Wednesday, August 16, 2017
கலைஞர்.. நல்லதோர்வீணை
சுதந்திர இந்தியாவின் 100 சிற்பிகள் வரிசையில் 10 வது இடத்தில் #கலைஞர்
முன்னோடி திட்டங்களின் நாயகன்
..
கலைஞர் கருணாநிதி இது ஒரு சாதாரண பெயரில்லை ஒரு சமூகத்தின் சாட்சி..
மிக நுணுக்கமாக கலைஞரை படித்தால் அவரின் திட்டங்கள் தமிழகம் தாண்டி இந்தியாவிற்கே வழிகாட்டும்.. மனிதனை மனிதனே இழுப்பதா என 70 களிலேயே யோசிக்கமுடிந்தது பொதுவுடமை முற்போக்கு பேசும் கம்யூனிஸ ஆட்சி செய்த வங்கத்தில் கூட இயலாததாய் இருந்தது .. எந்தவொரு திட்டமும் கவர்ச்சியை மைய்யபடுத்தி இல்லாமல் மக்களின் நலனை முன்னில் கொண்டாய் இருந்தது.. விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் கூட பொருளாதாரத்தைவிட தமிழகம் தண்ணீருக்காக பிற மாநிலங்களை நம்பி இருக்கிற நிலையை கருத்தில் கொண்டு இருந்தது.. விவசாயிகளின் நலன் கருதி என்பதைவிட வறுமை சாவை குறைப்பதற்கு உதவியது..
..
நவீன இந்தியா கட்டமைப்பதில் இளைஞர்களின் பங்கு அவசியம் என்பதும் குறிப்பாக இந்திய தேசம் கிராமங்களை சார்ந்திருக்கிறதென்ற உண்மையை உணர்ந்ததால்தான் கல்வியில் மிகவும் பின்தங்குகிற நிலையை மாற்ற கிராமபுற மாணவர்களுக்கு இடஒதுக்கீட்டில் முன்னுரிமை வழங்கியதும் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் அவர்களை உயர்த்திவிட ஆட்சியில் இருந்தபோதெல்லாம் முனைப்புகாட்டினார்..
முதல் பட்டதாரிகளுக்கு இலவசகல்வி என்றும் பெண்கள் கல்வியின் அவசியத்தை உணர்ந்து அவர்களையும் உள்ளடக்கிய கல்வியே சமுதாயத்தை மேம்படுத்துமென செயல்பட்டார் பிற மாநிலங்களை விட மகளிருக்கு கல்வியில் முன்னுரிமை தந்தது தமிழகம் தான்..
..
தேசம் மேம்படவேண்டுமெனில் ஒடுக்கப்பட்டவர்களை உயரத்திற்கு கொண்டு வந்து அவர்களுக்கு சமமானதொரு நீதியை வழங்கிடவேண்டும்.. ஒடுக்கப்பட்ட சமூகத்தவர்களாலேயே ஒடுக்கப்பட்ட அருந்ததியினரை உயர கொண்டுவர உள் ஒதுக்கீட்டை கொண்டு .. மலத்தை தலையிலும் கையிலும் அள்ளுவோரை உயரத்தில் உயர்த்திட உள்ஒதுக்கீட்டை என் தலையில் தூக்கி ஆடுகிறேன் என்றார்.. கலைஞரின் உள்ஒதுக்கீடுதான் அருந்ததியினரை மருத்துவம் வரை கொண்டுவந்தது முதன்முதலில் பெண் மருத்துவரை அருந்தியர் இன சமூகம் கண்டது..
..
சொல்லிக்கொண்டே போகலாம் ஆயிரம் பக்கங்கள் கொண்ட புத்தகங்கள்.. பாகம் 1 பாகம் 2 ...என எழுதிக்கொண்டே இருக்கவேண்டும்..
..
விடுதலை இந்தியாவில் மிக சிறந்த தலைவர்களுள் ஒருவர் ..
நிறைய விமர்சனங்கள் இவர்மீது உண்டு அதையெல்லாம் கடந்து இன்னமும் பேசபடுகிறவராக இருக்கிறார் இந்திய அரசியலில் சில நாகரீக கோமாளிகள் வந்து நாட்டை கெடுத்துவிட்டு போகும் போதும் மீண்டு உயிர்தெழ இவரை போன்ற பண்பட்ட அரசியல் மேதைகளின் வழிகாட்டுதலும் இதுவரை வழிகாட்டிய பாதையும் தேசத்தை சமன்படுத்திக்கொண்டிருக்கிறது..
இப்போது நாடு கிறுக்கர்களின் கையில் சிக்கி சிதைகிற போதும்.. இன்னமும் நமக்கு கலைஞர் போன்றோரின் வழிகாட்டுதலும் நடந்துகாட்டிய வழித்தடமும் நமக்கு நன்மை பயக்கும் என்ற நம்பிக்கையை தருகிறது..
#நல்லதோர்வீணை
..
#கலைஞர்_காலம்தந்த_புதையல்
#TheGreat_Leader_of_India
..
தோழர். ஆலஞ்சி
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment