Sunday, August 13, 2017
காபீல்கான்
ஆக்சிஜனே இருந்திருந்தாலும் பத்துக் குழந்தைகளை மட்டுமே காப்பாற்றியிருக்க முடியுமென்றும் மிச்ச ஐம்பது குழந்தைகளும் ஆக்சிஜன் இருந்திருந்தாலும் செத்துதான் போயிருப்பார்கள் என்று திடீர் சமுக ஆர்வலர் சுமந்த் ஸ்ரீராம் சொல்கிறார்..
செத்தது ஸ்ரீராம் குழந்தை அல்ல அதனால் எதுவேண்டுமானாலும் பேசலாம்.. உங்கள் குழந்தை செத்திருந்தாலும் நாங்கள் அழுவோம் ராம்..
..
ஆக்சிஜன் இருந்திருந்தால் கூட ஒரு சில குழந்தையைதான் காப்பாற்றியிருக்க முடியும் என்றாலும் ஒவ்வொரு குழந்தையும் முக்கியமில்லையா ..
மாட்டுக்காக மனிதனை காவுகேட்கிற கூட்டத்திடம் வேறெதை பார்க்கமுடியும்..
..
கெட்டவார்த்தையில் திட்டவேண்டும் என தோணியது.. சுமந்த் ராம் போன்றவர்கள் பாஜக ஆட்சிக்கு வந்தபிறகு பேசும் திமிரான சொற்கள் நம்மை காயபடுத்துவதை விட அவர்களை தோலுரித்து காட்டுகிறது..குறைந்தபட்சம் வருதத்தை கூட அல்லது கண்டனத்தை பதிவு செய்திருக்கவேண்டாமா..
செத்த குழந்தைகள் மூளை அலர்ஜியால் செத்ததாக சொல்கிற முதல்வர் யோகி தார்மீக பொறுப்பை உணராமல் தப்பிக்க நினைக்கிறார்..
..
உ.பி.யில் துரிதமாக செயல்பட்டு எண்ணற்ற பச்சிளம் குழந்தைகளின் உயிரை காப்பாற்றிய டாக்டர் காபீல் கான்...
ஆக்ஸிஜன் வினியோகித்து வந்த தனியார் நிறுவனம் பணம் தராததால் கடந்த 4-ம் தேதி முதல் ஆக்சிஜன் வினியோகத்தை நிறுத்தியது.
டாக்டர் காபீல் ஆக்ஸிஜன் சிலிண்டர் நிறுவனத்திடம் பேசியும் பலனில்லை.. துரிதமாக செயல்பட்டு தன்னுடன் உதவியாளர்களை தனது காரில் அழைத்துக் கொண்டு தன்னுடைய நண்பர் நடத்தும் மருத்துவமனைக்கு சென்று அங்கிருந்து 3 ஆக்ஸிஜன் சிலிண்டர்களை கடனாக பெற்று உடனடியாக மருத்துவமனை திரும்பி உள்ளார்.. 3 ஆக்ஸிஜன் சிலிண்டர்கள் குறைந்த நேரம் மட்டுமே செயல்படும் என்ற நிலையில், மீண்டும் தனது காரை எடுத்துக் கொண்டு தனக்கு தெரிந்த மருத்துவமனைகள் மூலம் 12 ஆக்ஸிஜன் சிலிண்டர்களை சேகரித்து மருத்துவமனைக்கு கொண்டு சென்றார்.
சிலர் பணம் தந்தால் தருவதாக கூறவே பணத்தை தந்து பெற்று குழந்தைகள் உயிரை காப்பாற்றியிருக்கிறார்..
..
முதல்வர் யோகி பொய் சொல்கிறாரென்று டாக்டரின் மொழியும் செயலும் உணர்த்துகிறது.. யோகியை பாஜகவை காப்பாற்ற ராம் போன்ற மதம் தலைக்கேறிய மாடுகளை (இவனையெல்லாம் மனிதன் என சொல்வதே மானிடத்திற்கு இழுக்கு)
மருத்துமனையில் 60 குழந்தைகள் இறப்பது சகஜம் தான் என சொல்ல வைக்கிறது..
இவர்களை போன்றோரை சமூக ஆர்வலரென சொல்லாதீர்கள்..
ஊடக அறம் பொய்யாய் போகும்..
..
#மனிதம்_இருக்கிறது_காபீல்கான்_வடிவில்..
#நல்லாஇரு_சாமி……
..
தோழர். ஆலஞ்சி
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment