Tuesday, August 29, 2017

அறிவாலயம்

#அறிவாலயம்.. யார் வேண்டுமானாலும் எப்போது வேண்டுமானாலும் எதிரெதிர் துருவத்தில் நின்றுக்கொண்டிருக்கும் பொழுதென்றாலும்.. கருத்து கொள்கை கோட்பாட்டிலிருந்து வேறுபட்டு நின்றாலும்.. வரலாம் இது அறிவாலயம்.. .. கட்சியின்/இயக்கத்தின் தலைமை அலுவலகம் மட்டுமல்ல இனத்தின் தலைமை கூடமிது.. இக்கட்டான நேரங்களில் கூட இங்கே சமதர்மம் பேணப்படும் வருகிறவர் யாரென்றெல்லாம் பார்பதில்லை வந்தவரின் நோக்கம் என்ன என்பதைவிட வந்திருக்கிறார் ஏதோவொன்றை எதிர்ப்பார்க்கிறார் என்றறிந்து அவர்கள் மரியாதையோடு நடத்தப்படுவார்கள்.. .. இங்கே நண்பர்கள் என்றில்லை எதிரிகள் இன துரோகிகள் வந்து தஞ்சம் கேட்டிருக்கிறார்கள் இனியும் கேட்பார்கள்.. கட்சியின் பார்வைக்கான இடம் மட்டுமல்ல சமூகநீதிக்கான .. அடித்தளம் அமைத்த மக்களின் அன்பாலயம்.. .. தமிழக அரசியலில் இதுபோன்றதொரு இக்கட்டான சூழல் இதுவரை வந்ததில்லை மக்கள் நம்பி வாக்களித்தவர்கள் .. வேறொருவனுக்கு விலைப்போன அதுவும் இனத்தை இனத்தின் கலாச்சாரத்தை .. புதைக்க நினைக்கிற வந்தேறி கூட்டத்தோடு கைக்கோர்த்து அலைகிற அவலம் கண்டு இந்த அரசின் மீது வெறுப்பின் உச்சத்தில் இருக்கிறார்கள் மக்கள்.. நடுநிலை போர்வை ஒளிந்திருக்கும் கயமைகள் ஒவ்வொன்றாய் வெளிவருகிறதறிந்து ..துடித்துப்போய் இருக்கிறான்.. அடங்கா கோபம் ஆட்சியாளர்கள் மீது.. எத்தனை பித்தலாட்டங்கள்.. ஒவ்வொரு முடிவையும் டெல்லிதான் தீர்மானிக்கிறது. கட்சி தலைமை என்ற பெயரில் சில டம்மிகள் வைத்து ஆட்சியை நடத்துகிறது பாஜக.. இன்றைக்கிருக்கும் முதல்வர் கூட சிறுநீர் கழிக்க கூட உத்தரவு வாங்க டெல்லியை அழைக்கவேண்டும் அவமானகரமான ஒரு ஆட்சி வெட்கம் ரோசம் மானம் மரியாதை எல்லாம் கலைந்து ஆடையில்லா மனிதன் போல இன்றைய ஆட்சியாளர்கள்.. .. தமிழக அரசை வழிநடத்த பாஜகவினருக்கு என்ன அருகதை இருக்கிறது.. மக்கள் கட்டிவச்சகாசை கூட தராமல் காரி உமிழ்ந்திருக்கிறார்கள் ஆனால் புறவாசல் வழியாக .. அதிகாரத்தை இயக்குகிற (அவர்களுக்கு தெரிந்தது அதுதான் என்பது வேறுவிடயம்) கயமைத்தனத்தை தமிழகம் ஏற்காதது அறிந்து வேறுவழியின்றி எதிர்த்துநின்று கதைத்தவனும் களம்கண்டவனும் அறிவாலயம் நோக்குகிறார்கள்.. .. இன்றைக்கு என்றில்லை என்றைக்கும்.. #தமிழகத்தின்_கிழக்கு_அறிவாலயம் தான்.. .. தோழர். ஆலஞ்சி

No comments:

Post a Comment