Saturday, August 19, 2017
தளபதி... நிலம் காக்கும் வான்மழை
தளபதி.ஸ்டாலின் சிறந்த எதிர்க்கட்சி தலைவராக செயல்படுகிறார்.. வைகோ.. தா.பா... தோழர். நல்லகண்ணு...
விரைவில் தமிழக முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் அவர்கள் வருவார் ஜெயலலிதா அண்ணன் மகன் தீபக் ..
இப்போது தேர்தல் வந்தால் ஸ்டாலின்தான் முதல்வர்.. சீமான்
..
இது ஏதோ ஒருசிலரின் குரல் அல்ல ஒட்டுமொத்த தமிழகத்தின் குரல்.. வறண்டு கிடக்கும் நிலத்திற்கு இயற்கை தரும் வான்மழை தளபதி..
..
தமிழகம் சிறந்த தலைவர்களையும் சில கோமாளிகளையும்..பார்த்திருக்கிறது
ஆனால் கேவலமான கேடுகெட்ட கயவர்களை இப்போதுதான் பார்க்கிறது.. தமிழகத்தின் சாபகேடாய் ஜெயலலிதாவும் அவரது அடிமைகளும் இன்றைய இழிநிலைக்கு காரணமாகி இருக்கிறார்கள் நாட்டில் என்ன நடக்கிறதென்றே தெரியாமல் இவர்கள் கூத்து நம்மை மற்றவர்கள் முன் கேலிப்பொருளாக்கி இருக்கிறது.. மேகதாதில் அணை கட்ட மறுப்பேதும் தெரிவிக்காமல் மௌனமாய் இருக்கிறார்களே இது இந்த மக்களுக்கு செய்யும் துரோகம் இல்லையா.. நீதிமன்றத்தை நம்பி வாக்குறுதிகள் அளிப்பது தற்கொலைக்கு சமமென தெரியாதா.. தமிழகத்தை இனி வறண்ட பிரதேசமாக வாழ தகுதியற்ற நிலமாக மாற்றாமல் விடமாட்டார்களோ..
இவர்களுக்கு பதவியை பங்கிடுவதில் அதற்காக ஆசைகொண்டு அலைந்து திரிவதில்.. நாளுக்குநாள் அக்கறை கூடுகிறதே தவிர மக்களைப்பற்றியோ மாநில நலன் பற்றியோ துளியும் கவலையில்லை.. அம்மா ஆட்சியை காக்க போராடுவதாக பொய் பேசி திரியும் இவர்கள் ஜெயலலிதா எதிர்த்த மின்திட்டத்தையோ நீட் தேர்வையோ சத்தமில்லாமல் ஆதரவு தந்து ஜெயாவிற்கு துரோகம் செய்கிறார்கள்.. இவர்களுக்கு பதவி வேண்டும் அதற்கு எவன் காலையும் பிடிப்பார்கள் ..
..
இன்றைய சூழலில் தமிழகத்தின் ஏக நம்பிக்கையாக இருப்பது #தளபதியார் மட்டுமே
வேறு வழியே இல்லை என்றறிந்துதான் எதிர்த்து குரல் கொடுப்போர் கூட உண்மையை ஒப்புக்கொள்கிறார்கள்.. திருமா .. வைகோ தா.பா என்று பட்டியல் நீள்கிறது தளபதியாரின் களப்பணியும் எந்தவொரு செயலிலும் உள்ள நாகரீக செயல்பாடும் எந்த நிலையிலும் குறுக்குவழியை கடைப்பிடிக்காத நேர்மையும்.. கடும் உழைப்பும் வெகுமக்களின் விருப்பமுமாய் தளபதியார் மிளிர்கிறார்..
தலைவனுக்குரிய நிதானம், மனஉறுதி, எல்லோரையும் அரவணைக்கும் பாங்கு.. அமைதி அதே நேரம் விவேகத்தோடு வேகமாய் செயல்பாடு,.. மக்களின் முடிவிற்காக காத்திருக்கும் பொறுமை .. தளபதியாரை உயரத்திற்கு கொண்டுபோகிறது..
எதிரிகள் வேறுவழியின்றி ஒப்புக்கொள்கிறார்கள்.. சிலர் மன புழுக்கத்தில் ஏதேதோ உளறிக்கொண்டிருக்கலாம் அவையெல்லாம் அவர்களின் இயலாமையை காட்டுகிறதே தவிர வேறில்லை..
..
யதார்த்தத்தை அறிந்தவர்கள் உண்மையை சொல்கிறார்கள் .. கனவு ஆசையில் மிதப்பவர்கள் எரிச்சலில் வாய்க்குவந்ததை கொட்டி தீர்க்கிறார்கள் அவ்வளவுதான்..
..
ஆம்..
வறண்டு கிடக்கும் தமிழ் நிலத்திற்கு இயற்கை தந்த வான் மழை தளபதி..
..
தோழர். ஆலஞ்சி
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment