Saturday, August 26, 2017
ஹரியானா எரிகிறது
பற்றி எரிகிறது..
நவீன இந்துத்துவாவின் தேசம்.. சிறுமியை வன்புணர்வு செய்த அயோக்கியனுக்காக.. பாஜகவிரின் வரிந்து கட்டல் சகிக்கவில்லை.. அவருக்கு பின்னால் இருக்கும் லட்சக்கணக்கான மூடர்களை கணக்கில் கொள்ளவில்லையென பாப்பான் சுப்ரமணியசுவாமி சொல்வது அபத்தத்தின் உச்சம்..
ஹரியானா பஞ்சாப் டெல்லி என வன்முறையில் காவிகள்.. கொஞ்சம் கூட யோசிக்காமல் ஆன்மீகமென்ற பெயரில் நடத்தும் வெறிச்செயலை எல்லோரும் கண்டிக்கவேண்டும்.. பாஜகவிற்கு வாக்களித்தால் ஏற்படும் தீமைகள் இப்போது என் தேசம் உணர தொடங்கியிருக்கிறது.. மதம் சொல்லி மயக்கி பக்தியென்ற போர்வையில் செய்யும் காலித்தனத்தை தெய்வத்தின் பெயரில் மன்னிக்க .. அல்லது மறக்க வைக்கும் கேடுக்கெட்ட செயலை பாஜக செய்வது இந்திய இறையாண்மைக்கு எதிரானது..
..
பாஜக வின் முகம் மக்களுக்கு தெரிய தொடங்கியிருக்கிறது மதத்தின் பெயரில் காமகொடூரனை பின்துணைப்பதிலிருந்தே அதன் உண்மை சொரூபம் விளங்க தொடங்கியிருக்கிறது.. சாமியார்களை தெய்வமாக பார்க்க தொடங்கினால் இதுதான் நடக்கும்.. காமம் தலைக்கேறியவனாலேயே சிறுவயது குழந்தையை......
இவனுக்கு எந்த மிரட்டலுக்கும் அஞ்சாமல் தண்டனை வழங்கிய அந்த நீதியரசர் ஜெகதீப் சிங் அவர்களுக்கு நன்றி..
பஞ்சாப் ஹரியானா உயர்நீதிமன்றம் மோடி அவர்களே நீங்கள் பாஜகவின் பிரதமர் அல்ல இந்தியாவின் பிரதமர் என சொல்லியிருக்கிறது.. ஆம் பாஜகவின் பிரதமராக .. மதவாதி சக்திகளின் கைப்பாவையாக தான் செயல்படுகிறார்
..
மதத்தை கவசமாக்கி கொண்டு காமலீலைகளில் கொலை கொள்ளைகளில் ஈடுபடுவது எல்லா மதத்திலும் சர்வசாதாரணமாகிவிட்டது இவர்கள் செய்யும் தவறுகளை மூடி மறைக்க மதத்தை கவசமாக்கும் அநியாயம் நடக்கிறது இவர்களின் ஆதரவாளர்கள் சப்பைக்கட்டு சகிக்கமுடியவில்லை.. இவர்களை ஆதரிப்பவர்கள் மிகவும் ஆபத்தானவர்கள்.. கொட்சமும் சிந்திக்காமல் ஆன்மீகவாதிகளுக்கு துணை போகிறவர்கள் வெறுக்கப்படவேண்டியவர்கள்..
..
தமிழகம் இதுபோன்ற சூழல்கள் வந்த போது அறிவுக்கொண்டு செயல்பட்டது.. பிரமானந்தாவை கைது செய்த போதும் நித்யானந்தாவை எதிர்த்து நின்று கைது செய்ய சொன்னபோதும் .. ஜகத்குரு காமகோடி ஜெயேந்திரரை கைது செய்து சிறையிலிட்டபோதும்..இப்போது பிஜே எதிரான ஆடியோ வெளியாகியாக போதும் அதை அதன் போக்கில் விட்டு அமைதியாய் இருந்தது தமிழகம்.. காரணம்.. இது பெரியார் நாடு
..
இந்த பக்குவப்பட்ட தமிழ் மண்ணை கலவரங்களை கொண்டு சிதைக்க மதவெறியை ஜாதிவெறியை கொண்டு சீரழிக்க பாஜக முயன்று தோற்று வருகிறது..இப்போது புரியுமே பாஜக தேசத்தின் புற்றுநோய் என்று.. தமிழக மக்கள் தொடர்ந்து மதவாத சக்திகளை புறக்கணிக்கவேண்டும்...
இல்லையெனில் .. ஹரியானா போல எரியும்..
#எச்சரிக்கை
..
தோழர். ஆலஞ்சி
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment