Wednesday, August 16, 2017
மாறன் திருமா
இன்று இருவர்களின் பிறந்தநாள்
மாறன் திருமா..
..
திராவிட அரசியலில் மிகப்பெரிய பங்களிப்பை செய்தவர் மாறன் திமுகவின் இயக்கசெயல்பாட்டில் மிக முக்கிய பங்கு வகித்தவர் ..
அண்ணா முதல்வரான பிறகு அந்த இடத்தை (நாடாளுமன்றஉறுப்பினர்) நிரப்ப மாறனை தான் தேர்வு செய்தார்.. ராஜாஜியும் காயிதே மில்லத்தும் தான் இவரை முன்மொழிந்தார்கள்..
நாடாளுமன்றத்தில் திமுகவின் குரல் ஓங்கி ஒலிக்கவும் முறைப்படுத்தவும் காரணமானவர்.. சிறந்த படிப்பாளி பன்முகதிறமையாளர் இவர் இயக்கிய மறக்கமுடியுமா திரைப்படம் மிகப்பெரியளவில் பேசப்பட்டது.. மிசாவில் சிறையிலிருந்த போது திராவிட இயக்கவரலாறு என்ற சிறப்புமிக்க வரலாற்றுநூலை எழுதினார்.. கலைஞரின் மனசாட்சியென அறியப்பட்டவர்..
..
திருமா
ஒடுக்கப்பட்ட மக்களின் பிரதிநிதியாக போர்வாளாக வலம் வந்தாலும் முதலில் இவர் இருந்ததென்னவோ திமுகவில் தான்.. ஒரு முறை சட்டமன்றத்தேர்தலில் போட்டியிட விண்ணப்பித்திருந்தார். நேர்காணலில் பேராசிரியர் பெருந்தகை என்ன செஞ்சுகிட்டு இருக்கே என்ற போது லா படிக்கிறேன் என்றார் முதல்ல படி பிறகு பார்க்கலாமென்றார்..
அப்போது சென்றவர் தான் தன் சமுதாயமக்களின் நலனுக்காக ஏறக்குறைய இருபத்தைந்து ஆண்டுகளாக தொடர்ந்து போராடி வருகிறார் ..
..
நிறைய விமர்சனங்கள் இருவரின் மீதும் உண்டு
மாறனின் சில தவறான முடிவுகளால் பாசிச சக்திகளோடு கைகோர்க்க, சில அருவறுப்புகளை ஆட்சியில் அமர்த்த வேண்டியிருந்தது ..
சுப்ரமணி அய்யர் மகள் மல்லிகாவை மணந்தும் தன் இருமகன்களுக்கு குடகிலிருந்து காவேரியையும்
தி இந்து விலிருந்து ப்ரியாவையும் கொண்டுவந்தாலும் திராவிட கொள்கைகளில் சமூக சமதர்ம கோட்பாடுகளில் கடைசிவரை இருந்தார் திராவிட சிந்தனையோடு செயல்பட்டார் இவரின் சமூக பங்களிப்பும் புறந்தள்ளிவிட்டு திராவிட வரலாற்றை எழுத முடியாது..
..
திருமா ஆரம்பகாலங்களில் இருந்த திடம் இப்போதெல்லாம் இல்லை நிறைய சமசரங்களை செய்துக்கொள்கிறார்.. சிலரோடு சேர்ந்து சில தவறாக முடிவுகளை அவசரகதியில் எடுக்கிறார்..
இன்றைய தமிழக அவலங்களுக்கு காரணியாக செயல்பட்டதும் மீண்டு வர முயற்சிக்கிற போது அது இயலாமல் போகிறது அடங்கமறு அத்துமீறு எல்லாம் போய் அடக்கிவாசிக்க வேண்டிய நிலைக்கு ஆளாகி இருப்பதும் கவலையான விடயம்..
மீண்டு திரும்பவும் கம்பீரத்தோடு வலம் வர முயற்சிக்கிறார்.. நன்று..
ஆனாலும் கால்நூற்றாண்டு தமிழக அரசியலில் சில முக்கிய நிகழ்வுகளுக்கு காரணமாக இருந்தவர் இவரை மறுத்தும் தமிழக அரசியல் இல்லை..
..
இருவருக்கும் இன்று பிறந்தநாள்..
மாறனை நினைவுகூறுவோம்
திருமாவை வாழ்த்துவோம்..
#இன்னும்_உயரங்கள்இருக்கிறது_திருமா…
..
தோழர். ஆலஞ்சி
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment