Sunday, August 20, 2017

தளபதியை நம்புங்கள்

திமுக இன்னமும் ஏன் அமைதியாக இருக்கிறது என சில நண்பர்களின் பதிவில் பார்க்க நேர்ந்தது.. திமுக சரியாக செயல்படுவதாகவே எண்ணுகிறேன்.. சட்டமன்றத்திலும் சரி வெளியிலும் சரி மிகச்சரியான ஜனநாயக நெறிமுறைகளை பின்பற்றும் அதே நேரம் எதிரிகளை அவர்களை கொண்டே நாங்கள் தகுதியில்லாதவர்களென சொல்லவைக்கும் தந்திரத்தை கையாள்கிறது.. எப்படி. ஓ.பி.எஸ் யோக்கியரைப்போல ஊடகங்கள் சித்தரிக்க முயன்ற போது தைரியமாக ஆட்சிநடத்துங்கள் நாங்கள் இருக்கிறோம் ஆட்சியின் ஆயுள்காலத்தை பூர்த்தி செய்யலாமென்ற போது அதில் உள்ள சூட்சமத்தை வெகுசிலரே அறிந்தர் அதிமுகவின் அடிப்படை சித்தாந்தமான திமுக எதிர்ப்பை மறந்து மௌனம் காத்ததே பன்னீருக்கு வினையாகி.. பன்னீர் நீங்கள் நினைக்கிற அளவிற்கு தகுதியுடையவரல்ல என்ற நிலைக்கு வந்திருக்கிறார். .. இந்த ஆட்சிக்கு எதிராக பன்னீரையே பேசவைத்ததும் ஊழல் ஆட்சியென்று போராட்டமே நடத்த போவதாக பன்னீரை சொல்வைத்திருக்கிறது பாருங்கள் அதில்தான் வெற்றி அடங்கியிருக்கிறது.. இந்த அரசின் மீதும் .. அதிமுக தலைவர்கள் மீதும் மக்கள் வெறுப்பை காட்ட கொஞ்சம் அவகாசம் தருவது இன்றைக்கு இருவரும் இணைந்தாலும் ஒருவர் மீது மற்றொருவர் நம்பிக்கையில்லாமல் நடந்துக்கொள்வார்கள்.. .. திமுக அதிமுகவை உடைத்து ஆட்சியை பிடித்திருநிதால் மக்களின் மனங்களில் வெறுப்பையும் கசப்பையுமே பெற்றிருக்கமுடியும்..காத்திருத்தல் என்பது கொக்கின் பொறுமையைப்போல.. உறுமீன் வரும்வரை காத்திருப்பது.. இன்றைய அவலங்களை எல்லாம் மக்கள் உணர்ந்திருப்பதால் தான் அதை எதிர்க்கட்சிகள் அறிந்திருப்பதால்தான் ஸ்டாலின் முதல்வராக வருவாரென அவர்கள் வாயாலேயே சொல்லவைத்திருக்கிறது... இந்த சூழலிலும் அதிமுக எம்எல்ஏக்கள் யார் இருந்தாலும் பரவாயில்லை ஆட்சி நீடிக்கவேண்டுமென விரும்புவது இனி எந்தகாலத்திலும் நம்மால் சட்டமன்றம் செல்லமுடியாது நம் கட்சியால் ஆட்சிக்கு வரமுடியாது என்ற ஒற்றை விடயமே அமைதியாக இருக்கிறார்கள்..அவர்களை பணம் பதவி ஆசைக்காட்டி அழைத்தால் ஓடிவந்துவிடுவார்கள்.. அது திமுக மீதும் தளபதிமீதும் மக்கள் கொண்டுள்ள நம்பிக்கையில், அன்பில் கேடு விளைந்துடும் நாகரீகமான அரசியலும் நேர்மையும் தெளிவான திடமான நோக்கும் எதை எப்போது செய்யவேண்டுமென்ற அறிவும்.. நீண்டநாள் நிலைத்து நிற்கும்.. .. #தளபதியை_நம்புங்கள்_நல்லதே_நடக்கும்.. .. தோழர். ஆலஞ்சி

No comments:

Post a Comment