Sunday, April 30, 2017

தலைவா..வா

இதயம் ஏங்குகிறது உன் இன்பத்தமிழ் கேட்க ஒற்றை வார்த்தையில் தமிழ்கூறும் நல்லுலகை கட்டிப்போட்டவன் ..நீ.. #உடன்பிறப்பே.. .. கனத்த இதயம் கலங்கிய கண்கள் காணகிடைக்காமல் காலம் தாழ்த்தியதை கண்டு சிறிதாய் ஒரிருவார்த்தையில் பேசி காண பெரும் ஆவல்.. .. ஓய்விற்கு ஓய்வுதந்த ஒப்பற்ற தலைவன்..நீ.. வயதும் மூப்பும் உடல் ஒவ்வாமையும் நம்மை சில காலம் பிரித்தது.. அதற்குள் சிலர் ஆனந்த கூத்தாட.. அடுத்து கெடுப்பவர் ஆணவத்தோடு கொக்கரிக்க செய்வதறியாது நின்றோம்.. ஆயினும் தளபதியெனும் தங்கமகன் தலைமையேற்று செயல் வடிவாய் நின்றதால் எதிரிகள் மூர்ச்சையாயினர்.. .. இதோ. நல்லதொரு செய்தி.. தேன்கலந்து தினையாய் தேன்மதுர.. கனியாய் செவிக்கும் கண்களுக்கும் பேரின்ப பெரும் கருணையாய் வருகிறாய்.. என்றவுடன் சிலர்.. நாவடங்கி நடுநடுங்கிப்போனார்.. .. திராவிட பெருந்தலைவா.. உன்.. மூச்சுகாற்று கூட எதிரிகளுக்கு பெரும்புயலாய் மாறும் என்பதாண்டாய் எதிரிகள் உனை கண்டே அஞ்சுகிறார்.. உன் கண்ணசைவில் காத்திருக்கும் பெரும்கூட்டம் ஆர்ப்பரிக்கும் பெரும் அலையாய்.. சுருண்டு போவர்.. எம்இன எதிரிகள் .. தமிழனின் வைரமே.. தமிழின் ஓளியே. தமிழ் மொழியின் ஒலியே ஊர்கூடி விழாகாண.. காத்திருக்கிறது. வைரவிழா காண.. .. வா..தலைவா.. விரைந்து..நலிவு நீங்கி நல்லதொரு சேதி கொண்டு நாட்டின் நலன் கருதி தமிழ்த்தாயின்.. தவப்புதல்வா வா.. காத்திருக்கிறது தமிழகம்.. .. தோழர் ஆலஞ்சி..

Saturday, April 29, 2017

தளபதி

திராவிட இயக்க உணர்வோடு வெளியிட்ட ஸ்டாலின் அறிக்கையை வரவேற்கிறேன்.. வி.பி.கலைராஜன்.. இது ஏதோவொரு கலைராஜனின் மனநிலை அல்ல ஒட்டுமொத்த அதிமுககாரனின் எண்ணவோட்டம்.. தமிழகத்தின் ஆளும் அரசை சின்னபின்னமாக்கி தங்களின் கொள்கைகளை புகுத்த நினைக்கும் கேடுகெட்ட அரசியலை எதிர்க்கவேண்டிய கடமை பிரதான எதிர்க்கட்சிக்கு இருக்கிறது.. அதைதான் செய்திருக்கிறார் #தளபதி அவர்கள்.. .. தளபதி தனது அறிக்கையில்.. //மத்திய அரசு தனது கட்டுப்பாட்டில் இருக்கும் அமலாக்கத்துறை, வருமான வரித்துறை உள்ளிட்ட ஏஜென்ஸிகளைவைத்து, தமிழக அரசின் நிர்வாகத்தை நிலைகுலைய வைத்துள்ளது. வருமான வரித்துறை சோதனைக்கு உட்படுத்தப்பட்ட ராம மோகனராவுக்கு மீண்டும் பதவி வழங்கப்பட்டது ஏன்? ஒருபக்கம் ஊழல் விசாரணை உறங்குகிறது. இன்னொரு பக்கம் ஊழல் விசாரணை துள்ளிக்குதித்து ஓடுகிறது. இந்த இரண்டிற்கும் இடையில் பிரிந்து சென்ற அதிமுகவின் இரு அணிகளும் ஒன்று சேருவதற்காக திரைமறைவில் பேச்சுவார்த்தைகளை முடுக்கி விட்டுள்ளார்கள். ஆகவே தமிழகத்தில் இப்போது அதிமுகவில் உள்ள ஒரு அணிக்கு எதிராக நடக்கும் “செலக்ட்டிவ் ரெய்டு” – “செலக்ட்டிவ் கைது” உள்ளிட்டவற்றின் பின்னணியிலும், இன்னொரு அணியின் ஊழலை தூசு படியவிட்டு வேடிக்கை பார்ப்பதிலும் மத்திய அரசுக்கு தலைமை தாங்கும் பா.ஜ.க.வின் கை மறைவாகக்கூட அல்ல வெளிப்படையாகத் தெரிகிறது. // .. சிலர் காலம்கடந்து விழித்துக்கொண்டிருக்கிறது திமுக என்கிறார்கள் அப்படியல்ல.. அதிமுகவில் சிலர் காக்கிற மௌனத்தை மக்கள் புரிந்துக்கொள்ள அவகாசம் வழங்கவேண்டும்.. எதுவரை பயணிக்கிறார்கள் என்பதையும் எப்படியெல்லாம் பாஜகவிற்கு வழங்கி தங்கள் முகத்தை இழக்கிறார்களென தெரியவேண்டும்.. ஒட்டுமொத்த கொள்ளையர்களில் சிலரை மட்டும் துரத்தும் செயலையும் ஆமாம் சாமி போடும் அயோக்கியக்கர்களை காப்பாற்றுகிற பாஜக அரசை தமிழக மக்கள் புரிந்துக்கொள்ள இந்த கால அளவு தேவைப்பட்டது.. .. பன்னீர்&கோ வை புனிதராக்கி பாஜக நடத்தும் நாடகத்தின் உண்மையை தோலுறித்திருக்கிறார் #எம்செயல்தலைவர்..இது எச்சரிக்கையும் கூட பாஜக வை ஆதரிப்பவர்களை நல்லவர்களாக காட்டி எதிர்பவர்களை ஏதோ கொடும் கொள்ளையர்போல் சித்தரிப்பது சரியல்ல.. மக்கள் மிக தெளிவாக பாஜகவின் சித்துவிளையாட்டை கவனித்துக்கொண்டிருக்கிறார்கள்.. .. தளபதியின் இன்றைய அறிக்கை #வரலாற்றுசிறப்புவாய்ந்தது.. ... தோழர் ஆலஞ்சி..

கிறுக்கர்கள்..

இன்னும் 50 ஆண்டுகளுக்கு அதிமுகதான் ஆட்சிசெய்யும் செங்கோட்டையன்.. தமிழகத்தில் பாஜக நுழையும் தாமரை மலரும்.. இப்போது தேர்தல் நடத்தினால் அன்புமணி முதல்வராவாரென மோடிக்கு தெரியும்.. என் திறமையை கண்டு உலகமே வியக்கிறது.. தெர்மாகோல் அமைச்சர்.. செல்லூர் ராஜூ.. அய்யாகண்ணு அப்சல்குருவின் ஆள்.. அவரே தான் பாப்பாரா .. நிர்மலா சீதாராமன்.. அதிமுகவை உடைக்க நினைக்கும் திமுக மீது அதிமுக வழக்கு போடலாம்.. பொன்னர்.. .. இவர்களெல்லாம் பதவியில் இருக்கிறார்கள்.. கட்சி நடத்துகிறார்கள் அடிப்படை நாகரீகம் கூட தெரியாத வாய்க்கு வந்ததை பேசி திரிகிறார்கள்.. பொழுதுபோக்கிற்காக அரசியல் செய்கிறவர்கள் கொஞ்சம் சுயபுத்தியோடு பேசுவார்கள். ஆனால் இங்கே ஒரே பைத்தியகாரர்களின் கூச்சலாக இருக்கிறது.. முதலில் தன்நிலை உணரவேண்டும் தங்களின் பலமென்ன .. எவ்வளவு செல்வாக்கோடிருக்கிறோமென்று அறிந்திருக்கவேண்டும்.. கொள்ளைப்புற அரசியல் நீண்ட நாள் நிலைத்ததில்லை.. இன்னும் வாய்ப்பிருக்கிறது ஆள்வதற்கு என்ற ஒரு காரணத்திற்காக அதிமுகவை கொஞ்சம் கொஞ்சமாய் ஆசைகாட்டியும்.பயமுறுத்தியும் பாஜக செய்யும் லீலைகள் அறியாமல் இல்லை.. ஒரு நொடியில் இல்லாதாக்க முடியுமென்கிற நிலையிலும் விட்டுவைத்திருப்பதன் நோக்கம்.. நேர்மையான வழியில் வெற்றி என்ற ஒற்றை சிந்தனையும் அந்த இலக்கை நோக்கிய பயணமும்தான்..இல்லையென்றால் இந்நேரம் கதை முடிக்கப்பட்டிருக்கும்.. .. சிலர் சுயம் மறந்து தங்களின் கடந்தகாலத்தில் மாறி மாறி புகழ்ந்து நிலைநிறுப்பை காத்த வரலாற்றை மறந்து எல்லாம் அறிந்தவரைப்போல பேசிதிரியும் சாதீய நிழலில் நின்று கதைப்போரை மக்கள் முற்றிலுமாக புறக்கணித்தார்கள்.. நேற்று பேசியதை இன்று மாற்றி பேசும் .. உடல்மொழியிலும் வார்த்தை வடிவிலும் ஆணவத்தோடு பேசி திரியும் அதிகாரத்தில் இருக்கிறோம் என்ற திமிரில் பேசும் நிர்மலா பொன்னர் .. மரியாதை தெரியாமல் எதிர்ப்போரை தேசதுரோகியாக்கும் ராசா போன்றவர்கள்.. எம்மக்களால் ஏற்றுக்கொள்ளாதவர்கள்.. இடையிடையே நம்ம பங்காளிகள் .. புத்தியே இல்லாமல் வானத்திற்கும் பூமிக்கும் குதிப்பது.. இதைவிட கொடுமை நடுநிலையாளர்கள்..? போர்வையில் உலவும் சமூககெடுதிகள்.. .. உண்மையில் இவர்களுக்கு திமுக மீதான பயம் வெட்டவெளிச்சமாக தெரிகிறது.. மாவட்ட செயலர் கூட்டம் நடந்தவுடன் இவர்கள் அதிகமாக பதறுகிறார்கள் .. மக்கள் மிக தெளிவாக திமுகமீதும் தளபதி அவர்கள் மீதும் கொண்டுள்ள நம்பிக்கையை கண்டு எரிச்சலடைகிறார்கள்.. இவர்கள் வருங்காலங்களில் முகவரி தொலைந்தவர்களாக உலாவருவார்கள்.. இவர்களின் பேச்சும் செயலும் இவர்களின் இயலாமையிலும் பேராசையிலும் வருகிறது.. தமிழகத்திலிருந்து துடைத்தெறியபடுவார்கள்.. .. #துடைத்தெறியப்படவேண்டும் .. தோழர் ஆலஞ்சி ..

Thursday, April 27, 2017

வைகோ வெத்துவேட்டு

முழுஅடைப்பு வெற்றிதான்.. அதற்கு ஸ்டாலின் காரணமில்லை வைகோ.. இதற்கு பெயர்தான் வன்மம்.. வைகோவின் இயலாமையில் வந்த வார்த்தை என்று கருதமுடியாது நீண்டநாள் மனதில் வன்மத்தோடும் பகையோடும் திரிகிறவரிடமிருந்து இதுபோன்ற வார்த்தைகள் தான் வரும்.. .. செய்வதறியாது நிற்கிறவனின் செயல்பாடு இங்கே இவர் மீது பாவம் தோன்றவில்லை எல்லாம் தன்னால் வந்தது பிறரால் அல்ல என்பதை உணராத வரை வைகோவின் நிலை இன்னும் பரிதாபகரமாகதான் போகும்.. தேசதுரோக வழக்கு 2009 ல் தொடரப்பட்டது இதுவரை அதை கண்டுக்கொள்ளாமல் இப்போது அதை எடுத்து கவனத்தை ஈர்க்கலாம் என்றெண்ணியது அவருக்கு கெடுதியாக வந்துநிற்கிறது.. யாரும் கண்டுக்கொள்ளவில்லை பெட்டி செய்தியாக கூட செய்திதாள்களில் இடம்பெறவில்லை தமிழக மற்றொரு விடயத்தில் கவனத்தை திசைதிருப்ப அரசியலில் காணமல் போனவர்கள் பட்டியலில் இடம்பெறும் நிலைக்கு வந்துவிட்டார்.. .. இடையிடையே வந்து திமுகவை வசைபாடி .. மக்களின் பார்வை கிடைக்குமென நினைத்து கடைசியில் மக்களின் கோவத்திற்கு ஆளாகிறார்.. எதை எப்போது எப்படி செய்யவேண்டுமென்று அறியாததால் தெருவில் அலையும் மனநிலை பாதித்தவரைப்போல மைக் கிடைத்தால் கத்துவதையும் .. ஐம்பது வருட நாடாளுமன்றவாதி என சொல்லி சொல்லியே கடைசியில் யாரும் கண்டுக்கொள்ள மறுப்பதால் கோவம் தலைக்கேறி எதை பேசுகிறோம் என்றே தெரியாமல் எதைஎதையோ உளறிவருகிறார்.. .. விவசாயிகள் டெல்லி போராட்டத்தில் கூட அரியானா விவசாயிகள் கலந்துக்கொண்டால்நான் எழுந்து போய்விடுவேன் என்று சொல்லி அவர்கள் தாமாக முன்வந்து ஆதரவு தருகிறார்கள் என்ற போது நான் 52 வருட பாராளுமன்றவாதி எனக்கு எல்லாம் தெரியும் என கூச்சலிட்டு யாரும் எந்த விவசாயிகளும் செவிசாய்க்காததால் வெளியேறினார்.. இவர்தான் வைகோ.. அவசரக்குடுக்கை, நிதானமின்மை தெளிவோடு கூடிய செயலின்மை நெஞ்சில் வன்மம்... இயலாமையில் வரும் விரக்தி, அனைவரையும் அரவணைத்து செல்லும் தலைமைபண்பின்மை .. மொத்தத்தில் தெளிவின்மை.. ஒரே வரியில் சொல்லவேண்டுமெனில். #வெத்துவேட்டு.. .. தோழர் ஆலஞ்சி..

மம்தா..

#மம்தா_பானர்ஜி.. ஆரம்பகாலங்களில் இவர் மீதான அரசியல் பார்வையில் சட்டென்று உணர்ச்சிவயப்பட கூடியவர் என்றுதான் நினைத்திருந்தேன்.. நாடாளுமன்றத்தில் சபாநாயகருக்கு நேரே கையில் வைத்திருந்த தாள்களை வீசியெறிந்து வெளியேறிய போது இன்னமும் முதிரவில்லையென்ற எண்ணவேண்டியிருந்து.. காங்கிரஸ் பேரியக்கத்தில் இருந்து வெளியேறி தனி கட்சி தொடங்கி அதை வங்கத்தில் ஆட்சி பொறுப்பில் ஏற்றியதின் பின்னில் அவரின் தன்நம்பிக்கையும் விடாமுயற்சியும் எதையும் எதிர்கொள்ளும் மனோதிடமும் நம்மை வியப்பில் ஆழ்த்தியது.. பெண்கள் அரசியலில் மிளிர்வதென்பது அதுவும் சரியான ஜனநாயக நெறிமுறைகளோடென்பது எவ்வளவு கஷ்டமான காரியமென்பதை எல்லோரைவிட தமிழர்களாகிய நாம் அறிவோம்.. (ஜெயலலிதா எப்படி இருக்ககூடாதென்பதற்கு சிறந்த உதாரணம்) எப்படி இருக்கவேண்டும் எப்படி அதே போராட்ட உணர்வோடு அதிகாரத்தில் இருக்கும் போதும் தளராது சமரசம் செய்துக்கொள்ளாது இருக்கவேண்டுமென்பதற்கு சரியான எடுத்துக்காட்டாய் திகழ்கிறார்.. .. இந்திய அரசின் திட்டங்களை வங்கத்தில் செயல்படுத்த வேண்டுமெனில் பங்காளி மொழியில் இருக்க வேண்டுமென்பதை உறுதியோடு சொன்னவர்.. யாருக்கும் புரியாத சமஸ்கிருதத்தை இங்கே நடப்பிலாக்க முடியாதென்று திருப்பி அடித்தவர்..இதோ இப்போது கூட அமிர்ஷா வங்கத்தை திரிணாமுலிடமிருந்து பிடுங்குவோம் uproot என்றதற்கு I accept the challenge of those who challenge me. We'll capture Delhi," Mamata Banerjee .. ஆம் இவரால் மட்டுமே முடியுமென நினைக்கிறேன்.. .. காங்கிரஸ் தலைமை மென்மையான போக்கை கடைப்பிடிப்பது தற்போதைய சூழலுக்கு சரியான அணுகுமுறையாக தெரியவில்லை.. ராகுல் அரசியல் என்பதை பெரியதொரு ஈர்ப்பை தரவில்லை என்பதும்.. காங்கிரஸ் இரண்டாம் கட்ட தலைவர்களின் அணுகுமுறைகளில் மாற்றம் ஏற்படாததும் இந்தியாவின் மிக பெரிய இயக்கம் (காங்கிரஸ்) சிதலடைந்து கிடக்கிறது.. தற்போதைக்கு காங்கிரஸ் தலைமை மம்தா போன்றவர்களிடம் செல்வதுதான் நாட்டிற்கு நல்லது.. அல்லது மம்தாவை பிரதமர் வேட்பாளராக அறிவித்து பாஜகவை எதிர்க்கும் கட்சிகள் ஓரணியில் இணைய வேண்டும் .. இரண்டாவதை விட காங்கிரஸ் தலைமையை மம்தாவிடம் தரலாம் அப்போதுதான் பாஜகவிற்கு சரியான எதிரை உருவாக்க முடியும்.. .. முடியாததென்று ஏதுமில்லை என்கிறது பாரசீக பொன்மொழி .. ஆம் முடியாததே கிடையாது ஏதோ ஒரு புள்ளியில் அது சேரும் அப்போது அது தரவேண்டியதை தந்தே தீரும் அந்த வெற்றி நோக்கியதாக இருக்கவேண்டும் நமது செயல்.. .. மீண்டும் மம்தாவின் வரிகள் I accept the challenge of those who challenge me. We'll capture Delhi," Mamata Banerjee .. .. தோழர் ஆலஞ்சி..

Tuesday, April 25, 2017

பெரியார் தேசமிது

பெரியார் தேசமிது தோழர் ஆலஞ்சி பெரியார் சிலையின் பீடங்களில் இருக்கும் வாசகங்களை அழிக்க வேண்டும். - ராமகோபாலன். திராவிடத்தை ஒழிக்கப்பட வேண்டிய நேரம் வந்தாயிற்று எச்.ராசா.. .. பெரியாரை,பெரியாரிய கருத்துக்களை மீறிய எதுவும் அவ்வளவு எளிதில் தமிழகத்தில் சாத்தியமில்லை இதை மகோராவும்(எம்ஜிஆர்) ஜெயலலிதாவும் அறிந்திருந்ததால்தால் மிதவாதிகளை போல #நடித்தார்கள் இல்லையேல் அவர்களின் முகம் வெளிறிப்போயிருக்கும்.. கடவுள் மறுப்பு வாசகத்தை அழிக்கவேண்டும் என்கிற ராமகோபலனே.. பெரியார் கடுமையாக எதிர்த்த தேவதாசிமுறை,பால்யவிவாகம் தீண்டாமை தாலிஅறுத்தால் மொட்டையடிக்கவேண்டும் எனச்சொல்லிப் பாருங்கள்.. உங்கள் வீட்டுப்பெண்களே விளக்காமாறை தூக்குவார்கள்.. .. நிறையபேர் பெரியாரை தவிர்த்து திமுகவை கொண்டாடுகிறார்கள் சில திமுக பதிவர்கள் (பெயரில் இருப்பவர்கள்) கூட ..நிச்சயமாக அவர்கள் திமுக கொள்கையாளர்கள் இல்லை மிதவாதிகள் எனும் போர்வையில் உளவும் பாசிசவாதிகள்.. பெரியாரை மீறிய தமிழகமோ திராவிடமோ திமுகவோ இல்லை.. என்பதை புரிந்துக்கொள்ளுங்கள்.. .. மறைமுக காய்நகர்த்தல்களை அறியாமல் இல்லை கிரிஜா முதல் புதிய கவர்னர் வரை .. இது நீண்டகாலம் நீடிக்காதென்பது என்னதான் குறுக்குவழியில் தங்கள் செயல்திட்டங்களை கொண்டுவந்தாலும் தேர்தலுக்கு பிறகு துடைத்தெறியப்படும்.. அதனால்தான் மிக கவனமாக செயல்படுகிறார்கள். தமிழக மக்களின் உணர்வோடு கலந்துவிட்டதால்தான் சீமான் போன்றவர்கள் கூட திரும்பவும் பெரியாரை உயர்த்திபிடிக்க தொடங்கியிருக்கிறார்கள்.. ராமகோபாலன் வகையறாக்கள் ஒன்றை உணர்ந்துக்கொள்வது நல்லது .. கடலூர் கூட்டத்தில் செருப்புவீசினார்கள் செருப்பு வீசிய இடத்தில் பெரியாரின் சிலையை நிறுவினார் கலைஞர்.. செருப்பிற்கு ஒரு சிலை வருமென்றான் கவிஞன்.. எச்சரிக்கை.. .. அறிவிலிகளே புரிந்துக்கொள்ளுங்கள்.. அச்சமறியாத திராவிடர் பூமி.. #பெரியாரின்_தேசமிது.. .. http://mansoorspm.blogspot.in/2016/12/blog-post_30.html?m=1

முழு அடைப்பு

முழு அடைப்பு ..வெற்றி.. கொண்டாட அல்ல புரிதலுக்காக.. கண்டுக்கொள்ளாத மத்திய அரசையும் கையாலாகாத மாநில அரசையும் மக்கள்முன் நிறுத்தியிருக்கிறது.. இந்த ஒருங்கிணைப்பிற்காக ஒன்றிணைந்த அனைத்து கட்சி அமைப்புகளுக்கும் காவிரிக்கரையை சேர்ந்தவன் என்ற வகையில் நன்றி..! .. இந்திய அரசிலமைப்பு முழுஅடைப்பை ஏற்கவில்லை என்பதும்.. முழுஅடைப்பை விரும்பாதவர்களின் அவசரதேவைகளுக்கான உரிமைகள் நிலைநாட்டப்படவேண்டியதும் கருத்தில் கொண்டுதான் முழு பந்த் என்பதை சட்டவிரோதமாக்கியிருக்கிறது.. திமுக ஆளும்கட்சியாக இருந்து நடத்திய பந்த்தை எதிர்த்து வந்தேறி கிரிமினல் ஜெயலலிதா காழ்ப்புணர்ச்சியில் தொடர்ந்த வழக்கில் பெறப்பட்ட தீர்ப்புதான் மேல உள்ளது.. மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து அதற்குபிறகு நிறைய போராட்டமும் முழுஅடைப்பும் நடந்திருந்தாலும் பேருந்துகள் வலுக்கட்டாயமாக இயக்கப்படும்.. ஆளும்கட்சி தொழிற்சங்கத்தை சேர்ந்தவர்கள் இயக்குவார்கள்.. அனைத்து தொழிற்சங்கங்கள் தொமுச உட்பட பங்கேற்றியிருக்கிறது.. வணிகர்கள் அதிமுக மிரட்டலுக்கு அஞ்சாமல் கடைகளை அடைத்து தங்களின் எதிர்ப்பை பலமாக பதிவு செய்திருக்கிறார்கள் .. பாஜக .. பாஜகவின் பினாமி அதிமுகவும் எவ்வளவோ முயன்றும் தோற்றியிருக்கிறது பாமக தமாகா போன்ற உதிரிகளை உசுப்பேற்றி பார்த்ததும்..கடைசிவரை மக்கள் காதோர்க்காமல் வெற்றிபெற செய்திருக்கிறார்கள்.. .. இன்றைய தினம் முழுஅடைப்பு வெற்றியடைந்திருக்கிறது.. பாதிப்பில்லாமல் போராட்டத்தை நடத்த திமுக கற்றுக்கொள்ளவேண்டுமென்ற மரம்வெட்டியின் யோசனையை ஏற்று.. பாவம் திமுகவினருக்கு குடிசை கொளுத்தவும் மிகவும் ஆண்டுகள் பழைமையான மரங்களை வெட்டி போக்குவரத்திற்கு இடையூறு செய்ய தெரியாததால் மறியல் நடத்தி எதிர்ப்பை பதிவு செய்திருக்கிறார்கள்.. கலந்துக்கொண்டவர்கள் அனைத்துக்கட்சியை சேர்ந்த நாட்டின் நலன் கருதுவோரும் விவசாயிகளும் தான்.. இந்த வெற்றி சிலருக்கு எர்ச்சலை தரும்.. எரிச்சல் தருவதையே இவர்களின் கருத்துக்கள் நமக்கு சொல்கிறது.. உண்மையில் இவர்கள் மக்களால் புறக்கணிக்கப்பட்டவர்களும்.. தொடர்ந்து புறக்கணிக்கப்படுகிறவர்களும்தான்.. .. தாமாக முன்வந்து கலந்துக்கொண்ட சோறு உண்ணும் அனைவருக்கும் நன்றி!.. .. தோழர் ஆலஞ்சி..

Monday, April 24, 2017

அரைவேக்காடு

அரசியலில் அரைவேக்காடுகள் அசிங்கங்கள்.. .. வேறெங்குமில்லாத அளவிற்கு இங்கே தமிழகத்தில் கட்சிகள் அதிகம் அதைவிட தலைவர்கள் அதிகம் அதையெல்லாம்விட அவர்களின் பேச்சுக்களும் செயல்களும் அருவருப்பாக இருக்கிறது.. முன் பேசியதை உடனே மறுத்து நான் பேசவே இல்லை என்கிற எச்.ராசா தொட்டு... பொதுதேர்தல் வந்தால் அன்புமணி முதல்வராவார் என்று உளறல்களும்.. பதவிக்காக நேற்று முன்தினம் பேசியதை மறந்து சின்னம்மா என்றாலே அருவருக்கிறது என்கிற அமைச்சர் வீரமணி .. மக்களின் கருத்துக்கேட்டு வாக்குபெட்டியெல்லாம் வைத்து எடப்பாடிக்கு வாக்களித்தவர் அன்சாரி.. திடீரென மாறி பேசும் அவலம்.. இடையிடையே தெர்மாகூல் வேறு.. .. எச்.ராசா போன்ற கேடுகெட்டவர்களுக்கு அவர்கள் மொழியிலேயே பதில் சொல்வதுதான் சரியென நினைக்கிறேன் நாகரீகம் பார்த்து எழுத்தில் அசிங்கத்தை ஏற்றாமல் சொன்னால் அவர்களுக்கு புரியாது.. அம்மணமாக ஏன் ஓடவில்லை என்கிறார்.. அது எங்களுக்குதெரியாது ஆனால் ஓசூரில் குண்டிக்காட்டி பாளையம் என்ற காரண பெயர் வந்ததற்கான வரலாறு தெரியும் எச்.ராசாவிற்கு தெரியவில்லையென்றால் #ராஜாஜியை முழுவதுமாக படித்து தெரிந்துக்கொள்ளலாம்.. .. விவசாயிகளுக்கு திமுக எதுவும் செய்யவில்லை.. இன்றைய பிரச்சனைகளுக்கு திமுக தான் காரணமென மதவெறி பாஜகவும் சாதிவெறி பாமகவும் சொல்வதிலிருந்தே.. அவர்கள் இன்னமும் தெளியாமல் இருக்கிறார்களென்பது புரிகிறது.. காவிரி பிரச்சனையில் நடுவர்மன்றம் அமைத்தது திமுகதான்.. மாநில அரசின் நிதிச்சுமையை ஏற்று ₹7000 கோடி விவசாயகடனை தள்ளுபடி செய்தது இலவசமின்சாரம் .. வி.பி.சிங்.. மற்றும் மன்மோகன் அரசை வலியுறுத்தி ஏறக்குறைய ₹70,000 கோடி கடனை தள்ளுபடி செய்ய வைத்ததும் திமுகதான்.. .. என்ன நடக்கிறது யார் எந்தநேரத்தில் எதை கதைப்பார்களென தெரியவில்லை.. முழுஅடைப்பன்று பள்ளிகள் இயங்காது.. ஸ்கூல் லீவிட்டது கூட தெரியாத.. அமைச்சர்.. அணிகளின் இணைப்பைப்பற்றி பேச குறுஞ்செய்தி அனுப்பியிருக்கிறோம் வைத்தி.. உண்மையிலேயே முடியல..அடிப்படை அறிவில்லாதவர்களை எல்லாம் அரசியல்வாதிகளாக நாம் பெற்றிருக்கிறோம்.. எழுபதுகளின் சினிமா கவர்ச்சியில் சீரழிந்த தமிழகத்தின் தாக்கம் இன்னும் விட்டபாடில்லை.. .. துடைத்தெறியப்படவேண்டியவர்கள்.. மதத்தாலும், சாதியாலும்,கவர்ச்சியாலும் பணத்தாலும் நம்மை சூழ்ந்தவர்கள் நிச்சயமாக அரசியலைவிட்டே ஒழிக்கப்படவேண்டியவர்.. நல்லவர்களை .. நமக்காக உழைக்கிறவர்களை அறிவும்,அனுபவமும் செயல்படுத்தும் திறமையும்..கொண்டவர்களை பின்துணைப்போம்.. .. #அறிவின்துணைக்கொண்டு.. .. தோழர் ஆலஞ்சி...

Saturday, April 22, 2017

ஊழல்..ஆட்சி எது..

நடப்பது ஊழல் ஆட்சியா..? தந்தி .. இதை சொல்ல இத்தனை காலமா.. இந்தியா முழுவதும் எல்லா மாநிலங்களிலும் ஆளும் ஆண்ட அரசுகள் மீது ஊழல் குற்றசாட்டுகள் கூறபடுவதுண்டு.. சிலர் தண்டிக்கபட்டிருக்கிறார்கள்.. ஆனால் தமிழகத்தில் இது பிரத்கேயமாக பேசபடும். திமுகவை குறிவைத்து ஊழல்கட்சி என சொல்லி வந்த ஊடகங்கள் சமூக ஆர்வலர்கள் மறந்தும் ஜெயலலிதாவின் ஊழலை பேசுவதே இல்லை..இத்தனைக்கும் திமுக மீதான குற்றசாட்டுகள் .. குற்றசாட்டுக்களாகவே இருக்கிறதே தவிர.. ஒரு வழக்கில் கூட தண்டிக்கபடவில்லை.. எத்தனை முறை சொல்லியும்.. கமிஷன்,அமைத்தும் வழக்கு தொடுத்து பார்த்துவிட்டார்கள்.. ஆனால் ஒருமுறை கூட திமுக மீதான குற்றசாட்டு நீதிமன்றத்தால் தண்டிக்கப்படவுமில்லை கண்டிக்கப்படவுமில்லை.. எத்தனை முறைகளில் தங்களுக்கு தோன்றிய விதத்தில் எல்லாம் வழக்கு தொடுத்து தோல்வியை சந்தித்திருக்கிறார்கள்.. .. ஆனால் அதிமுக அரசு மீதான ஊழல்வழக்குகளில் தொடர்ந்து அமைச்சர்களும் ஏன் அரசின் முதன்மை அமைச்சர் ஜெயலலிதாவும் கூட கண்டிக்க மட்டுமல்ல தண்டிக்கவும் செய்தார்கள் ஆனால் ஊடகங்கள் அவரை புனிதராக காட்ட முயற்சிக்கிறது..ஹோட்டல் பிளசண்ட் வழக்கில் தண்டிக்கப்பட்டும்.. டான்சி வழக்கில் தண்டிக்கப்பட்டு பின் சொத்தை திருப்பி தருகிறேன் என்ற வாக்குமூலத்தின் அடிப்படையில் விடுவிக்கப்பட்டார்..அமைச்சர்கள் நாகூர்மீரான், மருங்காபுரி பொன்னுசாமி, தொடங்கி இப்போது கல்விஅமைச்சராக இருந்த அரங்கநாயகம் வரை தண்டிக்கபட்டிருக்கிறாரே.. ஜெயலலிதா.சொத்துகுவிப்பு வழக்கில் நான்காண்டு சிறை தண்டனைப்பெற்று..முதல்வராக சென்றவரின் காரின் உள்ள லோகோவையும் கொடியையும் பிடிங்கிக்கொண்டு சிறைக்கு அனுப்பியும் .. இடையில் கணிதப்பிழையில் தப்பித்து மீண்டும்,ஆட்சியில் அமர்ந்ததால்..இன்றைய எல்லா கெடுதிகளுக்கும் காரணம்.. உச்சநீதிமன்றத்தாலேயே குற்றவாளியென,அறிவிக்கப்பட்டு ஊழல் நடந்திருப்பது நிரூபிக்கப்பட்டும்..ஊழல் ஆட்சியா என கேட்பதிலிருந்தே.. ஊடகத்தின் அயோக்கியத்தனம் வெட்டவெளிச்சமாகிறது.. .. தந்தி செம்மலையை அழைத்து விவாதிக்கிறது.. கைப்புண்ணுக்கு கண்ணாடி தேவையில்லை.. ஒட்டுமொத்தமாக அமைச்சர்கள் மீதான குற்றசாட்டும் வெளிப்படையான ஊழலும்.. இப்போதுகூட வைகையை Thermocol கொண்டு மூடியதில்...அறிவுபூர்வமாக ..? எவ்வளவு கொள்கை என்பதை மக்களே கணக்கிடுகிறார்கள்.. ஜெயலலிதா தொடங்கி அமைச்சர்கள் வாரியம் வரை பணம் சம்பாதிக்கமட்டுமே அரசு அதிகாரத்தை பயன்படுத்தியிருக்கிறார்கள்.. கேவலமான அரசு அதை விமர்சிக்க தைரியமில்லாத ஊடகம்.. .. #களவாணிகள்... .. தோழர் ஆலஞ்சி..

Friday, April 21, 2017

திணிப்பு...

இந்திய அரசின் பாடத்திட்டங்களில் பயிலும் மாணவர்களுக்கு இனி ஹிந்தி கட்டாயம்.. முதலில் ஹிந்தி மொழி இந்திய மொழியே இல்லையென்பதும் அதை இந்தியர்கள் மீது திணிப்பதும் கூட அரசியல்தான்.. .. ஹிந்தி மொழி 1824ல் கல்கத்தா பல்கலைக்கழகத்தின் .. ஆச்சாரியமார்கள் ஒன்றுகூடி .. (இந்தியாவை ஆளும் மொகலாயர்கள் கொண்டுவந்த பாரசீகமொழியையும்.. அதனூடே பிரிந்துவந்த உருதுவையும் ஏற்க மறுத்து பேச்சுவழக்கில் அதுதானிருந்தது.. பிராந்திய மொழிகளான குஜராத்தி மராத்தி பங்காளி மற்றும்.. தமிழைத் தலைமையாக கொண்ட திராவிட மொழிகள் மட்டுமே வழக்கில் இருந்தது) புதிய மொழிவடிவை கொண்டுவந்தார்கள்.. உருதுவின் இலக்கணத்தையும்.. ஹிப்ளு மொழியின் உருவையும்..மற்றும் சமஸ்கிருத சொற்களையும் கலந்த ஒரு மொழி வடிவம்.. ஆங்கிலமெப்படி கிரேக்கமொழியின் இலக்கணத்தை கொண்டதோ அதைப்போல ஹிந்திக்கென்று இலக்கண வடிவம் இல்லை.. உருது இலக்கணத்தை கொண்டது ஹிந்திமொழி.. .. ஒரு மொழியின் முழுமை.. அல்லது கட்டமைப்பு ,செழுமை அதன் இலக்கணத்தில் இருக்கிறதென்றார்.. மொழியியல் ஆய்வாளரும் பேராசிரியருமான அலெக் கோலியர் .. மற்றொன்றும் சொன்னார்.. #உலக_வரலாற்றில் முதன் முதலாகத் தோன்றிய மொழியும், உலகம் தோன்றியதிலிருந்து வாழ்ந்த மக்கள் அனைவரும் பேசிய மொழி #தமிழ்மொழியே எனவும் சொன்னார்..அமெரிக்க மொழியியல் ஆய்வாளரும் பேராசிரியருமான அலெக் கோலியர் .. .. இந்திய போன்ற துணைக்கண்டத்தில் பல்வேறு இன மொழி கலாச்சாரங்களை கொண்ட ஒரு பன்முகதன்மை கொண்ட தேசத்தில் ஒருமொழியை மட்டும் முன்னெடுப்பதென்பது பிற மொழிகளின் மீதான தாக்குதல். பிற மொழிகளின் தொன்மையை சிதைக்கும் செயல்.. பலமொழிகளின் அறிவு தேவை என்பதில் மாற்றுக்கருத்தில்லை ஆனால் அது சம்பந்தப்பட்ட மாநிலத்தின்.. அங்குள்ள மக்களின் உணர்வுகளின் மீதான வாள்வீச்சாக இருக்ககூடாது.. நேரு காலம்தொட்டே ஊடகமொழியாக ஆங்கிலத்தை கொண்டிருக்கவேண்டுமென்ற தீர்மானம்.. ஒருமொழியை மட்டுமே முன்னெடுக்கிற .. பிற மொழிகளை பின்னுக்கு தள்ளும் அல்லது அழிக்க நினைக்கும் செயல் என்ற முடிவு எல்லா மொழிபேசும் மாநிலங்களும் சேர்ந்தெடுத்தது.. .. பாஜக ஆட்சி பொறுப்பிற்கு வந்ததிலிருந்து செத்த சமஸ்கிருதத்தை திணிக்க பார்த்து அது முடியாமல் போய் யாருமே செவிமடுக்கவில்லையென்பது வேறுவிடயம்.. பலமொழி கலப்பான ஹிந்தியை கையிலெடுத்து பிறமொழி பேசும் மக்களிடையே திணிக்க பார்க்கிறது.. ஹிந்தியை அனுமதித்ததின் விளைவாக மராத்திய மொழி பேசும் மக்களின் வேலைவாய்ப்பு உரிமைகள் மும்பை போன்ற பெருநகரங்களில் வெகுவாக பாதிக்கப்பட்டது அதனால் மராத்திமொழிபேசுபவரை தவிர மற்றவர்கள் வெளியேற வேண்டுமென போராட்டமும் கலவரமும் வந்தது ..இதே போன்ற நிலைதான் ஹிந்தி பேசும் பிற மாநிலங்களிலும் நிகழ்ந்தது... புரிகிறமாதிரி சொல்லவேண்டுமெனில் உள்ளுர்காரன் பாதிக்கப்பட்டான்.. .. ஒருமொழியை கற்பதில் அறிந்துக்கொள்வதில் பிழையில்லை.. தேவைபடும் போது அது தானாகவே கற்றுக்கொள்ள போகிறார்கள் ஆனால் எந்தவொரு மொழியும் .. பிற மொழிபேசும் மக்களின் மீது திணிக்கப்படுவதென்பது..உச்சக்கட்ட அயோக்கியத்தனம்.. திணிக்கப்படும் மொழி எம் தமிழாய் இருந்தால் கூட.. .. தோழர் ஆலஞ்சி

Thursday, April 20, 2017

பன்னீரெனும் பரம அயோக்கியன்..

#பன்னீரெனும்_பரமஅயோக்கியன்.. .. அதிமுகவிற்குள் பன்னீர் எதிர்ப்பு வலுக்கிறது.. ஆம்.. எதிர்க்கிறவனை.. விட்டு ஓடுகிறவனை.. புறமிருந்து தாக்குகிறவனை .. கூட சிலநேரம் நம்பலாம் ....ஆனால் கூழை கும்பிடுப்போட்டு நயவஞ்சகமாய் சிரிக்கிறவனை நம்பமுடியாது.. .. மிக மோசமான..அரசியல் அயோக்கியர் பன்னீர்.. கட்சி சார்ந்த நிலை ,கொள்கை, விருப்பம், என்பதை ஒதுக்கி வைத்துவிட்டு சாமானியனாக யோசித்து பாருங்கள்.. பன்னீர் தகுதியானவரா.. ஏன் பன்னீருக்கு முதல்வர் பதவிவழங்கவேண்டும்.. .. முதல்வராக இருந்தவர் கட்சிதலைமை ..மாண்புமிகு சின்னம்மா கேட்டுக்கொண்டதால் ராஜினாமா செய்தவர்.. அப்போது முடியாதென்று மறுத்திருந்தால் சுயபுத்தியில் செயல்படுகிறார் கொஞ்சம் மானத்தோடு நடந்துக்கொள்கிறார் என நம்பலாம்... முதலில் ராஜினாமா.. பிறகு பாஜக தூண்டுதலில் பேரில் தியானம் .. கட்சியை உடைத்து சின்னத்தை முடக்கி எல்லா வேலையும் செய்துவிட்டு உலகமகா உத்தமர் வேசம் போடுகிறார்.. சசிகலா காலில்விழுந்து முதல்வராக இருந்துக்கொண்டு ஒட்டுமொத்த தமிழகத்தையே தலைகுனிய வைத்த அயோக்கியர்.. இன்று யோக்கியன் நானென்கிறார்.. ஒருகுடும்பத்திற்குள் அதிகாரம் செல்லகூடாதாம்.. அவரின் தம்பி மகன்கள் சம்பந்தி என கட்சியிலும்.. அரசுவழக்கறிஞர்களாகவும் ..கட்டபஞ்சாயத்திலும் கோலோச்சுகிறார்கள்.. .. அதிமுகவிற்குள் பாஜகவின் ஆதிக்கம் மட்டுமல்ல இப்போது நடந்துக்கொண்டிருப்பது சாதிய சண்டை.. கொங்கும் மறவரும் .. யாருக்கு அதிகாரமென்பதில் பகை கொள்கிறார்கள்.. கொங்கிலிருந்து அதிக உறுப்பினர்களை கொண்டிருப்பது.. மற்றொன்று துரோகத்தால் முதுகில் குத்தி இனத்திற்குள் பிளவும்.. செய்வதறியாது முக்குலமும் .. ஒன்றை இருஅணியினருமே மறந்து போனார்கள்.. இருவருக்குமே வாய்ப்பு வழங்கியது A2 சசிகலாதான்.. பன்னீரின் திறமையை கண்டு வியந்து ஜெயலலிதா முதல்வர் பதவி தந்தது போல சிலர் பேசிவருகிறார்கள்.. சசிகலா தன் இனத்தை சேர்ந்தவர் என்பதாலும்.. தினகரனின் #கீழ்படிபவன் என்ற சான்றிதழுமே பன்னீருக்கு பதவி தந்ததே தவிர.. ஜெயலலிதா பிரியத்தின் பேரிலோ நல்ல நிர்வாகியென்றோ தரவில்லை.. பன்னீர் பெற்ற எல்லா சலுகையும் பொறுப்பும் சசிகலா தயவில் என்பதுதான் உண்மை.. கடைசியில் குலத்தை கெடுக்கவந்த கோடாரியாய் மாறினார்.. .. உண்மையில் ஜெயலலிதா மரணம் பற்றிய எல்லா உண்மைகள் தெரிந்தும் .. பதவியில் இருந்தபோது.. எதுவும் கசியாமல் பார்த்துக்கொண்டவர்.. தமிழக அரசியல் கண்ட மிக அயோக்கியத்தனமான கேடுக்கெட்ட அரசியல்வாதி பன்னீர்தான்.. அதிமுக அறிவிலிகளின் கூடாரம் என்றாலும் இப்போது துரோகிகளால் சிதறுண்டு கிடக்கிறது.. துரோகத்தால் விளைந்தது துரோகத்தால் அழிகிறது.. #காலம்தந்த_தீர்ப்பு.. .. தோழர் ஆலஞ்சி..

Wednesday, April 19, 2017

நூற்றாண்டு கண்ட இயக்கம்..

இன்று நேற்றா.. நூற்றாண்டாய் கடும் முயற்சியெடுத்துக்கொண்டுதானிருக்கிறார்கள்.. டி.எம்.நாயர் தியாகராய செட்டி பனகல் அரசர் ..நடேசமுதலியார் காலம் தொட்டே அழித்தே தீருவோமென கங்கணம் கட்டிக்கொண்டுதானியிருக்கிறார்கள்.. திராவிட இயக்கமாய் உருப்பெற்று.. பெரியாரின் பெருந்தொண்டால் நெருங்கமுடியாமல் போய்.. கலைஞர் பெருமகனின் சாதூர்யத்தால் துரோகிகளை இனம்கண்டு களைந்ததால் பெரும் இயக்கமாய்.. தி.மு.கழகம்.. .. எத்தனை குறுக்குவழிகள் உண்டோ அத்தனையிலும் வந்தார்கள்.. மகோராவை தூண்டிவிட்டு கட்சியை உடைத்தபோதும்.. மிசா,கைது.. ஆட்சிகலைப்பு எத்தனையோ பார்த்தாகிவிட்டது.. ஊழல்கட்சி என பெயர்கட்டி பார்த்தார்கள் எவரையும் தண்டிக்கமுடியவில்லை.. இப்போது 2ஜி வரை.. சொன்னவர்கள்தான் தொடர்ந்து சிறைக்கு சென்றுக்கொண்டிருக்கிறார்கள்.. திமுக ஒற்றை நபரை நம்பி இருக்கவில்லை.. பெரும்கூட்டம் அறிவின் சுடரில் இணைந்த கூட்டம் அது அதனால்தான்.. ராஜாஜியை காக்கவைத்துவிட்டு பெரியாரிடம் சென்று வாழ்த்துகளை பெற்று அண்ணா ஆட்சியமைத்தார்.. .. மூட்டைப்பூச்சியை போல் நசுக்குவேன் என்ற ராஜாஜியையும்.. 6000 அடி பள்ளத்தில் புதைத்துவிடுவேனென்ற பக்தவச்சலத்தையும்..இருக்குமிடம் தெரியாமல் கல்லறைக்கு அனுப்புவேன் என்ற முதுகில் குத்திய எம்ஜிஆரையும்(ம.கோ.ரா.) கடந்து இன்றும் நிலைத்துநிற்க முடிகிறது.. எத்தனை சூழிச்சிகள்.. அத்தனையும்.. சாணக்கியன் வம்சம் செய்துபார்த்தது..ஆனால் நிஜத்தில் சாணக்கியன் #கலைஞர்தான் என்பதறிந்து .. திசைமாறி அதிமுகவை சிதைத்து தலைக்காட்ட முயல்கிறது.. .. திராவிட இயக்கம் நான்காம் தலைமுறையை மிக சரியாக வடிவமைத்து தளபதி கையில் தந்திருக்கிறது.. சிலர் அதிமுகவை போல திமுகவையும் சிதறவிடலாமென பகல்கனவு காண்கிறார்கள்.. இதோ இன்றைய தினம் தளபதியின் செய்தியே போதும்.. இந்தி நாடாக்க முயற்சிக்காதீர்கள்.. புரிகிறதா.. திமுகவின் வலிமை.. பதவி இருந்தாலும் இல்லாவிட்டடாலும் கொள்கை உறுதி, மக்கள் பணி.. சமூகநலன்.. இதுதான் திமுகவின் ஆணிவேர்.. அதனால்தான் தொடர்ந்து இயங்கமுடிகிறது.. .. திமுக கட்சியல்ல கரைந்துபோகவோ அழிப்பதற்கோ.. விலைபோகவோ.. #திமுக_மாபெரும்இயக்கம் தொடர்ந்து இயங்கும்..புரிகிறதா.. DMK.. not just a Political Party.. it's a Great Movement.. .. தோழர் ஆலஞ்சி..

துரோக வரலாறு..

#படுகேவலமானவர்கள்.. .. பதவி வெறி பீ திங்க சொல்கிறது..தனியொருவனை கழட்டிவிட்டால் தாங்கள் தூய்மையாகி விடுவோமென மக்களை நமபவைக்கிறார்கள் பாருங்கள்.. அங்கே தான் தோற்றுப்போயிருக்கிறார்கள்.. நேற்றுவரை தங்கமாக தெரிந்தவன் ரெய்ட் வருமென பயந்து காட்டிக்கொடுக்கிறான்.. சேர்ந்து திருடியவன் மாட்டிக்கொள்வோமோ என்றஞ்சி இதோ இவன்தான் #பெருந்திருடன் என ஒப்பாரி வைக்கிறான்.. துரோகங்கள் எப்போதும் வீழ்ந்தே போயிருக்கிறது.. .. மாண்புமிகு சின்னம்மா என்றவர்கள் சிறைக்கு போனதும்.. மாபியா தலைவியானாள்..தினகரனை நாங்கள் வாங்கி வந்த வரமென்றவர்கள். சந்தேகவளையத்தில் என்றவுடன்.. தூக்கியெறிகிறார்கள்.. இவர்களை போன்ற துரோகிகளை சந்தர்ப்பவாதிகளை இதுவரை கண்டதில்லை.. இப்போதுகூட சேர்ந்து நிற்பதைப்போல தெரியும் ஆனால் எனக்கு பதவியில்லையென்ற நிலை வந்தால் நானும் வாளெடுப்பேன்.. அதுதான் நடக்கும்.. .. அதிமுக துரோகங்களால் உருவாக்கபட்டது.. எம்ஜிஆர் எனும் பேரழிவு தந்த விதை மரமாய் வளர்ந்தது ஆனால் அது போத்தைமரமென்று மக்கள் அறிய முடிந்ததில் பெரும்மகிழ்ச்சி.. உள்ளே கூடுதானிருந்தது... சின்னதாய் அசைத்தால் வீழ்ந்துவிடும் இல்லையென்றால் கூட சிறிய காற்றோ மழையோ .. வேரோடு பிடிங்கி எறிந்துவிடும்.. .. #திராவிடபெருந்தலைவன்_கலைஞரின் முதுகில் குத்தி தொடங்கி கட்சி..(எம்ஜிஆர்)ம.கோ.ரா உடல்நலியுற்றிருந்தபோது.. இனி அவரால் எதுவும் முடியாது என்னை முதல்வராக்குங்கள் என ராஜீவிற்கு கடிதமெழுதி துரோகத்தை மீண்டும் துவக்கியவர்.. இப்போது சசி, பன்னீர்,எடப்பாடி என வரிசையாக ஒருவரை ஒருவர் முதுகில் குத்தி வரலாற்றை பின்தொடர்கிறார்கள்.. இன்னும் நிறைய வருவார்கள்.. துரோகிகள் பலர். பதவி கிடைக்காமல் போகும் போது.. .. தினகரனும் சசிகலாவும் திருடர்கள் என்றால் ஜெயலலிதாவும் திருடர்தான்.. இவர்கள்கெட்டவர்கள் என்றால் ஜெவும் கெட்டவர்தான்.. ஆனால் பதவிக்காக எதையும் செய்ய துணியும் இவர்கள் கேடுகெட்டவர்கள்.. ஒன்றாக சேர்ந்து கொள்ளையடித்துவிட்டு .. ஒருவரை மட்டும் பலிகடாவாக்கிவிட்டால் இவர்கள் உத்தமர்களா.. இனியும் நிறைய நாடகங்கள் அரங்கேறும்.. எங்களுக்கு பதவியில்லையா.. ஒருசிலரே அமைச்சர்களாக இருப்பார்களா என கேள்வி எழும் போது மீண்டும் சிதறும்.. துரோகங்களை துரோகத்தால் வீழ்த்துவார்கள்.. மகோரா ஜெயலலிதா தொட்டு அதானே நடந்துவருகிறது.. அதிமுகவை பின்னிலிருந்து இயக்கும் பாஜகவிற்கு தெரியும் இவர்கள் லாயக்கற்றவர்களென்று.. .. பாவம் மக்கள்.. #சிறியதொகைக்கு_வாக்கைவிற்று_வாங்கிய_பெரும்கேடு_அதிமுக… .. தோழர் ஆலஞ்சி...

Monday, April 17, 2017

கேடிகெட்டவர்கள்

அதிகாரமும் ஆதிக்கமும் கை மாறலாம்.. வரும் செய்திகள் அப்படிதான் சொல்கிறது..அதிமுக எனும் கட்சியை தன் கட்டுக்குள் கொண்டுவந்திருக்கிறது பாஜக.. தினகரன் இலைக்காக காசு கொடுத்தாரென டெல்லி வழக்கு பதிவு செய்யும் போதே நமக்கு பிடி கிட்டுகிறது.. .. எப்போதும் நேரடியாக களம்காண முடியாது என்பதால்.எந்த காலத்திலும் அது சாத்தியமில்லை என்பதால் அதிமுகவை சிதைத்து அதன் மீறி ஏறியமர்ந்து கோலோச்சலாம் என்ற ஆசையும் திட்டமும் சிறிதுசிறதாய் வேகமெடுக்க தொடங்கியிருக்கிறது.. பணம் கொடுத்து இலையை பெற முயற்சித்தார் என்ற குற்றசாட்டு உண்மையெனில்.. தேர்தல் ஆணையம் பணம் வாங்கும் என்பதும் உண்மையா.. தேர்தல் ஆணையத்தை அதிகாரம் பணபலத்தால் வளைத்தொடிக்க முடியுமென்பதும்..ஆளும்கட்சிக்கு சாதாகமான முடிவை எடுக்க ஆணையம் பயன்படுமென்பதும் .. நேர்மையான தேர்தலை அது நடத்தாது வேண்டியவர்களுக்காக வளைந்து நெளியுமென்பது தானே உண்மை.. .. உண்மையில் வெட்கப்படவேண்டாமா.. தினகரன் அயோக்கியராக.. மிக மோசமான மாபியா கும்பலாகவே இருக்கட்டும் அவரால் இந்திய அரசை .. அரசு நிர்வாகத்தை ,தனிஅதிகாரம் கொண்ட அமைப்பை.. வாங்க கூடிய அளவிற்கு பணம் எங்கிருந்து வந்தது.. கருப்புபணத்தை ஒழித்ததாக சொல்லும் மோடி ..மொத்த பணத்தையும் தினகரனிடம் விட்டுவைத்தாரா.. இடைத்தேர்தலுக்காக ₹89 கோடி செலவு செய்கிற கட்சியை அதன் ஆட்சியை ஏன் இன்னும் விட்டுவைத்திருக்கவேண்டும்.. எதை எதிர்பார்க்கிறது.. குரங்கை கட்டுபாட்டில் வைத்து கரணம் போட சொல்லும் வித்தையைப்போல தன் சொல்லிற்கேற்க ஆடும் அரசை நிறுவ முயல்கிறதா.. இதுதான் ஜனநாயகமா.. .. எங்கும் பணம்..எதற்கும் ஒரு விலை..என்றியங்கும் இந்த அரசை நீங்குவதுதானே முறை..எந்த காலத்தில் தமிழகத்தில் நேரடியாக மக்களை சந்தித்து வெற்றி பெற முடியாதென்பதால்..இருக்கிற காலம்வரை பினாமி ஆட்சியை நடத்த அல்லது பொம்மை அரசை இயக்க பாஜக முடிவு செய்திருக்கிறதா.. ஒராண்டுக்குள் எத்தனை முதல்வர்களை மாற்றுவார்கள்..அது சரியான நிர்வாகத்தை தருமா.. இனியும் காலம் தாழ்த்தாமல்... தேர்தலை நோக்கி தமிழகத்தை நகர்த்துவதுதான் சிறந்தது.. இல்லையெனில் ஜனாதிபதி தேர்தல் வரை வைத்திருக்கலாமென்றால்.. அது மீண்டும் மீண்டும் நிறைய வழிகேடுகளைுக்கே வழிவகை செய்யும்.. அரசை மட்டும் கலைத்துவிட்டு.. ஜனாதிபதி தேர்தல்வரை சட்டமன்றத்தை வைத்திருக்கலாம் அப்போது வாக்களிக்கும் உரிமையை உறுப்பினர்கள் பெறுவார்கள்.. த .. அதிமுகவே ..மத்திய அரசின் காலடியில் காலில் விழுவது அதிமுக நிறுவனர் மகோரா தொடங்கிவைத்ததுதானே.. இப்போது மொத்தமாய் வீழ்ந்து கிடக்கிறார்கள்.. அதிகாரம் கைவிட்டு போய்விட கூடாதென்பதற்காக.. கேவலம்.. .. இனி ஆட்சியை தொடர்வதென்பது #ஜனநாயக_கேலிக்கூத்து_Democratic_farce.. .. தோழர் ஆலஞ்சி..

Sunday, April 16, 2017

நானெங்கே..

தேடுகிறேன்.. என்னையே நான்.. எங்கோ தொலைந்திருக்கவேண்டும் எங்கென்று தெரிந்தால் ஓடிப்போய்..எடுத்துவந்துவிடுவேன். .. எப்போது முதல் முதலில் பொய் பேசினேன் ‍. அப்போதா.. எப்போது.. மதி மயக்கத்தில் இருந்தேன்.. அப்போதா.. அம்மாவிற்கு தெரியாமல் அடுக்குபானையை உருட்டி கிடைத்ததை சுருட்டினேனே.. நட்போடு பழகியவனை.. நடுவில் கழட்டிவிட்டு.. நாவு கூசாமல் பழிச்சொன்னேனே அப்போதா.. .. எங்கோ தொலைந்திருக்கவேண்டும் எங்கென்றுதான் தெரியவில்லை.. .. நான் நானாக இல்லாமல்போன அந்த நொடிமுதல் பிணமாய் .. பங்காளியோடு பகைபாராட்டி.. பக்கத்துவீட்டுக்காரனோடு குரோதம் பொய்யாய் சிரித்து நிஜத்தில் நான் எங்கே.. .. பசித்தவனுக்கு உணவளிக்க சொன்னாள் தாய்.. பகைமை வெறு.. என்றாய் தந்தை பறவைக்கு சேர்த்துதான் விளைச்சல் என்றார்.. என் வீட்டு மூப்பர்.. உண்மை நிலைக்கும் என்றார் ஆசான்.. அறிவுக்கொண்டு பாரென்றார் ஆன்றோர்.. அடங்க பழகு என்றான்.. வழிப்போக்கன்.. முடியுமென்றால் மட்டும் வாக்குறுதி கொடு என்றாள் என் மூத்தவள்.. சிநேகத்தோடு பார்த்தான்.. என் தெருக்காரன்.. அன்பை காதலை.. விருப்பத்தை தந்தார் சுற்றியிருப்பவர்.. ஆனாலும் நான் எங்கோ.. தொலைந்தேன்.. .. நான் நானில்லை. நான் எனில்.. எங்கிருந்து வந்தது பொய்.. யார் சொல்லி தந்தது பழிவாங்கும்செயல் அடுத்தவன் நிலைநிறுப்பை கண்டு எங்ஙனம் வந்தது பொறாமை.. கூடவிருந்தே குழிப்பறிக்க யாரிடம் கற்றேன்.. நான் நானாக இல்லை.. .. என்னை என்னிலும் அதிகமாய் நேசித்த தாயோடு நான் சொன்ன முதல்பொய்யில் தொலைந்திருக்கவேண்டும்.. யார்கண்டார்.. எங்கோ.. தொலைந்திருக்கவேண்டும்.. .. தோழர் ஆலஞ்சி..

அனைத்துக்கட்சி கூட்டம்

அனைத்துக்கட்சி கூட்டம்.. விவசாயிகள் பிரச்சனையை சட்டமன்றத்திலேயே பேசி இருக்கலாமே.. விவசாயிகள் பிரசிசனைக்கு காரணம் திமுக தான்.. கூட்டம் நாடகம்.. அரசியல் செய்வதற்காகவுமம கூட்டணியை உறுதிப்படுத்தவும்.. இப்படி சிலர் தங்கள் இயலாமையை மறக்க புழுங்குகிறார்கள்.. யார்.. இவர்கள் எதையாவது இதுவரை சாதித்திருக்கிறார்களா.. அல்லது தெளிவான சிந்தனையோ அல்லது தெளிவான கொள்கையையோ கொண்டிருக்கிறார்களா.. அல்லது மக்களின் செல்வாக்கை பெற்றவர்களா.. என்றால் இல்லை.. .. உண்மையில் திமுகவிற்குதான் அத்தனை தகுதியும் இருக்கிறது.. ஆம்.. விவசாயசங்க தலைவராக இருந்த நாராயணசாமி நாயுடு அவர்கள் விவசாயிகளுக்கு மின்இணைப்பிற்கான தொகை கூடுதலாக இருக்கிறது மின்அளவை மீட்டருக்கு ஐந்து பைசாவாவது குறைக்கவேண்டுமென்று கேட்டபோது .. கலைஞர்தான் இலவச மின்சாரத்தை தந்து இந்தியாவிற்கே வழிகாட்டினார்.. ஒட்டுமொத்தமாக ₹7000 கோடியை தள்ளுபடி செய்து மொத்தமாக தள்ளுபடி செய்யமுடியுமென இந்தியாவிற்கே வழிகாட்டினார்.. நிலவரி என்று வருடாவருடம் வசூல்செய்வதை நிறுத்தியவர்.. காவிரியில் தூர்வாரியது கூட (சோழர்காலத்திற்கு பிறகு) கலைஞர்தான் திமுக தான்.. காவிரியில் தடுப்பணைகள் கட்டி முறைபாசனத்திற்கு தண்ணீர் பெருமளவில் பயன்பட காரணம் திமுகதான்.. சொல்லிக்கொண்டே போகலாம்.. .. அரசியல்வாதிகள் என்ற பெயரில் அரசியல்வியாபாரிகள் முதலும்முடிவும் எது என்று தெரியாதவர்கள்.. எதற்கெடுத்தாலும் திமுகவை குறைகூறுகிறார்கள்.. வி.பி.சிங் ஆட்சியின் போதுதான் நடுவர்மன்றத்தை திமுக பலத்த எதிர்ப்புகிடையே கொண்டுவந்தது..அப்போது அதை எதிர்த்தவர்தான் ஜெயலலிதா.. அரசு மாறி மாறி வரும்போதெல்லாம் ஜெயலலிதா எதிர்நிலைப்பாட்டை எடுத்ததன் விளைவு இன்று தண்ணீருக்காகவும் பட்டகடனுக்காவும் உழவர்கள் போராட வேண்டியிருக்கிறது .. இப்போதுகூட வங்கத்தை சேர்ந்த எம்பி தமிழகத்தில் 400 விவசாயிகள் மரணம் அடைந்திருக்கிறார்கள் மத்தியஅரசு கண்டுக்கொள்ளவில்லையென சரியான நிவாரணம் வழங்கவில்லை என பேசும் போது குறிக்கிட்டு தம்பிதுரை என்ற அடிமை இறந்த விவசாயிகள் 17 பேர்தான் என மத்திய அரசிற்கு ஒத்தூதுகிறது.. .. #ஏப்ரல்25 பொது வேலைநிறுத்தம்..சில கட்சிகளும் பெயரில்லாதஇயக்கங்களும் புறக்கணிக்கலாம் ஆனால் மிக முக்கியமாக அங்கீகரிக்கப்பட்ட கட்சிகள்.. காங்கிரஸ் இடதுசாரிகள்.மற்றும்அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளும் சில அமைப்புகளும் போராட்டத்தில் கலந்துக்கொள்ளும் இது மக்களுக்கான போராட்டம். ஒரு மாதத்திற்கு மேலாக தலைநகரில் அம்மணமாய் அரைகுறை ஆடையோடும் போராடும் உழவனுக்காக என்பதை கருத்தில் கொள்ளவேண்டும்.. உணவு வழங்கிய உழவனை சந்திக்க மறுக்கிற பாசிச அரசை பணியவைக்க வெகுமக்கள் இந்த போராட்டத்தில் .. தாமாக முன்வந்து கலந்து கொள்ளவேண்டும்.. சில அரைகுறைகளும் விவரகேடுகளும் எதாவது உளறிக்கொண்டிருந்தாலும்.. நாம் நம் கடமையை செய்வோம்.. // 1,76,17,060 பேர் வாக்களித்த அதிமுக கூட்டாத காரணத்தால்..... 1,71,75,734 பேர் வாக்களித்த திமுக கூட்டுகிறது // கட்டிவச்ச காசை திரும்ப பெற முடியாதவர்கள் கொக்கரிக்கிறார்கள்.. கூச்சலிடுகிறார்கள்.. பாவம் அழைக்கவில்லை என்ற ஆதங்கத்தில் ஏதேதோ பேசுகிறார்கள்.. #விட்டுதள்ளுங்கள்_கையாலாகாதவர்களை.. .. #ஏப்ரல்25_மாபெரும்போராட்டம்.. .. தோழர் ஆலஞ்சி..

Friday, April 14, 2017

அரசியல் பிழைகள்

அனைத்து கட்சி கூட்டத்தை கூட்ட திமுகவுக்கு அருகதை கிடையாது : தமிழிசை தமிழக அரசியல் வரலாற்றிலேயே அதிக 89 சட்டமன்ற உறுப்பினர்களை கொண்ட சட்டமன்ற எதிர்க்கட்சி திமுகதான்...இன்றைய தேதியில் வார்டு கவுன்சிலர் கூட இல்லாத பாஜக சொல்கிறது அருகதையில்லை.. .. அருகதை என்ற வார்த்தை இப்போதெல்லாம் #அருகதையே இல்லாதவர்கள் அடிக்கடி உபயோகிக்கிற வார்த்தையாகிப்போனது.. யாரிந்த தமிழிசை.. எச்.ராசா அமர்ந்திருந்தால் கூட ஓரமாக உட்காரவைக்கப்படுகிறவர்.. சுயமரியாதை என்னவென்றே தெரியாத சுயம் தெரியாத எதையாவது ஏடாகூடமாக பேசிவருவதையே வாடிக்கையாக கொண்டிருக்கிறார்.. பார்பனர்கள் மிக தெளிவாக இவரை போன்றவரை முதலில் இறக்கி ஆழம்பார்பார்கள்.. இப்படிப்பட்ட உளறல்களையெல்லாம்.. நாங்கள் செய்யமாட்டோம்.. நாங்கள் அறிவாளிகள்..இதெல்லாம் இடைசாதி சூத்திரர்கள் அறிவின்மையால் பேசியது என்கிற தோற்றத்தை உருவாக்குகிறார்கள்.. அதுதான் பொன்னரின்/தமிழிசையின் பேச்சும் செயலும்.. .. திராவிட கொள்கைகள் அறிவை மழுங்க செய்யும் என்கிறார்.. யார் சங்கராச்சாரியாரோடு சரிசமமாக நாற்காலியில் அமர முடியாத உணர்வற்று காலடியில் கிடகிகும் பிண்டம் சொல்கிறது.. அறிவை மழுங்க செய்யும்.. எல்லோருக்கும் சரிசமமான உரிமை கேட்பது.. வேலைக்கு செல்லும் பெண்களை விபசாரி என்ற காஞ்சி பெரியவரின் கூற்றை மறுத்து வேலைக்கு சென்று சம்பாதியுங்கள் அது (பெண்களின்) உங்களின் எதிர்காலத்திற்கு நல்லது..அது நம்பிக்கையை தரும். ஆண்,பெண் இருபாலாரும் படியுங்கள் அப்போதுதான் உலகம் புரியும் ..தீண்டதகாதவன் என்று யாருமில்லை அது பார்பனர்கள் செய்த துரோகம்.. வர்ணா சொல்லி பிரித்து அவன் மட்டும் குளிரிகாய்கிறான்.. உனக்கான உரிமையை அவன் எடுத்துக்கொண்டு எங்கிருந்தோ வந்தவன் உன்னை அடிமைப்படுத்தி வைத்திருக்கிறான்.. சாதி,மதம் எனச்சொல்லி ஏற்றதாழ்வை உண்டாக்கி உன்னை எழவிடாமல் கால்கொண்டு அழுத்தி நிற்கிறான் என... சொல்லி உன்னை சிந்திக்க சொன்ன திராவிடம் எப்படி மழுங்க செய்யும்.. .. மதம் தலைக்கேறினால்..அறிவு மழுங்கும் அறிவு மழுங்கினால் உண்மை தெரியாமல் ஏதையாவது பேச சொல்லும்..மானம் கெட்டு மதிகெட்டு திரிவோரை.. என்ன சொன்னாலும் அவர்களுக்கு உரைக்காது..மதம் என்ற பெயரில் மூளைச்சலவை செய்யப்பட்டவர்கள்..இவர்களை சிந்திக்க விடாமலே வைத்திருப்பதில்தான் பாசிசத்தின் வெற்றி அடங்கியிருக்கிறது..தோள் சீலை போராட்டம் செய்து மானத்தை காத்துக்கொண்ட சமூகத்திலிருந்து.. அறிவின் நிழலில் கோலோச்சும் சமூகத்திலிருநிது சில #பிழைகள்.. .. வேறென்ன சொல்ல.. .. தோழர் ஆலஞ்சி

தலித் எனும் சொல்

தலித் சமூகம்.. இன்றும் ..விடுதலை கிடைத்து இவ்வளவுகாலம் பின்னிட்டும் ஒடுக்கப்பட்ட சமூகமாகதான் இருக்கிறது வர்ணம் சொல்லி நம்மை பிரித்து மேலிருந்து ஆழ அழுத்தி புதைத்தே விட்டார்கள்.. #வர்ணா எனும் சமஸ்கிருத சொல்லின் பொருள் அடைத்துவை.. ஆம் தலித் சமூகம் அடைத்துவைக்கப்பட்டுதான் இருக்கிறது.. .. ஒடுக்கப்பட்ட இனத்திலிருந்துதான்.. வியாசரும் வாலிமீகியும் வந்தார்கள் அவர்கள் புராணம் பேசினார்கள்.. ஆனால் அண்ணல் அம்பேத்கர் மட்டும் தான் அறிவு பேசினார்.. சங்கரர் சொல்லியதால்தான் கீதை புனிதநூலானது இல்லையென்றால் யாருக்கும் புனிதமென்று தெரிந்திருக்காது.. அதெப்படி புனிதநூலாகும் என கேள்வியெழுப்பினார்... அரசியல்சாசனத்தில் ஒடுக்கப்பட்டவருக்காக இடஒதுக்கீட்டை தரவில்லையென இன்றைக்கு நினைக்கவே பயமாக இருக்கிறது ஒட்டுமொத்தமாக கொன்று போட்டிருப்பார்கள்.. .. இந்தியாவில் பாஜக ஆட்சிக்கு வந்த பிறகு மிக மோசமாக வேட்டையாட படுகிற சமூகமாக தலித்சமூகம் இருக்கிறது தமிழகம் கேரளம் தவிர்த்து பிற மாநிலங்களில் மிருகத்தைவிட கேவலமாக வேட்டையாடபடுகிறார்கள்.. பார்பனர்கள் தீட்டு என ஒதுக்கி வைத்ததோடு அல்லாமல் இடைசாதிகாரனையும் (சத்ரிய வைசிய) கொம்புசீவி இவர்களை பாய்ந்து பிராண்ட வைக்கிறார்கள்.. .. இவர்களுக்குள்ளும் இன்னமும் காணப்படாத ஒற்றுமையும் அதிகாரபகிர்வால் வந்த மோதலும்.. கட்சிகள் தனியாக தலித்பிரிவு/அணி என பிரித்து வைத்ததும்..அனைத்துமக்களோடு சமமாக குடியமர்த்தபடாமல் தனியாக அடைத்துவைக்கப்பட்டதும்..ஒருசிலர் முன்னேறி வந்தாலும் தங்களுக்குள்ளேயே வேலி அமைத்துக்கொள்வதும்.. தங்களை தாங்களே இழிபிறவியென தாழ்வாக எண்ணுவதும்.. திறமையிருந்தும் அதை கண்டுக்கொள்ளாத சமூகமுமே இவர்களின் வளர்ச்சிக்கு தடைகளாகும்.. .. மிக சிறந்த அறிவாளிகளை .. திறமையாளர்களை தலித் சமூகம் தந்திருக்கிறது ..(அம்பேத்கர் இளையராஜா என சொல்லிக்கொண்டே போகலாம் இவர்கள் அருகில் கூட இன்னமும் மற்றவர்கள் நெருங்கமுடியவில்லை) ஆனாலும் அடைக்கி வைக்கப்பட்டேயிருக்கிறார்கள்.. விடுதலை இந்தியாவில் இன்னமும் விடுதலைபெறாத சமூகம்.. தலித்சமூகம்.. முன்பெல்லாம் ஹரிஜன் என்று அழைக்கப்பட்டவர்கள் எங்களை அப்படி அழைக்க கூடாதென சொல்லியதால் மத்திய மாநில அரசுகள் நிறுத்திக்கொண்டது ஆனாலும்... பார்பனர்கள் இன்னும் அந்த சொல்லி பயன்படுத்துகிறார்கள்.. ஒருமுறை சங்கரராமன் புகழ் ஜெயேந்திரர் (சங்கராச்சாரியர்) தலித் என்று அழைப்பது தவறு தலித் என்றால் ஏழைகள் ஹரிஜன் என்றே அழைக்கவேண்டுமென்றார். கடவுளின் குழந்தை என்றார்.. கடவுளின் குழந்தைகள் எப்படி கடைசிக்குவருவார்கள் .. .. கூறுங்கள் தலித் தோழர்களே.. எவனும் எனக்கெடிமையில்லை எவனுக்கு நான் அடிமையில்லை.. .. தோழர் ஆலஞ்சி..

Thursday, April 13, 2017

பகிரங்கமாகவே..

பகிரங்கமாகவே குற்றம் சாட்டுகிறேன்.. தலைவரும் இனமான பேராசிரியரும் மிக தெளிவாக.. வெளிப்படையாக.. கழகத்தின் வருங்காலத்தை தீர்மானித்து சொல்லிவிட்ட பிறகும்.. சிலர் வேண்டுமென்றே கனிமொழியை உள்ளே இழுத்து அரசியல் செய்கிறார்கள்.. இதன் பின்னில் யார் இருந்தாலும் அவர்கள் எவ்வளவு முயற்சித்தாலும் கடுகளவும் இந்த இயக்கத்தின் செயல்பாட்டை ,தளபதி தலைமையில் கழகம் ஆளபோவதை தடுத்துவிட முடியாது.. .. கோவை ஜோசியர் சொன்னராம்.. கருணாநிதியின் மகள் கனிமொழியின் ஜாதகம் பிரத்தியேகமான அமைப்பைக் கொண்டது. அவர் முதல்வராவார் என்று சொன்னதாக .. யாரை.. கடவுள் நம்பிக்கையற்ற கனிமொழியை.. மூடநம்பிக்கைகளை விரும்பாத ஜோசியத்தை நம்பாதவரை .. அதே ஜோசியத்தின் பெயர் சொல்லி பிரித்தாள முயற்சிக்கிறார்கள்.. ஏற்கனவே இப்படிதான்.. அழகிரியை உசுப்பிவிட்டு இருக்குமிடம் தெரியாமல் ஆக்கினார்கள். இப்போது கனிமொழி.. .. சில நாடார் அமைப்பை சேர்ந்தவர்கள்.. கனிமொழி தாயார் மொழிகேட்டு வழிகெடுக்க முயல்கிறார்கள் .. எச்சரிக்கை.. இயக்கம் சட்டென்று தலைமை பொறுப்பை தூக்கி திரு.ஸ்டாலினிடம் தந்துவிடவில்லை.. நீண்டநெடிய பயிற்சிக்குப்பின். ஒவ்வொரு அடியையும் பார்த்து பார்த்து.. சரியான நேரத்தில் கழகத்தின் /இயக்கத்தின் நான்காம் தலைமுறையை வழிநடத்த தளபதியை தேர்வு செய்திருக்கிறது.. உள்ளிருந்தும் புறமிருந்தும் நிறைய எதிர்ப்புகள் குழிதோண்டல்கள்.. புறமிருந்து தாக்குதல்.. கூட இருந்தே குழிப்பறித்தசெயல்.. இவையெல்லாம் கடந்துதான் தளபதி செயல்தலைவராகி இருக்கிறார்.. .. கழகத்தை அதன் வெற்றியை தடுத்திட அதை பலவீனப்படுத்த நிறைய உக்திகளையெல்லாம் கையாண்டு எதுவும் நிறைவேறாமல் போய்.. அண்ணனை கொம்பு சீவி அதுவும் நடக்காமல் போய் இப்போது தங்கையை ..முன்னெடுக்கிறார்கள்.. சாதிய பாசம் கொண்டு நயவஞ்சகமாய் பேசிவருகிறார்கள்.. கனிமொழியே விரும்பாத ஒன்றை ..ஏற்கனவே முடிவான ஒன்றை இவர்களிடம் கபடநாடகத்தால் நடத்திவிட நினைக்கிறார்கள் ஏமாந்து போவார்கள்.. .. கலைஞரின் மொழியில் சொன்னால்.. தளபதி.. தென்றலை தீண்டியதில்லை.. தீயை தாண்டிவந்திருக்கிறார்.. தீயில் வெந்தால் தான் #பொன்கூட ஜொலிக்கும் நகையாகும்.. எங்கள் தளபதி.. எல்லோரும் விரும்பும் மாசற்றவர்.. வருங்கால தமிழகத்தின்..விடிவெள்ளி.. தமிழகம் நம்பும் ஒரே தலைவர்.. .. #எதிரிகளும்_துரோகிகளும்_வாய்மூடிஇருக்கவும்.. .. தோழர் ஆலஞ்சி..

Wednesday, April 12, 2017

ஈழ வியாபாரிகள் வேசம் கலையுது

சீமான் யார் என்றே பிரபாகரனுக்கு தெரியாது - வடக்கு மாகாண முதல்வர் ..#விக்னேஷ்வரன் அப்போ பிரபாகரனை சந்திக்க காடு கடல் மலை தாண்டி ராணுவ தோட்டக்களையெல்லாம் தாண்டி.. நேராய் போய் சடார்ன்னு திரும்பி அந்தபக்கமாய் போய் .. ராணுவத்திற்கு தண்ணிகாட்டிட்டு.. பிரபாகரனை சந்திச்சா.. உடனே அவரு.. ஏகே 47 துப்பாக்கிய சுட கத்துக்கொடுத்தார். சீமானின் கதைவசனத்தில் நாம் கேட்ட கண்ட காட்சிகள்.. பயப்புள்ள பொய் சொல்லியிருக்கு.. .. அப்போ உண்மையில்லையா.. பிரபாகரனுக்கு பிறகு வாழ்வதாரம் மிகவும் பாதிக்கப்பட்டு வேறு வழியின்றி அரசியல் நடத்தினால்.. இவனுக வேற உண்மையை சொல்லி வர்ற வருவாயிலேயும் மண்ணை அள்ளி போட்ட என்னதான் செய்யறது.. .. உண்மையில் நெடுமாறன், திருமுருகன் சீமான் ஏன் வைகோ கூட தமிழினம் மீதோ அல்லது ஈழத்தமிழர்கள் மீது கரிசனம் உள்ளவர்கள் அல்ல.. ஈழத்தில் போராட்டம் நடந்துக்கொண்டே இருக்கவேண்டும் அங்கு அமைதி திரும்பி ஜனநாயகத்தை மீட்டெடுத்தால் இவர்கள் கதி அதோகதிதான் என முன்பு எழுதியது சரியாக போகிறது...அதுதான் உண்மை பதட்டமாக வைத்திருந்தால் தான் குளிர்காய முடியும் என்று அறியாதவர்கள் அல்ல இவர்கள்.. அதனால் தான் திரு.ப.சிதம்பரம் போரை நிறுத்துங்கள் .. தேர்தல் முடிந்து மீண்டும் காங்கிரஸ் ஆட்சிக்குவந்தவுடன் பிரச்சனையை ஜனநாயக ரீதியாக தீரித்துக்கொள்வோம் என்று பிரபாகரனிடமே பேசியபோது ..வைகோவோடு கலந்துக்கொண்டு பதிலளிக்கிறேன் என்றார் ஆனால் வைகோ..பாஜக வரும்.. வாஜ்பாய் நான் சொன்னால் கேட்பார்.. மூன்றுமாதங்கள் தாக்குபிடியுங்கள் எனச்சொல்லி இனத்தையே இனத்தின் போராட்டத்தையே வேரோடு சாய்த்துவிட்டார். .. .. ஏன்,இதை இங்கே பதிவு செய்கிறேன் என்றால் தமிழக தலைவர்கள் குறிப்பாக ஈழ அரசியல் செய்யும் கேடுகெட்டவர்கள் .. தங்களுக்கு கிடைக்கவேண்டியது கிடைத்தால் போதும் இனம் அழிந்தாலும் பரவாயில்லையென நினைப்பதால்தான் இன்று #உயர்லட்சிய_போராட்டமே சிதைந்து போனது.. அவசரகுடுக்கைகள்.. அரைகுறை அரசியல் அறிவுள்ளவர்கள் .. தங்கள் வளம் பேணி காவு கொடுத்தார்கள்.. ஆனால் இவர்கள் பங்களாக்களில் வாழ்கிறார்கள் எந்த வருவாயும் வராமல் எந்த தொழிலும் செய்து முன்னேறாமல். நெடுமாறன் போன்றோர் சிறந்த வாழ்வை வாழ்கிறார்கள்.. .. பொய்யும் புரட்டும் உணர்ச்சிபூர்வமான காட்டுகத்தலும்.. இளைஞர்களை வழிகேட்டில் கொண்டு சேர்க்கிறது. நிதானமாக வீரத்தோடு விவேகமும் இணைந்து..அறிவார்ந்தோரின் ஆலோசனையோடு வென்றுயெடுக்கவேண்டிய விடயத்தை சிறுமதியாளரின் கிறுக்குதனத்தால் இனம் நிறைய இழந்து நிற்கிறது.. .. .. இன்னும் நிறைய .. ஈழத்தமிழர்கள்.. உண்மையை கதைப்பார்கள்.. .. #அப்போதுதெரியும்_ஈழவியாபாரிகளின்_நரித்தனங்கள்.. .. தோழர் ஆலஞ்சி..

Tuesday, April 11, 2017

தேமுதிக..

தேமுதிகவில் ஒருகோடி உறுப்பினர்கள் இருக்கிறார்கள்.. திருமதி பிரேமலதா விஜயகாந்த் ஒருவேளை.. வார்த்தை தவறி சொல்லி விட்டாரோ.. எழுத்துப்பிழையோ.. ஐம்பதாண்டு கண்ட திமுகவில் கூட 90 லட்சம் உறுப்பினர்கள் பதிவு செய்திருக்கிறார்கள்.. எப்போதும்போல் பொய்பேசும் அதிமுக ஒன்னரை கோடி என்கிறது.. ஆனால் சரியாக தேர்தல் ஆணையத்தில் பதிவில் சொன்னது. 68 லட்சம் பேர்..அதெப்படி தேமுதிகவிற்கு ஒருகோடி பேர்.. சிரிப்பதற்காக சொல்லியிருந்தால் சரி.. .. இது எப்படியிருக்கிறது தெரியுமா.. சாதி சங்கங்கள் எங்கள் சாதியினர் 1கோடி பேர் இருக்கிறார்கள் ஒன்னரைக்கோடி இருக்கிறார்கள் ஆளாளுக்கு கணக்கு சொல்வார்கள் மொத்தம் கூட்டி பார்த்தால் 15 கோடி தமிழக மக்கள் என வரும்.. காசா பணமா..சொல்லவேண்டியதுதானே.. .. சிலநேரத்தில் இவர் மீது மதிப்பு தோன்றும் உடல்நலியுற்று இருக்கும் கணவரை தாக்கிபிடிக்கும் இவரது செயல் .. கட்சியை கலைக்கவும் முடியாமல்.. கட்சி நடத்த கணவருக்கு தெரியாமல் ..அதற்கு உடலும் வழங்காமல்.. இவர்படும்பாடு பாவம்.. அரசியல் என்னவென்றே தெரியாமல் சட்டென்று யோசிக்காமல் ஒரு நாளில் திடீரென்று கட்சி ஆரம்பித்து கொள்கையோ திட்டமோ எதுவும் இல்லாமல் நடித்துக்கொண்டிருந்த போது கொஞ்சம் இருந்த ரசிகர்களை துணைக்கொண்டு ரசிகமன்ற நிர்வாகிகளை இணைத்து கொண்டு அரசியல் செய்யவந்தார்.. அரசியல் வேறுமாதிரி இருக்குமென அறியாமல்.. .. தமிழக வரலாறு தெரியாமல்.. திடீரென தோன்றுகிற இயக்கங்கள்/கட்சிகள் காணாமல் போய்விடுமென அறியாமல்.. எதற்காக மக்கள் ஆதரிக்கவேண்டுமென விளக்க ஒருகாரணமும் இல்லாமல் ஏதோ திடீரென ஒருகட்சியெல்லாம் ஆரம்பித்தால் இப்படிதான் போகும்.. இப்போது ஏதோ சொல்ல வருகிறார்.. நீட்தேர்வு தேவை விவசாயிகள் போராடுவது தவறு.. இப்போது கூட தமிழக மக்களின் எண்ணவோட்டம் அறியாமல் இருக்கிறார்.. இருப்பதை காப்பாற்றிக்கொள்ள கட்சி ஆரம்பித்தால் வாசன் நிலைதான் வரும்.. கடைசியில் யாரும் சீந்துவாரின்றி.. .. வேசம் கட்டி..அரிதாரம் பூசினால்.... அந்திபோனால் களைத்துதான் தீரவேண்டும்.. தேமுதிகவும்..வேசம்கட்டிய கட்சிதான்..காட்சி முடிந்தததால்.. .. அப்ப அந்த ஒரு கோடி .. #பாவம்_பொய்சொல்லியிருக்கு.. .. தோழர் ஆலஞ்சி..

திராவிட இனம்

இடைத்தேர்தல் ரத்து. திமுக பலம் பெற்றுவிடக்கூடாது எனறு பிஜேபி நினைக்கிறது. ..வி.சி.க. தொல்.திருமாவளவன்.. .. தங்களின் விசிக உட்பட உதிரிக்கட்சிகள் முதல் தேசிய கட்சிகள் வரை திமுகவின் வெற்றியை தடுத்திட வேண்டுமென்றுதானே தொடர்ந்து செயல்படுகின்றன.. ஆர்எஸ்எஸ் திமுக பலம் பெறுவதை எப்போதாவது விரும்பியிருக்கிறதா.. சு.சுவாமி கூட யார் வெற்றிப்பெற்றாலும் பரவாயில்லை திமுக வெற்றிப்பெற கூடாது என்று தானே ஒவ்வொருமுறையும் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பில் சொல்கிறார்.. அவர்களுக்கு புரிகிறது.. #திமுக ஆட்சி அதிகாரத்தில் வந்துவிட்டால்.. சமூகநலன் சமூகநீதி.. இடஒதுக்கீடு இந்துத்துத்துவாவை எடுத்துச்செல்ல தடை.. குறிப்பாக பார்பனர்களின் ஆட்டத்தை அடக்குவார்கள் என்றறிந்துதான் .. தங்கள் சித்தாந்தத்தின் எதிரியை எதிர்ப்பதும்..எதிரி பலம் பெற்றுவிட கூடாது என கச்சைக்கட்டி வேலைசெய்வது தாங்கள் அறியாததா..இதையெல்லாம் இப்போது மக்கள் அறிய/புரிய தொடங்கிவிட்டார்கள்.. திருமா அதனால்தான் தங்களை போன்றோரை.. (விசிக,மதிமுக,பாமக,மற்றும்,இடதுசாரிகளை)வெறுத்து ஒதுக்கிவிட்டார்கள் .. இல்லாத ஒன்றை காட்டி 2ஜி இதுவரை கண்டிராத ஊழலென்றெல்லாம் பிரச்சாரம் செய்து..அதையும் தேர்தல் நேரத்தில் கச்சிதமாக முன்னெடுத்து .. பாசிசத்தின் செல்லப்பிள்ளை ஜெயலலிதாவை வெற்றிபெற்றால் நாம் நினைத்ததை சாதித்துக்கொள்ளலாமென்று திட்டம் தீட்டி தானே செயல்ப்பட்டார்கள்.. அந்த ஜெயலலிதாவை அரியணையேற்ற தானே #மநகூவை தொடங்கி இன்று திக்குதெரியாமல் நிற்கிறீர்.. ஜெயலலிதாவின் வெற்றிக்கு மறைமுகமாக உழைத்ததால் நாடு எந்தளவிற்கு சீரழிகிறது என்று இப்போது காண்கிறோமே..திருமா அவர்களே.. .. திமுக ஆட்சியில் எண்ணற்ற நல்லவைகள் மக்களுக்காக செயல்படுத்தப்படவில்லையா..ஆட்சிதரப்பில் சில தவறுகள் நடைபெற்றிருக்கலாம் தேவையில்லாதவைகள் முன்னெடுக்கப்பட்டிருக்கலாம். ஆனால் ஒட்டுமொத்தமாக பார்த்தால் திமுக ஆட்சி தமிழக நலன்களை மக்கள் வாழ்வாதாரத்தை வேலைவாய்ப்பை வருவாயை பெருக்கியது .. மக்களின் உணர்வுகளுக்கும் இனம் மொழி கலாச்சாரத்திற்கு முன்னுரிமை வழங்கியது.. அனைவரும் சமமாக மதிக்கப்படவேண்டுமென முயற்சித்தது.. அதை செயல்வடிவிலும் காட்டியது.. .. திமுக ஆட்சிக்கு வரகூடாதென எண்ணுகிறவர்கள்.. கூர்ந்து கவனித்தால் அவர்கள் பாசிச பாஜகவிற்கு அல்லது அவர்கள் சித்தாந்தத்தை மத,சாதீய வெறியை வார்த்தெடுக்கிறவர்களாகதான் இருப்பார்கள்.. என்பதுதான் உண்மை.. இது காலம்கடந்து திருமாவிற்கு புரிந்திருக்கிறது.. DMK Dravida race #திமுக_இனத்திற்கானது.. .. தோழர் ஆலஞ்சி..

Monday, April 10, 2017

நிர்வாணம்..

#நிர்வாணம்.. பிறக்கும் போது நிர்வாணம் அழகாய்தான் தெரிகிறது.. உடல் தளர்ந்து தோல் சுருங்கி மீண்டும் தவழும் போதும் கூட நிர்வாணம் அழகுதான்.. இடைப்பட்ட காலத்தில் அது மானத்தோடு பேசப்படுகிறது.. தலைநகரில்.. நிர்வாணமாய் என் தமிழன்.. உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார் என்றெதல்லாம் போய் கடனில் பசியில் வறுமையில் இந்த தேசத்து உழவன் கேட்பாரற்று அம்மணமாய் கிடக்கிறான்.. .. பல்வேறு போராட்ட வடிவங்களை நடத்தி கடைசியில் சந்திப்பதாக சொல்லி நாட்டின் பிரதமர் ஏமாற்றியதால் வெகுண்டு ஆடைகளைந்து அம்மணமாய் நின்றான் எம் தமிழ்குடிமகன்.. நாடு சிரித்தது உண்மையில் வெட்கப்படவேண்டியது நாடும் ஆள்வோரும்தான்.. .. மான மரபில் வந்தவன் அம்மணமாய் நிற்கலாமா என்கிறார்கள் சிலர்.. எனக்கு கூட கோவம் வந்தது தான்.. மானம் பெரிதென வாழ்ந்த சமூகம்தான்.. ஆனால் அகோரிகள் வாழும் நாட்டில் அம்மண சாமிகள் உலவும் பூமியில் ஆடைகட்டியவன் கேனயனாகி போவதால் அம்மணமாய் நிற்கிறோம்.. ஆங்கிலேயனிடமும் அதற்முன் ஆண்டுவந்தவனிடமும் அம்மணமாய் அனுப்பிவைத்து சுகம்/பதவி பெற்றவர்கள் நம்மை பார்த்து அம்மணமாய் நிற்பதாய் சொல்வதுதான் வேடிக்கை.. ஆசைக்காக,அழகிற்காக ஏதேனும் சாதிப்பதற்காக நிற்கவில்லை.. வேறுவழியின்றி.. இருக்கிறதை உருவிவிடுவதற்கு முன் நாங்களே உருவி நிற்கிறோம் நிர்வாணமாய்... தேசம் நிர்வாணமாய்.. .. எங்கள் உரிமைகளை கேட்கிறோம்.. முறையாக எங்களுக்கு தரவேண்டிய நீரை வாங்கி தந்திருந்தால்..நாங்களும் பட்டுத்தி..பட்டோடு வந்து மரியாதை செய்திருப்போம்.. வழியில்லாமல் போய்.. வறண்டுபோன இதயத்தோடு.. இனி ஒன்றுமில்லை எங்களிடம் கோவணம்தான் அதையும் வேண்டுமானால் எடுத்துக்கொள் என்பதை ஆளும் பாசிச அரசிற்கு உணர்த்தவே.. ஆடை களைதல்.. .. #இனியும்_பொறுப்பதற்கில்லை… .. தோழர் ஆலஞ்சி..

கருப்பா வெள்ளையா..

ஒரு பானை சோற்றுக்கு ஒருசோறு பதம்.. டாக்டர் பாலாஜி ₹5 லட்சம் பணம் வாங்கியதை ஒப்புக்கொண்டிருக்கிறார்.. அதோடு அது டாக்டர் பீலேவிற்காக.. அவர் தங்கியகற்கு வாடகை கொடுக்கப்பட்டதாகவும். அப்போலோ அவரின் குடும்பத்தார் தங்கிய செலவை ஏற்க மறுத்ததால் தான் விஜயபாஸ்கரிடமே வாங்கியதாக சொல்கிறார்.. அதை ஏன் டாக்டர் பாலாஜி வாங்கவேண்டும் அதிமுக அலுவலக ஊழியர்களை கொண்டோ விஜயபாஸ்கரின் உதவியாளரை கொண்டே கட்டியிருக்கலாம்.. ஜெயலலிதாவின் மொத்த மருத்துவ செலவும் யார் செய்தார்கள் அவர்கள் ஏன் இந்த பணத்தை தரவில்லை.. நிறைய கேள்விகள் கூடவே வருகிறது.. .. ஒன்றுமட்டும் தெளிவாக தெரிகிறது..அதிமுகவில் எல்லோருமே கோடிகளில் புரளுகிறார்கள்.. எங்கிருந்து வநிதது இந்த பணம்.. மூன்று லட்சத்திற்கு மேல் பணபரிவர்ததனை ரிசர்வ் வங்கி அறியாமல் நடக்க கூடாதென்ற விதிகள் இங்கே பொருந்தாதா.. என்பத்தொன்பது கோடி(₹89கோடி) எங்கிருந்து வந்தது.வங்கி அறியாமல் வந்ததெனில் அது கருப்புபணமல்லவா.. திரு.மோடி கருப்புபணத்தை ஒழித்துவிட்டேன் என்றாரே.. அப்படியெனில் அதிமுகவினரிடம் மட்டும் எப்படி கோடிகளில் பணம் சர்வசாதாரணமாக கைமாறுகிறது.. அதிமுக அமைச்சர்களிடம் உள்ள கணக்கில் வராத பணம் எப்போது வெள்ளையானது..இதற்கெல்லாம் மோடி பதில் தருவாரா.. விஜயபாஸ்கரிடமிருந்து பிரித்துக்கொடுக்கப்பட்ட பணம் .. கருப்பா வெள்ளையா.. தெரியவேண்டாமா.. ஒருவேளை குருமூர்த்தி வகையறாக்களுக்கு மட்டும் தெரிந்தால் போதுமா..கருப்பு வெள்ளையாகி விடுமா.. .. தேர்தல் தள்ளிவைப்பதனால் இவர்கள் ஒழுக்கமானவர்களாக ஏற்றுக்கொள்ள முடியுமா.. அமைச்சர் விஜய்பாஸ்கரே பணம் கொடுத்ததை ஒப்புக்கொண்டிருக்கிறார்.. இனியும் என்ன தயக்கமென்று தெரியவில்லை.. மற்றொன்று உண்டு இதே ஆர்.கே.நகரில் ஜெயலலிதாவிற்காக பணம் கொடுத்தபோது தடையேதுமில்லை.. தஞ்சையிலும் அரவக்குறிச்சியிலும் திமுகவின் வெறறியை தடுத்ததைப்போல ஆர்.கே.நகரிலும் வெற்றியை தடுத்திருக்கிறது ஆணையம்.. திமுக பெருவாரியான வித்தியாசத்தில் வெல்லவதை விரும்பவில்லை .. .. இனியும் காலம்தாழ்த்தாமல் பொதுதேர்தலை நடத்த வழிவகை செய்யவேண்டும்.. முதல்வரே முன்னின்று வாக்களர்களுக்கு பணம் கொடுப்பது இந்திய வரலாற்றில் இதுவே முதல்முறை.. கனநொடி கூட முதல்வராக இருக்க தகுதியிழக்கிறார்.. எடப்பாடி.. .. #தமிழகஅரசை_கலைக்கவேண்டும்... .. தோழர் ஆலஞ்சி..

Sunday, April 9, 2017

தீதும் நன்றும்..

தடம் மாறுகிறது இஸ்லாமிய இயக்கங்கள்.. கொள்கை சமூகநலன் சார்ந்து நின்றாலும் இந்த சமுதாய மக்களின் உணர்வுகளின் மீதான பயணம் சற்று தடுமாறி தரிக்கெட்டு போகிறதென்று படுகிறது.. .. நாடே எதிர்க்கிற ஒருவருக்காக தங்களின் வழிசுவடுகளை சேதபடுத்தி.. மக்கள் முன் தலைகுனிந்து நிற்கிறார்கள்.. .. திமுகவை ஆதரிக்கவில்லை என்பதற்காக அல்ல இந்த பதிவு.. ஆதரவையும் எதிர்ப்பையும் மாறி மாறி தந்திருக்கிறீர்கள் .. அது தங்களுக்குள் வந்த அதிகார போட்டியில் எதிரெதிராய் களம் காண வேண்டிய நிர்பந்தத்தினாலேயே தவிர.. வேறில்லை என்பதையும் நாம் அறிவோம்.. ஆனால் இப்போது நடப்பது கேடுகெட்ட செயலாய்.. ஒட்டுமொத்த தமிழகமும் வெறுக்கிற ஒருவரை ஆதரிக்க முடிகிறதென்பதிலேயே நம்பகதன்மை அடிபட்டுப்போகிறது.. ஒருவருக்கொருவர் அடித்துக்கொண்டு சமுதாய மக்களின் எண்ன உணர்வுகளை புறந்தள்ளி தங்கள் முகம் மட்டுமே மிளிர செய்து தொலைக்கும் காரியங்கள்.. காலம் கடந்து கேலி பேசும் என்பதை உணராமல் போனதேன்.. .. அரசியலில் நிலைநிற்பும்.. வாய்ப்பை வழங்காமல் கழட்டிவிட்ட கட்சியை எதிரியாக பார்ப்பது கூட சரிதான். எதிரியை சமயம் பார்த்து திணற வைக்கவேண்டுமென்பதும் எதிர்ப்பை கடுமையாக்க வேண்டுமென்பதும் கூட சரிதான் ஆனால் யார் எதிரி என்பதை தெரிவு செய்வதில் தான் பிழைகள் நடக்கிறது.. பரம வைரி பாஜக பலம் பெற கூடாதென்பதால் ஆதரிப்பதாக சொல்லும் காரணம் ஏற்புடையதாக இல்லை.. அதிமுக அம்மா கட்சியை ஆதரிப்பதற்கு.. நிறைய காரணம் சொன்னாலும்.. அவையெல்லாம் சாமானியர்களிடம் .. எந்த கட்சியையும் சாராத.. நடுநிலையாக யாரும் இருக்க முடியாது ஏதோவொரு கொள்கையில் கோட்பாட்டில் தம்மை இணைத்துக்கொண்டே அல்லது கவரப்பட்டோ இருப்பர் ஆனாலும் சோதனையாக/இக்கட்டான காலக்கட்டத்தில் சரியான முடிவை எடுப்பார்கள்..அப்படிப்பட்ட சாமானியர்கள் கூட முகம் சுளிக்கிறார்கள்.. .. நல்லதை செய்யாவிடினும் கெட்டதை தாங்கிப்பிடிக்காமல் இருந்திருக்கலாம்.. இது காலம் கடந்தும் பேசப்படும்.. #வரலாற்றுப்பிழை.. #தீதும்நன்றும்பிறர்தரவாரா.. .. தோழர் ஆலஞ்சி..

Saturday, April 8, 2017

நாடு எங்கே போகிறது..

எங்கே போகிறது..நாடு .. மத்தியில் பாஜக ஆட்சி பொறுப்பை ஏற்றதலிருந்து தொடர்ந்து அவர்களின் செயல்பாட்டில் காட்டும் திமிர்த்தனம்.. அவர்களின் உடல்மொழியில் காட்டும் அலட்சியமும் .. முற்போக்கு சிந்தனை மீதான தாக்குதலும் எல்லை மீறி போய்க்கொண்டிருக்கிறது.. மிக அலட்சியமாக வரலாற்று புரட்டுகளை பதிவு செய்கிறார்கள்.. மதம் பெயரைச்சொல்லி கொலையும் கொள்ளையும் நாள்தோறும் நடந்தேறுகிறது.. ஜனநாயக மரபுகள் கேள்விக்கேட்கபடாமலேயே மீறப்படுகிறது.. அடித்தும் கொளுத்தியும் சிறுபான்மையினரும் தலித்துக்களும் வேட்டையாட படுகிறார்கள்.. .. முற்போக்கு எண்ணம் கொண்டவர்கள் கொலைசெய்யபடுகிறார்கள் மிரட்டபடுகிறார்கள்.. இதோ ஒரிசாவில் 48 மணிநேரமாய் முஸ்லிம்கள் காவிகளால் வேட்டையாடப்பட்டும் எந்த ஊடகங்களையும் செய்திவெளியிடாமல் செய்து காலணி ஆட்சி செய்கிறார்கள்.. சர்வாதிகாரிகள் தந்த கருத்துசுதந்தரம் கூட இப்போதில்லை.. மாட்டை விற்பவனும் திண்பவனும் அடித்தே கொல்லப்படுவான்.. கேட்டால் தேசதுரோகியாவாய்.. மாட்டை மதிக்க தெரிந்த அரசுக்கு மனிதனை நேசிக்க தெரியவில்லை. .. .. பாஜகவின் ஆட்சி வந்தவுடன் இன்னும் ஐந்தாண்டுகளில் பார்பனர்கள் உயர்பதவிகளில் ஒட்டுமொத்தமாக அமர்ந்துவிடுவார்கள் பிறகு அவர்களை கீழிறக்க ஐம்பதாண்டுகள் தேவைப்படுமென எழுதியது உண்மையாகிறது.. எல்லா உயர்பதவிகளிலும் பார்பனர்களாகவே தெரிவு செய்யபடுகிறார்கள்.. பிற மத,ஜாதியினர் தகுதியிருந்தும் மறுக்கபடுகிற அவலம் .. தேர்தல்களில் தில்லுமுல்லு.. மாநில கட்சிகளை சிதைக்க அல்லது ஒத்தூத வைக்க முயற்சிகள் மேற்கொள்ளபடுகின்றன. தொலைக்காட்சிகளிலும் பார்பனர்களையே அழைத்து அறிவிற்கு பொருந்தாத பொய்களை .. நம்மீது அடித்தமர்த்துகிறார்கள்.. விவாதங்களின் மேன்மை ..சீரழிகிறது வரலாற்றை மாற்று எழுத முற்படும் அயோக்கியதனத்தை செய்ய ஒரு கும்பல் சமூகஆர்வலர்கள் என்ற முகமூடியோடு உலாவருகிறார்கள்.. பாஜகவினர் .. .. ஜனநாயகத்தில் நேர்மை நீதி..இவையெல்லாம் பாசிச சகதிகள் அறியாதது.. மாபெரும் ஜனநாயக நாட்டில் எதிர்க்கட்சிதலைவர் இல்லாமலேயே ஆட்சி நடத்துகிற பாஜக.. பலவீனமாய் காட்சிதரும் எதிர்க்கட்சிகள்.. பார்ப்பன தலைமையில் காம்ரேட்கள்.. இவையெல்லாம் ஆர்எஸ்எஸின் நீண்டகால திட்டத்திற்கு கிடைத்த வெற்றி..ஆனால் மக்களுக்கு கிடைத்த மாபெரும் தோல்வி.. இதே போன்று தொடர்ந்து காவிகள் செயல்படுவார்களாயின்.. மிகப்பெரிய அடியை மக்கள் தருவார்கள்..எழுந்திருக்கவே முடியாதவாறு.. .. #காலம்_பதில்தரும்.. .. தோழர் ஆலஞ்சி

Friday, April 7, 2017

கருப்பு எங்கள் நிறம்

இந்தியர்கள் நிறவெறியர்கள் கிடையாது. அப்படி இருந்திருந்தால் #கருப்பர்களான தென்னிந்தியர்களுடன் நாம் சேர்ந்து வாழ அனுமதித்திருப்போமா.. ...தரூண் விஜய். .. முதலில் நன்றி விஜய்.. பிரிந்து கிடக்கும் எங்களை ஒருங்கிணைத்து தென்னிந்தியர்கள் #திராவிடர்கள் என்று ஒப்புக்கொண்டமைக்கு.. மற்றொன்று திராவிடர்கள் என தனியே பிரித்து சொல்வதிலிருந்தே இந்தியா திராவிடர்களுக்கானதல்ல என்று நீரே பறைச்சாட்டியிருக்கிறீர்.. .. கருப்பு அழிக்க முடியாத வண்ணம்.. ஆதிமனிதனின் நிறமும் அதுதான்.. கல்தோன்றி மண்தோன்றா காலத்திற்கு சொந்தக்காரன் இவன் தான் ஆம் திராவிடன் தான்.. நாங்களெல்லாம் கைபர் வழியே பிழைக்க வந்தவர்கள் வெள்ளை தோல் நிறத்தவரென.. எங்களின் ஆதி யூதரினம் என்பதை விஜய் அவர்களே ஒப்புக்கொண்டிருக்கிறார்.. இந்த மண்ணின் மைந்தர்கள் கருப்பர்கள் என்பதையும் அவரின் இந்த ஒற்றைவரி சொல்லாமல் சொல்கிறது என்னதான் எங்களின் புகழ் வானுயறந்து புகழ்ந்துநின்றாலும்.. நாங்கள் தனியானவர்கள்.. நிறத்தால் கருப்பர்கள் என சொல்லி நிறவெறியை மெல்ல மனதில் விதைக்கும் விஷமேறிய சொல்லின் பொருள் புரிகிறது.. நாங்கள் இன வெறியர்கள் அல்ல இருப்பின் கருப்பர்களான தென்னிந்தியர்களை சேர்ந்துவாழ அனுமதித்திருப்போமா என்ற வரிகளில் ஆணவம் நிறைந்திருப்பதை விஜய் தருண் அறியாதவரா..அறிந்தே தான் நாங்கள் உங்களை விட உயர்ந்தவர்கள் நீங்கள் சூத்திரர்கள் கருப்பர்கள் என உள்ளில் கிடப்பதை திறந்து காட்டியிருக்கிறார்.. .. .. எங்கள் பெருங்கிழவன் பெரியார் சும்மாவா #கருப்பை தேர்வு செய்தார்.. பார்பனனின் உள்ளில் கிடக்கும் நிறவெறி அறிந்தேதான் கருப்பை நம் கலராக்கினார்.. கருப்பு வண்ணம் எங்களுடையது.. கருப்பு தான் ஆதிநிறம்.. கருப்புதான் கெட்டியானது.. வெள்ளை என்பது வியாதி/குறைபாடு..என்பது மருத்துவம் அறிந்தவர்களுக்கு தெரியும் .. மனிதனின் இயற்கையான நிறம் கருப்பு.. நாங்கள் கருப்பர் என்பதில் பெருமைக்கொள்கிறோம்.. தயை கூர்ந்து இதையே தொடர்ந்து வலியுறுத்துங்கள்.. எங்கள் அண்ணன் #பேரறிஞர்_அண்ணா சொன்னதைப்பேல.. #திராவிடநாடு கோரிக்கை தான் கைவிடப்பட்டிருக்கிறதே தவிர, அதற்கான காரணங்கள் அப்படியே தான் இருக்கின்றன .. .. காரணங்களை தேடி செல்லவேண்டியதில்லை.. அவர்களே தோண்டியெடுத்து தருகிறார்கள்.. திராவிடர்கள் கருப்பர்கள் மண்ணின் மைந்தர்கள்.. .. #black_not_to_erase…

ரெய்டு

#ரெய்டு.. இதொன்றும் புதிதல்ல.. புதிய புதிய உக்திகளை கையாண்டு பண விநியோகம் .. பேருந்து நடத்துனரிடம் பெற்றுக்கொள்ளலாம்.. என்கிற நிலை.. அமைச்சர்கள் விஜயபாஸ்கர்.., ராஜேந்திர பாலாஜி.. இதில் விஜயபாஸ்கரின் உதவியாளர் நயினார் வீட்டில் 2.2 கோடி பறிமுதல்.. விஜயபாஸ்கரின் குவாரியில் முக்கிய ஆவணங்கள்.. விஜயபாஸ்கர் பத்திரிக்கையாளர்களை சந்தித்தபோது சரத்குமாருக்கு எவ்வளவு கொடுத்தீர்கள் என கேடடாரகள் என்கிறார் ராதிகா கணவர் வீட்டிலும் ரெய்டு.. அதைவிட அமைச்சர்வீட்டில் ரெய்டின் போது பாதுகாவலுக்கு வந்த துணைராணுவத்திரையே சுட்டுவிடுவோம் என எச்சரிக்கிற நிலையில் தமிழக சட்டஒழுங்கு இருக்கிறது.. அந்த அளவிற்கு பலம் பொருந்தியவர்களா தினகரனின் ஆட்கள்.. .. எப்படியும் வெற்றிபெற வேண்டுமென்பதற்காக பணத்தை கொட்டுகிறார்கள்.. நேற்றைய தினம் தினகரன் அணியை சேர்ந்த (மகளிர் அணி) தன் ஆடையை கலைந்து தமிழகத்தை அசிங்கப்படுத்தியது நாம் எங்கே போய்க்கொண்டிருக்கிறோம் ..என்ற அச்சம் வருகிறது.. பணத்தை கேட்டுபெறும் அவலம்.. ஏழைகள் அல்ல நடுத்தர மக்களிடையே கூட இன்னும் சொல்லப்போனால் உயர்ந்தவர் என தங்களை சொல்லிக்கொள்பவர்களிடம் கூட.. இது அசிங்கம் என்று தெரிந்தும் சர்வசாதாரணமாய் மனநிலை மாறியிருக்கிறது குற்றபோதமே இல்லாமல் கை நீட்டி வாங்குகிறார்கள்.. வாங்குபவர்களையும் கைது செய்து நடவடிக்கை எடுத்தால் மட்டுமே மற்றவர்கள் அஞ்சும்நிலை வரும்.. .. கோடிக்கணக்கில் பணம் எங்கிருந்து வந்தது..நேற்று சந்தித்து சரத்குமார் நாடாரின் வாக்குகளை பெற்று தருவதாக கூறி பெருந்தொகை தினகரனிடம் வாங்கியதாக சொல்லபடுகிறது.. வெட்கமே இல்லாமல் இவர்களையும் புனிதர்களாக்கும் செயலை ஊடகங்கள் செய்யும்.. மற்றொரு விடயமும் நாம் கவனத்தில் கொள்ளவேண்டியிருக்கிறது.. தேர்தல் நேரத்தில் ரெய்டு செய்து மாநில கட்சிகளை சங்கடத்திற்கு உள்ளாக்கும் செயலை தொடர்ந்து பாஜக அரசு எல்லா மாநிலங்களிலும் செய்துவருவதை கடந்து செல்ல இயலாது. ஆனாலும் இந்த தேர்தலில் பணம் எந்தளவிற்கு புழக்கத்தில் என்பதையும் வாக்கை நேரடியாகவே விலைபேசும் அவலத்தையும் அப்படியே விட்டுவிட இயலாது.. .. இடைத்தேர்தல் நடக்கும் ஆர்.கே.நகரில் பணத்தோடும் பிணத்தோடும் சுற்றிவரும் நாய்கள் தொல்லை..இந்த வெறிநாய்களை அடித்துவிரட்டவேண்டும்.. பிணத்தை காட்டியும் பணத்தை எறிந்தும் மக்களை எதோவொரு வகையில் ஏமாற்றி அதிகாரத்தையும் பலத்தையும் கூட்டிக்கொள்ள இவர்கள் நடத்தும் அநாகரீக செயல்கள் ஜனநாயகத்தை வேரோடு வெட்டிசாய்க்கிற செயல். .. அமைச்சர் ஒருவரின் வீட்டிலும் சொந்தமான இடங்களிலும் உதவியாளர் இல்லத்திலும் சோதனையிட்டிருக்கிறார் உடனடியாக அவரை பதவி நீக்கம் செய்யவேண்டும்.. என்று மாண்பிமை எதிர்க்கட்சி தலைவர் #தளபதிஸ்டாலின் கோருகிறார்.. ஆம்.. இவரை உடனடியாக நீக்கவேண்டும் அதோடு.. எந்த அதிகாகத்தை பயன்படுத்தி சாதித்துவிடலாமென எண்ணுகிறார்களோ அதை இல்லாததாக செய்யவேண்டும்.. disolve the government..அரசாங்கத்தை கலைத்துவிடலாம்.. அதுதான் சரி.. நல்ல ஜனநாயகத்தை நிலைநாட்ட அதுதான் கடைசி ஆயுதம்.. ஆளுநர் ஆட்சியில் பொதுதேர்தலை சந்திக்கலாம்.. மக்கள் விரும்புகிறவர்கள் வரட்டும்.. .. #Disolve_the_Government… .. தோழர் ஆலஞ்சி...

Thursday, April 6, 2017

தெங்கதிரோன்..எங்கள் தளபதி..

#தெளிவளிக்க இருட்கதவை உடைத்தெறிந்தான் பரிதி! திசைமகளை அறிவுலகில் தழுவுகின்றார் மக்கள்; ஒளியுலகின் ஆதிக்கம் காட்டுகின்றான்; வானில் உயர்கின்றான்; உதயசூரியன் வாழ்க நன்றே! ... என்றார் எங்கள் #புரட்சிக்கவிஞர்_பாவேந்தர். .. ஆம்.. உதயசூரியனாய் தளபதி.. பணத்தை காட்டியும் பிணத்தை காட்டியும் அரசியல் செய்கிற நிலையிலும்..நேர்மையான அரசியலை முன்னெடுக்கிற.. அனைத்து தரப்பினரும் விரும்புகிற நேசிக்கிற தலைவனாக மிளிர்கிறார்.. .. சவப்பெட்டியில் ஜெயலலிதா பிண பொம்மையை வைத்து கீழ்தரமான அநாகரீக அரசியல் செய்யும் கட்சி.. பணத்தை கண்டக்டரிடமும் ஷேர் ஆட்டோவிலும் வைத்து விநியோகம் செய்யும்..நவீன நாகரீகமாக செயல்படும் கட்சிகளிக்கிடையே.. மாணவர்களையும்.. மீனவர்களையும் முக்கிய பிரமுகர்களையும் சந்தித்து கலந்துரையாடி.. பிரச்சனைகளை எப்படி தீர்க்கமுடியும் வெற்றி தந்தால் எப்படி திமுக செயல்படும் என பேசி.. தேர்தலை சநிதிக்கும் நேர்மை ..தமிழகத்தில் இன்னும் ஜனநாயகம் செத்துவிடவில்லை என்பதை பறைச்சாற்றுகிறது.. .. வெற்றி பெற வேண்டுமென்பதற்காக பிணத்தை ஊர்வலமாக கொண்டு நடக்கும் கேடுகெட்ட கயமைகளை கண்டு மக்கள் முகம் சுளிக்கிறார்கள்.. பதவிக்காக யாரை வேண்டுமானாலும் காட்டிக்கொடுக்கும் கயவாளித்தனம் ஒருபுறம்.. பதவியை எப்படியும் அடைந்தே தீரவேண்டுமென்று பணத்தை வாரி இறைத்து .. அதிகாரிகளையும் அரசு ஊழியர்களையும் களத்தில் இறக்கி.. அதிமுகவை கைப்பற்ற கத்திகுத்து நடத்தி கொலைக்கஞ்சா கொடூரத்தை கையிலெடுக்கும்.. துரோகிகள் .. நயவஞ்சகர் கூட்டம் ஒருபுறம்.. மததுவேசத்தை மண்ணில் விதைக்க .. நம்மவரை கொண்டே நம்மை குத்தி குதறும் பாசிசவெறியர்கள் ஒருபுறமும்..சுற்றிநிற்க.. நிமிர்நடையும் நேர்கொண்ட செயலுமாய் நெஞ்சில் நன்மை ஏந்தி.. செத்துக்கொண்டிருக்கும் ஜனநாயகத்திற்கு பிராணவாயுவை தந்து.. இன்னமும் மக்களை நம்பி களம்காணும்.. தளபதி.. யார் வேண்டுமென மக்கள் தேர்வு செய்யட்டும்.. .. ஆனால் மக்கள் பணியில் தொய்வின்றி மக்களோடுமக்களாய் அவர்தம் பிரச்சனையை தோளில் சுமந்து .. இந்த தமிழ்மண்ணில்.. சமூகநீதியை நிலைநாட்ட.. தமிழக மக்களின் இன்னல்கள் கலைந்து உயர்நோக்கோடு..தொண்டாற்றும் நம் தளபதி.. நிச்சயம் மக்கள் தங்களின் தளபதியாய்.. தமிழகத்தின் தளபதியாய் தேர்வு செய்யும் காலம்..வெகுவிரைவில் வரும்.. .. உலகமிசை உணர்வெழுப்பிக் கீழ்திசையின் மீதில் உதித்துவிட்டான் செங்கதிரோன். என்ற பாவேந்தரின் வரிகள் நியாபகம் வருகிறது.. ஆம்.. .. #உதித்துவிட்டான்_செங்கதிரோன்_தளபதியாய்.. தோழர் ஆலஞ்சி...

Wednesday, April 5, 2017

கிரண்பேடி..

ரப்பர் ஸ்டாம்ப் போல் என்னால் இருக்கமுடியாது புதுவை துணைநிலை ஆளுநர்.. கிரண்பேடி.. புதுச்சேரி மாநில நிலையை பெறாததால் தொடர்ந்து மத்திய அரசின் கீழ் செயல்பட வேண்டியிருக்கிறது.. ஆனால் இதுவரை இருந்த ஆளுநர்கள் அரசு நிர்வாகத்தில் நேரடியாக தலையிட்டதில்லை. ஆனால் கிரண் பேடி தலையீடு அதிகரிப்பதுடன் அதை விளம்பரப்படுத்தி.. தன்னை நல்லவராக காட்டிக்கொள்ள முனைகிறார்.. டெல்லியில் கூட இந்த கூத்து நடந்தது மாநில (அந்தஸ்து ) தகுதிநிலையை பெற்ற பிறகும் கூட காவல்துறை அரசின் கட்டுபாட்டில் இல்லை டெல்லி தலைநகர் என்பதால் அதை கவனத்தில் கொள்ளலாம்.. .. கிரண் பேடி காவல் அதிகாரியாக இருக்கும் போதே தன்னை விளம்பரபிரியராகவே காட்டிக்கொண்டார்..முதல் ஐபிஎஸ் என்ற நிலையில் சில சவுகரியங்கள் அவருக்கு கிடைதத்தும் அதை தன் வளர்ச்சியின் நோக்கிற்கு வலுவாக பயன்படுத்திக்கொண்டவர்.. ஓய்விற்குப்பின் அண்ணாஹசாரேவோடு..ஊழல் எதிர்ப்பில் முன்னிலைப்படுத்தி பின் அர்விந்த் ஜெஸ்ரிவாலோடு ஏற்பட்ட பிணக்கம் டெல்லியில் முதல்வர் வேட்பாளராக நின்று தோற்று பாஜகவின் தயவில் கவர்னரானார்.. மக்களின் ஆதரவில் நின்று வென்று அதிகாரத்தை செலுத்தமுடியாததால் மறைவில் அமர்ந்துக்கொண்டு தேர்தெடுக்கப்பட்ட அரசின் செயல்பாட்டில் தலையிடுகிறார்.. .. தங்களுக்கு எதிரான அரசின் செயல்பாட்டில் தலையிடும் பாஜகவின் கொள்கையை .. தங்களுக்கு வழங்கி நிற்காத மக்களின் அரசை தங்களின் அசைவிற்கு தகுந்தாற்ப்போல் நடத்த எண்ணும் பாசிச சிந்தனையை நடப்பாக்க மத்திய பாஜக அரசு கிரண் போன்றவர்களை பயன்படுத்துகிறது.. எதற்கும் தலையாட்டும் அதிமுக அரசை கவனிக்க கூட கவர்னரை அனுப்பவதில்லை காரணம் இந்த அடிமைகள் தாமாக முன்வந்து பாஜக கேட்காமலேயே எதற்கும் தயாரென எழுந்துநிற்பார்கள்.. .. கிரண் அவர்களே.. மக்களால் தேர்தெடுக்கப்பட்ட அரசை செயல்படவிடுங்கள்.. கண்காணிக்க கூட அருகதையில்லை..மக்கள் பிரதத்துவ சட்டம் தெளிவாக சொல்லியிருக்கிறது..மக்களால் தேர்தெடுக்கபடுகிறவரே அதிகாரம் பெற்றவர்.. அவரை மாற்ற வேண்டுமெனில் மக்கள் தான் முடிவு செய்யவேண்டும்.. தலையீடு என்பது சரியான நெறிமுறையல்ல இதுபோன்று தலையீடுகள் வரும் என்பததால்தான் அண்ணா அப்போதே சொன்னார்.. #ஆட்டுக்கு_தாடிஎதற்கு.. .. மக்கள் பிரதிநிதியை செயல்படவிடுங்கள்.. .. தோழர் ஆலஞ்சி..

ச.ம.ஸ்டாலின்..சமஸ்

ச.ம.ஸ்டாலின் சமஸ் கட்டுரை படித்தீரா என்றார்..நண்பர் சிரிப்போடு.. கொஞ்சம் கவனம் இடுப்பில் கத்தியை சொருகிறார் என்றேன் நான்.. .. திராவிடத்திற்கு பதில் தமிழ் என்று ஆரம்பிக்கும் போதே அவர் யாரின் ஊதுகோலாக பேசவருகிறார் என்பது புரியாமல் இல்லை.. பிராமணர் எதிர்ப்பு கோசம் போட்ட பெரியாரே 100% விழுக்காடு இடஒதுக்கீட்டில் பிராமணர்களுக்கு 3% விழுக்காடு வேண்டுமென்றார்..என்றும் நீதிக்கட்சி ஆட்சியில் தெலுங்கு நியோகி பிராமணர்கள் 40 பேர் அதிகாரத்தில் இருந்தனர் ஆனால் திராவிட கட்சி வந்தபிறகு பிராமணர்கள் புறக்கணிக்கப்பட்டதாக / வெளியேறியதாக கண்ணீர் வடிக்கிறார்.. கூடவே.. இடைசாதியை துணைக்கழைத்து.. தலித்களையும் இஸ்லாமியர்களையும் அரவணைக்கும் நேரம் வந்துவிட்டது.. என்று புலம்பியிருக்கிறார்.. 234 சட்டமன்ற உறுப்பினர்களில் ஒருவர் தான் பார்பனர் இது அநீதி இல்லையா என தான் வாங்கும் சம்பளத்திற்கு விசுவாசமாக இருக்கிறார்.. .. முதலில் சமஸ் போன்றவர்கள் ஒன்றை புரிந்துக்கொள்ளவேண்டும்.. நூறு விழுக்காடு இடஒதுக்கீடு வந்தால் பார்பனர்களுக்கு 3% விழுக்காடு கொடுப்பது தான் சரி என்றுதான் சொன்னார் பெரியார்..ஆனால் நெஞ்சை தொட்டு சொல்லட்டும் இன்று வரை உயர்பதவிகளில் 54% சதவிதிகம் வரை பார்பனர்கள் ஆக்ரமித்திருக்கிறார்கள் அவையெல்லாம் யாருக்கு வழங்கப்படவேண்டிய இடங்கள்.. நூற்றாண்டு பின்னிட்டும்.. அதிகாரத்தில் நேரடியாக இல்லை (ஜெயா தவிர்த்து) என்பதை ஆனால் மறைமுகமாக பார்பனர்கள் ஆதிக்கம் செலுத்துவதை அறியாதவரா.. சமஸ்.. திராவிடத்தை நீர்த்துபோக செய்ய ராஜாஜி காலத்திலேயே நிறைய #கோடாரிகளை பார்த்துவிட்டோம்.... .. சமீபகாலமாக நாங்களும் திராவிடர்கள் தான் என புவியியல் Geography நாங்களும் இங்குதான் வசிக்கிறோம் என்று ராகவன் போன்ற பார்பனர்கள் பேச முற்ப்பட்டிருப்பதை கவனித்தில் கொண்டால் புரியும்.. வசிப்பிடத்தை மட்டுமே கொண்டு வரையறுக்க முடியாதென்பதும் இனம் சார்ந்தும்..அவர்களின் பழக்கவழக்க பண்பாட்டு கலாச்சாரத்தையும் கணக்கில் கொள்ளவேண்டுமென்று அறியாதவரா.. இந்த கீழ்தஞ்சை கள்ளர் இன பெருமகன் சமஸ்.. .. இந்துத்துவ கொள்கைகளை வளர்த்தெடுப்பதில் சங்பரிவாரைவிட வஹாபிகள் (முஸ்லிம்களில் ஒரு பிரிவினர்) முனைப்போடு செயல்படுகிறார்கள் என்கிறார் அவரது வாதத்தை எளிதில் கடந்து செல்ல முடியாதுதான்.. மற்றபடி அவரின் ஒட்டுமொத்தமாக பார்பனர்களுக்கு வக்காலத்து வாங்கவே அதிகம் முயன்று தோற்று இருக்கிறார்.. .. ச.ம.ஸ்டாலின் அவர்களுக்கு தங்களைப்போல் நிறையபேரை கடந்துதான் வந்திருக்கிறோம்.. #திராவிடம்_அஞ்சாது_தோழனே.. .. தோழர் ஆலஞ்சி

ஜெயலலிதா குற்றவாளி..

Re-review petition.. ஜெயலலிதாவின் ₹100 கோடி அபராதத்தை எப்படி வசூலிப்பதென்ற மனுவை தள்ளுபடி செய்திருக்கிறது.. சில ஊடகங்களும் ஆதரவாளர்களும் ஜெயலலிதா குற்றவாளி இல்லை என்று நீதிமன்றம் சொன்னதைப்போல சித்தரிக்க முயல்கிறார்கள்.. மிக தெளிவாக தீர்ப்பில் எந்த திருத்தமும் செய்ய முடியாதென திட்டவட்டமாக சொல்லிவிட்டது.. இறந்தவரிடம் எப்படி பணத்தை வசூலிப்பது என்ற கேள்வியே தவறு .. இறந்தவர் என்பதால் குற்றவாளியாக கருதி சொத்தை பறிமுதல் செய்ய முடியாது.. இறந்து போனவரை குற்றவாளியாக அறிவிக்கவோ/கருதவோ சட்டத்தில் இடமில்லை.. மரணம் எப்படி காப்பாற்றுகிறது பாருங்கள்... .. நீதியரசர் குன்ஹா தீர்ப்பை நடைமுறை படுத்த வேண்டுமென்ற நீதுமன்றம்.. அதாவது ஜெயலலிதா உட்பட நால்வரும் குற்றவாளிகள்.. ஆனால் செத்தவரை தண்டிக்கமுடியாது என்பதால் #தண்டனையோ_தண்டமோ தேவையில்லை.. அதுதான் தீர்ப்பில் சொல்கிறது.. உடனே ஜெயலவிதாவை புனிதராக்க சிலர் முயல்வதும் .. கெட்டவன் இறந்தால் நல்லவனாக பதிவு செய்வதும் சரியல்ல.. .. வரலாற்றில் இரண்டுமுறை சட்டத்தால் தண்டிக்கப்பட்டவர் .. உயிரோடிருந்திருந்தால் பெங்களுரூவில் சிறைப்பறவையாக நான்குவருடம் கழிக்கவேண்டி வந்திருக்கும்.. மரணம் அவரை சிறைக்குள் வாழ்வை கழிக்கவிடாமல் காப்பாற்றியிருக்கிறது.. ஒருவகையில் மரணம் ஜெயாவை காப்பாற்றியிருக்கிறது.. .. #ஜெயலலிதா கிரிமினல் என்பதை மாற்றமுடியாது..தண்டனைதான் இல்லை.. இறந்துபோனதால்.. உச்சநீதிமன்றம்.. .. #A1criminal_miss_Jayalalithaa.. .. தோழர் ஆலஞ்சி

Tuesday, April 4, 2017

தமிழின விரோதிகள்

கருப்புமையை எடுத்து மைல் கற்களில் பூசுவதைவிட முகத்தில் பூசிக்கொள்ளுங்கள் மாண்பிமை பொன்.ராதாகிருஷ்ணன்.. தமிழ் எதிர்ப்பு போராட்டம் நடத்துவோம்.. எச்.ராசா.. .. பாஜக தலைவர்கள் எப்போதுமே எதிர்மறை அரசியலைதான் செய்கிறார்கள்..என்ன.. பொய்யோடு கலந்து.. திரு.பொன்னர் டி ஆர்.பாலு தான் இந்தியில் எழுதும் அரசாணையை பிறப்பித்தார் அவரை கட்சியை விட்டு நீக்கிவிட்டு பேசுங்கள் என்கிறார்.. திரு. டி.ஆர்.பாலு அவர்கள் அரசாணையை படித்துவிட்டு வரட்டும் என்றார்.. மாநில மொழி..அடுத்து ஆங்கிலம் பிறகுதான் இந்தியில் எழுதவேண்டும்.. அதுவும் ஒன்றாவது மூன்றாவது ஏழாவது மைல்கல்களில் தான் இந்தி எழுத வேண்டும் எல்லாம் கற்களிலும் அல்ல அதுவும்..ஆங்கிலத்தை அடித்துவிட்டு அல்ல.. இது முன்பே உள்ள அரசாணைதான் ரயில்வேகளில் பார்க்கலாம்.. எதையுமே அரைகுறையாகதான் பொன்னர் பேசுவார்.. காரணம் பாஜக அடுத்து என்ன செய்யபோகிறதென்று அவருக்கே தெரியாது... நாள்தோறும் பொய்கள் .. பொன்னர் ஒன்றை உணரவேண்டும் என்ன கத்தினாலும் ..மக்களின் ஆதரவோடு நின்று வென்றாலும்.. உங்களைவிட நோகாமல் #நிர்மலாசீதாராமனும் .. #இல_கணேசனும்தான் அதிகம் பலன் பெறுவார்கள். மக்களை சந்திக்காத நிரமலாவிற்கு தனிபொறுப்போடு கூடிய அமைச்சர்பதவி... பொன்னருக்கோ துணை அமைச்சர்தான். அதுதான் இனியும் நடக்கும்.. இனியாவது அதிகம் உளறி மாட்டிக்கொள்ளாதீர்கள். .. தமிழ் எதிர்ப்பு போராட்டம் .. வரவேற்கிறோம் நேரடி துணிவிருந்தால் நடத்தட்டும் பாஜக ஆட்சிக்கு வந்ததிலிருந்தே தமிழுக்கெதிரான போக்கை கொண்டிருக்கிறது. தமிழின் தொன்மையை பறைசாற்றும் #கீழடி_ஆய்வை கூட நிறுத்தியது.. இந்தியை திணிப்பதின் மூலம் தமிழ் மொழியின் வளத்தை சிதைத்துவிட நினைக்கிறது.. பார்பனர்கள் வடமொழி கலந்து பேசி .. தமிழின் மொழியில் இடைசொருகலை மிக கச்சிதமாக சேர்த்துவிட்டதை நாம் நம்மை அறியாமல் பேசியும் எழுதியும் வருகிறோம்.. மலையாள மொழியில் நிறைய வட சொற்கள் புகுத்தி #கைரளியர்களின் மொழி வளத்தை ஏறக்குறைய இல்லாதாக்கினார்கள் இதிலும் பார்பனர்கள் பங்கு அளப்பரியது.. தென்னிந்திய மொழிகளில் (திராவிட மொழிகளில்) தமிழ் உட்பட வடமொழி சொற்களை தான் கையாள்கிறோம்..இந்தியை திணிப்பதின் மூலம் நிறைய தனித்தமிழ் சொற்களை மறந்தோ அல்லது சிதைந்து போகலாம்.. .. எச்.ராசா போன்றவர்கள் தமிழ் எதிர்ப்பை கையிலெடுக்கவேண்டும் அப்போதுதான் தமிழ்மொழி மீதான பற்று அதிகமாகும் .. குறிப்பாக இளைஞர்களிடையே மொழியறிவு அதன் தாக்கமும் முன்னெப்போதுமில்லாத அளவு வீரியம் பெறும்.. தனித்தமிழில் பேச எழுதவேண்டுமென்று தோன்றும்.. தமிழ்விரோதிகளை இனம் கண்டு வேரறுக்க முடியும்..தமிழர்களை ஒன்றுமைபடுத்தவாகினும் .. எச்.ராசா தன் தாய்மொழி மீதான பாசத்தை கையிலெடுத்து தமிழ் எதிர்ப்பை காட்டவேண்டும். அப்போதுதான் எச்.ராசா போன்ற எச்சைகள் தமிழகத்திருந்து விரட்டபடுவார்கள்/புறக்கணிக்க படுவார்கள் .. தோழர் ஆலஞ்சி..

Sunday, April 2, 2017

வாக்கு சீட்டு முறை

மத்திய பிரதேச பிந்த் நகர் இடைதேர்தலில் வைப்பதற்காக விவிபெட் வாக்கு மெசினை பரிசோதனை செய்த போது சமாஜ்வாடியின் சைக்கிளுக்கு வாக்கு அளித்தால் வாக்கு சீட்டில் பாஜகவின் தாமரை சின்னம் பதிவாகி இருந்தது குறிப்பிடத்தக்கது.. பதவான சீட்டை வெளியே எடுத்துச்செல்ல அனுமதி மறுத்தும் வெளியே சொன்னால் விபரீதம் நடக்குமென அதிகாரிகள் மிரட்டியிருக்கிறார்கள்.. காங்கிரஸ் கட்சி தேர்தல் ஆணையத்தை அணுகியிருக்கிறது.. மாநில தேர்தல் ஆணையத்தை கடுமை சாடி விளக்கம் கேட்டிருக்கிறது தேர்தல் ஆணையம்.. .. ஆரம்பம் முதலே வாக்கு பதிவு இயந்திரத்தில் நம்பிக்கையில்லை அதில் நிறைய குளறுபடிகள் நடக்க வாய்ப்பிருக்கிறதென.. அரசியல் கட்சிகள் பாஜக உட்பட அச்சம் தெரிவித்திருந்தன.. எந்த முறைகேடும் செய்ய முடியாதென்றும் மிகவும் பாதுகாப்பானதென்றும்.. உச்சநீதிமன்றத்தில் தேர்தல் கமிஷன் உறுதியளித்திருந்தது.. ஆனால் சமீபத்தில் பாஜக ஆட்சிக்கு வந்த பிறகு இதற்காக பெரியளவில் தேர்ந்த வல்லுநர்களை களத்தில் இறக்கி விவிபெட் மிஷினில் முறைகேடுகளை வெளியிலிருந்தே இயக்க மாற்றியமைக்க திட்டமிட்டிருப்பதாக பகுஜன் உட்பட சில கட்சிகள் கவலை தெரிவித்திருந்தன அப்போது கூட ஆணையம் வாக்கு இயந்திரத்தில் நம்பலாமென்றுதான் சொன்னது.. இப்போது அதிகாரிகள் முன்னில் நடந்த சோதனையில் எந்த பட்டன் அழுத்தினாலும் அது பாஜகவிற்கு வாக்காய் விழுகிறது.. .. பகுஜன் தலைவர் மாயவதி கூறுவதை போல பாஜக பின்புலமில்லாமல் இப்படியொரு முறைகேட்டை செய்திட முடியாது மத்திய அரசு பொறுப்பேற்றதிலிருந்து இவர்களின் அடாவடிகளும் எப்படி ஜெயித்துவிடவேண்டுமென்று செய்கிற தில்லுமுல்லுகளும் இப்போதுதான் வெளிச்சத்திற்கு வர தொடங்கியிருக்கின்றன.. ஜனநாயகத்தின் மக்கள் யாருக்கு வாக்களிக்கிறார்கள் என்பதை.. மாற்றி அரசோ கட்சியோ தீர்மானிப்பது சரியான முறையல்ல மீண்டும் பழையது போல் வாக்கு சீட்டை பயன்படுத்த வேண்டும்.. வளர்ந்த நாடுகளில் கூட (அமெரிக்காஉட்பட) வாக்குசீட்டு முறைதான் செயல்படுத்த படுகிறது.. .. இயந்திரங்களில் தில்லுமுல்லு செய்யலாம் என்றால் எதற்காக தேர்தல் .. எவ்வளவு செலவு.. யார் வெற்றிபெற வேண்டுமென்று பாஜகவோ அரசோ தீர்மானிக்குமென்றால் .. எதற்காக தேர்தல் நடைமுறை.. தி இந்து கூட இந்த நிகழ்வை அவ்வளவு எளிதாக எடுத்துக்கொள்ள முடியாது என்கிறது.. ஆம் .. அவ்வளவு எளிதாக எடுத்துக்கொள்ளமுடியாது.. .. #தேவை_வாக்குசீட்டுமுறை.. .. தோழர் ஆலஞ்சி

Saturday, April 1, 2017

இஸ்லாமிய இயங்கங்கள்..

#அனைத்து இஸ்லாமிய இயக்கங்களும் தடை செய்யப்படவேண்டும்... நண்பர் Sabar Khan .. நீண்டநாட்களாகவே இதுகுறித்து பேசப்படவேண்டும் விவாதிக்கப்பட வேண்டுமென எண்ணியதுண்டு.. குறிப்பாக தமிழகத்தில் எங்குமில்லாத (பிறமாநிலங்களில்) அளவிற்கு இஸ்லாமிய கட்சிகளின் எண்ணிக்கை அதிகம்.. பெயர் தெரியாத கட்சிகள் கூட தேர்தல் நேரங்களில் திடீரென முளைத்து விடுகிறது.. யார் அவர்கள் என்ன பின்னணி என தெரியவில்லை.. .. முதலில் IUML இந்திய யூனியன் முஸ்லிம்லீக் தனது பணியை இந்தியா முழுக்க எடுத்த செல்லவில்லை.. குறிப்பிட்ட மாநிலங்களுக்குள் சுருங்கிப்போனது.. பிற மாநிலங்களில் புதிதுபுதிதாய் இஸ்லாமிய கட்சிகள் தோன்றி மறைந்தன.. கேரளாவை தவிர மற்ற மாநிலங்களில் குறிப்பிட்ட சொல்லகூடிய வளர்ச்சி இல்லை.. இப்போது காலம் அவசியத்தை உணர்த்தியிருக்கிறது.. IUML தனது பணியை இந்தியா முழுக்க கவனம் செலுத்தி கடமையாற்றவேண்டிய நேரம் வந்திருக்கிறது.. .. நாம் தமிழகத்தை ..பார்ப்போம்.. என்பதுகளின் இறுதிகளில் பழனிபாபாவின் உணர்ச்சி மிகு பேச்சால் இளைஞர்கள் தறிகெட்டவண்டியைப்போல செயல்பட தொடங்கினார்கள் திடீரென்று அவரின் மரணம் ஒரு வெற்றிடத்தை இளைஞர்கள் மத்தியில் கொண்டுவந்தது.. குறிப்பாக அரபுநாடுகளில் பணிபுரிவோரிடம் அவர்களின் ஒய்வு நேரம் ..பெரிய பொழுதுபோக்கோ.. அல்லது சட்டென்று குடும்பத்தாரோடு தொடர்பு கொண்டு கதைத்துவிட கூடிய தகவல்தொடர்போ இல்லாத காலம்.. ஒரு வெறுமை மனதோடு கழித்தவர்களிடம் இஸ்லாம் பற்றிய தகவல்களும்.. அதுகுறித்து பேச்சுகளும் சட்டென்று மனதில் பதிந்தது..சொல்லவரும் சேதியின் பொருளை உணர்வதற்குள் மற்றொரு சேதியை தரும் முளைச்சலவை யுக்தி கையாளபட்டது.... இதனால் ஏற்படும் பின்விளைவுகளை பற்றியோ.. இது முஸ்லிம்களை பிரதானமாக எதிர்க்கும் இந்துத்துவா அமைப்பினருக்கு வலு சேர்த்துவிடுமென்று யோசிக்காமல் அதில் கவனம் செலுத்தினார்கள்.. .. முஸ்லிம்லீக் கின் அதிகார சண்டையில் அந்த கட்சி பிரிந்து செயல்பட தொடங்கியபோதுதான்..இஸ்லாமிய இயக்கங்கள் பெயரில் புதிய கட்சிகள் தோன்றின.. நாங்கள் தான் தமிழக முஸ்லிம்களை காக்க வந்தவர்கள் எங்களால்தான் தமிழக முஸ்லிம்களின் உரிமைகளை பெற்று தரமுடியுமென கூறி போராட்டங்க வடிவங்களை கையிலெடுத்தார்கள்..குருவி அமர்ந்ததால் பழம்விழுந்த கதையாக என்னால்தான் என சொல்லி முஸ்லிம்களிடையே குறிப்பாக இளைஞர்களை ஈர்த்தார்கள்.. கொஞ்சம் வளர தொடங்கியதும் தலைமைக்கு யார் என்பதிலும் அதிகார மோகமும் தனித்தன்மையை காட்டவேண்டுமென்பதிலும் கவனம் செலுத்த .. இன்று எண்ணில் அடங்கா இயங்கங்கள்.. .. களையப்பட வேண்டியவர்கள்.. இவர்கள்.. புற்றைப்போல் இஸ்லாமிய சமுதாய இளைஞர்களை அழித்துக்கொண்டிருக்கிறார்கள்.. இடஒதுக்கீட்டில் கூட இவர்கள் கேட்கும் 10 சதவிகிதம் எப்படி வழங்கமுடியும் பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் பரிந்துரைந்த.. சி்றுபான்மையனருக்காக விழுக்காடு 7.5 % மட்டுமே அதுவும் முஸ்லிம் கிருஸ்துவ ஜெயின்.. போன்ற தமிழகத்தில் வாழும் சிறுபான்மையினருக்கானது.. இவர்கள் நோக்கம் இடஒதுக்கீட்டை இல்லாமல் ஆக்குவதுதான் ஏறக்குறைய ஆர்எஸ்எஸ் வேலையை சுலபமாக்குவதை கூட அறியாமல் செயல்படுகிறார்கள்.. நிறைய சொல்லலாம்.. .. நண்பர் சபர்கானின் கருத்தில் உடன்பட வேண்டியிருக்கிறது.. ஒரே குடையில் கீழ் இவர்கள் வராதவரை.. புறக்கணிக்கபடும் சமூகமாகதான் இருப்பார்கள்.. ஒற்றுமை எனும் கயிற்றை பற்றிப்பிடித்துக்கொள்ளுங்கள்.. குழப்பம் விளைவிப்பது கொலைக்கு சமம் என்கிறது வேதம்.. இவர்களின் செயல் குழப்பம் செய்வது மட்டுமே இவர்களின் பலம் அதுதான்.. அது பலவீனமென்று அறிந்தே தப்பு (தவறை) செய்கிறார்கள்.. #குழப்பவாதிகள்.. .. தோழர் ஆலஞ்சி...