Monday, August 21, 2017

கேடுக்கெட்டவர்கள்

பரம அயோக்கியர்கள்.. பதவிக்காக தலையில் கல்லை தூக்கி போட தயங்கமாட்டார்கள்.ஆரம்பம் முதலே பாஜக இவர்களை ஆட்டிவைக்கிறதென்று சொல்லி வருகிறோம் மடியில் கனத்தோடு அலைபவர்களை மத்தியில் ஆளும் அரசு வளைத்திருக்கிறது பார்பன சக்திகளுக்கு தெரியும் நேரடியாக தமிழக அரசியலில் ஆட்சி அதிகாரத்தை பெற முடியாது இவர்களை வைத்து இருக்கிற காலத்திற்குள் செய்து முடிக்கவேண்டியவைகளை கச்சியதமாக முடித்துவிடவேண்டும் அவ்வளவுதான் .. .. பன்னீர் தர்யுத்தமென்று சொல்லி திரிந்ததெல்லாம் பொய்யென்று நமக்கு தெரியும் பதவியையும் இருப்பதை காத்துக்கொள்ளவும் ஜெயலலிதா ஆன்மா கதையை அவிழ்த்துவிட்டால் .. யாரும் கேட்கமாட்டார்கள் ஜெயலலிதா எழுந்துவந்து கேட்க போவதில்லை என்ற தைரியத்தில் ஏமாற்றி வந்தார் அவரின் சுயரூபம் வெளிப்பட்டதில் குறிப்பாக யோக்கியன் என சப்பைக்கட்டியவர்கள்கூட பாஜகவின் கைப்பிள்ளையாக மாறிப்போனதை மிக மோசமான #கயவன் என்ற உண்மையை உணரந்த தருணமிது.. பதவியை பறித்ததால் யோக்கியன் வேடமிட்டவர்.. அதை தனக்கு சாதாகமாக்கிய பாஜக .. அதன் வளையில் விழுந்ததறிந்து .. தாமும் கைக்கட்டி நின்றால் பதவியை காப்பாற்றிக்கொள்ளலாமென எண்ணி எடப்பாடியும் .. எதிர்பார்க்காத வந்த பதவியை இனி எக்காலத்திலும் கனவில் கூட நினைக்கமுடியாதென்றறிந்து மோடியின் கையை காலாய் நினைத்து தலை கவிழ்த்து நின்றார் மானம் ரோசம் எல்லாம் களைந்து அம்மணமாய் நின்றாலும் பரவாயில்லை பதவி வேண்டும் என்கிற கேடுக்கெட்டவராய்.. அயோக்கியத்தனமான அரசியலை செய்து பிழைத்துக்கொண்டார்.. வண்டிக்காரனின் கயிறு விழும் திசையில் மாடு திரும்புமே அதைப்போல மோடியின் கயிற்றுக்கு ஆடுகிறார்.. கேவலமானவராய் கொங்கு மண்ணில் பிறந்த பிழையாய்.. .. சசிகலாவிற்கு தினகரனுக்கும் வேறு வழி தெரியவில்லை ஆரம்பத்தில் நடத்திய கொள்ளைகளிலிருந்து தலை உருவ முடியாமல் நிற்கிற சமயத்தில் நம்பியவர்கள் கத்தியை வீசுகிற சூழல்..எந்த திசையிலும் செல்லமுடியாமல் கிடக்கிறார்கள்.. சொற்ப எண்ணிக்கையில் இருப்பவர்களும் எப்போது வேண்டுமானாலும் கைவிரிக்கலாம்.. காரணம் பணமும் பதவியும் தருவதாக இருந்தால் பெத்தவளையே விற்றுவிட கூடிய கேடுக்கெட்டவர்கள் கூட்டம் இது.. பரம அயோக்கியர்கள் கூடாரம்.. கொள்கையாலோ அல்லது ஜெயலலிதா என்ற ஈர்ப்பினாலோ இவர்கள் கட்சியில் இருக்கவில்லை என்றாவது ஒருநாள் வாய்ப்புவரும் சம்பாதிக்க முடியுமென்ற ஒற்றை லட்சியத்திலேயே ஜெயலலிதா சசிகலா காலில் விழுந்தவர்கள்.. அதிமுகவில் கொள்கையால் ஈர்க்கப்பட்ட உண்மையான தொண்டர்கள் என்று எவருமில்லை கவர்ச்சியும் கயமையும் வார்த்தது வேறு எப்படி இருக்கும்.. .. #பிழைகள் .. .. தோழர். ஆலஞ்சி

No comments:

Post a Comment