Tuesday, August 22, 2017

கேவலமானவர்களின் கூத்து

தமிழ்நாட்டின் எதிர்க்கட்சி தலைவர் தளபதி அவர்கள் கவர்னருக்கு கடிதமெழுதியிருக்கிறார் எடப்பாடியை நம்பிக்கைகோரும் தீர்மானத்தை கொண்டுவந்து நிரூபிக்க சொல்லுங்கள்..பத்தொன்பது எம்எல்ஏக்கள் ஆதரவை விலக்கி கொண்டவுடன் பெருபான்மையை இழந்துநிற்கிறது எடப்பாடி அரசு.. .. அந்த மூன்று பேர்.. அரசின் கவனத்தை மட்டுமல்ல தமிழக கவனத்தை ஈர்க்கிறார்கள்.. தனியரசு அன்சாரி கருணாஸ் இவர்கள் கையில் நிற்கிறது இவர்களின் எதிர்காலம் .. தனியரசு எடப்பாடிக்கு ஆதரவளிக்க முயற்சிகள் மேற்கொள்ளபடுகிறது மற்றவர்கள் திரிசங்கில் நல்ல பொழுதுபோகிறது ஊடகங்களுக்கு வேதனையில் சாமானியன் .. .. கவர்னர் கம்பி நீட்டுவாரென அறிந்ததுதான் காலதாமதபடுத்த குதிரைபேரத்திற்கு வழிவகைசெய்ய மும்பை பறந்துவிட்டார்.. சசிகலாவிற்கு வராதவர் பன்னீருக்காக வந்து காத்திருந்தவர் இன்னமும் நியாயமான முறையில் செயல்படுவாரென நம்பிக்கையில்லை.. இவர்களை நம்பமுடியாது புதியதாக அமைச்சர்பதவி தருவதாக சொன்னால் பின்னால் போய்விடகூடும்.. .. இனி அதிமுக என்கிற அடிமாட்டு கூட்டத்தை யார் வழிநடத்தினாலும் கடிவாளம் என்னவோ பாஜகவிடம் தான் இருக்கும் நியாயமாக நடந்துக்கொள்வாரென கவர்னரையோ அல்லது எப்போதும் இதே நிலைப்பாட்டில் தினகரன் ஆதரவாளர்கள் இருப்பார்களென்றோ நம்பமுடியாது.. பெரும்பான்மை கிடைக்கிறவரை கவர்னரும் கள்ளமௌனம் காப்பார்.. கேவலமான நிலைக்கு தமிழகத்தை தள்ளிவிட்டிருக்கிறார்கள்.. இவர்கள் அடிதடியில் ஆள்பிடிக்கும் அவசரத்தில் தமிழர்களின் எதிர்காலத்தை இல்லாதவன் ஏழைகள் .. வீட்டுப்பிள்ளைகளுக்கு மருத்துவம் எட்டாக்கனியாக்கி.. குலத்தொழிலை நோக்கி அவர்களை நகர்த்த நீட் தேர்வு சத்தமில்லாமல் அரசின் எதிர்ப்பில்லாமல் என்பதைவிட அடிமைஅரசின் ஆதரவோடு வந்துவிட்டது .. மிக கேவலமானவர்கள் கையில் நாடு .. ஜனநாயகத்தை மதிக்காதவர்கள் தெருவில் வீழ்ந்து கிடந்ததை வரலாற்றில் நிறைய கண்டிருக்கிறோம்..ஆனால் ஜனநாயகவாதிகள் என்றும் வரலாற்றில் ஜொலித்துக்கொண்டே இருப்பர்.. தமிழகத்தின் ஜனநாயகத்தின் குரல்வளையை கடித்து குதறுகிற பாசிசத்தின் அதிகார திமிர் காலம் அடித்துநொறுக்கும்.. .. #பொறுப்பதற்கில்லை.. .. தோழர். ஆலஞ்சி

No comments:

Post a Comment