Tuesday, August 15, 2017

தளபதி..

தேர்தல் நடத்தினால் 1000 கோடி செலவாகும் முதல்வராக விரும்புகிற ஸ்டாலின் புரிந்துக்கொள்ளவேண்டும்.. ராயபுரம் ஜெயகுமார்.. .. அவரை அறியாமலேயே ஒரு உண்மையை ஒப்புக்கொண்டிருக்கிறார்.. தேர்தல் வந்தால் ஸ்டாலின் தான் முதல்வர் என்பது எல்லோருக்கும் தெரிந்ததுதான் அதை தடுக்க சிலர் ஜோசியத்தை சொல்லி குழப்புகிறார்கள் சிலர் காழ்ப்புணர்ச்சியால் வாய்க்குவந்ததை சொல்லி தங்களுக்குள் திருப்திப்பட்டுக்கொள்கிறார்கள் .. உண்மை என்னவோ மக்கள் இந்த அதிமுக அடிமைகளை துரத்த தயாராக இருப்பது உள்ளங்கை நெல்லிக்காய்.. .. அதிமுகவை மிக அழகாக சிதைத்து அந்த இடத்தை பிடித்துக்கொள்ளலாமென்ற பாசிச பாஜகவின் எண்ணத்தில் தொடர்ந்து தொய்வு ஏற்படுவதன் காரணம் பாவம் அவர்களுக்கு புரியவில்லை எம்ஜிஆரை பாசிச சக்திகள் திமுகவை உடைத்து வெளியே கொண்டுவந்த போதுகூட அவர்களின் அஜந்தாவை செயல்படுத்த முடியவில்லை.. அதன் பின் பாப்பாத்தி ஜெயலலிதாவை உள்ளே திணித்தபோதும் எல்லையை மீறி செயல்படமுடியவில்லை.. காரணம் தமிழகம் பெருங்கிழவனின் பெருந்தொண்டால் இங்கே ஆரியமோ பாசிசமோ மதவெறியோ ஜாதிய பார்வையோ ஒரு குறிப்பிட்டஅளவை தாண்டி பேசவோ செயல்படவோ முடியாமல் போகும். அந்தளவிற்கு இந்த சமுதாயத்தை செப்பனிட்டு வைத்துவிட்டுபோனான் எங்கள் #பேராசான்.. .. திமுகவை தொடர்ந்து விமர்சனம் செய்தும் ஊழல் சொத்து என்றெல்லாம் அடுக்கடுக்காய் விமர்சனம் செய்தும் மீண்டும் எழுந்துநிற்கிறதே ஏன் என்று தெரியுமா.. இவர்கள் சொல்லும் குற்றசாட்டுகள் இதுவரை நிரூபிக்கவே முடியாமல் நீர்த்துபோய்க்கொண்டே இருக்கிறது எந்த குற்றசாட்டை சொன்னாலும் அது ஆரம்பகட்டத்தில் ஊடகங்கள் ஊதி பெரிதாக்கினாலும் கடைசியில் காற்றுப்போன பலூனைப்போல பயனற்றுபோய் பார்க்கிறோம் திமுக கொள்கையால் இந்த சமுதாய மக்களின் செல்வாக்கால் அவர்தம் மனதின் அடித்தளத்தில் எப்போதும் செயலாற்றுகிற நாம் தூக்கியெறிந்தாலும் தோளோடு அணைத்து நின்றாலும் தொடர்ந்து மக்கள்சேவையில் பணிசெய்து கிடப்பதே அதன் நிலைநிறுப்பிற்கு காரணம்.. .. அதனால் எதிரிகள் கூட சிலநேரம் அவர்களை அறியாமலேயே உண்மையை சொல்லிவிட்டு போகிறார்கள் .. தளபதி தமிழக மக்களின் நம்பிக்கை மட்டுமல்ல அவர்களின் ஆசையும் கூட இந்த கேடுகெட்டவர்களை விரட்டியடிக்க அவர்கள் கையில் கிடத்திருக்கும் ஒரே ஆயுதம்..எப்போதும் உழைப்பை மட்டுமே நம்புகிற .. எல்லோருக்கும் பிடித்தமான எல்லோரும் விரும்புகிற ..எதிரியும் மயங்கி நிற்கிற பேராற்றல் கொண்டவர் எங்கள்தளபதி.. இல்லை..மக்களின் தளபதி.. .. காத்திருக்கிறது தமிழகம். #தளபதி_எல்லோர்க்கும்_பெய்யும்_மழை.. .. தோழர். ஆலஞ்சி

No comments:

Post a Comment