Saturday, August 5, 2017

காதல் காமம்

.. காதுமடல் சிலிர்க்க நீ விடும் மூச்சில் கரைந்து நனைந்து.. உன்னுள் .. காணாமல் போனேன்.. கட்டிகரும்பாய் இனிப்பவனே.. நீ.. காதல் சொல்லும் பேரழகில்.. காமம் மறந்து போனேன்.. .. ராட்சசா திமிரில் விழும் உன் தோளுக்கடியில் முகம் புதைத்து என் நாசி நய்ந்து போனது இழுத்து விடும் பெரும்மூச்சு இன்பம் தந்தது.. .. காமம் .. அசிங்கமென்று சொன்னது. எவ்வளவு பொய்.. ஆழ்ந்து அறிந்து வீழ்ந்து கிடந்தால் அமுதம் கூட அரை காசுதான்.. .. காமம் பொய்யென்று யார் சொன்னார்.. சரியாய் சமமாய் நீண்டு கலவியால் பெருமகிழ்வு மகிழ்ந்ததை பேரு என்கிறேன்.. .. சரியானதாய் சரிசமமாய் கொடுத்தெடுத்தால் காமம் பேரழகு.. .. புற அழகில் மட்டும் வருவதல்ல காமம் அகமும் அறிந்துணர்ந்து ஆளத்தெரிந்து.. ஆழ்ந்தெடுப்பதில் அளவிளா..அளவிளா இன்பம் ..அதுவே காமம்.. .. தோழர். ஆலஞ்சி

No comments:

Post a Comment