Wednesday, August 9, 2017

கிறுக்குத்தனம்

இசை கூடாதென்கிறார் பி.ஜே.. இசையை தொடர்ந்து கேட்டால் சிந்திக்கும் திறன் குறையுமென கண்டுபிடித்திருக்கிறார்.. இசை.. புத்தியை மழுங்க செய்யுமா என கேட்டால் இல்லை இசை என்பது மன அமைதியை தரவல்லது .. சில இசைவடிவங்கள் மனிதனின் நரம்புமண்டலத்தில் ரசாயணமாற்றத்தை தரவல்லதென்கிறார் இசைஞானி இளையராஜா.. ஒருமுறை வேறொருவர் இசையமைத்த பாடல் கேட்டுக்கு கொண்டிருந்தபோது சில இசை வார்ப்புகள் மயக்கத்தை வரவழைத்ததாக அதாவது இந்த இசை தவறாக வடிவமைக்கப்பட்டிருக்கிறது அது சரியல்ல என்றார்.. ஆனால் இசையை சரியான நபர் கையாள்கிற போது மிக சிறந்த இசை வந்து நம்மை தாலாட்டும்.. .. இசையை தொடர்ந்து கேட்டால் சிந்திக்கும் திறன் குறையுமென சொல்வதை ஏற்கமுடியாது இசை நம்முள் சில மாற்றங்களை தரும் சில பாடல்களை கேட்கும் போது நம்மை ஏதோ செய்யும்.. கவலையை மறக்கவைக்கும் உணர்வை தூண்டும் காதல் வரும்.. கோவம் கருணை இப்படி உணர்வுகளின் மாற்றத்தை தரகூடும் ஆனால் அறிவின் மாற்றம் தருமா என்றால் அதை நம்புகிறவர்களின் உணர்ச்சியை,உணர்வை, மனநிலையை பொறுத்தது.. எம்ஜிஆர் பாடல் கேட்டு அவரை நம்பியதை போல.. அறிவுடையோரின் இசையை கேட்டால் அதை மனதேற்றால் அதைநோக்கி செலுத்தும் அதே போல் ஆன்மீகம் .. நாத்திகம் எதை சொன்னாலும் சொல்லும் இசைமொழி உங்கள் கவர்ந்தால் மட்டும் அதைநோக்கி செலுத்தும்.. ஆனால் காலம் வேறொரு வடிவத்தை ரசிக்க லயிக்க செய்கிறபோது மற்றொன்றின் மீது நாட்டம் வரும்.. .. இது உணர்வுகளோடு சம்பந்தபட்டதே தவிர அறிவோடல்ல.. இசை அழகிய உணர்வு.. அவ்வளவுதான்.. இன்றைக்கு பிடிக்கிற இசை மற்றொரு நாள் அதை இசையை கேட்கிற போது நமக்குள் எந்தவித உணர்வையோ மாற்றத்தையோ தருவதில்லை அன்றைய மனநிலையை பொறுத்தே ரசிப்பது வெறுப்பதும் கடந்துபோவதும் அவ்வளவுதான்.. இசையோடு சேருகிற போதுதான் கவிதைகள் கூட சட்டென்று மனதில் அப்பிக்கொள்கிறது.. இவர் நம்புகிற நேசிக்கிற வேதநூல் குர்ஆன் மிக சிறந்த கவிதை வடிவம்.. கவிதைகளில் இசையில் சிறந்து விளங்கிய அரேபியர்களை வெள்ளுவிளிக்கிறது குர்ஆன்..இதைவிட சிறந்த கவிதையை தரமுடியுமா என கேட்கிறது.. சிலர் குர்ஆனை ஓதுகிற போது (அது கூட இசைவடிவம்) நம்முள் ஒரு வித ஈர்ப்பை தருகிறது சிலர் அதை ஓதுகிற போது அத்தனை நயமில்லையோ என தோன்றுகிறது இது வேதங்கள் என்றில்லை எல்லா கவிதாகள் பாடல்களுக்கும் பொருந்தும். எதுவும் சிறந்த விளங்க மனதில் அப்பிக்கொள்ள இசையும் ஒரு காரணமாகிறது.. .. என்ன சொல்லவருகிறார் இசை கூடாதென சொல்லவருகிறாரா அப்படியெனில் அது கூடும்.. எனக்கு தெரிந்து உலகில் எல்லாவற்றையும் அறிந்த எல்லாவற்றிக்கும் விளக்கம் தருகிற .. எது சரி என்று மானிடர்களுக்கு போதிக்கிற மகாமேதை இவர் .. தனக்கு தெரியாதென்றோ அல்லது இதுகுறித்து வேறு யாரிடமாவது கேட்டு தெரிந்துக்கொள்ளுங்கள் என்றோ.. அல்லது வேறொருவரிடம் கேட்டு சொல்கிறேன் என்றோ சொன்னதே இல்லை எல்லாவற்றிக்கும் தீர்வு சொல்லும் மகான்.. ஒரு விடயத்தைப்பற்றி கேட்கிற போது நேரடியாக பதில் சொல்லாமல் சுற்றிவளைத்து நீண்ட விளக்கம் என்ற பெயரில் வளைத்தொடிக்கிறவர்கள் பொய்யர்கள்.. அதாவது தனக்கு சாதகமாக்க.., வழங்கி நிற்க செய்கிறாரென்றே பொருள்.. அதாவது உண்மையை மறைக்க முயலுதல் .. .. #கிறுக்குத்தனம் .. தோழர். ஆலஞ்சி

No comments:

Post a Comment