Sunday, August 20, 2017
ஜெயலலிதா குற்றவாளி
குற்றவாளிக்கு அரசு செலவில் நினைவிடமா..
ஜெயலலிதா தண்டிக்கப்பட்ட குற்றவாளி அரசு பதவியில் இருந்துக்கொண்டே கொள்ளையடித்தாரென நிரூபணம் ஆனது .. மேல்முறையீட்டில் உச்சநீதிமன்றம் குன்ஹா தீர்ப்பை சரிசெய்து உத்தரவிட்டது அதாவது கிரிமினல் 1 ஜெயலலிதா .. அவர் உயிரோடு இருந்திருந்தால் இந்நேரம் பரப்பனஅக்ரஹார சிறையில் இருந்திருப்பார்..
முதலில் தவறென்பதை விட எப்படி அரசுக்கு தைரியம் வந்தது குற்றவாளி ஜெயலலிதா படத்தை அரசு அலுவலங்களில் பயன்படுத்திய போதே ஊடகங்களும் மக்களும் எதிர்த்திருக்கவேண்டும் .. எதிர்க்கட்சிகள் திமுகவை தவிர்த்து எதுவுமே எதிர்க்க மறுத்ததன் விளைவு இன்றைக்கு அரசு செலவில் நினைவிடம்.. இப்போதும் திமுகதான்
எதிர்க்கிறது மற்ற கட்சிகளோ அல்லது ஊடகங்களோ எந்த எதிர்ப்பையும் காட்டவில்லை..
..
ஜெயலலிதா பிராமணரல்லாது இருந்திருந்தால் முன்கூட்டியே ஜாமீன் (பிணை) வழங்கியிருப்பார்களா.. விரைந்து விசாரிக்க உயர்நீதிமன்றத்தை வலியுறுத்தியிருக்குமா உச்சநீதிமன்றம்.. அதை எதிர்த்து மேல்முறையீட்டு விசாரணையில் .. தீர்ப்பு வழங்க வெகுகாலம் பிடித்ததே இதெல்லாம் அநீதி இல்லையா.. ஜெயாவிற்காக அல்ல அவர் பார்பனர் என்பதற்காக வளைந்து நின்றது நீதி.. நீதித்துறை வரலாற்றில் தீராத கரை அல்லவா..
சட்டத்திற்குமுன் அனைவரும் சமமென்று எழுத்துக்களில் படித்தால் போதுமா செயலில் மக்களிடையே நம்பிக்கையை விதைக்கவேண்டாமா..
..
ஜெயலலிதா என்ற தனிமனுஷி மீது எந்த கோபமும் இல்லை பச்சாதாபமே வருகிறது..அடங்கமறுத்த திமிரும்..ஆணவபோக்கும் தான் என்ற மமதையும் யாரும் கேள்விகேட்க ஆளில்லை என்ற தோற்றமும்.. அவரை தொடர்ந்து அழிவின் விளிம்பில் நிறுத்தியது .. அதே நேரம் அவரை சுற்றி நடக்கும் விசயங்கள் அறிந்திருந்தும் தடுக்காமல் தொடர்ந்து தவறை செய்திக்கொண்டே இருந்தார் எல்லாவற்றிக்கும் விலை உண்டு என்ற இறுமாப்பில் தவறை உணராமலே மேலும் மேலும் தப்புதப்பாய் செய்து தொலைத்தார்..
..
ஜெயலலிதா நினைவிடம் ..
குற்றவாளிக்கு அரசு சார்பில் விருது விழா போல ஏற்றுக்கொள்ள முடியாதது.. நினைவு இல்லத்தில் எதை வாசகமாக எழுத முடியும் அரசு பதவியை தவறாக பயன்படுத்தி கொள்ளையடித்து மாட்டிக்கொண்ட திருடி என்றா.. இன்னும் சொல்லப்போனால் அந்த சொத்து சந்தியா பெயரில் இருக்கிறது அதன் வாரிசுகள் மறுக்கிற போது தேவையில்லாதது..
குற்றவாளி என்ற தீர்ப்பை படித்து தெரிந்துக்கொள்ள வக்கீலாக இருக்கவேண்டுமென்பதில்லை..
..
ஜெயலலிதாவின் அரசியலை அவரின் ஏகாதிபத்தியத்தை கடுமையாக எதிர்த்தபோதும் பெண் நாடாளுகிறார் என்பதால் ..அது எங்கள் கொள்கையோடு உடன்பட்டதென்பதால் மென்மையான போக்கை soft corner கொண்டிருந்தோம் அது அவரின் அரசியல்வாழ்விற்கே தவிர.. தவறிழைத்து தண்டிக்கப்பட்டவருக்கு நினைவு சின்னம் என்பது வரலாற்று பிழையாகும் அதை எதிர்ப்பது எங்கள் கடமை..
..
அடிமைகளுக்கு இதெல்லாம் புரியாமல் இல்லை அரசியல் செய்ய வேறுவழியில்லை
..
ஜெயலலிதா குற்றவாளி Jayalalithaa guilty
..
தோழர். ஆலஞ்சி
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment