Tuesday, August 1, 2017

கேடுகெட்டவர்கள்

அமைச்சர் விஜயபாஸ்கர் சொத்துகள் முடக்கம்.. வருமானவரித்துறை சோதனையும் அதை தொடர்ந்து அவரது குவாரி மற்றும் சொத்துகளை முடக்கியிருக்கிறது வருமானவரித்துறை... .. ஊழலுக்கெதிராக பொங்குகிற மோடி அரசு அமைதுகாக்கிறது.. என்ன காரணம் தமிழக அரசும் முதல்வர் எடப்பாடியும் இதுகுறித்து கருத்தேதும் சொல்லவில்லையே ஏன்.. 2ஜி வழக்கில் விசாரணை நடக்கும் போதே விலக சொன்ன நடுநிலைகளும்.. துருவி துருவி விசாரித்தும் ராசாவிடம் ஒரு பைசா கூட அதிகமாய் முறைகேடாய் சொத்து சேர்த்ததாக கண்டெத்த முடியவில்லை.. ஆனால் கோடி கோடியாய் பணமும் சொத்து ஆவணங்களும் கண்டெத்தி அதை முடக்கிய பிறகும்.. ஊழலுகிகெதிராக பொங்குகிறவர் நவதுவாரங்களையும் மூடிக்கொண்டிருக்கிறார்களே ஏன்.. எத்தனை விழுக்காடு கமிஷன் என விகிதம் வைத்து பிரித்துக்கொண்டார்களா அல்லது குருமூர்த்திகளிடம் சரண்டர் ஆகிவிட்டார்களா.. .. அதிமுக அமைச்சர்களை முறையாக விசாரித்தால்.. இன்னும் நிறைய பேர்களின் சொத்துக்களை முடக்கநேரிடும்.. ஆம் அக்கட்சியின் தலைவியே ஊழல் செய்து முறைகேடாக சொத்து சேர்த்தாரென்றுதான் முதல்வர் பதவியை பிடிங்கி கொண்டு சிறைக்கு அனுப்பபட்டார்.. அவரின் வாரிசுகள் இது கூட செய்யவில்லையென்றால் எப்படி.. இதில் ஜெயகுமார் வேறு திமுக தான் முதன்முதலாக ஊழலுக்காக கலைக்கப்பட்டதாக சொல்லி திரிகிறார்.. திமுக கலைக்கப்பட்டகற்கு ஊழல் அல்ல காரணம் எமர்ஜென்சி.. அப்போது குறிறம் சாட்டிய எம்ஜிஆர் நீதிமன்றத்தில் பத்திருக்கையில் வந்ததைதான் நானும் சொன்னேன் என்று பல்டி அடித்ததெல்லாம் ஜெயகுமாருக்கு தெரியாது.. ஊழலுக்கு ஒருமுறையல்ல இரண்டுமுறை பதவி நீக்கம் செய்யப்பட்டவர் இந்தியாவிலேயே ஜெயலலிதா தான் ஒரு முறை உச்சநீதிமன்றமும்..ஒரு முறை விசாரணை நீதுமன்றமும் பதவியை பிடிங்கிகொண்டு சிறையில் தள்ளியது இதெல்லாம் தெரியாமல் அல்ல உயிரோடிருந்த போது காலில் விழவைத்த ஜெயலலிதாவை இப்போதாவது காரி உமிழவேண்டுமென்பதற்காக பேசுகிறார் போலும் .. .. ஊடகங்கள் திமுகவென்றால் நிரூபிக்க முடியாமல் போனாலும் தொடர்ந்து விமர்சனம் செய்வதும் ..அதிமுக என்றால் நிரூபிக்க தண்டனை வழங்கப்பட்டாலும் வாய்மூடி நிற்பதும் கேவலமான செயல்.. இதே நிலையைதான் சிலர் மனநோய் பாதிக்கப்பட்டவர்கள் போல திமுகவை தொடர்ந்து ஆதாரமில்லாமல் வசைபாடிக்கொண்டே இருப்பார்கள்.. .. மத்திய அரசும் அதிமுகவை மிரட்டி பணியவைக்க அவர்களின் தவறுகளை ஊழல்களை பயன்படுத்துகிறது அதன் மூலம் தாங்கள் நினைத்ததை சாதித்துக்கொள்கிறார்கள்.. ஐம்பது வருடங்களாக எதையெல்லாம் இழந்தார்களோ அதையெல்லாம் முறைகேடாக அடைய அதிமுகவினரை பயன்படுத்துகிறார்கள்.. .. #கேவலமானஆட்சியும்_கேடுகெட்டவர்களும் .. தோழர். ஆலஞ்சி

No comments:

Post a Comment