Tuesday, August 8, 2017

செயல்தலைவர் வழியில்

திரு.ஸ்டாலின் எதிர்க்கட்சி தலைவராக சிறப்பாக செயல்படுகிறார்.. தா.பா மற்றும் வைகோ.. கூட்டணிக்காக அல்ல இன்றைய சூழலில் திமுக தனித்து நின்றாலே மிகப்பெரிய வெற்றியை பெற முடியும் திருமா.. ஸ்டாலின் என்னை ஒரு பொருட்டாகவே மதிக்கவில்லை அன்புமணி... .. காலம் கடந்த ஞானோதயம்.. நடந்து முடிந்த தேர்தலிலேயே திமுக ஆட்சிக்கு வந்திருக்கவேண்டும்.. எல்லோருமே எதிர்பார்த்தது சிலரின் கயமைகளால் வாய்ப்பு தவறிப்போய் அதிமுக வென்று.. ஜெயலலிதா ஆட்சியும் மரணமும் ஜெயலலிதா வழக்கின் தீர்ப்பும் அதை தொடர்ந்து அதிமுகவை பாஜக மெல்ல தின்பதும் ..தமிழக உரிமைகள் ஒவ்வொன்றாய் எடப்பாடி அடகுவைப்பதும்.. தமிழக எப்போதுமில்லாத நிலையில் கவலைக்கொள்ள செய்திருக்கிறது.. ஆனாலும் .. நல்லதொரு நம்பிக்கையாய் திமுக அழுத்தமான தலைமையையும் இயக்கத்தின் அடுத்த கட்ட நகர்வை தளபதி கரங்களிலும் தந்திருப்பதும் நிம்மதி பெருமூச்சாய் ... .. இப்போது நடக்கிற ஆட்சியை இனியும் வைத்திருப்பதில் எந்த நியாமுமில்லை.. இதை தூக்கியெறிய துணைப்போவதால் தமிழக மக்கள் வாழ்த்துவார்களே தவிர வசைபாட மாட்டார்கள்.. அரசியல் இலக்கணத்தில் நேரம் பார்த்து கதை முடிப்பது கூட .. மக்களதிகார செயல் தான்.. எதுவரை அமைதி என்பதை நாம் தான் தீர்மானிக்கவேண்டும்.. ஜனநாயகத்தில் எதிர்க்கட்சிக்கென்று சில தார்மீக பொறுப்புகள் உண்டு மக்களை சிரமபடுத்துகிற வேட்டையாடுகிற அவர்கள் நலன்களுக்கு தடையாய் இருக்கிற பொறுப்பற்ற அரசை தூக்கியெறிவது கூட மக்களுக்கு செய்யும் உபகாரம்தான்.. இதுகூட ஜனநாயகநெறிமுறைதான்.. .. சரியான காலமிது என்பதற்கு நம்மோடு இருந்து நம்மை குறிபார்த்து எய்தவர்கள்.. முனைமழுங்கிய அம்புகளோடு இனியும் காரியமாய் எதுவும் செய்திட முடியாதென்பதறிந்து புகழ தொடங்கியிருக்கிறார்கள்... அவர்கள் வசைபாடிய போது எந்த மனநிலையில் இருந்தோமோ அதே மனநிலையில் அவர்கள் புகழ்கிற போதும் நமக்கு.. காரணம் வெற்றியை தோல்வியையும் நாம் சமமாக பார்த்தே பழகியவர்கள்.. ஆட்சி அதிகாரம் என்பது பணி செய்ய நல்வாய்ப்பாகவும்..எதிர்க்கட்சியாய் இருக்கிற போது மக்களோடு இணைந்து போராடுவதும் அவர்கள் நலன் சார்ந்து இயங்குவதுமாய் நம்மை பக்குவபடுத்தி தந்திருக்கிறார் கலைஞர் அவர்கள்.. இந்த ஆட்சியை அகற்ற நேரம் வந்துவிட்டதாகவே கருதுகிறேன் .. அதற்கான செயல்களை தளபதி நேர்பார்வையில் வருத்தப்படவேண்டும்.. தூக்கியெறிவோம்.. மக்கள் நலன்காக்க .. விரைந்து முடிப்போம் செயல்படுவோம்..செயல்தலைவர் வழியில்.. .. இனி அஞ்சோம்... #களைகளை_களைவோம் .. தோழர். ஆலஞ்சி

No comments:

Post a Comment