Tuesday, August 15, 2017

விடுதலை உரை

வாய்கூசாம பொய் பேசுறத கேட்கவே August 15& January 26th விடுமுறை நாட்களாக அறிவிக்கபடுகிறது.. பேராசிரியை Sylvia Nithia Kumari... .. பிரதம மந்திரி மாதிரி பேசுங்கள் என்றால் மந்திரவாதி மாதிரி பேசுகிறார் ஊழல்வாதிகள் கண்டு ஓடுகிறார்கள் என்கிறார்.. வியாபகம் ஊழல் சத்திஷ்கர் அரிசி ஊழல் என சந்தி சிரிக்கிறதே என்றால் மவுனம்.. வேறொரு கட்சியில் சார்பில் நின்று வெற்றிபெற்றவரை விலைக்கு வாங்குகிறீரே என்றால் பதிலை காணோம்.. மாட்டுக்கு ஆம்புலன்ஸ் வசதி செய்து கொடுத்தீரே மனிதனை பிணமாய் சுமந்து தெருக்களில் நடக்கிறானே அது தேசிய அசிங்கமில்லாயா என கேட்டால் பதில் இல்லை.. அரிசி ஊழல் 2 லட்சத்து 50 ஆயிரம் கோடி எங்கே .. பண மதிப்பிழப்பு செய்து மக்களை சாகடித்தீரே இப்போது அதனால் ஐந்து லட்சம் கோடி இழப்பென்கிறார்களே.. கருப்புபணத்தை மீட்பதாக சொல்லி கருப்புபண முதலாளிகளுக்கு சிவப்புகம்பளம் விரிப்பதேன்.. .. வாயை திறந்தால் பொய்யை தவிர ஏதுவும் பேசுவதில்லை என்ற சபதமோ.. இதற்கு முன் மூன்று சுதந்திர தின உரையை ..மோடி அவர்களே திருப்ப கேட்டுபாருங்கள் எதையாவது சாதித்திருக்கிறீர்களா நிறைவேற்றியிருக்கிறீர்களா.. 2018 சாதாரணமாக விடியாதென்கிறீர்.. ஏன் மிகப்பெரிய திட்டம் எதாவது மக்களை தெருவில் அலையவிட உயிரை கையில் பிடித்துக்கொண்டு ஓட வைக்கபோகிறீர்களா... .. நாடி நரம்பெல்லாம் பொய்யில் ஊறியவரிடமிருந்துதான் இப்படி பொய் பேசமுடியும்.. இந்திய ராணுவம் அந்நியநாட்டில் பீரங்கி பழுதாகி நின்றதே வெட்கபடவேண்டாமா.. 10 நாட்களுக்கு வெடிபொருள் இல்லை அதுவும் பழைய கலாவதிகட்டத்தில் இருக்கிறது ..என்ற அறிக்கைக்கு பதிலே சொல்லவில்லையே.. 63 நாடுகள் பயணம்.. 1400 கோடி செலவில் சுற்றி வந்தீரே.. என்ன சாதித்தீர்கள் அதை அறிக்கையாக மக்கள் மன்றத்தில் நாடாளுமன்ற அவைகளில் சொன்னதுண்டா.. கஷ்மீருக்கு வந்தால் என்ன செய்ய முடியுமென்கிறானே சீனாகாரன் .. என்ன சொல்லபோகிறீர்.. இதற்கெல்லாம் பதில் இல்லை.. .. மாட்டை காரணம் காட்டி மனிதஉயிரை குடிக்கிறார்கள்.. பச்சிளந்தளிர்கள் சுவாசகாற்றில்லாமல் சாகிறது.. தலித் பெண்களை நிர்வாணமாக்கி தெருக்களில் ஓடவிடுகிறான்.. ஆனால் தலித்தை தாக்குகிறவர்கள் என்னை முதலில் தாக்குங்களென வசனம் எப்படி முடிகிறது.. மாட்டிறைச்சிக்காக மனிதர்கள் தாக்கப்படுவதை ஏற்கமுடியாதென ஏகவசனம் பேசமுடிகிறது... எல்லாம் வாய்சவடால்.. .. ஐந்தாண்டுகளில் புதிய இந்தியாவை உருவாக்க 125 கோடிமக்களும் சேர்ந்து உழைக்கவேண்டும் சரி.. முதலில் காவி வேடம் கட்டினால் எதுவும் செய்யலாம் யாரும் எதுவும் கேட்க மாட்டார்கள் என்ற எண்ணத்தை மாற்றி முதலில் கலவரத்தில் ஈடுபடுகிற.. கலவரத்தை தூண்டுகிற கயவர்களை தண்டிக்க உத்தரவிடுங்கள்.. தானாகவே இந்தியா ஒளிரும்.. .. இதுவரை இந்தியா கண்ட பிரதமர்களிலேயே கூச்சமே இல்லாமல் பொய் பேசும் பிரதமர் மோடிதான்.. #வாய்ச்சொல்லில்_வீரரடி… .. தோழர். ஆலஞ்சி

No comments:

Post a Comment