Thursday, August 10, 2017
இஸ்லாமிய இயக்கங்கள்
தலைவர்கள் சிந்தனைக்கென்று..நண்பர் Abu Haashima சில கருத்துக்களை பதிவிட்டிருந்தார்
ஏன் அனைத்து இஸ்லாமிய இயக்கங்களும்
மனித நேய மக்கள் கட்சி எஸ்.டி.பி.ஐ.கட்சி
அன்சாரி கட்சி தேசிய லீக் கட்சி .....
தாய் சபை என அறிய படுகிற IUML முஸ்லீம் லீக்கோடு இணைந்து செயலாற்றலாம் என்று சொல்லியிருந்தார்..
#நன்று..
..
தமிழகத்தில் முஸ்லிம் இயக்கங்களின் எண்ணிக்கை அவர்கள் விகிதாசாரத்தை விட அதிகளவில் இயங்குகிறதென்றே சொல்ல தோன்றுகிறது.
100 பேருக்கு ஒரு கட்சி என்று கூட கிண்டலடிக்கிற நிலைமை.. உண்மையில் இஸ்லாமிய மக்களுக்கான இயக்கமாக எதுவுமே இல்லையோ என தோன்றுகிறது..
லீக் பிரிவினையில் அதிகார பகிர்வே காரணமாக இருந்ததும் (தேசிய அளவில் கூட)
அதை தொடர்ந்து பலவீனமானதும் யாவரும் அறிந்ததும் தான்.. முதலில் முஸ்லிம்களிடைய ஒற்றுமை உணர்வு இல்லை அதைவிட யார் சமுதாயத்திற்கு சரியான வழிகாட்டுவார்களென்ற தெளிவில்லை அரசியலில் பலத்தை நிரூபித்தால் மட்டுமே பெரிய கட்சிகள் கண்டுக்கொள்ளும் என்கிற யதார்த்தத்தை உணராத சமூகமாகவே இருக்கிறது...
..
எந்தவொரு சமூகமும் பிறரால் வீழ்ந்ததாக இல்லை சொந்த சமூகத்தினரின் செயல்களும் ,துரோகங்களும் மற்றவர்கள் மீதான அதீத நம்பிக்கையும் அந்த சமூகத்தின் வீழிச்சியை நோக்கி தான் இருக்கும்.. கருத்துவேறுபாடுகள் நல்ல தெளிவான சரியான பாதையை தரலாம்
ஆனால் கொள்கை முரண்கள் வழிநெடுக முட்செடிகளை நட்டதைபோல ஆகிவிடும்..
..
பிற மாநிலங்களில் இல்லாத அளவிற்கு தமிழகத்தில் இஸ்லாமிய அமைப்புகள்/கட்சிகள் வளர என்ன காரணம்.. வேறெங்கும் காணபடாத இஸ்லாமிய பிரிவினைகள் இங்குமட்டும் எப்போதிலிருந்து வந்தது.. பி.ஜெ எனும் சமூதாய கெடுதி தமிழகத்தில் ஒற்றுமையை குறிவைத்து தகர்த்ததின் பின்னால் என்ற உண்மை நிறைய பேர் அறிந்திருந்தும் அந்த கயமையை தட்டிகேட்கவோ அல்லது புறக்கணிக்கவோ செய்யாததன் விளைவு.. ம.நே.ம.தொடங்கி அன்சாரி கிளை வரை.. அரித்துக்கொண்டிருக்கிறது சமுதாயத்தை என்பதுதான் நிதர்சனம் ..
..
காலம் கடந்துவிடவில்லை கயவர்களை கலைந்து ஒருங்கிணைய வேண்டிய காலகட்டமிது.. கருத்துவேறுபாடுகள் ஒரு இயக்கத்தை சரியாக வழிநடத்தும் ஆனால் சில சுயநலவிசமத்தனங்கள் நிச்சயமாக எந்தவொரு இயக்கத்திற்கு பலன்தராது.. இஸ்லாமிய இயக்கங்களை இன்றைய காலகட்டத்தில் மிக சுலபமாக இல்லாமல் ஆக்க பாசிசவாதிகள் தேவையில்லை உள்ளிருக்கும் கயவர்களே போதும்.. நூற்றாண்டு கண்ட இயக்கம் தென்னகத்திற்குள் சுருங்கியதென் ..? என்றும் ஆய்வு செய்யவேண்டியிருக்கிறது.. தமிழகம் போன்ற மாநிலங்களில் இன்னமும் எஞ்சியிருக்கிற வேர்களை நம்புங்கள்..
சில கழிசடைகளில் கைகளில் கைபாவையாய் இளைஞர் ..கயவர்களின் மூளைச்சலவைக்கு ஆளாகியிருக்கிறார்கள்..
மீட்டெடுங்கள் மீண்டு வாருங்கள்
ஒன்றுபட்டால்தால்தான் வென்றிட முடியும் என்ற யதார்த்ததை புரிந்துக்கொள்ளவேண்டும்.. நூற்றாண்டு பின்னிட்ட ஒரு இயக்கத்தை வலுசேர்ப்பது சமுதாயத்திற்கு மட்டுமல்ல நாட்டிற்கும் நல்லது..
..
#ஒன்றுபட்டால்_உண்டுவாழ்வு..
..
தோழர். ஆலஞ்சி
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment