Wednesday, August 2, 2017
அத்வாலே ..நிர்மலா..
திருநங்கைகள் சேலை அணியக்கூடாது
மத்திய அமைச்சர் அத்வாலே..
பிச்சை எடுத்து தின்பவர்களுக்கு கேஸ் மானியத்தை நிறுத்தவில்லை பாப்பாத்தி நிர்மலா...
..
திருநங்கைகளை இப்படிதான் உடையணியவேண்டுமென சொல்ல இவர்களுக்கென்ன உரிமை இருக்கிறது.. உ.பி.யை சேர்ந்த குடியரசு கட்சி தலைவர் மத்திய இணை அமைச்சர் அத்வாலே பேசியிருக்கிறார் முதலில் திருநங்கைகள் என அழைப்பதையே விரும்பாமல் கொச்சையாக பேசி திரிந்ததவர்களை கலைஞர் தான் திருநங்கைகளென அழைத்து அவர்களையும் இந்த சமூகம் மதிக்கவேண்டுமென செய்தார்.. ஹார்மோன்களில் ஏற்படும் மாற்றங்களால் ஆண் பெண்ணாக...
அதை இந்த சமூக கொஞ்சம் இரக்கமின்றி வசைபாடுவதும் தொடர்ந்து கொண்டுதானியிருக்கிறது.. ஆண் பெண் இருபாலினங்களை அடுத்து மூன்றாம் பாலினம் என அழைக்கலாமென நீதிமன்றம் வலியுறுத்தியும் அவர்களுக்குரிய இடத்தை தர இந்த சமூகம் தொடர்ந்து மறுத்துவருகிறது.. இதில் இப்போது ஆண்களைப்போல உடையணிய வேண்டுமென அமைச்சரே பேசுவது முட்டாள்தனமானது அவர்களின் தனி மனித உரிமைகளை மட்டுமல்ல அவர்களின் விருப்பங்களுக்கெதிரானதும் கூட...
திருநங்கை மட்டுமல்ல யாரையும் எந்த உடையணியவேண்டுமென நிர்பந்திப்பது அநாகரீகமானசெயல்.. நாளை பெண்கள் ஜீன்ஸ் போட கூடாதென்று கூட சொல்வார்கள்.. எவருடைய சுதந்தரத்திலும் தலையிட அரசுக்கோ ஆட்சியாளர்களுக்கோ உரிமை இல்லை..
..
பிச்சையெடுத்து தின்கும் கோவில் குருக்களுக்கு மானியம் ரத்து இல்லையென்கிறாரா.. ?
நிர்மலா சமீபகாலமாக திமிரோடு பேசிவருகிறார் பிச்சையெடுத்து உண்பவர்களென யாரை சொல்கிறார்.. அர்ச்சனை தட்டை ஏந்தி நிற்கிறானே ஏழை குருக்கள் அவர்களை சொல்கிறாரா..
மனு ஸ்மிருதி பிராமணர் என்பவர் யாசித்தே உண்ண வேண்டும் என்கிறது கீதை.. அதைதான் சொல்கிறாரா..ஏனெனில் பார்பனர்களிலும் நிறைய உட்பிரிவுகள் உண்டு .. குருக்கள் வீட்டிலோ
சாவுக்கு சடங்கு செய்யும் (திதி) பார்பான் வீட்டில் அய்யங்காரெல்லாம் சாப்பிட கூட மாட்டார்கள்
பிச்சையெடுப்பவர்களிடம் பிடிங்கவில்லை என்ற திமிர்பேச்சு .. நேர்மையான முறையில் மக்களை சந்தித்து ஆதரவு பெற்று பதவிக்கு வந்திருந்தால் மக்களை மதிக்க தெரிந்திருக்கும்.. திறக்கப்படாத கதவுகளையே தங்களின் ஆயுதமாக்கி பதவிக்கு வந்தவர்களிடம் வேறென்ன எதிர்ப்பார்க்க முடியும்..
புறவாசல் வழியாக வருகிறவர்கள் பிச்சைகாரர்களை விட கேவலமானவர்கள்..
..
விடுதலை கிடைத்தும்
இன்னும் மக்களை பிச்சைக்காரர்களாக வைத்திருப்பதை எண்ணி வருந்தப்படவேண்டாமா...என்ன காரணம் அனைத்து உயர்பதவிகளையும் ஒரு குறிப்பிட்ட சமூகமே அனுபவித்து மற்றவர்களை அவர்களிடம் அடிமையாக நடத்தியது யார்.? தொடர்ந்து மக்களை ஏழைகளாகவே வைத்திருந்தது யார் குற்றம்..?
ஆட்சி அதிகாரமிருக்கிறதென்பதற்காக எதையும் செய்யலாம் எதைவேண்டுமானாலும் பேசலாம் எப்படி வேண்டுமானாலும் நடந்துக்கொள்ளலாம் என நினைத்தால் மக்கள் திருப்பி பதிலடி தருகிறபோது
இருக்குமிடம் தெரியாமல் போவீர்கள்..
..
தோழர். ஆலஞ்சி
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment