Monday, August 7, 2017

பாவிகள்.. காவிகள்

தமிழகத்தில் பாவிகளுக்கு இடமிருக்கும் போது காவிகளுக்கு இடமிருக்க கூடாதா தமிழிசை .. .. பாவிகள்தான் நாங்கள் எங்களை எச்சைகள் என்றும் பொறுக்கியென்றும் பேசிவிட்டு தலையோடு திரிகிறீர்களே நாங்கள் பாவிகள் எங்களை ஈரோட்டு பெருங்கிழவன் கட்டி போட்டிருக்கிறான் எத்தனை எதிர்ப்புகள் வந்தாலும் வசைபாடினாலும் செருப்பெறிந்தாலும் கருத்துக்களோடு மட்டுமே மோது என எங்களை செம்மைபடுத்தியிருக்கிறான்.. .. தமிழுக்கெதிராக தமிழனுக்கெதிராக பேசிவிட்டு தமிழகத்திலே நடமாட முடிகிறதே கர்நாடகாவிலே எச்.ராசாவை குருமூர்த்தியை போன்றோர் பேச முடிகிறதா.. மொழிக்கெதிராக கர்நாடக நலனுக்கெதிராக பேசிவிட்டு தெருவில் நடமாடிவிட முடியாது.. தேவடியாமகன் என இருட்டில் எழுதிவைத்தவனை பாவம் இருட்டில் எழுதியிருக்கிறான் அங்கே நமது செலவில் பெட்ரிமாஸ் லைட் வைப்போமென சொன்னவர்கள் நாங்கள். செருப்பெறிந்த போதும் அந்த இடத்தில் சிலைவைத்து நிமிர்ந்து நின்றவர்கள் .. அதனால் தான் கண்ட கண்ட கழிசடைகள் நீட் தேர்விற்கு விலக்களிக்காதது மகிழிச்சி அளிக்கிறதென பேசிவிட்டு அமைதியாக போகமுடிகிறது..நாங்கள் பாவிகள் தான்.. .. எங்கள் பெருங்கிழவன் அறிவுக்கொண்டு மோதென்றே எங்களை பழக்கியிருக்கிறான்.. எதையும் சிந்திந்துணரு .. அறிவேற்காததை ஏற்காதே மற்றவர்கள் கருத்திற்கு மதிப்பளி.. அவர்களின் உரிமைகளுக்கு தடையாகாதே அதே வேளை எதையும் பகுத்தாந்து ஏற்றுக்கொள்..உரிமைக்காக போராடு ஆயுதம் கொண்டல்ல அறிவுக்கொண்டு என பக்குவபடுத்தியிருக்கிறான்.. இதையெல்லாம் நாங்கள் ஏற்று நடப்பதால் தான் கலைஞரை திட்டியும் எங்களை பாவிகளென்றும் பொறுக்கிகளென்றும் சொல்லிவிட்டு நடமாட முடிகிறது.. .. யார் பாவிகள் அடுத்தவனை தாழ்ந்தவனாக எண்ணுகிறவன் அடுத்தவன் உரிமையை பறிப்பவன் ஒருசாராரை உயர்ந்தவனென்றும் மற்றவரை தன்னிலும் தாழ்ந்தவன் என்றும் பேசி திரிகிறவன்..ஏழைகள் வறுமை கோட்டிற்கீழே உள்ளவனை கைதூக்கிவிடாமல் பிச்சைக்காரன் என எள்ளிநகைக்கிறவன்.. எங்களவனை கொண்டே எங்களை குத்தி கிழிக்கிறவன் இவர்கள் பாவிகள்.. அதைவிட அடுத்தவன் உணவில் உணர்வில் தங்கள் சித்தாந்தத்தை திணிக்கிற காவிகள் .. மகாபாவிகள்.. .. #காவிகள்_மகாபாவிகள்.. .. தோழர். ஆலஞ்சி

No comments:

Post a Comment