Thursday, August 24, 2017

அரசு ஆடுகிறது..

இந்த ADMK "கொறடா" ...OUT OF SYLLABUS. ... என்கிறார் பேராசிரியை Sylvia Nithia Kumari. ஆம்.. அதிமுக இருஅணியாக பிரிந்துநிற்கிற போது.. அதிலும் அதிமுக கட்சியின் பெயரை சின்னத்தை பயன்படுத்த கூடாதென தேர்தல் ஆணையம் அறிவித்திருக்கிற போது 19 பேரை தகுதி நீக்கம் செய்ய சொல்லும் கொறடாவின் உத்தரவு செல்லாது .. ஒரு குழுவாக பிரிந்து வந்தால் அவர்களின் பதவியை பறிக்கும் அதிகாரம் சபாநாயகருக்கில்லை..என உச்சநீதிமன்றம் ஏற்கனவே தீர்ப்பு வழங்கியிருக்கிறது.. .. ஜெயலலிதா தேமுதிகவிலிருந்து பிரிந்து வந்தவர்களை தனி குழுவாக ஏற்றுக்கொள்ள வேண்டுமென அன்றைய சபாநாயகருக்கு பதில் அளித்து பேசியது சபை குறிப்புகளில் உள்ளதே.. எடப்பாடிக்கு எதிராக வாக்களித்த பன்னீர் கோஷ்டி மீது ஒழுங்கு நடவடிக்கை ஏன் இதுவரை எடுக்கவில்லை.. .. கர்நாடக பாஜக அரசை எதிர்த்து வாக்களித்த பாஜகவினரை அரசு கொறடா உத்தரவை ஏற்று பதவி நீக்கம் செய்ததை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில்.. நாங்கள் முதல்வர் எடியூரப்பாவிற்கெதிராக தான் வாக்களித்தோம் வேறொருவர் வருவதை எதிர்க்கவில்லை அவரின் செயல்பாடில் நம்பிக்கையில்லை என்றதை ஏற்று பதவி நீக்க உத்தரவை ரத்து செய்தது.. .. இவையெல்லாம் தினகரன் அணியினருக்கு சாதகமான விடயங்கள்.. அதுசரி.. எச்.ராசாவிற்கு அதிமுக கட்சி உள்விவகாரத்தில் என்ன வேலை.. கொறடா நீக்கம் செய்வாரென சொல்ல இவர் யார்.. பாஜக விவகாரத்தில் தினகரன் தலையிடுவதை விரும்புவார்களா நேர்மையாக ஆட்சிக்கு வரமுடியாதென்பதால் ஏன் எச்சை சோற்றை சாப்பிட ஆசைப்படுகிறார்கள்.. .. வேறு வழியில்லை இந்த அரசை கலப்பதை தவிர .. காலம் தாழ்த்தலாமே அன்றி நீண்டநாட்கள் நீடிப்பது அரிது.. இதற்கிடையில் சில ஊடகங்கள் ஸ்டாலினை முதல்வராக்க திட்டமென சொறிந்துக் கொள்கின்றன.. தேர்தலை நோக்கி நகர்த்துதலே தலையாய பணியாக கொண்டு செயல்படுகிறோம்.. மக்கள் வாய்ப்பளித்தால் திமுக ஆட்சியை கலைஞரின் வழிகாட்டுதலோடு கூடிய ஆட்சியை அமைப்போம் .. உடல்நல்ம் நன்கு தேறிவந்தால் கலைஞரின் தலைமையிலேயே அமைப்போம்.. .. அதுவரை இவர்களின் பொம்மலாட்ட கூத்தை ரசிப்போம்.. .. தோழர். ஆலஞ்சி

No comments:

Post a Comment