Wednesday, August 2, 2017
அன்புமணி...
ஸ்டாலினிடம் கேட்டால் துரைமுருகன் பதில் தருகிறாரே.. அன்புமணி..
உண்மையில் துரை கூட பதில் அளித்திருக்க தேவையில்லை மாவட்ட செயலரே போதும்..
பதில் அறிக்கையில் இது துரைமுருகன் எழுதியதா என கேள்வியும் திமுக செய்த துரோகங்கள் என்றெல்லாம் சொல்கிறவர் திமுக செய்த போராட்டங்கள் அறிக்கைகளோடு பாமக போராட்டங்களையும் அறிக்கைகளையும் பட்டியலிடமா என கேட்கிறார்.
..
திமுக ஒரு போராட்டத்தை அறிவித்தால் அது எந்தளவிற்கு தாக்கத்தை தருமென மக்களுக்கு தெரியும் தினம் தினம் தெரு கோடியில் நின்று கத்துவதால் பலனில்லை எந்த போராட்ட வடிவமும் மக்களிடையே ஆதரவையும் ஆளும் அரசிற்கு சங்கடத்தையும் தரவேண்டும் இதுவரை பாமக அறிவித்த போரட்டங்கள் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறதா.. யாராவது சட்டை செய்கிறார்களா நாலோடு ஐந்தாக நின்றால் யார் கவனமும் வராது.. இதில் நாங்கள் தான் எதிர்க்கட்சியை போல செயல்படுகிறாராம்.. தேர்தலில் கட்டிவச்ச காசை கூட திரும்ப பெற வக்கில்லாதவர் நான் தான் சிறந்த மக்கள் செல்வாக்கு பெற்றவரென சொல்வது நகைச்சுவையாக கூட இல்லை..
..
என்னை பார்த்து காப்பி அடிக்கிறார் ஸ்டாலின்
அடிக்கடி சொல்லும் வார்த்தை .. தமிழகத்திற்கே #அரசியல்_சொல்லி_கொடுத்தவரின் நிழலொட்டி வந்தவர்கள் நாங்கள் எதை எப்படி எங்கே செய்வதென அறிவோம்.. அடிக்கடி கூச்சல் போடுவதால் அரசியல்வாதியாகி விட முடியாது
ஸ்டாலினைப்போல இவரும் நெடும்பயணம் செய்கிறார் என சொல்கிறோமா இல்லையே.. இவர் வன்னியர் அதிகம் வாழும் பகுதியில் புல்லட்டில் போகலாம் அது கூட அதே வன்னிய சமூகம் கைவிட்டதை மீண்டெடுக்க என்பதும் பெருவாரியான அந்தசமூகமக்களிடம் ஆதரவில்லையென்பதும் அறிவோம்.. முதலில் அரசியல் செய்ய கற்றுக்கொண்டு வரவேண்டும் ஒன்டிக்குகொன்டி வரியான்னு வேலைவெட்டி இல்லாதவன் வேணும்ன்னா சொல்லிக்கிட்டு திரியலாம்.. ஆனால் தளபதி அப்படியில்லை அவர் செயல்தலைவர் மட்டுமல்ல பொறுப்புள்ள எதிர்க்கட்சித்தலைவர்.. அவர் பதிலளிக்காததிலிருந்தே உமது மதிப்பும் யோக்கியதையும் புரிந்திருக்கும்.. தளபதி பதில் சொல்லவேண்டுமென்றால் முதலில் அதற்கான தகுதியை வளர்த்துக்கொள்ள வேண்டும்..அல்லது குறைந்தபட்சம் எம்எல்ஏ தேர்தலில் டெபாசிட் வாங்கியாவது இருக்கவேண்டும்.. அல்லது குறைந்த பட்சம் சிறியளவிலாவது மக்களின் மதிப்பை பெற்றிருக்கவேண்டும்.. திருமா கூட கட்டிவச்சகாசை பெற்றார்..
..
துரைமுருகன் பதிலளித்திருக்காரே என நினைக்கலாம்.. ரொம்ப சவுண்ட் அதிகமா போனா ஆப் பண்ணற சுவ்ட்ச் அண்ணன் கிட்டதான் இருக்கு அவர் கிண்டலா பதில் சொன்னாதான் சிலருக்கு உரைக்கும் அதனால சொன்னார்.. உனக்கு என்ன கேள்வி கேட்கணுமோ மறந்திடாமா எழுதிக்கிட்டு வா.. தம்பி பிரசன்னா போதும் அவர்கிட்ட பேசி ஜெயிட்டு..பிறகு வட்ட ..மாவட்டம்ன்னு பேசி ஜெயிட்டு பிறகு தளபதியை அழைக்கலாம்..
முதலில் கடைநிலையில் கட்சிக்காக உழைக்கிற திமுககாரனிடம் விவாதிக்க முடியுமா என்று பாருங்கள்..
..
என்னிடம் ஆட்சியை கொடுங்கள் ஒரே வாரத்தில் ஓஎன்ஜிசியை தமிழகத்தை விட்டே அனுப்புகிறேன் .. இதெல்லாம் மேடைபேச்சுக்கு சரி.. எம்ஜிஆர் தான் ஓஎன்ஜிசி க்கு அனுமதி தந்தார்.. ராஜஸ்தான் போன்ற மாநிலங்கள் அனுமதி மறுத்த போது இங்கே அழைத்துவந்தார் அரியலூர் போன்ற மாவட்டங்கள் வறண்டுபோக இதுவும் ஒருகாரணம்.. ஓஎன்ஜிசியை வெளியேற்ற வேண்டுமெனில் வழக்கு பேச்சுவார்த்தையென பலவருடங்கள் ஆகும் இதுகூட தெரியாமல் தன்னை சிறந்த நிர்வாகியென அவரே சொல்லிக்கொள்கிறார்..
#காலக்கொடுமை
..
#முதலில்_தவழ_பழகுங்கள்..
..
தோழர். ஆலஞ்சி
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment