையாட்டை ஆளுநர் மாளிகை தானே நடத்தியது..
ஆளுநர் சட்டபடிதான் நடந்துக்கொள்வதாக சிவர் சொல்கிறார்கள் இதே கவர்னர் முன்பு நடந்துக்கொண்ட விதம் சரியானதுதானா என்றால் மௌனம் தான் பதில்..
..
அதிமுக எம்எல்ஏக்கள் அணி மாறியோ அல்லது கட்சி அவர்களை நீக்கி இருந்தால் நம்பிக்கை வாக்கு கோர சொல்வேன் என்கிறார்.. ஆம் கவர்னர் சொல்வது சரிதானே என நினைக்க தோன்றும்.. அரசுக்கெதிராக இல்லை எடப்பாடிக்கெதிராக என்று அவர்கள் எழுதி தந்துவிட்டபிறகு எடப்பாடி தார்மீகமாக பெரும்பான்மையை இழக்கிறார்.. அரசை கலைக்க சொல்லவில்லை மாறாக முதல்வரை மாற்ற கோரிக்கை வைத்திருக்கிறார்கள்.. தினகரன் தரப்பு எம்எல்ஏ பதவியை விட தயாரில்லை..இனி எக்காலத்திலும் வர இயலாதென்பதறிந்து முதல்வரை மாற்ற வேண்டுமென கேட்கிறார்கள் .. முதல்வரை மாற்ற கட்சிக்குள் தீர்மானித்துக் கொள்ளுங்களென கவர்னர் சொல்லிவிட்டார்..
எடப்பாடி பெரும்பான்மை இழந்து தொடர்கிறார்.. காரணம் தினகரன் ஆட்களின் கடிதம் அவரை தொடர வைக்கிறது ஆனால் இதே போல் உத்ரகாண்டில் நடந்தபோது கவர்னர் பெரும்பான்மையை நிரூபிக்க உத்தரவிட்டார்..
அதாவது கவர்னரை தங்கள் சொல்படி..ஆடவைத்திருக்கிறது மத்தியரசு
..
திமுகவின் பக்கம் ஆளுநர் காயை நகர்த்தியிருக்கிறார் அதாவது இனி திமுக நம்பிக்கை இல்லா தீர்மானத்தை கொண்டுவரலாம் அதற்கு கவர்னரின் அனுமதி தேவையில்லை ஆனால் கொண்டுவந்தால் வெற்றி பெறும் சூழல் இருக்கிறதா என்றால் தினகரன் ஆட்களை மட்டுமல்ல.. அந்த மூவரையும் கூட நம்பமுடியாது .. ஒருமுறை நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவந்துவிட்டால் அடுத்த ஆறுமாதத்திற்கு இடையில் கொண்டுவரமுடியாது.. ஆனால் காங்கிரஸ் முஸ்லீம் லீக்கை கொண்டுவர சொல்லலாம்..
அப்போதும் தினகரன் ஆட்கள் நம்பிக்கைக்குரியவர்களாக நடந்துக்கொள்வார்களென சொல்லமுடியாது..
..
19 அதிமுக எம்எல்ஏக்களை தகுதிநீக்கம் செய்ய துணை சபாநாயகர் நோட்டீஸ் அனுப்பியிருக்கிறார். திமுகவின் 21 பேரை இடைநீக்க செய்ய முயற்சிக்கிறார்கள்.. முன்கூட்டியே நீதிமன்றம் சென்று தடையாணை பெறவேண்டும்..
..
மிகவும் கவனமாக ...கவனமாக புரிந்துக்கொள்ளுங்கள்.. திமுக நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டுவரவேண்டும் வந்தால் வெற்றி உறுதி என்கிற நிலையை முதலில் உருவாக்கவேண்டும்.. அவர்கள் வழியிலேயே செல்லலாம்.. நியாயமான வழிகள் அடைப்படும் போது அவர்களின் வழிகளையே நாம் பின்ப்பற்றலாம்.. தவறில்லை நாடு மிக கேவலமாக போய்க்கொண்டிருக்கிறது..
இருக்கிற காலத்தை எப்படியேனும் கரைசேர்க்க எந்தளவிற்கு செல்ல தயாராக இருக்கிறார்கள் எனும் போது இனியும் பொறுப்பதில் பலனில்லை..
..
#இனியும்_தேவையா_இந்தஆட்சி …
..
தோழர். ஆலஞ்சி
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment