சிந்துபாடும் அருவியென
சிதம்பரனார் பெருகி வந்தால்
வண்டுபாடும் தமிழ்த்தென்றல்
வாராமல் இருந்திடுமோ?
தாய் அகத்தில் சுரக்கின்ற உணர்வோடு
தாலாட்டு மொழியினிலே
விடுதலைக்குப் போராடி
வெற்றிகண்ட மாவீரர்-அவர்,
என் திருவாரூர்ப் பிறந்ததனால்,
"திரு.வி.க" ஆகிவிட்டார்.
நானோ…… "திரு.மு.க." ஆகவில்லை
தி.மு.க ஆகிவிட்டேன்!
-தமிழின முதல்வர் கலைஞர்.
No comments:
Post a Comment