Friday, August 25, 2017
சூலூர் கனகராஜ்
ஆட்சி போனாலும் .. உறுப்பினர் பதவி போனாலும் பரவாயில்லை ஆட்சியை கலைத்துவிட்டு தேர்தல் நடத்துங்கள் ..சூலூர் சட்டமன்ற உறுப்பினர் கனகராஜ்..
..
தனி ஒருவரின் குரலாக இதை தள்ளிவிட முடியாது ஏறக்குறைய அதிமுகவினரின் குரலாக இதை பார்க்கிறேன் .. இன்னமும் நம்பிக்கொண்டிக்கிற சாதாரண தொண்டனின் வலியாக உணர்கிறேன்.. எதற்காக பாஜகவின் இசைக்கேற்ப ஆடவேண்டும் என நினைக்கிற கொஞ்சமேனும் மிச்சமிருக்கிற சுயமரியாதை குரலாக பார்க்கிறேன்..
..
அதிமுகவில் இப்போதிருக்கும் தலைவர்கள் என சொல்லிக்கொள்கிறவர்களிடம் தலைமைக்குரிய பண்பில்லை இருக்கிற பதவியை காத்துக்கொள்ள எதையும் செய்யும் படுபயங்கரத்தை அதனால் ஏற்படும் விளைவுகள் பற்றிய அச்சம் சிறுதுமில்லாமல் செயல்படுகிறார்கள் ஒட்டுமொத்த தமிழகத்தை வெட்கிதலைகுனிய வைக்கிறார்கள் ..
இந்திய அரசியலில் ஆன்றோர்களை ..அறிவாளிகளை திறமையாளர்களை விவேகிகளை பார்த்த தமிழகம்..இன்று கழிசடைகளை கண்டு வெந்துநிற்கிறது.. மத்தியரசு எதைச்சொன்னாலும் தலையாட்டுகிற பொம்மைகள்.. உணர்வற்ற ஜடங்கள் .. இதுவரை இப்படியொரு அடிமைகளை இந்தியா வேறெங்கும் கண்டதில்லை..
..
பகிரங்கமாக பாஜக ஆட்டுவைக்கிறது இவர்களின் பதவிஆசையை பயன்படுத்தி
பார்பனர்களை உயர கொண்டுவர துடிக்கிறது மிக முக்கிய முடிவுகளை அவர்களே எடுக்கிறார்கள்
நிர்மலாசீத்தாராமன்
குருமூர்த்தி,ஹெச்.ராஜா
கிரிஜா,மைத்ரேயன்..என அவாக்களுக்கு மட்டுமே மேல்மட்ட பேரம் பேச அனுமதி உண்டு.. அவர்கள் எடுக்கிற முடிவிற்கு பன்னீரும் எடப்பாடியும் தலையாட்டவேண்டும்..
இதில் கூட
பொன்னர்,தமிழிசை போன்றவர்களுக்கு தகுதியில்லை வெளியில் குரைப்பதற்கு வைத்திருக்கும் நன்றியுள்ள பிராணிகள்
அவ்வளவுதான்.. இதுகூட தெரியாமல் தம்மை தாமே அசிங்கப்படுத்திக்கொள்கிறார்கள் இந்த கோடாரிகள்...
..
சூலூர் கனகராஜூன் சொல் மிகச்சரியானது.. எதற்காக நாம் பாஜகவிற்கு வளைந்து போகவேண்டும் ஆட்சியை கலைத்துவிட்டு தேர்தலை சந்திப்போம்.. மக்கள் தங்களை ஆள யாரை வேண்டுமானாலும் தேர்ந்தெடுக்கட்டும்..
#அதானே..
..
#எத்தனைகாலம்தான்_பொறுப்பார்
..
தோழர். ஆலஞ்சி
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment