Saturday, August 12, 2017

Waste fellow

திமுக சட்டசபையில் இதுவரை நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவரவேயில்லை என்றும் ஏற்கனவே நடந்தது நம்பிக்கை வாக்கெடுப்பு என்பது கூட தெரியாமல் முதல்வர் பேசுவதாக தளபதி ஸ்டாலின் .. இவ்வளவு தான் இவர்களது லட்சணம் தொடர்ந்து கும்பிடு போட்டு வளைந்தே பழகிப்போனதால் எதுவுமே தெரியவில்லை நம்பிக்கை வாக்கு கோரிய போதுதான் மௌன அஞ்சலி செலுத்தியதைப்போல அதிமுககாரர்கள் அமைதியாய் வீற்றிருந்தது..அது கூட சசிகலாவும் தினகரனும் சொல்லி கொடுத்ததை செய்தார்கள்.. இன்றைக்கு வகிக்கிற முதல்வர் பதவி அவர்கள் (சசி வகையறா) போட்ட பிச்சை.. இல்லையென்றால் எடப்பாடி குனிந்து வாய்பொத்தி தான் நின்றிருக்கவேண்டும்.. .. திமுக சபாநாயகர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவந்தது அது ஏனெனில் சபாநாயகர் தொடர்ந்து திமுக உறுப்பினர்களை பேச அனுமதிக்காமலும், பேசியதை சபை குறிப்பிலிருந்து நீக்கியும் உறுப்பினர்களை வெளியேற்றியும் செய்யும் பதவியின் பொறுப்பை அறியாமல் நடந்துக்கொள்கிறவருக்கு சபை விதிகளை விளக்க சொல்ல ஒரு சந்தர்ப்பமாக பயன்பட்டது ..அவரும் தவறை உணர்ந்து இனி இதுபோல் நடைபெறாதென்று வாக்குறுதி தந்தார்.. சபையை எப்படி நடத்தவேண்டுமென்றும் முன்பிருந்த சபாநாயகர்களின் நேர்மையை சபைக்கும் சபாவுக்கும் உணர்த்தவே சபாநாயகர் மீதான நம்பிக்கையில்லா தீர்மானம்.. .. அதிமுகவின் ரிங் மாஸ்டராக இருந்த ஜெயலலிதா இந்த அறிவிலி அடிமைக்கூட்டத்தை காலில் போட்டு நசுக்குறாரே என கோவம் கூட வந்தது இவர்களின் மீது பரிதாபம் தோன்றியது இவர்களை சுயமாக சிந்திக்க விடுவதே இல்லை என்று கூட எண்ணியதுண்டு.. ஆனால் இப்போதுதான் புரிகிறது.. இவர்கள் எதற்கு லாயக்கில்லாத கூமுட்டைகள் என்று இவர்களை நம்பி எதுவுமே செய்ய முடியாதென்று தெரிந்துதான் சசிகலாவை மட்டும் நம்பினார் போலும்.. இவர்களை ஆட்டுவைக்க சசிகலாவே சரியானவர் என தெரிந்து இவர்களை வெறுமனே சுமக்கும் ....போல நடத்தினார்.. அடிமையாக இருந்து பழக்கப்பட்டதால் இப்போது மோடிக்கு அடிமையாகி இருப்பதை காத்துக்கொள்கிறார்கள்.. இவர்களால் யாருக்கும் எந்த பலனுமில்லை.. பயன்பட தகுதியும் இல்லை.. Waste fellow.. .. #விவரகேடுகள் .. தோழர். ஆலஞ்சி

No comments:

Post a Comment