Friday, August 18, 2017
ரிங்மாஸ்டர்
ரிங்மாஸ்டர்..ringmaster..
அதிமுகவை பொறுத்தவரை ரிங்மாஸ்டர் இல்லாத சர்க்கஸ் கூடாரம் போல ஆகிவிட்டது..
அதிமுக அரசியல் கட்சியாகவோ அல்லது ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை உள்ள இயக்கமாகவோ இருந்ததில்லை எப்போதும் அது தனிநபரின் கட்டுபாட்டில் மட்டுமே இருந்திருக்கிறது. இப்போது அதன் பாதிப்பை உணர தொடங்கியிருக்கிறது..
..
எம்ஜிஆர் என்ற ரிங்மாஸ்டருக்கு பிறகு ஜெயலலிதா இவர்களை கட்டுபடுத்தி வைத்திருந்தார் அவரின் சொல்லுக்கு ஆடுகிறவர்களாக இருந்தார்கள் ..
ஜெயா மறைவிற்கு பிறகு ஆட்சி செய்யும் அவகாசம் நீண்ட நாட்கள் இருக்கிறதென்பதால் இவர்களுக்குள் அதிகார சண்டையும் யாரும் யாரையும் கட்டுப்படுத்த போவதில்லை என்கிற நிலையும் இவர்களை ஆடவைத்திருக்கிறது.. இன்று பேசுகிற ஜெயகுமார் உட்பட அன்று ஜெயலலிதாவின் கடைக்கண் பார்வைக்காக போலீஸ் வளையத்திற்கு பின்னால் நின்று கும்பிட்ட காட்சி பரிதாபகரமான நிலை என் கண்முன் வந்து போகிறது.. இது ஒரு உதாரணம் தான்.. எல்லோருமே சசிகலாவின் பார்வைபட்டு விமோசனம் அடைய மாட்டோமா என்றிருந்தவர்கள் தான்..
..
இன்றைய அதிமுகவை என்னதான் பாஜக இயக்கினாலும் இங்கே இவர்களை கட்டுபடுத்தி வைக்க ஒரு ரிங்மாஸ்டர் இல்லாமல் போனது வரும் காலங்களில் இவர்களும் கட்சியும் இருக்குமிடம் தெரியாமல் போகும்.. ஓபிஎஸ்ஸோ.. எடப்பாடியோ இவர்களை கட்டுப்படுத்திவைக்கும் சக்தியோ திறமையோ இல்லை கட்சியை வழிநடத்தும் திறனோ கொஞ்சம் கூட இல்லை.. இவர்கள் வேறொரு கட்சியின் தலைமைக்கு கட்டுபடுகிற கேவலமான செயலை செய்கிறார்கள் என்று கூட அறியாமல் டெல்லிக்கு படையெடுக்கிறார்கள்.. அவர்கள் சொல்வதை கேட்டு அதன்படி நடக்குகிறார்கள் இவர்களுக்கு கட்சியல்ல முக்கியம் மாறாக இருக்கிற வரை பதவி வேண்டும் இனி எந்தகாலத்திலும் இவர்களால் உள்ளுர் கவுன்சிலர் கூட ஆகமுடியாதென்பது அவர்களுக்கே தெரியும்
..
இன்றைய சூழலில் அதிமுகவை வழிநடத்த ஒரு ரிங்மாஸ்டர் தேவைபடுகிறார்.. அது மூவரில் ஓபிஎஸ்ஸோ எடப்பாடியோ இல்லை.. சசிகலா போன்றவர்கள் தான் இவர்களுக்கு சரிப்படும் கயிறு கட்டி கயிற்றுக்கு வெளியே கும்பிடுபோட்டு நிற்க வைக்கும் அதிகார திமிர்தான் இவர்களுக்கு தேவை இதை ஆளுமையென்றோ திமிர் என்றோ எடுத்துக்கொள்ளுங்கள்..ஆனால் சசிகலா போன்றவர்தான் இந்த அடிமை கூட்டத்திற்கு தேவை.. சரியானவரா தவறானவரா என்பதை விட இந்த சுயமரியாதையற்ற காசும் பதவியும் கிடைத்தால் போதுமென்றலைகிற இந்த சந்தர்ப்பவாத கூட்டத்திற்கு.. கொள்கையோ தொலைநோக்கோ... இல்லாத அதிமுக போன்ற கட்சிக்கு எம்ஜிஆர் ஜெயலலிதா சசிகலா போன்றோர்தான் தேவை.. இல்லையெனில் எம்ஜிஆர் கண்ட கட்சிக்கு இரங்கல்பா எழுதவேண்டிவரும்
..
அதிமுக கொள்கையால் உருவானகட்சியல்ல
குரோதத்தால் உருவானது..
#சுயநலமிகள்.
..
தோழர். ஆலஞ்சி
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment