Saturday, August 12, 2017
மாடாய் பிறந்திடு மானிடா..
என் தேசம்
புண்ணிய தேசமென்றார்
அய்யகோ..
பாவிகளே..
பச்சிளங்குறுத்துகள்
பால் வடியும் நிலவுகள்
பலியான கொடுமை..
..
என் தேசத்தில்
காற்று கூட கிடைப்பதில்லை
குழந்தைகளுக்கு..
புண்ணிய தேசம்
என்றதெல்லாம் பொய்யோ
பச்சிளங்குழந்தைகள்
மூச்சு திணறுகின்றன..
பாவிகளே..
..
மாட்டுக்காக பரிதாபபடும்
பாவிகள்..
மனித உயிர்காக்க
மசிரை கூட புடுங்கவில்லை
பிராணவாயு இல்லையென்று
பிராணம் போனதை
வருத்தப்படகூட மறுத்து
மறைக்க நினைக்கும்
ஊடக வேசிகள்..
..
மூவாரயிரம் பேரை கொன்றால்
நாட்டின் பிதாமகனாகலாம்
என்பதால்..
அறுபத்து மூன்று பிஞ்சுகளை கொன்று
தொடக்கம் குறிக்கிறீரோ..
பாவிகளே..
உங்கள் காவி நிறத்திற்கு..
பிஞ்சுகளின் ரத்தம் தான் தேவைப்பட்டதோ..
..
வருத்தப்படுங்கள்..
மதம் தலைக்கேறிய
துறவிகளை தேர்தெடுத்தால்..
பிள்ளைக்கறி கேட்பான்
தன் நிலை உயர..
தளிர்களையும் காவு கேட்பான்..
..
குழந்தைகளே..
மன்னியுங்கள்
இனியேனும்..
இந்நாட்டில்
மாடாய் பிறந்திடுங்கள்
..
இந்தியா..
பாவிகள் தேசமானது..
..
தோழர். ஆலஞ்சி
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment