Thursday, August 31, 2017

செய்தவினை

மோடியின் தோற்றுப்போன பணமதிப்பிழப்பு .. #demonetiation.. இந்த அறிவிப்பு வந்தவுடன்.. புதிய இந்தியா பிறந்தது வாழ்த்துக்கள் மோடி ஜி புதிய இந்தியா பிறந்தது என தமிழக சூப்பர்ஸ்டார் ரஜினி சொன்னார்.. 50 நாட்கள் தாருங்கள் இல்லையெனில் என்னை எரித்துவிடுங்கள் என்றார் மோடி.. நடந்தது என்ன.. .. அன்றே .. பொருளாதார நிபுணர் பாரதபிரதமராக இருந்த மேன்மை மன்மோகன் சிங் பாராளுமன்றத்திற்கு வந்து எச்சரித்தார்.. புள்ளிவிவரத்தோடு நிதியமைச்சராக இருந்த ப.சிதம்பரமும். ரிசர்வ் வங்கி கவர்னர் ரகுராம் ராஜன் எச்சரித்தார்கள்.. யார் பேச்சையும் கேட்காமல் ஒற்றை இரவில் மக்களை நடுத்தெருவில் நிற்க வைத்த கோமாளியின் செயல் இன்றுதான் மக்கள் உணர்ந்திருக்கிறார்கள்.. 1% விகிதம் கூட கருப்புபணம் இல்லை.. வெட்கிதலைகுனிந்து மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டியவர்கள்.. மோடி மட்டிமல்ல.. மோடியை தூக்கிவைத்து கொண்டாடியவர்களும்தான்.. .. 16000 கோடி கருப்பு பணத்தை கண்டுபிடிக்க 26000 கோடி புதிய நோட் அடித்தவர்கள்.. இதிலிருந்து நாடு யாருடைய கைகளில் என புரிந்திருக்கும் விவரகேடுகளின் கையில் நாடு.. மாட்டை புனிதமென்கிறவர்களின் அறிவு வேறெப்படி இருக்கும்.. .. அதுசரி.. எச்.ராசா.தமிழிசை பொன்னர் ராகவன்.. யார் மண்ணெண்ணையை வாங்கி கொடுக்க போகிறார்கள்.. மயக்கும் பேச்சில் இருக்கும் கவனம் செயலில் இல்லை.. .. அறிவுசார் கூட்டத்தை வேண்டாமென வைத்து.. பொய்யை ரசித்து பேசி மயக்குகிற.. மதத்தின் பேரில் கட்டுகதைகளை நயம்பட சொல்லி நம்பவைக்கிற.. கடவுளைச்சொல்லி கதை பேசிய கயமை கூட்டத்தை.. வாய்ச்சொல் வீரரை. இல்லாத ஒன்றைச்சொல்லி ஊழல் ஊழல் என கூக்கிரலிட்டு கடைசியில் ஊதவாகரைகளை ஆட்சியில் அமர்த்தியிருக்கிறோம்.. #செய்தவினை .. #demonetiation_failure.. .. தோழர். ஆலஞ்சி

Wednesday, August 30, 2017

ஆட்சியை தொடர விட கூடாது

ஆளுநருக்கு தொல்லை கொடுக்ககூடாது பிஜேபி ராசா.. ஆளுநர் மாளிகையை அரசியல் மேடையாக்காதீர் தமிழிசை.. நன்று.. ஆளுநர் தனக்கு வழங்கப்பட்டிருக்கிற அதிகாரத்தை சரியாக பயன்படுத்துகிறாரா.. சசிகலா தனக்கு பெரும்பான்மை எம்எல்ஏக்கள் ஆதரவு இருப்பதாக சொன்ன போது நியாயமாக நடந்துக்கொண்டாரா. பக்கா அரசியல்வாதியை போல நடந்துக்கொள்ளவில்லையா.. பாஜக ஆளும் மாநிலங்களில் உத்ரகாண்டில் நடந்ததென்ன.. அரசியல் விளையாட்டை ஆளுநர் மாளிகை தானே நடத்தியது.. ஆளுநர் சட்டபடிதான் நடந்துக்கொள்வதாக சிவர் சொல்கிறார்கள் இதே கவர்னர் முன்பு நடந்துக்கொண்ட விதம் சரியானதுதானா என்றால் மௌனம் தான் பதில்.. .. அதிமுக எம்எல்ஏக்கள் அணி மாறியோ அல்லது கட்சி அவர்களை நீக்கி இருந்தால் நம்பிக்கை வாக்கு கோர சொல்வேன் என்கிறார்.. ஆம் கவர்னர் சொல்வது சரிதானே என நினைக்க தோன்றும்.. அரசுக்கெதிராக இல்லை எடப்பாடிக்கெதிராக என்று அவர்கள் எழுதி தந்துவிட்டபிறகு எடப்பாடி தார்மீகமாக பெரும்பான்மையை இழக்கிறார்.. அரசை கலைக்க சொல்லவில்லை மாறாக முதல்வரை மாற்ற கோரிக்கை வைத்திருக்கிறார்கள்.. தினகரன் தரப்பு எம்எல்ஏ பதவியை விட தயாரில்லை..இனி எக்காலத்திலும் வர இயலாதென்பதறிந்து முதல்வரை மாற்ற வேண்டுமென கேட்கிறார்கள் .. முதல்வரை மாற்ற கட்சிக்குள் தீர்மானித்துக் கொள்ளுங்களென கவர்னர் சொல்லிவிட்டார்.. எடப்பாடி பெரும்பான்மை இழந்து தொடர்கிறார்.. காரணம் தினகரன் ஆட்களின் கடிதம் அவரை தொடர வைக்கிறது ஆனால் இதே போல் உத்ரகாண்டில் நடந்தபோது கவர்னர் பெரும்பான்மையை நிரூபிக்க உத்தரவிட்டார்.. அதாவது கவர்னரை தங்கள் சொல்படி..ஆடவைத்திருக்கிறது மத்தியரசு .. திமுகவின் பக்கம் ஆளுநர் காயை நகர்த்தியிருக்கிறார் அதாவது இனி திமுக நம்பிக்கை இல்லா தீர்மானத்தை கொண்டுவரலாம் அதற்கு கவர்னரின் அனுமதி தேவையில்லை ஆனால் கொண்டுவந்தால் வெற்றி பெறும் சூழல் இருக்கிறதா என்றால் தினகரன் ஆட்களை மட்டுமல்ல.. அந்த மூவரையும் கூட நம்பமுடியாது .. ஒருமுறை நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவந்துவிட்டால் அடுத்த ஆறுமாதத்திற்கு இடையில் கொண்டுவரமுடியாது.. ஆனால் காங்கிரஸ் முஸ்லீம் லீக்கை கொண்டுவர சொல்லலாம்.. அப்போதும் தினகரன் ஆட்கள் நம்பிக்கைக்குரியவர்களாக நடந்துக்கொள்வார்களென சொல்லமுடியாது.. .. 19 அதிமுக எம்எல்ஏக்களை தகுதிநீக்கம் செய்ய துணை சபாநாயகர் நோட்டீஸ் அனுப்பியிருக்கிறார். திமுகவின் 21 பேரை இடைநீக்க செய்ய முயற்சிக்கிறார்கள்.. முன்கூட்டியே நீதிமன்றம் சென்று தடையாணை பெறவேண்டும்.. .. மிகவும் கவனமாக ...கவனமாக புரிந்துக்கொள்ளுங்கள்.. திமுக நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டுவரவேண்டும் வந்தால் வெற்றி உறுதி என்கிற நிலையை முதலில் உருவாக்கவேண்டும்.. அவர்கள் வழியிலேயே செல்லலாம்.. நியாயமான வழிகள் அடைப்படும் போது அவர்களின் வழிகளையே நாம் பின்ப்பற்றலாம்.. தவறில்லை நாடு மிக கேவலமாக போய்க்கொண்டிருக்கிறது.. இருக்கிற காலத்தை எப்படியேனும் கரைசேர்க்க எந்தளவிற்கு செல்ல தயாராக இருக்கிறார்கள் எனும் போது இனியும் பொறுப்பதில் பலனில்லை.. .. #இனியும்_தேவையா_இந்தஆட்சி … .. தோழர். ஆலஞ்சி

Tuesday, August 29, 2017

அறிவாலயம்

#அறிவாலயம்.. யார் வேண்டுமானாலும் எப்போது வேண்டுமானாலும் எதிரெதிர் துருவத்தில் நின்றுக்கொண்டிருக்கும் பொழுதென்றாலும்.. கருத்து கொள்கை கோட்பாட்டிலிருந்து வேறுபட்டு நின்றாலும்.. வரலாம் இது அறிவாலயம்.. .. கட்சியின்/இயக்கத்தின் தலைமை அலுவலகம் மட்டுமல்ல இனத்தின் தலைமை கூடமிது.. இக்கட்டான நேரங்களில் கூட இங்கே சமதர்மம் பேணப்படும் வருகிறவர் யாரென்றெல்லாம் பார்பதில்லை வந்தவரின் நோக்கம் என்ன என்பதைவிட வந்திருக்கிறார் ஏதோவொன்றை எதிர்ப்பார்க்கிறார் என்றறிந்து அவர்கள் மரியாதையோடு நடத்தப்படுவார்கள்.. .. இங்கே நண்பர்கள் என்றில்லை எதிரிகள் இன துரோகிகள் வந்து தஞ்சம் கேட்டிருக்கிறார்கள் இனியும் கேட்பார்கள்.. கட்சியின் பார்வைக்கான இடம் மட்டுமல்ல சமூகநீதிக்கான .. அடித்தளம் அமைத்த மக்களின் அன்பாலயம்.. .. தமிழக அரசியலில் இதுபோன்றதொரு இக்கட்டான சூழல் இதுவரை வந்ததில்லை மக்கள் நம்பி வாக்களித்தவர்கள் .. வேறொருவனுக்கு விலைப்போன அதுவும் இனத்தை இனத்தின் கலாச்சாரத்தை .. புதைக்க நினைக்கிற வந்தேறி கூட்டத்தோடு கைக்கோர்த்து அலைகிற அவலம் கண்டு இந்த அரசின் மீது வெறுப்பின் உச்சத்தில் இருக்கிறார்கள் மக்கள்.. நடுநிலை போர்வை ஒளிந்திருக்கும் கயமைகள் ஒவ்வொன்றாய் வெளிவருகிறதறிந்து ..துடித்துப்போய் இருக்கிறான்.. அடங்கா கோபம் ஆட்சியாளர்கள் மீது.. எத்தனை பித்தலாட்டங்கள்.. ஒவ்வொரு முடிவையும் டெல்லிதான் தீர்மானிக்கிறது. கட்சி தலைமை என்ற பெயரில் சில டம்மிகள் வைத்து ஆட்சியை நடத்துகிறது பாஜக.. இன்றைக்கிருக்கும் முதல்வர் கூட சிறுநீர் கழிக்க கூட உத்தரவு வாங்க டெல்லியை அழைக்கவேண்டும் அவமானகரமான ஒரு ஆட்சி வெட்கம் ரோசம் மானம் மரியாதை எல்லாம் கலைந்து ஆடையில்லா மனிதன் போல இன்றைய ஆட்சியாளர்கள்.. .. தமிழக அரசை வழிநடத்த பாஜகவினருக்கு என்ன அருகதை இருக்கிறது.. மக்கள் கட்டிவச்சகாசை கூட தராமல் காரி உமிழ்ந்திருக்கிறார்கள் ஆனால் புறவாசல் வழியாக .. அதிகாரத்தை இயக்குகிற (அவர்களுக்கு தெரிந்தது அதுதான் என்பது வேறுவிடயம்) கயமைத்தனத்தை தமிழகம் ஏற்காதது அறிந்து வேறுவழியின்றி எதிர்த்துநின்று கதைத்தவனும் களம்கண்டவனும் அறிவாலயம் நோக்குகிறார்கள்.. .. இன்றைக்கு என்றில்லை என்றைக்கும்.. #தமிழகத்தின்_கிழக்கு_அறிவாலயம் தான்.. .. தோழர். ஆலஞ்சி

Monday, August 28, 2017

அதிமுக.. ஓட்டையான படகு

அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் பன்னீரும் பழநியும் இணைந்த பிறகு கூடிய கூட்டம்.. தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் பாண்டியில் என்றவுடன் பதட்டத்தோடு எத்தனைபேர் ஆதரவு தருகிறார்கள் என்பதை கணக்கெடுக்க நடத்தப்பட்டது பாவம் எழுபது பேர்களுக்கு மேல் தாண்டவில்லை.. ஏறக்குறைய 50 க்கும் மேற்ப்பட்டவர்கள் வரவில்லை.. விரக்தியின் வெளிபாடு இது.. அதிகாரப்பசியில் தன்மானம் இழந்து கட்சியை காட்டிக்கொடுக்கும் நயவஞ்சகத்தை ஒட்டுமொத்தமாக கட்சியை அடகுவைத்து தங்களை காத்துக்கொள்ளும் அயோக்கியத்தனத்தை விரும்பாதவர்கள்.. சசிகலாவின் ஆதரவாளர்கள் என்பதை காட்டிலும் பழநியின் பன்னீரின் நடவடிக்கையை விரும்பாதவர்களாக கணக்கில் கொள்ளலாம்.. .. இதில் அதிமுககாரனைவிட (பன்னீர்-பழநி) உண்மையில் பதறுவது பாஜகதான்.. பொன்னர் திமுக புறவாசல் வழியாக ஆட்சியை பிடிக்க முயற்சிக்கிறது.. என்கிறார் ஸ்டாலினை தகுதிநீக்கம் செய்யவேண்டுமென தமிழிசை உளறுகிறது.. தினகரன் எம்எல்ஏக்கள் பதவி பறிபோகுமென எச்.ராசா .. இவர்கள் பாஜகவைப்பற்றி கவலைப்படுவதைவிட அதிமுகவைப்பற்றிதான் அதிகம் கவலைப்படுகிறார்கள் ..உண்மையான அக்கறையில் அல்ல இந்த வாய்ப்பை விட்டால் வேறு வாய்ப்பே கிடைக்காது துடைத்தெறியப்படுவோம் பாசிசத்தின் அஜந்தா செயல்படுத்த முடியாதென்று தெரிந்துதான் இவர்களிடம் பதட்டம் அதிகரிக்கிறது.. .. கவர்னர் இன்னமும் அமைதி காப்பது அவர் வகிக்கும் பதவிக்கு இழுக்கு எவ்வளவுதான் முட்டுகொடுத்தாலும் நிற்காது சரிந்துவிடும் என்பதறிந்து காலம் தாழ்த்துவதில் பலனில்லை எதையாவது செய்து பாஜகவை மலரவிட நினைத்தால் இங்கு நிறைவேறா ஆசையாய் போகும்.. .. இந்த அறிவிலி கூட்டத்தை நீண்டநாட்கள் அலங்கரிக்க முடியாது கொள்கை அடிப்படையில் வந்தவர்கள் அல்ல இவர்கள்.. கோடாரியின் கவர்ச்சி கண்டு.. கொஞ்சம் காசு பார்க்கலாமென்று வந்த கூட்டம்.. இருக்கும் கொஞ்ச மரியாதையையும் இழந்து நிற்கிறார்கள்.. குழிபறித்து முதுகில் குத்தி .. கட்சியை தொடங்கிய மகோரா வின் (எம்ஜிஆர்) கட்சி..துரோகத்தாலேயே வீழ்கிறது.. ஜெயா எம்ஜிஆருக்கு துரோகம் செய்தார் என்னை முதல்வராக்குங்களென ராஜீவிற்கு கடிதம் எழுதினார்.. இப்போது பன்னீரின் பழநியின்.. துரோகம்.. முடிவுரை எழுத போகிறது.. என்ன தான் தகிடுதத்தம் செய்தாலும்.. பழநியோ பன்னீரோ கரைசேரமுடியாது.. .. #துரோகம்_வீழும்… .. தோழர். ஆலஞ்சி

பெருங்கிழவன்

திராவிட இயக்கம் தொடங்கி 100 ஆண்டுகள் ஆட்சி பொறுப்பிற்கு வந்து 50 ஆண்டுகள் ஆகிவிட்டனவே என்ன செய்தீர்கள் என்றார்.. சிரித்துக்கொண்டே சொன்னேன் அம்மணசாமியார் சட்டமன்றத்திற்குள் வராமல் பார்த்துக்கொண்டோமே .. .. மிகபெரிய கால அளவுதான் ஆனால் ஈராயிரம் ஆண்டுகளாக எங்களை அடிமைப்படுத்தியவர்களிடமிருந்து மீண்டுவந்த சுயமரியாதையோடு இன்னமும் போராடிக்கொண்டிருக்கிறோமே.. ஆட்சியில் இருந்ததாக சொல்லபடும் ஆண்டுகளில் ஏறக்குறைய இருபத்தைந்தாண்டுகள் கூட திமுக ஆட்சியில்இல்லை ..அதிமுகவை நீங்கள் திராவிட இயக்கமாக கருதமுடியாது.. .. இன்றைக்கு பெருந்தலைவர் காமராஜரை அவரின் ஆட்சியை புகழ்ந்துக்கொண்டிருக்கிறோமே அதற்கு காரணம் பெரியார்தான் என்பது எத்தனை பேருக்கு தெரியும்.. ராஜாஜியின் கட்டுபாட்டியிலிருந்த காங்கிரஸை தமிழர்களின் தலைமைக்கு கொண்டுவர வேண்டுமென எண்ணி குடியாத்தம் இடைதேர்தலில் காமராஜரை நிற்க சொல்கிறார்.. காமராஜரோ நான் மிகவும் பின்தங்கிய நாடார் வகுப்பை சார்ந்தவன் குடியாத்தத்தில் முதலியார்களும் முஸ்லிம்களுமே,அதிகம்..என்ற போது நான் சொல்கிறேன் நீ நில் நான் பார்த்துக்கொள்கிறேன் என்று தமிழர்கள் காமராஜரை ஆதரியுங்கள் என்றார் திக விலிருந்து பிரிந்து திமுக கண்ட அண்ணாவும் , கண்ணியமிக்க காயிதே மில்லத்தும் பெரியார் சொல்லிவிட்டார் என்று ஆதரித்தார்கள்.. அப்படிதான் தமிழக அரசியலில் பிராமணர்களின் ஆதிக்கத்திலிருந்து விடுபட தொடங்கியது.. .. திமுக ஆட்சியிலிருந்த போதுதான் .. சமதர்ம சமுதாயத்தை கட்டமைக்க திட்டங்களும் சட்டங்களும் வந்தன.. 1950 களில் அண்ணல் அம்பேத்கர் வீட்டிலும் நாட்டிலும் ..எல்லா மத ஜாதியிலும் பெண்கள் அடிமைகளாகதானியிருக்கிறார்கள்.. அவர்களுக்கென்று உரிமைகளில்லை சொத்தில் பங்கில்லை எனவே அதை சட்டமாக்க வரைவை கொண்டுவருகிறேன் என நாடாளுமன்றத்திலே பேசிய போது பண்டிதஜவகர்லால் நேரு தலைமையிலான அரசு இருந்த போதே ஆதிக்க மேட்டுக்குடி பார்பனர்கள் கடுமையாக எதிர்த்து தோற்கடித்தார்கள்.. என்னால் முடியாமல் போனது எப்போதாவது ஒருதலைவன் பெண்களுக்கான உரிமையை கொண்டுவருவான் என கூறி ராஜினாமா செய்துவிட்டுபோனார்.. ஆனால் இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் பெண்களுக்கு சொத்தில் சமபங்கை கொண்டுவந்து சட்டமாக்கியது திராவிட இயக்கம் தான் திமுகதான் #கலைஞர்தான்.. இந்தியாவிற்கே வழிகாட்டியது.. .. இன்றைக்கும் இடஒதுக்கீட்டில் 69 சதவிகிதத்தை செயல்படுத்துவதும் சாதிமத கட்டமைப்பை உடைத்து சமத்துவபுரம் கண்டதும், மலம் அள்ளுவோர் என ஒதுக்கி வைத்த அருந்தியினருக்கு உள்இடஒதுக்கீட்டை வழங்கி இன்றைக்கு மருத்துவம் பொறியியல் என உயர்கல்வி பெற வழிவகை செய்ததும்.. இடுப்பில் கட்டிய துண்டை தோளில் போட்டுக்கொண்டு சரிசமமாக அமர்ந்து பேச வைத்ததும்...சமூகநீதியில் இன்றுவரை இந்தியாவிற்கே முன்னுதாரணமாய் இருப்பதும் திமுகவால் திராவிடத்தால் கிடைத்தது.. .. குளத்தில் தண்ணீர் அள்ளி குடிக்கவோ குண்டி கழுவவோ விடமாட்டேன் என்கிறான் என் இனத்தவனை அறநிலையத்துறை அமைச்சராக்கி கருவறை வரை செல்ல வைத்தது திராவிடம்தான் பெரியார்தான் என பெருமையோடு சொன்னார் #அம்பேத்கர் பரமேஸ்வரன் என்ற தாழ்த்தப்பட்டவனை பெரியார் சொன்னார் என்பதற்காக அமைச்சராக்கினார் காமராஜர்.. .. திராவிடத்தை உச்சரிக்காமல் இங்கே அரசியலே செய்யமுடியாத நிலைக்கு கொண்டுவந்திருப்பதும் மற்றமாநிலங்களை போல் அல்லாமல் எல்லாவற்றிலும் முன் உதாரணத்தை உருவாக்கியிருப்பது திராவிடம்தான்.. .. காரல் மார்க்ஸ் சொன்னார்.. குரங்கையும் மாட்டையும் தெய்வமாக மதிக்கிற நாட்டில் ஒரு கலாச்சார புரட்சியோ பொருளாதார புரட்சி வராதென்றார்.. இன்றைக்கு தமிழகத்தில் மாட்டு அரசியல் எடுபடாமல் போனதற்கு நவநாகரீக சீர்திருத்த சிந்தனையை கொண்டுவந்ததும் .. கலாச்சாரம் என்ற பெயரில் மூடத்தனமும் எடுபடாமல் போனதற்கும் திராவிடம்தான் காரணம்... தமிழகத்தில் சுயமரியாதையோடு வாழ முடிகிறதே.. , உணர்வால் ஒன்றுப்பட்டு நிற்க முடிகிறதென்றால் பெரியாரும், பெரியாரின் கொள்கைகளை தாங்கி அதை அரசியலாய் சட்டவடிவாய் மாற்றிக்காட்டிய பெருமை திமுகவை கலைஞரையே சாரும்.. .. இன்றைக்கு பாஜகவினர் படித்த பதினெட்டு அடவும் நடத்திப்பார்த்தும் ஒன்றும் முடியவில்லையே..காரணம் திராவடத்தின் தாக்கம் மனதில் வேரூன்றி இருப்பதே சாட்சி .. நமஸ்காரம் என்ற ஆதிக்கதிமிரில் இருந்தும் கும்பிடுறேன் சாமி என்ற அடிமைத்தனத்திலிருந்து மீட்டு வணக்கம் என்று சுயமரியாதையோடு கதைக்கவைத்தது திராவிடம் தான்.. .. #இருவர்_பெருங்கிழவர்கள்.. .. தோழர். ஆலஞ்சி

Sunday, August 27, 2017

அதிமுக யார் கையில்

இதுதான் உண்மை. பன்னீரால் அதிகளவில் எம்எல்ஏக்களை திரட்ட முடியாதென்பதும் யாரும் அவர் பின்னால் வர தயாரில்லை என்பதும் முன்பே அறிந்ததுதான் ஆனால் ஊடகங்கள் அவரை ஓவர் பில்டப் செய்து பெரிய செல்வாக்கு உள்ளவரைப்போல காட்டியது வெறும் காற்றடைத்த பலூன் அவரென்பதை இப்போது உணர தொடங்கியிருக்கிறார்கள் அதிமுகவினர்.. தினகரன் ஆதரவு 23ஐ தாண்டிக்கொண்டிருக்கிறது.. இன்னும் கூடும் .. பாஜகவின் ராஜகுருக்கள் தீட்டிய திட்டம் படுதோல்வியில் ..ஆரம்பம் முதலே சசிகலாவை வெளியேற்றிய கட்சி இல்லாமல் போகவே வாய்ப்பென்று சொல்லிவருகிறோம்.. .. 122 ஐ தாண்டுகிறது எடப்பாடி ஏதோ நினைக்க நடந்ததென்னவோ வேறு.. தமிழகத்தின் அரசியலை அல்ல .. தமிழக மக்களின் எண்ணவோட்டத்தை நாடித்துடிப்பை அறிந்திருந்தால் பாஜக எதிர்ப்பு அரசியலை தொடர்ந்திருப்பார் .. மத்திய அரசாலோ பாஜகவாலோ ஒன்றும் செய்யமுடியாது காரணம் மேஜிக் நம்பர் சசிகலாவிடம் இருந்தது கடைசியில் பாசிசத்தின் சூழ்ச்சிக்கிரையாகி முழிக்கிறார்.. விழிபிதுங்கி நிற்கிறார் .. அதைவிட பாஜகவினரின் சமீபத்திய பேச்சுகள் அவர்களின் இயலாமையை காட்டுகிறது.. அவர்கள் தீட்டிய திட்டம் தமிழகத்தில் பல்லிளிக்கிறது என்றவுடன்.... தினகரன் எம்எல்ஏக்கள் அரசுக்கு எதிர்த்து வாக்களித்தால் பதவி பறிபோகுமென எச்.ராசா மிரட்டுகிறார்.. முதவில் கர்நாடக எடியூரப்பாவிற்கெதிராக பாஜகவை சேர்ந்த எம்எல்ஏக்கள் எதிர்த்து வாக்களித்தபோது நடந்ததை அப்போது உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை ராசா படித்துபார்க்கட்டும் அவர்கள் செய்தது அவர்களுக்கு வினையாகிறது.. பொன்னரும் தமிழிசையும் சு.சுவாமியும் திமுக கொள்ளைப்புற வழியாக ஆட்சியை பிடிக்க நினைக்கிறதென ஒப்பாரி வைக்கிறார்கள் .. கவர்னர் முன் எல்லா வழிகளும் அடைக்கப்பட்டதைப்போல முழிக்கிறார். .. புறவழியாக வரவேண்டுமென்றால் எப்போதே வந்திருக்கமுடியும் அதை திமுக எப்போதும் செய்ததில்லை.. மக்களின் பெரும் ஆதரவோடு மட்டுமே ஆட்சி செய்திருக்கிறது.. எம்ஜிஆர் மறைவிற்கு பிறகு ஜானகியும் ஜெயாவும் அடித்துக்கொண்டபோது ஆர்எம் வீரப்பன் ஜானகியை பின்துணைக்க கோரிய போதுகூட தலைவர் அவர்களாக முடிவு செய்துக்கொள்ளட்டுமென விட்டுவிட்டார் .. ஜானகியை சிறுதுகாலம்,ஆதரித்து ஜெயலலிதாவை இல்லாதாக்கி இருக்கலாம் அதை செய்யவில்லை காரணம் .. எந்த நிலையிலும் திராவிட கட்சிகளை தவிர வேறு யாரும் வந்துவிட கூடாதென்பதில் கறாராக இருந்தார் அன்றைக்கு காங்கிரஸ் கொஞ்சமே மெச்சப்பட்ட நிலையில் இருந்தது.. யார் எதிராக வேண்டுமென்பதில் திமுக எப்போதுமே சரியாகவே,இருந்திருக்கிறது.. இப்போது ஆடும் ஆட்டத்தின் முடிவில் தெரியும் பாஜகவும் பாஜகவிற்கு துணைப்போனவர்களின் பரிதாபகர நிலை.. .. அதிமுக என்றால் அது விரும்புகிறோமோ இல்லையோ அது #அத்தாச்சி தலைமைதான் என்பது மெல்ல தெளிய தொடங்கியிருக்கிறது... அதுதான் உண்மையும் கூட.. .. #Dissolve_the_TNGovt .. தோழர். ஆலஞ்சி

Saturday, August 26, 2017

ஹரியானா எரிகிறது

பற்றி எரிகிறது.. நவீன இந்துத்துவாவின் தேசம்.. சிறுமியை வன்புணர்வு செய்த அயோக்கியனுக்காக.. பாஜகவிரின் வரிந்து கட்டல் சகிக்கவில்லை.. அவருக்கு பின்னால் இருக்கும் லட்சக்கணக்கான மூடர்களை கணக்கில் கொள்ளவில்லையென பாப்பான் சுப்ரமணியசுவாமி சொல்வது அபத்தத்தின் உச்சம்.. ஹரியானா பஞ்சாப் டெல்லி என வன்முறையில் காவிகள்.. கொஞ்சம் கூட யோசிக்காமல் ஆன்மீகமென்ற பெயரில் நடத்தும் வெறிச்செயலை எல்லோரும் கண்டிக்கவேண்டும்.. பாஜகவிற்கு வாக்களித்தால் ஏற்படும் தீமைகள் இப்போது என் தேசம் உணர தொடங்கியிருக்கிறது.. மதம் சொல்லி மயக்கி பக்தியென்ற போர்வையில் செய்யும் காலித்தனத்தை தெய்வத்தின் பெயரில் மன்னிக்க .. அல்லது மறக்க வைக்கும் கேடுக்கெட்ட செயலை பாஜக செய்வது இந்திய இறையாண்மைக்கு எதிரானது.. .. பாஜக வின் முகம் மக்களுக்கு தெரிய தொடங்கியிருக்கிறது மதத்தின் பெயரில் காமகொடூரனை பின்துணைப்பதிலிருந்தே அதன் உண்மை சொரூபம் விளங்க தொடங்கியிருக்கிறது.. சாமியார்களை தெய்வமாக பார்க்க தொடங்கினால் இதுதான் நடக்கும்.. காமம் தலைக்கேறியவனாலேயே சிறுவயது குழந்தையை...... இவனுக்கு எந்த மிரட்டலுக்கும் அஞ்சாமல் தண்டனை வழங்கிய அந்த நீதியரசர் ஜெகதீப் சிங் அவர்களுக்கு நன்றி.. பஞ்சாப் ஹரியானா உயர்நீதிமன்றம் மோடி அவர்களே நீங்கள் பாஜகவின் பிரதமர் அல்ல இந்தியாவின் பிரதமர் என சொல்லியிருக்கிறது.. ஆம் பாஜகவின் பிரதமராக .. மதவாதி சக்திகளின் கைப்பாவையாக தான் செயல்படுகிறார் .. மதத்தை கவசமாக்கி கொண்டு காமலீலைகளில் கொலை கொள்ளைகளில் ஈடுபடுவது எல்லா மதத்திலும் சர்வசாதாரணமாகிவிட்டது இவர்கள் செய்யும் தவறுகளை மூடி மறைக்க மதத்தை கவசமாக்கும் அநியாயம் நடக்கிறது இவர்களின் ஆதரவாளர்கள் சப்பைக்கட்டு சகிக்கமுடியவில்லை.. இவர்களை ஆதரிப்பவர்கள் மிகவும் ஆபத்தானவர்கள்.. கொட்சமும் சிந்திக்காமல் ஆன்மீகவாதிகளுக்கு துணை போகிறவர்கள் வெறுக்கப்படவேண்டியவர்கள்.. .. தமிழகம் இதுபோன்ற சூழல்கள் வந்த போது அறிவுக்கொண்டு செயல்பட்டது.. பிரமானந்தாவை கைது செய்த போதும் நித்யானந்தாவை எதிர்த்து நின்று கைது செய்ய சொன்னபோதும் .. ஜகத்குரு காமகோடி ஜெயேந்திரரை கைது செய்து சிறையிலிட்டபோதும்..இப்போது பிஜே எதிரான ஆடியோ வெளியாகியாக போதும் அதை அதன் போக்கில் விட்டு அமைதியாய் இருந்தது தமிழகம்.. காரணம்.. இது பெரியார் நாடு .. இந்த பக்குவப்பட்ட தமிழ் மண்ணை கலவரங்களை கொண்டு சிதைக்க மதவெறியை ஜாதிவெறியை கொண்டு சீரழிக்க பாஜக முயன்று தோற்று வருகிறது..இப்போது புரியுமே பாஜக தேசத்தின் புற்றுநோய் என்று.. தமிழக மக்கள் தொடர்ந்து மதவாத சக்திகளை புறக்கணிக்கவேண்டும்... இல்லையெனில் .. ஹரியானா போல எரியும்.. #எச்சரிக்கை .. தோழர். ஆலஞ்சி

Friday, August 25, 2017

சூலூர் கனகராஜ்

ஆட்சி போனாலும் .. உறுப்பினர் பதவி போனாலும் பரவாயில்லை ஆட்சியை கலைத்துவிட்டு தேர்தல் நடத்துங்கள் ..சூலூர் சட்டமன்ற உறுப்பினர் கனகராஜ்.. .. தனி ஒருவரின் குரலாக இதை தள்ளிவிட முடியாது ஏறக்குறைய அதிமுகவினரின் குரலாக இதை பார்க்கிறேன் .. இன்னமும் நம்பிக்கொண்டிக்கிற சாதாரண தொண்டனின் வலியாக உணர்கிறேன்.. எதற்காக பாஜகவின் இசைக்கேற்ப ஆடவேண்டும் என நினைக்கிற கொஞ்சமேனும் மிச்சமிருக்கிற சுயமரியாதை குரலாக பார்க்கிறேன்.. .. அதிமுகவில் இப்போதிருக்கும் தலைவர்கள் என சொல்லிக்கொள்கிறவர்களிடம் தலைமைக்குரிய பண்பில்லை இருக்கிற பதவியை காத்துக்கொள்ள எதையும் செய்யும் படுபயங்கரத்தை அதனால் ஏற்படும் விளைவுகள் பற்றிய அச்சம் சிறுதுமில்லாமல் செயல்படுகிறார்கள் ஒட்டுமொத்த தமிழகத்தை வெட்கிதலைகுனிய வைக்கிறார்கள் .. இந்திய அரசியலில் ஆன்றோர்களை ..அறிவாளிகளை திறமையாளர்களை விவேகிகளை பார்த்த தமிழகம்..இன்று கழிசடைகளை கண்டு வெந்துநிற்கிறது.. மத்தியரசு எதைச்சொன்னாலும் தலையாட்டுகிற பொம்மைகள்.. உணர்வற்ற ஜடங்கள் .. இதுவரை இப்படியொரு அடிமைகளை இந்தியா வேறெங்கும் கண்டதில்லை.. .. பகிரங்கமாக பாஜக ஆட்டுவைக்கிறது இவர்களின் பதவிஆசையை பயன்படுத்தி பார்பனர்களை உயர கொண்டுவர துடிக்கிறது மிக முக்கிய முடிவுகளை அவர்களே எடுக்கிறார்கள் நிர்மலாசீத்தாராமன் குருமூர்த்தி,ஹெச்.ராஜா கிரிஜா,மைத்ரேயன்..என அவாக்களுக்கு மட்டுமே மேல்மட்ட பேரம் பேச அனுமதி உண்டு.. அவர்கள் எடுக்கிற முடிவிற்கு பன்னீரும் எடப்பாடியும் தலையாட்டவேண்டும்.. இதில் கூட பொன்னர்,தமிழிசை போன்றவர்களுக்கு தகுதியில்லை வெளியில் குரைப்பதற்கு வைத்திருக்கும் நன்றியுள்ள பிராணிகள் அவ்வளவுதான்.. இதுகூட தெரியாமல் தம்மை தாமே அசிங்கப்படுத்திக்கொள்கிறார்கள் இந்த கோடாரிகள்... .. சூலூர் கனகராஜூன் சொல் மிகச்சரியானது.. எதற்காக நாம் பாஜகவிற்கு வளைந்து போகவேண்டும் ஆட்சியை கலைத்துவிட்டு தேர்தலை சந்திப்போம்.. மக்கள் தங்களை ஆள யாரை வேண்டுமானாலும் தேர்ந்தெடுக்கட்டும்.. #அதானே.. .. #எத்தனைகாலம்தான்_பொறுப்பார் .. தோழர். ஆலஞ்சி

Thursday, August 24, 2017

அரசு ஆடுகிறது..

இந்த ADMK "கொறடா" ...OUT OF SYLLABUS. ... என்கிறார் பேராசிரியை Sylvia Nithia Kumari. ஆம்.. அதிமுக இருஅணியாக பிரிந்துநிற்கிற போது.. அதிலும் அதிமுக கட்சியின் பெயரை சின்னத்தை பயன்படுத்த கூடாதென தேர்தல் ஆணையம் அறிவித்திருக்கிற போது 19 பேரை தகுதி நீக்கம் செய்ய சொல்லும் கொறடாவின் உத்தரவு செல்லாது .. ஒரு குழுவாக பிரிந்து வந்தால் அவர்களின் பதவியை பறிக்கும் அதிகாரம் சபாநாயகருக்கில்லை..என உச்சநீதிமன்றம் ஏற்கனவே தீர்ப்பு வழங்கியிருக்கிறது.. .. ஜெயலலிதா தேமுதிகவிலிருந்து பிரிந்து வந்தவர்களை தனி குழுவாக ஏற்றுக்கொள்ள வேண்டுமென அன்றைய சபாநாயகருக்கு பதில் அளித்து பேசியது சபை குறிப்புகளில் உள்ளதே.. எடப்பாடிக்கு எதிராக வாக்களித்த பன்னீர் கோஷ்டி மீது ஒழுங்கு நடவடிக்கை ஏன் இதுவரை எடுக்கவில்லை.. .. கர்நாடக பாஜக அரசை எதிர்த்து வாக்களித்த பாஜகவினரை அரசு கொறடா உத்தரவை ஏற்று பதவி நீக்கம் செய்ததை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில்.. நாங்கள் முதல்வர் எடியூரப்பாவிற்கெதிராக தான் வாக்களித்தோம் வேறொருவர் வருவதை எதிர்க்கவில்லை அவரின் செயல்பாடில் நம்பிக்கையில்லை என்றதை ஏற்று பதவி நீக்க உத்தரவை ரத்து செய்தது.. .. இவையெல்லாம் தினகரன் அணியினருக்கு சாதகமான விடயங்கள்.. அதுசரி.. எச்.ராசாவிற்கு அதிமுக கட்சி உள்விவகாரத்தில் என்ன வேலை.. கொறடா நீக்கம் செய்வாரென சொல்ல இவர் யார்.. பாஜக விவகாரத்தில் தினகரன் தலையிடுவதை விரும்புவார்களா நேர்மையாக ஆட்சிக்கு வரமுடியாதென்பதால் ஏன் எச்சை சோற்றை சாப்பிட ஆசைப்படுகிறார்கள்.. .. வேறு வழியில்லை இந்த அரசை கலப்பதை தவிர .. காலம் தாழ்த்தலாமே அன்றி நீண்டநாட்கள் நீடிப்பது அரிது.. இதற்கிடையில் சில ஊடகங்கள் ஸ்டாலினை முதல்வராக்க திட்டமென சொறிந்துக் கொள்கின்றன.. தேர்தலை நோக்கி நகர்த்துதலே தலையாய பணியாக கொண்டு செயல்படுகிறோம்.. மக்கள் வாய்ப்பளித்தால் திமுக ஆட்சியை கலைஞரின் வழிகாட்டுதலோடு கூடிய ஆட்சியை அமைப்போம் .. உடல்நல்ம் நன்கு தேறிவந்தால் கலைஞரின் தலைமையிலேயே அமைப்போம்.. .. அதுவரை இவர்களின் பொம்மலாட்ட கூத்தை ரசிப்போம்.. .. தோழர். ஆலஞ்சி

Wednesday, August 23, 2017

நாடோடிகள்

சிலரை பிடிக்கும் சிலரை பிடிக்காது காரணம் எதுவுமே இல்லாமல் .. ஆனால் அவர்களின் திறமையை அவர்களின் உழைப்பை இந்த சமூகத்தின் மீது கொண்டுள்ள அக்கறையை ஒருபோதும் குறைத்து மதிப்பிட முடியாது.. நம் வாழ்வில் கடந்து போகிற முகமறியாத சிலரின் நடவடிக்கைகள் நம்மை அப்படியே புரட்டி போட்டுவிடும். .. நமக்கு பிடித்தமானவரைவிட அல்லது நமக்கு அறிமுகமானாலும் பிடிக்காதவரை விட .. முகமறியா நாடோடியின் செயல் நம் வாழ்க்கையின் அர்தத்ததை உணர்த்திவிட்டு போகும்.. நம் வாழ்வின் வழிநெடுக நிறைய நாடோடிகளை கண்டுக்கொண்டுத்தானிருக்கிறோம்.. .. சில விடயங்களில் போகிற போக்கில் சொல்லிவிட்டு போய்விடுவர் ஆனால் அது நம் வாழ்வின் அர்த்தம் பொதிந்த நிகழ்வை நடத்திவிட்டு போய்விடும்.. சிலரின் மௌனமோ நம்மை அறுத்துவிடும்.. பேசாமல் பேசும் செயலில் நாம் உடைத்தே போய்விடுவோம்.. சாதாரணமாக நாம் எண்ணிக்கொண்டிருப்பவரிடம் நாம் அறிந்திறாத அறிவு குவியல் கொட்டிக்கிடக்கும்.. .. சின்ன சின்ன விசயங்களை கூட மிக நேர்த்தியாக செய்துக்காட்டுவர்.. அப்படி நிறைய பேரை நிச்சயமாக வாழ்வின் வழிநெடுக நாம் சந்தித்திருப்போம்.. வாழும் வழிநெடுக நல்லவர்கள் நிறைய இருக்கிறார்கள் .. பசியறிந்து நீராகாரம் தந்திருக்கிறார்கள்.. என் நிலையறிந்து தங்க அனுமதித்திருக்கிறார்கள்.. யாரென்றே தெரியாமல் உதவியிருக்கிறார்கள்.. .. எல்லோர் வாழ்விலும் முகம் தெரியாத சிலர் வந்து நம்மை சீர்செய்திருப்பார்கள்.. அந்த முகமறியாதோரை நாம் என்றைக்குமே மறக்க முடியாது.. .. நிறைய பேருண்டு என் வாழ்வில்.. அத்தனை #நல்லவர்கள்.. .. தோழர். ஆலஞ்சி .. படம் உதவி.. (நிஷா மன்சூர்)

அரசை கவிழ்க்க வேண்டும்

நாளுக்கு நாள் எதிர்ப்பு அதிகமாகிறது எடப்பாடி அரசின் அலட்சியபோக்கால்.. ஆட்சியை தக்கவைத்துக்கொள்வதற்கு எதையும் செய்ய துணிந்து ஒட்டுமொத்த தமிழர்களின் நலனை அடகுவைத்தேனும்.. பதவியில் இருக்கவேண்டுமென்ற முதல்வரின் ஆசை நிராசையாக போகும் காலம் கனிகிறது.. .. மின் திட்டம் தொடங்கி நீட் வரை எந்தவித எதிர்ப்புமில்லாமல் தலையாட்டி பொம்மையாய் வீட்டிருக்கிறார் .. அரசு இயந்திரத்தை வேறு யாரோ இயக்குவது கூட தெரியாமல் அல்லது தெரிந்தும் கண்டுக்கொள்ளாமல் இருக்கிறவரை முதல்வராக இருப்பது வெட்ககேடு.. பதவி என்ற ஒற்றை குறிக்கோளோடு மானம் விடுத்து மண்டியிட்டு கிடக்கிறார்..ஒட்டுமொத்த தமிழகமே வெறுக்கிற ஒருவர் முதல்வராக இருப்பது கேவலம்.. ஒரு அரசிற்கு ஆதரவை திரும்ப பெறுவதாக சொல்லியும் பெருபான்மை இழந்த அரசை இன்னமும் அனுமதிப்பது அரசியல் சாசனத்தை மீறிய செயல்.. எது செய்தாலும் ஊடகங்களோ பலமிழந்து நிற்கும் எதிர்க்கட்சிகளோ கேள்வி கேட்க போவதில்லை அப்படியே கேட்டாலும் அதற்கு பதில் சொல்லாமல் காலத்தை கடத்தும் யுக்தியை மத்திய அரசு பதவியேற்றதிலிருந்தே செய்துவருகிறது.. வெற்றிப்பெற்றவரை விலைக்கு வாங்கும் அயோக்கியதனத்திற்கு ஜனநாயகம் என பெயரிட்டு அழைப்பது படு அசிங்கம்.. .. தமிழகத்தில் எடப்பாடியை எதிர்க்கும் தினகரன் ஆதரவாளர்கள் எண்ணிக்கை உயர்கிறது.. தன் பதவி ஆசைக்காக தொண்டர்களை ஓபிஎஸ் ஏமாற்றிவிட்டார் என்கிறார் நேற்றுவரை பன்னீரோடிருந்த செம்மலை.. அமிர்ஷா.தி.மு.க என்கிறார் தனியரசு.. தீடீரென அறந்தாங்கி பாண்டிக்கு தாவுகிறது.. சொந்த சமுதாய மக்களின் விமர்சனங்களால்.. ஓ.பி.எஸ். - இ.பி.எஸ் இருவரும் பாஜக என்ற பாம்பின் நிழலில் தவளைகள் போல் நிற்கிறார்கள் என்கிறார் தமிமுன் அன்சாரி .. நாற்பதை தொடுவதாக ஊடகங்களில் செய்தி கசிகிறது ஆனாலும் கவர்னர் ஊரை காலி செய்து போய்விட்டார்.. திரும்ப அழைத்தாலும் அலுவல்களை காரணம் காட்டி இழுத்தடிப்பார்.. என்னை அரசியலுக்கு இழுக்காதீர் என்கிற கவர்னர்.. எடப்பாடி பன்னீர் கைகளை பிடித்து இணைத்தபோது தெரியவில்லை தான் கவர்னர் அரசியலுக்கு அப்பாற்ப்பட்டவனென்று.. .. ஒரே வழி நம்பிக்கையில்லா தீர்மானம்.. திமுக என்றில்லை காங்கிரஸ் கூட முன்மொழியலாம்..நீதிமன்றத்தை நாடி ஒரு கண்காணிப்பாளரை ஏற்பாடு செய்துக்கொண்டு சட்டமன்றத்தை கூட்டலாம் .. தீர்மானம் கொண்டுவர முறைப்படி அலுவலக செயலரிடம் மனு தந்தால் 15 தினங்களுக்குள் சட்டமன்றத்தை கூட்டியாக வேண்டும் இனியும் பொறுத்திருப்பதில் பலன் ஒன்றுமில்லை.. இந்த அரசு தமிழ்நாட்டை தமிழனின் கலாச்சார பண்பாடடை ..தமிழர் தம் நலனை காலம்காலமாய் காத்து வந்த சமூகநீதியை இல்லாமல் ஆக்கிவிடுவார்கள்.. .. எதிர்க்கட்சிகென்று சில பொறுப்புகள் உண்டு.. மக்களின் எண்ணவோட்டத்தை செயல்படுத்த வேண்டும்.இந்த அரசை தூக்கியெறியப்படவேண்டுமென்று ஏறக்குறைய எல்லோருமே விரும்புகிறார்கள் அதை செய்து முடிக்கவேண்டிய தலைச்சுமை நமக்குண்டு.. சதூர்யமாக காய்நகர்த்தப்படவேண்டும் இந்த கேவலமான அரசு இனி எழுந்திருக்கவே முடியாதவாறு அடித்தமர்த்தவேண்டும் .. அதற்கான பணிகள் தொடங்கப்படவேண்டும்.. .. இனி இந்த அரசு தேவையில்லை.. .. தோழர். ஆலஞ்சி

Tuesday, August 22, 2017

வைகோ...

வைகோ.. நிறைய கோபமுண்டு எங்கெல்லாம் தவறு செய்தாரென்ற பட்டியல் நீண்டது.. சிலநேரம் சமநிலை தட்டி கடும் சொற்களால் இழிச்சொல் பாடியதெல்லாம் மறக்கத்தான் முடியவில்லை.. எங்கோ உயரத்திற்கு செல்லவேண்டியவர் ..தவறான பாதையில் பயணிக்கிறாரே என்று வருத்தமும் .. வழிகேட்டில் நிற்பதை அறியாமல் போகிறாரே.. அரசியலில் இடம்தெரியாமல் போககூடுமே என்ற பதட்டமும் வந்து போகும்.. .. கீழ்தஞ்சை மாவட்டத்தில் திராவிட கழக கூட்டங்களில் இவரைப்பற்றி அதிகம் விவாதித்திருக்கிறோம் அப்போதெல்லாம் ஆசிரியர் கூட்டங்களை விட திமுகவின் கூட்டத்தில் புதுவித ஈர்ப்பை தந்திருக்கிறது.. உள்ளுர் அரசியல் தொடங்கி உலக அரசியலை அதன் விளங்கங்களை விரிவாக பேராசிரியர் போல விளக்கி பேசுவது கண்டு நாடி நரம்ரெல்லாம் சூடேறிய காலம் அது.. திமுக முன்னோடிகள் தஞ்சை பெரியார் மன்னை ஆகட்டும் .. தஞ்சையின் காவலர் கோ.சி.மணி ஆகட்டும் மூன்று மாதத்திற்கு ஒரு கூட்டமேனும் வைகோவை அழைத்து வந்துவிடுவார்கள் .. கலைஞரின் மீது அப்படியொரு விசுவாசம்..அவரை அறியாமலேயே கலைஞரின் பெரும்தொண்டாய் தான் இருந்தார்.. திடீரென மூளைச்சலவை செய்யப்பட்டு.. கள்ளத்தோணி அவரின் அரசியல் வாழ்வையே புரட்டி போட்டது.. .. நிறைய கருத்து மோதல்களை செய்திருந்தாலும் இவரின் அரசியலை கடுமையாக விமர்சனம் செய்திருந்தாலும் திராவிட இயக்க அரசியலில் இவரின் பங்கை .. எடுத்து களைந்துவிடமுடியாது இன்றைய சூழலில் இவரின் ஆதரவு திமுகவிற்கு தேவையில்லை.. இவரது ஆதரவோடுதான் வெற்றி பெற வேண்டுமென்ற நிலை இல்லையென்ற போதும்.. பாசிச எதிர்ப்பை.. வலிமைபெற செய்ய ஒரு கை கூடுதலாக வந்திருப்பது மகிழ்ச்சி தான்.. இன்றைய சூழலில் அதிமுகவை சிதைத்து பாஜக மறைமுகமாக நுழையும் நேரத்தில் கடுமையாக எதிர்க்க வைகோ போன்ற திராவிட இயக்க செயல்பாட்டாளர்களின் பங்கு அவசியமாகிறது என்பதை மறுப்பதற்கில்லை ஆனாலும் இவரது முன்பத்திய செயல்கள் நம்பிக்கை தர மறுப்பதையும் சொல்லவேண்டியிருக்கிறது.. .. நெஞ்செல்லாம் பகைக்கொண்டு நடந்தவரை.. கடும் சொல்லால் வசைமாறி பொழிந்தவரை வாசல் வரை வந்து வரவேற்று அழைத்து சென்ற பெருந்தகையாளர் #தளபதி.. கலைஞரின் பிள்ளை என்பதை உணர்த்தியிருக்கிறார்.. #உள்ளத்தால்_உயர்ந்தோர்_வீழ்வதில்லை .. இனியேனும் வைகோ நல்லதொரு அரசியலை கையில் எடுக்கட்டும் அது எதிர்ப்பாய் இருந்தாலும ஆதரவாய் இருந்தாலும் அதில் நாகரீகம் இருக்கட்டும்.. .. தோழர். ஆலஞ்சி

கேவலமானவர்களின் கூத்து

தமிழ்நாட்டின் எதிர்க்கட்சி தலைவர் தளபதி அவர்கள் கவர்னருக்கு கடிதமெழுதியிருக்கிறார் எடப்பாடியை நம்பிக்கைகோரும் தீர்மானத்தை கொண்டுவந்து நிரூபிக்க சொல்லுங்கள்..பத்தொன்பது எம்எல்ஏக்கள் ஆதரவை விலக்கி கொண்டவுடன் பெருபான்மையை இழந்துநிற்கிறது எடப்பாடி அரசு.. .. அந்த மூன்று பேர்.. அரசின் கவனத்தை மட்டுமல்ல தமிழக கவனத்தை ஈர்க்கிறார்கள்.. தனியரசு அன்சாரி கருணாஸ் இவர்கள் கையில் நிற்கிறது இவர்களின் எதிர்காலம் .. தனியரசு எடப்பாடிக்கு ஆதரவளிக்க முயற்சிகள் மேற்கொள்ளபடுகிறது மற்றவர்கள் திரிசங்கில் நல்ல பொழுதுபோகிறது ஊடகங்களுக்கு வேதனையில் சாமானியன் .. .. கவர்னர் கம்பி நீட்டுவாரென அறிந்ததுதான் காலதாமதபடுத்த குதிரைபேரத்திற்கு வழிவகைசெய்ய மும்பை பறந்துவிட்டார்.. சசிகலாவிற்கு வராதவர் பன்னீருக்காக வந்து காத்திருந்தவர் இன்னமும் நியாயமான முறையில் செயல்படுவாரென நம்பிக்கையில்லை.. இவர்களை நம்பமுடியாது புதியதாக அமைச்சர்பதவி தருவதாக சொன்னால் பின்னால் போய்விடகூடும்.. .. இனி அதிமுக என்கிற அடிமாட்டு கூட்டத்தை யார் வழிநடத்தினாலும் கடிவாளம் என்னவோ பாஜகவிடம் தான் இருக்கும் நியாயமாக நடந்துக்கொள்வாரென கவர்னரையோ அல்லது எப்போதும் இதே நிலைப்பாட்டில் தினகரன் ஆதரவாளர்கள் இருப்பார்களென்றோ நம்பமுடியாது.. பெரும்பான்மை கிடைக்கிறவரை கவர்னரும் கள்ளமௌனம் காப்பார்.. கேவலமான நிலைக்கு தமிழகத்தை தள்ளிவிட்டிருக்கிறார்கள்.. இவர்கள் அடிதடியில் ஆள்பிடிக்கும் அவசரத்தில் தமிழர்களின் எதிர்காலத்தை இல்லாதவன் ஏழைகள் .. வீட்டுப்பிள்ளைகளுக்கு மருத்துவம் எட்டாக்கனியாக்கி.. குலத்தொழிலை நோக்கி அவர்களை நகர்த்த நீட் தேர்வு சத்தமில்லாமல் அரசின் எதிர்ப்பில்லாமல் என்பதைவிட அடிமைஅரசின் ஆதரவோடு வந்துவிட்டது .. மிக கேவலமானவர்கள் கையில் நாடு .. ஜனநாயகத்தை மதிக்காதவர்கள் தெருவில் வீழ்ந்து கிடந்ததை வரலாற்றில் நிறைய கண்டிருக்கிறோம்..ஆனால் ஜனநாயகவாதிகள் என்றும் வரலாற்றில் ஜொலித்துக்கொண்டே இருப்பர்.. தமிழகத்தின் ஜனநாயகத்தின் குரல்வளையை கடித்து குதறுகிற பாசிசத்தின் அதிகார திமிர் காலம் அடித்துநொறுக்கும்.. .. #பொறுப்பதற்கில்லை.. .. தோழர். ஆலஞ்சி

Monday, August 21, 2017

கேடுக்கெட்டவர்கள்

பரம அயோக்கியர்கள்.. பதவிக்காக தலையில் கல்லை தூக்கி போட தயங்கமாட்டார்கள்.ஆரம்பம் முதலே பாஜக இவர்களை ஆட்டிவைக்கிறதென்று சொல்லி வருகிறோம் மடியில் கனத்தோடு அலைபவர்களை மத்தியில் ஆளும் அரசு வளைத்திருக்கிறது பார்பன சக்திகளுக்கு தெரியும் நேரடியாக தமிழக அரசியலில் ஆட்சி அதிகாரத்தை பெற முடியாது இவர்களை வைத்து இருக்கிற காலத்திற்குள் செய்து முடிக்கவேண்டியவைகளை கச்சியதமாக முடித்துவிடவேண்டும் அவ்வளவுதான் .. .. பன்னீர் தர்யுத்தமென்று சொல்லி திரிந்ததெல்லாம் பொய்யென்று நமக்கு தெரியும் பதவியையும் இருப்பதை காத்துக்கொள்ளவும் ஜெயலலிதா ஆன்மா கதையை அவிழ்த்துவிட்டால் .. யாரும் கேட்கமாட்டார்கள் ஜெயலலிதா எழுந்துவந்து கேட்க போவதில்லை என்ற தைரியத்தில் ஏமாற்றி வந்தார் அவரின் சுயரூபம் வெளிப்பட்டதில் குறிப்பாக யோக்கியன் என சப்பைக்கட்டியவர்கள்கூட பாஜகவின் கைப்பிள்ளையாக மாறிப்போனதை மிக மோசமான #கயவன் என்ற உண்மையை உணரந்த தருணமிது.. பதவியை பறித்ததால் யோக்கியன் வேடமிட்டவர்.. அதை தனக்கு சாதாகமாக்கிய பாஜக .. அதன் வளையில் விழுந்ததறிந்து .. தாமும் கைக்கட்டி நின்றால் பதவியை காப்பாற்றிக்கொள்ளலாமென எண்ணி எடப்பாடியும் .. எதிர்பார்க்காத வந்த பதவியை இனி எக்காலத்திலும் கனவில் கூட நினைக்கமுடியாதென்றறிந்து மோடியின் கையை காலாய் நினைத்து தலை கவிழ்த்து நின்றார் மானம் ரோசம் எல்லாம் களைந்து அம்மணமாய் நின்றாலும் பரவாயில்லை பதவி வேண்டும் என்கிற கேடுக்கெட்டவராய்.. அயோக்கியத்தனமான அரசியலை செய்து பிழைத்துக்கொண்டார்.. வண்டிக்காரனின் கயிறு விழும் திசையில் மாடு திரும்புமே அதைப்போல மோடியின் கயிற்றுக்கு ஆடுகிறார்.. கேவலமானவராய் கொங்கு மண்ணில் பிறந்த பிழையாய்.. .. சசிகலாவிற்கு தினகரனுக்கும் வேறு வழி தெரியவில்லை ஆரம்பத்தில் நடத்திய கொள்ளைகளிலிருந்து தலை உருவ முடியாமல் நிற்கிற சமயத்தில் நம்பியவர்கள் கத்தியை வீசுகிற சூழல்..எந்த திசையிலும் செல்லமுடியாமல் கிடக்கிறார்கள்.. சொற்ப எண்ணிக்கையில் இருப்பவர்களும் எப்போது வேண்டுமானாலும் கைவிரிக்கலாம்.. காரணம் பணமும் பதவியும் தருவதாக இருந்தால் பெத்தவளையே விற்றுவிட கூடிய கேடுக்கெட்டவர்கள் கூட்டம் இது.. பரம அயோக்கியர்கள் கூடாரம்.. கொள்கையாலோ அல்லது ஜெயலலிதா என்ற ஈர்ப்பினாலோ இவர்கள் கட்சியில் இருக்கவில்லை என்றாவது ஒருநாள் வாய்ப்புவரும் சம்பாதிக்க முடியுமென்ற ஒற்றை லட்சியத்திலேயே ஜெயலலிதா சசிகலா காலில் விழுந்தவர்கள்.. அதிமுகவில் கொள்கையால் ஈர்க்கப்பட்ட உண்மையான தொண்டர்கள் என்று எவருமில்லை கவர்ச்சியும் கயமையும் வார்த்தது வேறு எப்படி இருக்கும்.. .. #பிழைகள் .. .. தோழர். ஆலஞ்சி

Sunday, August 20, 2017

தளபதியை நம்புங்கள்

திமுக இன்னமும் ஏன் அமைதியாக இருக்கிறது என சில நண்பர்களின் பதிவில் பார்க்க நேர்ந்தது.. திமுக சரியாக செயல்படுவதாகவே எண்ணுகிறேன்.. சட்டமன்றத்திலும் சரி வெளியிலும் சரி மிகச்சரியான ஜனநாயக நெறிமுறைகளை பின்பற்றும் அதே நேரம் எதிரிகளை அவர்களை கொண்டே நாங்கள் தகுதியில்லாதவர்களென சொல்லவைக்கும் தந்திரத்தை கையாள்கிறது.. எப்படி. ஓ.பி.எஸ் யோக்கியரைப்போல ஊடகங்கள் சித்தரிக்க முயன்ற போது தைரியமாக ஆட்சிநடத்துங்கள் நாங்கள் இருக்கிறோம் ஆட்சியின் ஆயுள்காலத்தை பூர்த்தி செய்யலாமென்ற போது அதில் உள்ள சூட்சமத்தை வெகுசிலரே அறிந்தர் அதிமுகவின் அடிப்படை சித்தாந்தமான திமுக எதிர்ப்பை மறந்து மௌனம் காத்ததே பன்னீருக்கு வினையாகி.. பன்னீர் நீங்கள் நினைக்கிற அளவிற்கு தகுதியுடையவரல்ல என்ற நிலைக்கு வந்திருக்கிறார். .. இந்த ஆட்சிக்கு எதிராக பன்னீரையே பேசவைத்ததும் ஊழல் ஆட்சியென்று போராட்டமே நடத்த போவதாக பன்னீரை சொல்வைத்திருக்கிறது பாருங்கள் அதில்தான் வெற்றி அடங்கியிருக்கிறது.. இந்த அரசின் மீதும் .. அதிமுக தலைவர்கள் மீதும் மக்கள் வெறுப்பை காட்ட கொஞ்சம் அவகாசம் தருவது இன்றைக்கு இருவரும் இணைந்தாலும் ஒருவர் மீது மற்றொருவர் நம்பிக்கையில்லாமல் நடந்துக்கொள்வார்கள்.. .. திமுக அதிமுகவை உடைத்து ஆட்சியை பிடித்திருநிதால் மக்களின் மனங்களில் வெறுப்பையும் கசப்பையுமே பெற்றிருக்கமுடியும்..காத்திருத்தல் என்பது கொக்கின் பொறுமையைப்போல.. உறுமீன் வரும்வரை காத்திருப்பது.. இன்றைய அவலங்களை எல்லாம் மக்கள் உணர்ந்திருப்பதால் தான் அதை எதிர்க்கட்சிகள் அறிந்திருப்பதால்தான் ஸ்டாலின் முதல்வராக வருவாரென அவர்கள் வாயாலேயே சொல்லவைத்திருக்கிறது... இந்த சூழலிலும் அதிமுக எம்எல்ஏக்கள் யார் இருந்தாலும் பரவாயில்லை ஆட்சி நீடிக்கவேண்டுமென விரும்புவது இனி எந்தகாலத்திலும் நம்மால் சட்டமன்றம் செல்லமுடியாது நம் கட்சியால் ஆட்சிக்கு வரமுடியாது என்ற ஒற்றை விடயமே அமைதியாக இருக்கிறார்கள்..அவர்களை பணம் பதவி ஆசைக்காட்டி அழைத்தால் ஓடிவந்துவிடுவார்கள்.. அது திமுக மீதும் தளபதிமீதும் மக்கள் கொண்டுள்ள நம்பிக்கையில், அன்பில் கேடு விளைந்துடும் நாகரீகமான அரசியலும் நேர்மையும் தெளிவான திடமான நோக்கும் எதை எப்போது செய்யவேண்டுமென்ற அறிவும்.. நீண்டநாள் நிலைத்து நிற்கும்.. .. #தளபதியை_நம்புங்கள்_நல்லதே_நடக்கும்.. .. தோழர். ஆலஞ்சி

ஜெயலலிதா குற்றவாளி

குற்றவாளிக்கு அரசு செலவில் நினைவிடமா.. ஜெயலலிதா தண்டிக்கப்பட்ட குற்றவாளி அரசு பதவியில் இருந்துக்கொண்டே கொள்ளையடித்தாரென நிரூபணம் ஆனது .. மேல்முறையீட்டில் உச்சநீதிமன்றம் குன்ஹா தீர்ப்பை சரிசெய்து உத்தரவிட்டது அதாவது கிரிமினல் 1 ஜெயலலிதா .. அவர் உயிரோடு இருந்திருந்தால் இந்நேரம் பரப்பனஅக்ரஹார சிறையில் இருந்திருப்பார்.. முதலில் தவறென்பதை விட எப்படி அரசுக்கு தைரியம் வந்தது குற்றவாளி ஜெயலலிதா படத்தை அரசு அலுவலங்களில் பயன்படுத்திய போதே ஊடகங்களும் மக்களும் எதிர்த்திருக்கவேண்டும் .. எதிர்க்கட்சிகள் திமுகவை தவிர்த்து எதுவுமே எதிர்க்க மறுத்ததன் விளைவு இன்றைக்கு அரசு செலவில் நினைவிடம்.. இப்போதும் திமுகதான் எதிர்க்கிறது மற்ற கட்சிகளோ அல்லது ஊடகங்களோ எந்த எதிர்ப்பையும் காட்டவில்லை.. .. ஜெயலலிதா பிராமணரல்லாது இருந்திருந்தால் முன்கூட்டியே ஜாமீன் (பிணை) வழங்கியிருப்பார்களா.. விரைந்து விசாரிக்க உயர்நீதிமன்றத்தை வலியுறுத்தியிருக்குமா உச்சநீதிமன்றம்.. அதை எதிர்த்து மேல்முறையீட்டு விசாரணையில் .. தீர்ப்பு வழங்க வெகுகாலம் பிடித்ததே இதெல்லாம் அநீதி இல்லையா.. ஜெயாவிற்காக அல்ல அவர் பார்பனர் என்பதற்காக வளைந்து நின்றது நீதி.. நீதித்துறை வரலாற்றில் தீராத கரை அல்லவா.. சட்டத்திற்குமுன் அனைவரும் சமமென்று எழுத்துக்களில் படித்தால் போதுமா செயலில் மக்களிடையே நம்பிக்கையை விதைக்கவேண்டாமா.. .. ஜெயலலிதா என்ற தனிமனுஷி மீது எந்த கோபமும் இல்லை பச்சாதாபமே வருகிறது..அடங்கமறுத்த திமிரும்..ஆணவபோக்கும் தான் என்ற மமதையும் யாரும் கேள்விகேட்க ஆளில்லை என்ற தோற்றமும்.. அவரை தொடர்ந்து அழிவின் விளிம்பில் நிறுத்தியது .. அதே நேரம் அவரை சுற்றி நடக்கும் விசயங்கள் அறிந்திருந்தும் தடுக்காமல் தொடர்ந்து தவறை செய்திக்கொண்டே இருந்தார் எல்லாவற்றிக்கும் விலை உண்டு என்ற இறுமாப்பில் தவறை உணராமலே மேலும் மேலும் தப்புதப்பாய் செய்து தொலைத்தார்.. .. ஜெயலலிதா நினைவிடம் .. குற்றவாளிக்கு அரசு சார்பில் விருது விழா போல ஏற்றுக்கொள்ள முடியாதது.. நினைவு இல்லத்தில் எதை வாசகமாக எழுத முடியும் அரசு பதவியை தவறாக பயன்படுத்தி கொள்ளையடித்து மாட்டிக்கொண்ட திருடி என்றா.. இன்னும் சொல்லப்போனால் அந்த சொத்து சந்தியா பெயரில் இருக்கிறது அதன் வாரிசுகள் மறுக்கிற போது தேவையில்லாதது.. குற்றவாளி என்ற தீர்ப்பை படித்து தெரிந்துக்கொள்ள வக்கீலாக இருக்கவேண்டுமென்பதில்லை.. .. ஜெயலலிதாவின் அரசியலை அவரின் ஏகாதிபத்தியத்தை கடுமையாக எதிர்த்தபோதும் பெண் நாடாளுகிறார் என்பதால் ..அது எங்கள் கொள்கையோடு உடன்பட்டதென்பதால் மென்மையான போக்கை soft corner கொண்டிருந்தோம் அது அவரின் அரசியல்வாழ்விற்கே தவிர.. தவறிழைத்து தண்டிக்கப்பட்டவருக்கு நினைவு சின்னம் என்பது வரலாற்று பிழையாகும் அதை எதிர்ப்பது எங்கள் கடமை.. .. அடிமைகளுக்கு இதெல்லாம் புரியாமல் இல்லை அரசியல் செய்ய வேறுவழியில்லை .. ஜெயலலிதா குற்றவாளி Jayalalithaa guilty .. தோழர். ஆலஞ்சி

Saturday, August 19, 2017

தளபதி

#தளபதியார்.. .. எளிதில் எதுவும் கிடைத்துவிடாது அப்படியெனில் இன்பம் இராது.. .. நீ.. செதுக்கப்பட்டவன் ஒவ்வொரு முறையும் உன்னிடம் எதிரிகள் தோற்கின்றனர்.. .. அண்ணனை கொம்பு சீவி அழகுபார்த்து அய்யகோ.. அது நடக்காது போனதால்..வேறுவழியை கையிலெடுக்கிறார்கள். .. உன் ஒவ்வொர் அசைவும் மக்களை ஈர்க்கிறது.. எதிர்கால இயக்கத்தின் இயக்கம் நீ .. மனிதனின் வெற்றி அவன் செயல்களால் நீ.. செயல் வீரன்.. வீரனாய் .. தளபதியாய் உயர்ந்து செயல் தலைவரானாய்.. .. காலம் கடந்து காலம் கனிந்து.. கையில் தானாய் வரும். உன் நிழலில் இயக்கம் ... எப்போதும் போல் இயங்கும்.. .. உன் வாழ்வில் .. நீ பெற்றதெல்லாம்.. போராடி பெற்றது.. .. தமிழகம் உன்னை உற்று நோக்குகிறது ஆன்றோர்..அறிவில் சான்றோர்... உன்னை அரவணைக்க காத்திருக்கிறார்கள்.. .. அடிமைகளின் அறிவிலிகளின் விவரகேடை மடைமையை கண்டு மக்கள் நொந்துபோனர் கரைசேர .. உன் வரவிற்காக தமிழகமே காத்திருக்கிறார்கள் .. மாபெரும் மக்கள் சபையில் மதிப்புமிக்கோர் #மகிழ்ச்சி கொள்கிறார்கள் கொள்கை பிழைகள் உன் முன்.. குலைந்து போகிறது.. .. உன்னை வீழ்த்தநினைத்தோர்.. வீழ்ந்து போகிறார்கள்.. நீ.. எளிமையானவன்.. யதார்தமானவன்.. இயல்பானவன்.. எல்லோர்.. இதயம் கவர்ந்தவன்.. ஆனாலும் கொள்கையில்.. சுயமரியாதையில் இயக்கத்தை.. கட்டிகாப்பதில் #எஃகு_மனிதன்.. .. இன்னும் இருக்கிறது உயரம்..உனக்காக உச்சத்தை தொடும்வரை போராடு.. பெறு.. அதுவரை.. பொறு.. .. #திருமணநாள்_வாழ்த்துகள் .. #ஆகஸ்டு20_1975 .. #வாழ்த்துகள்_தளபதி .. தோழர்.ஆலஞ்சி

தளபதி... நிலம் காக்கும் வான்மழை

தளபதி.ஸ்டாலின் சிறந்த எதிர்க்கட்சி தலைவராக செயல்படுகிறார்.. வைகோ.. தா.பா... தோழர். நல்லகண்ணு... விரைவில் தமிழக முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் அவர்கள் வருவார் ஜெயலலிதா அண்ணன் மகன் தீபக் .. இப்போது தேர்தல் வந்தால் ஸ்டாலின்தான் முதல்வர்.. சீமான் .. இது ஏதோ ஒருசிலரின் குரல் அல்ல ஒட்டுமொத்த தமிழகத்தின் குரல்.. வறண்டு கிடக்கும் நிலத்திற்கு இயற்கை தரும் வான்மழை தளபதி.. .. தமிழகம் சிறந்த தலைவர்களையும் சில கோமாளிகளையும்..பார்த்திருக்கிறது ஆனால் கேவலமான கேடுகெட்ட கயவர்களை இப்போதுதான் பார்க்கிறது.. தமிழகத்தின் சாபகேடாய் ஜெயலலிதாவும் அவரது அடிமைகளும் இன்றைய இழிநிலைக்கு காரணமாகி இருக்கிறார்கள் நாட்டில் என்ன நடக்கிறதென்றே தெரியாமல் இவர்கள் கூத்து நம்மை மற்றவர்கள் முன் கேலிப்பொருளாக்கி இருக்கிறது.. மேகதாதில் அணை கட்ட மறுப்பேதும் தெரிவிக்காமல் மௌனமாய் இருக்கிறார்களே இது இந்த மக்களுக்கு செய்யும் துரோகம் இல்லையா.. நீதிமன்றத்தை நம்பி வாக்குறுதிகள் அளிப்பது தற்கொலைக்கு சமமென தெரியாதா.. தமிழகத்தை இனி வறண்ட பிரதேசமாக வாழ தகுதியற்ற நிலமாக மாற்றாமல் விடமாட்டார்களோ.. இவர்களுக்கு பதவியை பங்கிடுவதில் அதற்காக ஆசைகொண்டு அலைந்து திரிவதில்.. நாளுக்குநாள் அக்கறை கூடுகிறதே தவிர மக்களைப்பற்றியோ மாநில நலன் பற்றியோ துளியும் கவலையில்லை.. அம்மா ஆட்சியை காக்க போராடுவதாக பொய் பேசி திரியும் இவர்கள் ஜெயலலிதா எதிர்த்த மின்திட்டத்தையோ நீட் தேர்வையோ சத்தமில்லாமல் ஆதரவு தந்து ஜெயாவிற்கு துரோகம் செய்கிறார்கள்.. இவர்களுக்கு பதவி வேண்டும் அதற்கு எவன் காலையும் பிடிப்பார்கள் .. .. இன்றைய சூழலில் தமிழகத்தின் ஏக நம்பிக்கையாக இருப்பது #தளபதியார் மட்டுமே வேறு வழியே இல்லை என்றறிந்துதான் எதிர்த்து குரல் கொடுப்போர் கூட உண்மையை ஒப்புக்கொள்கிறார்கள்.. திருமா .. வைகோ தா.பா என்று பட்டியல் நீள்கிறது தளபதியாரின் களப்பணியும் எந்தவொரு செயலிலும் உள்ள நாகரீக செயல்பாடும் எந்த நிலையிலும் குறுக்குவழியை கடைப்பிடிக்காத நேர்மையும்.. கடும் உழைப்பும் வெகுமக்களின் விருப்பமுமாய் தளபதியார் மிளிர்கிறார்.. தலைவனுக்குரிய நிதானம், மனஉறுதி, எல்லோரையும் அரவணைக்கும் பாங்கு.. அமைதி அதே நேரம் விவேகத்தோடு வேகமாய் செயல்பாடு,.. மக்களின் முடிவிற்காக காத்திருக்கும் பொறுமை .. தளபதியாரை உயரத்திற்கு கொண்டுபோகிறது.. எதிரிகள் வேறுவழியின்றி ஒப்புக்கொள்கிறார்கள்.. சிலர் மன புழுக்கத்தில் ஏதேதோ உளறிக்கொண்டிருக்கலாம் அவையெல்லாம் அவர்களின் இயலாமையை காட்டுகிறதே தவிர வேறில்லை.. .. யதார்த்தத்தை அறிந்தவர்கள் உண்மையை சொல்கிறார்கள் .. கனவு ஆசையில் மிதப்பவர்கள் எரிச்சலில் வாய்க்குவந்ததை கொட்டி தீர்க்கிறார்கள் அவ்வளவுதான்.. .. ஆம்.. வறண்டு கிடக்கும் தமிழ் நிலத்திற்கு இயற்கை தந்த வான் மழை தளபதி.. .. தோழர். ஆலஞ்சி

Friday, August 18, 2017

ரிங்மாஸ்டர்

ரிங்மாஸ்டர்..ringmaster.. அதிமுகவை பொறுத்தவரை ரிங்மாஸ்டர் இல்லாத சர்க்கஸ் கூடாரம் போல ஆகிவிட்டது.. அதிமுக அரசியல் கட்சியாகவோ அல்லது ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை உள்ள இயக்கமாகவோ இருந்ததில்லை எப்போதும் அது தனிநபரின் கட்டுபாட்டில் மட்டுமே இருந்திருக்கிறது. இப்போது அதன் பாதிப்பை உணர தொடங்கியிருக்கிறது.. .. எம்ஜிஆர் என்ற ரிங்மாஸ்டருக்கு பிறகு ஜெயலலிதா இவர்களை கட்டுபடுத்தி வைத்திருந்தார் அவரின் சொல்லுக்கு ஆடுகிறவர்களாக இருந்தார்கள் .. ஜெயா மறைவிற்கு பிறகு ஆட்சி செய்யும் அவகாசம் நீண்ட நாட்கள் இருக்கிறதென்பதால் இவர்களுக்குள் அதிகார சண்டையும் யாரும் யாரையும் கட்டுப்படுத்த போவதில்லை என்கிற நிலையும் இவர்களை ஆடவைத்திருக்கிறது.. இன்று பேசுகிற ஜெயகுமார் உட்பட அன்று ஜெயலலிதாவின் கடைக்கண் பார்வைக்காக போலீஸ் வளையத்திற்கு பின்னால் நின்று கும்பிட்ட காட்சி பரிதாபகரமான நிலை என் கண்முன் வந்து போகிறது.. இது ஒரு உதாரணம் தான்.. எல்லோருமே சசிகலாவின் பார்வைபட்டு விமோசனம் அடைய மாட்டோமா என்றிருந்தவர்கள் தான்.. .. இன்றைய அதிமுகவை என்னதான் பாஜக இயக்கினாலும் இங்கே இவர்களை கட்டுபடுத்தி வைக்க ஒரு ரிங்மாஸ்டர் இல்லாமல் போனது வரும் காலங்களில் இவர்களும் கட்சியும் இருக்குமிடம் தெரியாமல் போகும்.. ஓபிஎஸ்ஸோ.. எடப்பாடியோ இவர்களை கட்டுப்படுத்திவைக்கும் சக்தியோ திறமையோ இல்லை கட்சியை வழிநடத்தும் திறனோ கொஞ்சம் கூட இல்லை.. இவர்கள் வேறொரு கட்சியின் தலைமைக்கு கட்டுபடுகிற கேவலமான செயலை செய்கிறார்கள் என்று கூட அறியாமல் டெல்லிக்கு படையெடுக்கிறார்கள்.. அவர்கள் சொல்வதை கேட்டு அதன்படி நடக்குகிறார்கள் இவர்களுக்கு கட்சியல்ல முக்கியம் மாறாக இருக்கிற வரை பதவி வேண்டும் இனி எந்தகாலத்திலும் இவர்களால் உள்ளுர் கவுன்சிலர் கூட ஆகமுடியாதென்பது அவர்களுக்கே தெரியும் .. இன்றைய சூழலில் அதிமுகவை வழிநடத்த ஒரு ரிங்மாஸ்டர் தேவைபடுகிறார்.. அது மூவரில் ஓபிஎஸ்ஸோ எடப்பாடியோ இல்லை.. சசிகலா போன்றவர்கள் தான் இவர்களுக்கு சரிப்படும் கயிறு கட்டி கயிற்றுக்கு வெளியே கும்பிடுபோட்டு நிற்க வைக்கும் அதிகார திமிர்தான் இவர்களுக்கு தேவை இதை ஆளுமையென்றோ திமிர் என்றோ எடுத்துக்கொள்ளுங்கள்..ஆனால் சசிகலா போன்றவர்தான் இந்த அடிமை கூட்டத்திற்கு தேவை.. சரியானவரா தவறானவரா என்பதை விட இந்த சுயமரியாதையற்ற காசும் பதவியும் கிடைத்தால் போதுமென்றலைகிற இந்த சந்தர்ப்பவாத கூட்டத்திற்கு.. கொள்கையோ தொலைநோக்கோ... இல்லாத அதிமுக போன்ற கட்சிக்கு எம்ஜிஆர் ஜெயலலிதா சசிகலா போன்றோர்தான் தேவை.. இல்லையெனில் எம்ஜிஆர் கண்ட கட்சிக்கு இரங்கல்பா எழுதவேண்டிவரும் .. அதிமுக கொள்கையால் உருவானகட்சியல்ல குரோதத்தால் உருவானது.. #சுயநலமிகள். .. தோழர். ஆலஞ்சி

Wednesday, August 16, 2017

மாறன் திருமா

இன்று இருவர்களின் பிறந்தநாள் மாறன் திருமா.. .. திராவிட அரசியலில் மிகப்பெரிய பங்களிப்பை செய்தவர் மாறன் திமுகவின் இயக்கசெயல்பாட்டில் மிக முக்கிய பங்கு வகித்தவர் .. அண்ணா முதல்வரான பிறகு அந்த இடத்தை (நாடாளுமன்றஉறுப்பினர்) நிரப்ப மாறனை தான் தேர்வு செய்தார்.. ராஜாஜியும் காயிதே மில்லத்தும் தான் இவரை முன்மொழிந்தார்கள்.. நாடாளுமன்றத்தில் திமுகவின் குரல் ஓங்கி ஒலிக்கவும் முறைப்படுத்தவும் காரணமானவர்.. சிறந்த படிப்பாளி பன்முகதிறமையாளர் இவர் இயக்கிய மறக்கமுடியுமா திரைப்படம் மிகப்பெரியளவில் பேசப்பட்டது.. மிசாவில் சிறையிலிருந்த போது திராவிட இயக்கவரலாறு என்ற சிறப்புமிக்க வரலாற்றுநூலை எழுதினார்.. கலைஞரின் மனசாட்சியென அறியப்பட்டவர்.. .. திருமா ஒடுக்கப்பட்ட மக்களின் பிரதிநிதியாக போர்வாளாக வலம் வந்தாலும் முதலில் இவர் இருந்ததென்னவோ திமுகவில் தான்.. ஒரு முறை சட்டமன்றத்தேர்தலில் போட்டியிட விண்ணப்பித்திருந்தார். நேர்காணலில் பேராசிரியர் பெருந்தகை என்ன செஞ்சுகிட்டு இருக்கே என்ற போது லா படிக்கிறேன் என்றார் முதல்ல படி பிறகு பார்க்கலாமென்றார்.. அப்போது சென்றவர் தான் தன் சமுதாயமக்களின் நலனுக்காக ஏறக்குறைய இருபத்தைந்து ஆண்டுகளாக தொடர்ந்து போராடி வருகிறார் .. .. நிறைய விமர்சனங்கள் இருவரின் மீதும் உண்டு மாறனின் சில தவறான முடிவுகளால் பாசிச சக்திகளோடு கைகோர்க்க, சில அருவறுப்புகளை ஆட்சியில் அமர்த்த வேண்டியிருந்தது .. சுப்ரமணி அய்யர் மகள் மல்லிகாவை மணந்தும் தன் இருமகன்களுக்கு குடகிலிருந்து காவேரியையும் தி இந்து விலிருந்து ப்ரியாவையும் கொண்டுவந்தாலும் திராவிட கொள்கைகளில் சமூக சமதர்ம கோட்பாடுகளில் கடைசிவரை இருந்தார் திராவிட சிந்தனையோடு செயல்பட்டார் இவரின் சமூக பங்களிப்பும் புறந்தள்ளிவிட்டு திராவிட வரலாற்றை எழுத முடியாது.. .. திருமா ஆரம்பகாலங்களில் இருந்த திடம் இப்போதெல்லாம் இல்லை நிறைய சமசரங்களை செய்துக்கொள்கிறார்.. சிலரோடு சேர்ந்து சில தவறாக முடிவுகளை அவசரகதியில் எடுக்கிறார்.. இன்றைய தமிழக அவலங்களுக்கு காரணியாக செயல்பட்டதும் மீண்டு வர முயற்சிக்கிற போது அது இயலாமல் போகிறது அடங்கமறு அத்துமீறு எல்லாம் போய் அடக்கிவாசிக்க வேண்டிய நிலைக்கு ஆளாகி இருப்பதும் கவலையான விடயம்.. மீண்டு திரும்பவும் கம்பீரத்தோடு வலம் வர முயற்சிக்கிறார்.. நன்று.. ஆனாலும் கால்நூற்றாண்டு தமிழக அரசியலில் சில முக்கிய நிகழ்வுகளுக்கு காரணமாக இருந்தவர் இவரை மறுத்தும் தமிழக அரசியல் இல்லை.. .. இருவருக்கும் இன்று பிறந்தநாள்.. மாறனை நினைவுகூறுவோம் திருமாவை வாழ்த்துவோம்.. #இன்னும்_உயரங்கள்இருக்கிறது_திருமா… .. தோழர். ஆலஞ்சி

கலைஞர்.. நல்லதோர்வீணை

சுதந்திர இந்தியாவின் 100 சிற்பிகள் வரிசையில் 10 வது இடத்தில் #கலைஞர் முன்னோடி திட்டங்களின் நாயகன் .. கலைஞர் கருணாநிதி இது ஒரு சாதாரண பெயரில்லை ஒரு சமூகத்தின் சாட்சி.. மிக நுணுக்கமாக கலைஞரை படித்தால் அவரின் திட்டங்கள் தமிழகம் தாண்டி இந்தியாவிற்கே வழிகாட்டும்.. மனிதனை மனிதனே இழுப்பதா என 70 களிலேயே யோசிக்கமுடிந்தது பொதுவுடமை முற்போக்கு பேசும் கம்யூனிஸ ஆட்சி செய்த வங்கத்தில் கூட இயலாததாய் இருந்தது .. எந்தவொரு திட்டமும் கவர்ச்சியை மைய்யபடுத்தி இல்லாமல் மக்களின் நலனை முன்னில் கொண்டாய் இருந்தது.. விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் கூட பொருளாதாரத்தைவிட தமிழகம் தண்ணீருக்காக பிற மாநிலங்களை நம்பி இருக்கிற நிலையை கருத்தில் கொண்டு இருந்தது.. விவசாயிகளின் நலன் கருதி என்பதைவிட வறுமை சாவை குறைப்பதற்கு உதவியது.. .. நவீன இந்தியா கட்டமைப்பதில் இளைஞர்களின் பங்கு அவசியம் என்பதும் குறிப்பாக இந்திய தேசம் கிராமங்களை சார்ந்திருக்கிறதென்ற உண்மையை உணர்ந்ததால்தான் கல்வியில் மிகவும் பின்தங்குகிற நிலையை மாற்ற கிராமபுற மாணவர்களுக்கு இடஒதுக்கீட்டில் முன்னுரிமை வழங்கியதும் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் அவர்களை உயர்த்திவிட ஆட்சியில் இருந்தபோதெல்லாம் முனைப்புகாட்டினார்.. முதல் பட்டதாரிகளுக்கு இலவசகல்வி என்றும் பெண்கள் கல்வியின் அவசியத்தை உணர்ந்து அவர்களையும் உள்ளடக்கிய கல்வியே சமுதாயத்தை மேம்படுத்துமென செயல்பட்டார் பிற மாநிலங்களை விட மகளிருக்கு கல்வியில் முன்னுரிமை தந்தது தமிழகம் தான்.. .. தேசம் மேம்படவேண்டுமெனில் ஒடுக்கப்பட்டவர்களை உயரத்திற்கு கொண்டு வந்து அவர்களுக்கு சமமானதொரு நீதியை வழங்கிடவேண்டும்.. ஒடுக்கப்பட்ட சமூகத்தவர்களாலேயே ஒடுக்கப்பட்ட அருந்ததியினரை உயர கொண்டுவர உள் ஒதுக்கீட்டை கொண்டு .. மலத்தை தலையிலும் கையிலும் அள்ளுவோரை உயரத்தில் உயர்த்திட உள்ஒதுக்கீட்டை என் தலையில் தூக்கி ஆடுகிறேன் என்றார்.. கலைஞரின் உள்ஒதுக்கீடுதான் அருந்ததியினரை மருத்துவம் வரை கொண்டுவந்தது முதன்முதலில் பெண் மருத்துவரை அருந்தியர் இன சமூகம் கண்டது.. .. சொல்லிக்கொண்டே போகலாம் ஆயிரம் பக்கங்கள் கொண்ட புத்தகங்கள்.. பாகம் 1 பாகம் 2 ...என எழுதிக்கொண்டே இருக்கவேண்டும்.. .. விடுதலை இந்தியாவில் மிக சிறந்த தலைவர்களுள் ஒருவர் .. நிறைய விமர்சனங்கள் இவர்மீது உண்டு அதையெல்லாம் கடந்து இன்னமும் பேசபடுகிறவராக இருக்கிறார் இந்திய அரசியலில் சில நாகரீக கோமாளிகள் வந்து நாட்டை கெடுத்துவிட்டு போகும் போதும் மீண்டு உயிர்தெழ இவரை போன்ற பண்பட்ட அரசியல் மேதைகளின் வழிகாட்டுதலும் இதுவரை வழிகாட்டிய பாதையும் தேசத்தை சமன்படுத்திக்கொண்டிருக்கிறது.. இப்போது நாடு கிறுக்கர்களின் கையில் சிக்கி சிதைகிற போதும்.. இன்னமும் நமக்கு கலைஞர் போன்றோரின் வழிகாட்டுதலும் நடந்துகாட்டிய வழித்தடமும் நமக்கு நன்மை பயக்கும் என்ற நம்பிக்கையை தருகிறது.. #நல்லதோர்வீணை .. #கலைஞர்_காலம்தந்த_புதையல் #TheGreat_Leader_of_India .. தோழர். ஆலஞ்சி

Tuesday, August 15, 2017

தளபதி..

தேர்தல் நடத்தினால் 1000 கோடி செலவாகும் முதல்வராக விரும்புகிற ஸ்டாலின் புரிந்துக்கொள்ளவேண்டும்.. ராயபுரம் ஜெயகுமார்.. .. அவரை அறியாமலேயே ஒரு உண்மையை ஒப்புக்கொண்டிருக்கிறார்.. தேர்தல் வந்தால் ஸ்டாலின் தான் முதல்வர் என்பது எல்லோருக்கும் தெரிந்ததுதான் அதை தடுக்க சிலர் ஜோசியத்தை சொல்லி குழப்புகிறார்கள் சிலர் காழ்ப்புணர்ச்சியால் வாய்க்குவந்ததை சொல்லி தங்களுக்குள் திருப்திப்பட்டுக்கொள்கிறார்கள் .. உண்மை என்னவோ மக்கள் இந்த அதிமுக அடிமைகளை துரத்த தயாராக இருப்பது உள்ளங்கை நெல்லிக்காய்.. .. அதிமுகவை மிக அழகாக சிதைத்து அந்த இடத்தை பிடித்துக்கொள்ளலாமென்ற பாசிச பாஜகவின் எண்ணத்தில் தொடர்ந்து தொய்வு ஏற்படுவதன் காரணம் பாவம் அவர்களுக்கு புரியவில்லை எம்ஜிஆரை பாசிச சக்திகள் திமுகவை உடைத்து வெளியே கொண்டுவந்த போதுகூட அவர்களின் அஜந்தாவை செயல்படுத்த முடியவில்லை.. அதன் பின் பாப்பாத்தி ஜெயலலிதாவை உள்ளே திணித்தபோதும் எல்லையை மீறி செயல்படமுடியவில்லை.. காரணம் தமிழகம் பெருங்கிழவனின் பெருந்தொண்டால் இங்கே ஆரியமோ பாசிசமோ மதவெறியோ ஜாதிய பார்வையோ ஒரு குறிப்பிட்டஅளவை தாண்டி பேசவோ செயல்படவோ முடியாமல் போகும். அந்தளவிற்கு இந்த சமுதாயத்தை செப்பனிட்டு வைத்துவிட்டுபோனான் எங்கள் #பேராசான்.. .. திமுகவை தொடர்ந்து விமர்சனம் செய்தும் ஊழல் சொத்து என்றெல்லாம் அடுக்கடுக்காய் விமர்சனம் செய்தும் மீண்டும் எழுந்துநிற்கிறதே ஏன் என்று தெரியுமா.. இவர்கள் சொல்லும் குற்றசாட்டுகள் இதுவரை நிரூபிக்கவே முடியாமல் நீர்த்துபோய்க்கொண்டே இருக்கிறது எந்த குற்றசாட்டை சொன்னாலும் அது ஆரம்பகட்டத்தில் ஊடகங்கள் ஊதி பெரிதாக்கினாலும் கடைசியில் காற்றுப்போன பலூனைப்போல பயனற்றுபோய் பார்க்கிறோம் திமுக கொள்கையால் இந்த சமுதாய மக்களின் செல்வாக்கால் அவர்தம் மனதின் அடித்தளத்தில் எப்போதும் செயலாற்றுகிற நாம் தூக்கியெறிந்தாலும் தோளோடு அணைத்து நின்றாலும் தொடர்ந்து மக்கள்சேவையில் பணிசெய்து கிடப்பதே அதன் நிலைநிறுப்பிற்கு காரணம்.. .. அதனால் எதிரிகள் கூட சிலநேரம் அவர்களை அறியாமலேயே உண்மையை சொல்லிவிட்டு போகிறார்கள் .. தளபதி தமிழக மக்களின் நம்பிக்கை மட்டுமல்ல அவர்களின் ஆசையும் கூட இந்த கேடுகெட்டவர்களை விரட்டியடிக்க அவர்கள் கையில் கிடத்திருக்கும் ஒரே ஆயுதம்..எப்போதும் உழைப்பை மட்டுமே நம்புகிற .. எல்லோருக்கும் பிடித்தமான எல்லோரும் விரும்புகிற ..எதிரியும் மயங்கி நிற்கிற பேராற்றல் கொண்டவர் எங்கள்தளபதி.. இல்லை..மக்களின் தளபதி.. .. காத்திருக்கிறது தமிழகம். #தளபதி_எல்லோர்க்கும்_பெய்யும்_மழை.. .. தோழர். ஆலஞ்சி

விடுதலை உரை

வாய்கூசாம பொய் பேசுறத கேட்கவே August 15& January 26th விடுமுறை நாட்களாக அறிவிக்கபடுகிறது.. பேராசிரியை Sylvia Nithia Kumari... .. பிரதம மந்திரி மாதிரி பேசுங்கள் என்றால் மந்திரவாதி மாதிரி பேசுகிறார் ஊழல்வாதிகள் கண்டு ஓடுகிறார்கள் என்கிறார்.. வியாபகம் ஊழல் சத்திஷ்கர் அரிசி ஊழல் என சந்தி சிரிக்கிறதே என்றால் மவுனம்.. வேறொரு கட்சியில் சார்பில் நின்று வெற்றிபெற்றவரை விலைக்கு வாங்குகிறீரே என்றால் பதிலை காணோம்.. மாட்டுக்கு ஆம்புலன்ஸ் வசதி செய்து கொடுத்தீரே மனிதனை பிணமாய் சுமந்து தெருக்களில் நடக்கிறானே அது தேசிய அசிங்கமில்லாயா என கேட்டால் பதில் இல்லை.. அரிசி ஊழல் 2 லட்சத்து 50 ஆயிரம் கோடி எங்கே .. பண மதிப்பிழப்பு செய்து மக்களை சாகடித்தீரே இப்போது அதனால் ஐந்து லட்சம் கோடி இழப்பென்கிறார்களே.. கருப்புபணத்தை மீட்பதாக சொல்லி கருப்புபண முதலாளிகளுக்கு சிவப்புகம்பளம் விரிப்பதேன்.. .. வாயை திறந்தால் பொய்யை தவிர ஏதுவும் பேசுவதில்லை என்ற சபதமோ.. இதற்கு முன் மூன்று சுதந்திர தின உரையை ..மோடி அவர்களே திருப்ப கேட்டுபாருங்கள் எதையாவது சாதித்திருக்கிறீர்களா நிறைவேற்றியிருக்கிறீர்களா.. 2018 சாதாரணமாக விடியாதென்கிறீர்.. ஏன் மிகப்பெரிய திட்டம் எதாவது மக்களை தெருவில் அலையவிட உயிரை கையில் பிடித்துக்கொண்டு ஓட வைக்கபோகிறீர்களா... .. நாடி நரம்பெல்லாம் பொய்யில் ஊறியவரிடமிருந்துதான் இப்படி பொய் பேசமுடியும்.. இந்திய ராணுவம் அந்நியநாட்டில் பீரங்கி பழுதாகி நின்றதே வெட்கபடவேண்டாமா.. 10 நாட்களுக்கு வெடிபொருள் இல்லை அதுவும் பழைய கலாவதிகட்டத்தில் இருக்கிறது ..என்ற அறிக்கைக்கு பதிலே சொல்லவில்லையே.. 63 நாடுகள் பயணம்.. 1400 கோடி செலவில் சுற்றி வந்தீரே.. என்ன சாதித்தீர்கள் அதை அறிக்கையாக மக்கள் மன்றத்தில் நாடாளுமன்ற அவைகளில் சொன்னதுண்டா.. கஷ்மீருக்கு வந்தால் என்ன செய்ய முடியுமென்கிறானே சீனாகாரன் .. என்ன சொல்லபோகிறீர்.. இதற்கெல்லாம் பதில் இல்லை.. .. மாட்டை காரணம் காட்டி மனிதஉயிரை குடிக்கிறார்கள்.. பச்சிளந்தளிர்கள் சுவாசகாற்றில்லாமல் சாகிறது.. தலித் பெண்களை நிர்வாணமாக்கி தெருக்களில் ஓடவிடுகிறான்.. ஆனால் தலித்தை தாக்குகிறவர்கள் என்னை முதலில் தாக்குங்களென வசனம் எப்படி முடிகிறது.. மாட்டிறைச்சிக்காக மனிதர்கள் தாக்கப்படுவதை ஏற்கமுடியாதென ஏகவசனம் பேசமுடிகிறது... எல்லாம் வாய்சவடால்.. .. ஐந்தாண்டுகளில் புதிய இந்தியாவை உருவாக்க 125 கோடிமக்களும் சேர்ந்து உழைக்கவேண்டும் சரி.. முதலில் காவி வேடம் கட்டினால் எதுவும் செய்யலாம் யாரும் எதுவும் கேட்க மாட்டார்கள் என்ற எண்ணத்தை மாற்றி முதலில் கலவரத்தில் ஈடுபடுகிற.. கலவரத்தை தூண்டுகிற கயவர்களை தண்டிக்க உத்தரவிடுங்கள்.. தானாகவே இந்தியா ஒளிரும்.. .. இதுவரை இந்தியா கண்ட பிரதமர்களிலேயே கூச்சமே இல்லாமல் பொய் பேசும் பிரதமர் மோடிதான்.. #வாய்ச்சொல்லில்_வீரரடி… .. தோழர். ஆலஞ்சி

Monday, August 14, 2017

யார் அதிமுக..

பாஜக கட்டபஞ்சாயத்து செய்கிறதென்ற தளபதியின் பேச்சில் எவ்வளவு உண்மை.. அதிமுகவை பிளவுபடுத்தி ஓபிஎஸ்ஸை முன்னிலைப்படுத்த எண்ணிய எண்ணம் நிறைவேறாமல்.. எடப்பாடியை வைத்து கச்சியதாமாய் காய் நகர்த்த.. அந்த எடப்பாடியும் மோடியில் காலில் விழுந்து கிடந்ததில் பெருமகழ்ச்சி கொண்ட பெரியண்ணன்.. இவர்களை வைத்தே ஆட்சி நடத்தலாமென்றிருந்த எண்ணுகையில்.. தினகரன் புதியதொரு அணியாய் உருவெடுக்க .. எங்கே கைவிட்டுபோகுமோ என அஞ்சி பன்னீரையும் எடப்பாடியையும் சேர்ந்திருக்க உத்தரவிட்டிருக்கிறார்.. மோடி.. .. ஆனால் மேலூரில் பிரமாண்டமான கூட்டத்தை காட்டி தினகரன் நான் தான் அதிமுக என்கிறார்..அதுதான் உண்மையும் கூட.. எடப்பாடியோ பன்னீரோ.. யாருக்காவது அடிமையாக இருந்தே பழக்கப்பட்டவர்கள்.. வேறொருவர் இசைக்கு ஆடுகிறவர்கள் சுயமாக எழுந்துநிற்க கூட தைரியமோ பலமோ இல்லாதவர்கள் ..ஆனால் அதிகாரம் இருப்பதால் இவர்கள் ஆடுகிறார்கள் .. இவர்களின் ஆட்டம் பேட்டரி பவர் இருக்கிற வரைதான்.. .. திமுகவிற்கு எதிரான ஒரு கட்சியென்றால் அது அதிமுகதான் அதுவும் தினகரன் தலைமையில் இயங்குகிற கட்சிதான்.. மற்றவர்கள் எதற்கும் உதவாத அடிமாடுகள்.. அவர்களை வைத்து பின்வாசல் வழியாக நுழைய நினைக்கும் பாஜகவை ஆரம்பத்திலேயே தலையை திருவி தூக்கியெறிய திமுகவிற்கு எதிரியாக ஒருவர் வேண்டும் அந்த இடத்தை பாஜகவாலோ.. பிற உதிரிகளாலோ முடியாது .. அது நிச்சயமாக தினகரனால் மட்டுமே முடியும்.. எங்களுக்கும் பலமான எதிரிதான் தேவை.. எதற்கும் உதவாதவர்களோடு மோதுவது கூட இழுக்கு.. எங்களுக்கு எதிராக நிற்க கூட ஒரு தகுதிவேண்டும்.. அது நிச்சயமாக பன்னீருக்கோ பழநிசாமிக்கோ..பாஜகவிற்கோ இல்லை.. .. எஜமான் தூக்கியெறியும் கறித்துண்டிற்காக குரைக்கிறவர்களாக தெரிகிறார்கள்.. எஜமானிடம் மண்டியிட்டு அவர்தம் கட்டளையை நிறைவேற்ற போட்டிபோடும் அடிமைகளைவிட.. அளவிற்கு மீறி ஆடாத .. தினகரன் தேவலை.. இப்போது மேலூரில் கூடிய கூட்டம் அதிமுக என்றால் யார் என்று கட்சிக்காரன் தீர்மானித்திருப்பதை காட்டுகிறது.. நல்லது.. காட்டிகொடுக்கும் நயவஞ்சகன் பன்னீரையோ.. அல்லது குழிப்பறித்த பழநிசாமியையோ அதிமுககாரன் விரும்பவில்லை என்ற செய்தி பாஜக பெரியண்ணன்களுக்கு புளியை கரைத்திருக்கும்.. எது எப்படியோ ஆண்டிகாவி ஓகேதான்.. .. #எங்களுக்கு_எதிரியாய்இருக்ககூட_பாஜகவிற்குதகுதியில்லை… .. தோழர். ஆலஞ்சி

Sunday, August 13, 2017

காபீல்கான்

ஆக்சிஜனே இருந்திருந்தாலும் பத்துக் குழந்தைகளை மட்டுமே காப்பாற்றியிருக்க முடியுமென்றும் மிச்ச ஐம்பது குழந்தைகளும் ஆக்சிஜன் இருந்திருந்தாலும் செத்துதான் போயிருப்பார்கள் என்று திடீர் சமுக ஆர்வலர் சுமந்த் ஸ்ரீராம் சொல்கிறார்.. செத்தது ஸ்ரீராம் குழந்தை அல்ல அதனால் எதுவேண்டுமானாலும் பேசலாம்.. உங்கள் குழந்தை செத்திருந்தாலும் நாங்கள் அழுவோம் ராம்.. .. ஆக்சிஜன் இருந்திருந்தால் கூட ஒரு சில குழந்தையைதான் காப்பாற்றியிருக்க முடியும் என்றாலும் ஒவ்வொரு குழந்தையும் முக்கியமில்லையா .. மாட்டுக்காக மனிதனை காவுகேட்கிற கூட்டத்திடம் வேறெதை பார்க்கமுடியும்.. .. கெட்டவார்த்தையில் திட்டவேண்டும் என தோணியது.. சுமந்த் ராம் போன்றவர்கள் பாஜக ஆட்சிக்கு வந்தபிறகு பேசும் திமிரான சொற்கள் நம்மை காயபடுத்துவதை விட அவர்களை தோலுரித்து காட்டுகிறது..குறைந்தபட்சம் வருதத்தை கூட அல்லது கண்டனத்தை பதிவு செய்திருக்கவேண்டாமா.. செத்த குழந்தைகள் மூளை அலர்ஜியால் செத்ததாக சொல்கிற முதல்வர் யோகி தார்மீக பொறுப்பை உணராமல் தப்பிக்க நினைக்கிறார்.. .. உ.பி.யில் துரிதமாக செயல்பட்டு எண்ணற்ற பச்சிளம் குழந்தைகளின் உயிரை காப்பாற்றிய டாக்டர் காபீல் கான்... ஆக்ஸிஜன் வினியோகித்து வந்த தனியார் நிறுவனம் பணம் தராததால் கடந்த 4-ம் தேதி முதல் ஆக்சிஜன் வினியோகத்தை நிறுத்தியது. டாக்டர் காபீல் ஆக்ஸிஜன் சிலிண்டர் நிறுவனத்திடம் பேசியும் பலனில்லை.. துரிதமாக செயல்பட்டு தன்னுடன் உதவியாளர்களை தனது காரில் அழைத்துக் கொண்டு தன்னுடைய நண்பர் நடத்தும் மருத்துவமனைக்கு சென்று அங்கிருந்து 3 ஆக்ஸிஜன் சிலிண்டர்களை கடனாக பெற்று உடனடியாக மருத்துவமனை திரும்பி உள்ளார்.. 3 ஆக்ஸிஜன் சிலிண்டர்கள் குறைந்த நேரம் மட்டுமே செயல்படும் என்ற நிலையில், மீண்டும் தனது காரை எடுத்துக் கொண்டு தனக்கு தெரிந்த மருத்துவமனைகள் மூலம் 12 ஆக்ஸிஜன் சிலிண்டர்களை சேகரித்து மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். சிலர் பணம் தந்தால் தருவதாக கூறவே பணத்தை தந்து பெற்று குழந்தைகள் உயிரை காப்பாற்றியிருக்கிறார்.. .. முதல்வர் யோகி பொய் சொல்கிறாரென்று டாக்டரின் மொழியும் செயலும் உணர்த்துகிறது.. யோகியை பாஜகவை காப்பாற்ற ராம் போன்ற மதம் தலைக்கேறிய மாடுகளை (இவனையெல்லாம் மனிதன் என சொல்வதே மானிடத்திற்கு இழுக்கு) மருத்துமனையில் 60 குழந்தைகள் இறப்பது சகஜம் தான் என சொல்ல வைக்கிறது.. இவர்களை போன்றோரை சமூக ஆர்வலரென சொல்லாதீர்கள்.. ஊடக அறம் பொய்யாய் போகும்.. .. #மனிதம்_இருக்கிறது_காபீல்கான்_வடிவில்.. #நல்லாஇரு_சாமி…… .. தோழர். ஆலஞ்சி

Saturday, August 12, 2017

மாடாய் பிறந்திடு மானிடா..

என் தேசம் புண்ணிய தேசமென்றார் அய்யகோ.. பாவிகளே.. பச்சிளங்குறுத்துகள் பால் வடியும் நிலவுகள் பலியான கொடுமை.. .. என் தேசத்தில் காற்று கூட கிடைப்பதில்லை குழந்தைகளுக்கு.. புண்ணிய தேசம் என்றதெல்லாம் பொய்யோ பச்சிளங்குழந்தைகள் மூச்சு திணறுகின்றன.. பாவிகளே.. .. மாட்டுக்காக பரிதாபபடும் பாவிகள்.. மனித உயிர்காக்க மசிரை கூட புடுங்கவில்லை பிராணவாயு இல்லையென்று பிராணம் போனதை வருத்தப்படகூட மறுத்து மறைக்க நினைக்கும் ஊடக வேசிகள்.. .. மூவாரயிரம் பேரை கொன்றால் நாட்டின் பிதாமகனாகலாம் என்பதால்.. அறுபத்து மூன்று பிஞ்சுகளை கொன்று தொடக்கம் குறிக்கிறீரோ.. பாவிகளே.. உங்கள் காவி நிறத்திற்கு.. பிஞ்சுகளின் ரத்தம் தான் தேவைப்பட்டதோ.. .. வருத்தப்படுங்கள்.. மதம் தலைக்கேறிய துறவிகளை தேர்தெடுத்தால்.. பிள்ளைக்கறி கேட்பான் தன் நிலை உயர.. தளிர்களையும் காவு கேட்பான்.. .. குழந்தைகளே.. மன்னியுங்கள் இனியேனும்.. இந்நாட்டில் மாடாய் பிறந்திடுங்கள் .. இந்தியா.. பாவிகள் தேசமானது.. .. தோழர். ஆலஞ்சி

Waste fellow

திமுக சட்டசபையில் இதுவரை நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவரவேயில்லை என்றும் ஏற்கனவே நடந்தது நம்பிக்கை வாக்கெடுப்பு என்பது கூட தெரியாமல் முதல்வர் பேசுவதாக தளபதி ஸ்டாலின் .. இவ்வளவு தான் இவர்களது லட்சணம் தொடர்ந்து கும்பிடு போட்டு வளைந்தே பழகிப்போனதால் எதுவுமே தெரியவில்லை நம்பிக்கை வாக்கு கோரிய போதுதான் மௌன அஞ்சலி செலுத்தியதைப்போல அதிமுககாரர்கள் அமைதியாய் வீற்றிருந்தது..அது கூட சசிகலாவும் தினகரனும் சொல்லி கொடுத்ததை செய்தார்கள்.. இன்றைக்கு வகிக்கிற முதல்வர் பதவி அவர்கள் (சசி வகையறா) போட்ட பிச்சை.. இல்லையென்றால் எடப்பாடி குனிந்து வாய்பொத்தி தான் நின்றிருக்கவேண்டும்.. .. திமுக சபாநாயகர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவந்தது அது ஏனெனில் சபாநாயகர் தொடர்ந்து திமுக உறுப்பினர்களை பேச அனுமதிக்காமலும், பேசியதை சபை குறிப்பிலிருந்து நீக்கியும் உறுப்பினர்களை வெளியேற்றியும் செய்யும் பதவியின் பொறுப்பை அறியாமல் நடந்துக்கொள்கிறவருக்கு சபை விதிகளை விளக்க சொல்ல ஒரு சந்தர்ப்பமாக பயன்பட்டது ..அவரும் தவறை உணர்ந்து இனி இதுபோல் நடைபெறாதென்று வாக்குறுதி தந்தார்.. சபையை எப்படி நடத்தவேண்டுமென்றும் முன்பிருந்த சபாநாயகர்களின் நேர்மையை சபைக்கும் சபாவுக்கும் உணர்த்தவே சபாநாயகர் மீதான நம்பிக்கையில்லா தீர்மானம்.. .. அதிமுகவின் ரிங் மாஸ்டராக இருந்த ஜெயலலிதா இந்த அறிவிலி அடிமைக்கூட்டத்தை காலில் போட்டு நசுக்குறாரே என கோவம் கூட வந்தது இவர்களின் மீது பரிதாபம் தோன்றியது இவர்களை சுயமாக சிந்திக்க விடுவதே இல்லை என்று கூட எண்ணியதுண்டு.. ஆனால் இப்போதுதான் புரிகிறது.. இவர்கள் எதற்கு லாயக்கில்லாத கூமுட்டைகள் என்று இவர்களை நம்பி எதுவுமே செய்ய முடியாதென்று தெரிந்துதான் சசிகலாவை மட்டும் நம்பினார் போலும்.. இவர்களை ஆட்டுவைக்க சசிகலாவே சரியானவர் என தெரிந்து இவர்களை வெறுமனே சுமக்கும் ....போல நடத்தினார்.. அடிமையாக இருந்து பழக்கப்பட்டதால் இப்போது மோடிக்கு அடிமையாகி இருப்பதை காத்துக்கொள்கிறார்கள்.. இவர்களால் யாருக்கும் எந்த பலனுமில்லை.. பயன்பட தகுதியும் இல்லை.. Waste fellow.. .. #விவரகேடுகள் .. தோழர். ஆலஞ்சி

Thursday, August 10, 2017

இஸ்லாமிய இயக்கங்கள்

தலைவர்கள் சிந்தனைக்கென்று..நண்பர் Abu Haashima சில கருத்துக்களை பதிவிட்டிருந்தார் ஏன் அனைத்து இஸ்லாமிய இயக்கங்களும் மனித நேய மக்கள் கட்சி எஸ்.டி.பி.ஐ.கட்சி அன்சாரி கட்சி தேசிய லீக் கட்சி ..... தாய் சபை என அறிய படுகிற IUML முஸ்லீம் லீக்கோடு இணைந்து செயலாற்றலாம் என்று சொல்லியிருந்தார்.. #நன்று.. .. தமிழகத்தில் முஸ்லிம் இயக்கங்களின் எண்ணிக்கை அவர்கள் விகிதாசாரத்தை விட அதிகளவில் இயங்குகிறதென்றே சொல்ல தோன்றுகிறது. 100 பேருக்கு ஒரு கட்சி என்று கூட கிண்டலடிக்கிற நிலைமை.. உண்மையில் இஸ்லாமிய மக்களுக்கான இயக்கமாக எதுவுமே இல்லையோ என தோன்றுகிறது.. லீக் பிரிவினையில் அதிகார பகிர்வே காரணமாக இருந்ததும் (தேசிய அளவில் கூட) அதை தொடர்ந்து பலவீனமானதும் யாவரும் அறிந்ததும் தான்.. முதலில் முஸ்லிம்களிடைய ஒற்றுமை உணர்வு இல்லை அதைவிட யார் சமுதாயத்திற்கு சரியான வழிகாட்டுவார்களென்ற தெளிவில்லை அரசியலில் பலத்தை நிரூபித்தால் மட்டுமே பெரிய கட்சிகள் கண்டுக்கொள்ளும் என்கிற யதார்த்தத்தை உணராத சமூகமாகவே இருக்கிறது... .. எந்தவொரு சமூகமும் பிறரால் வீழ்ந்ததாக இல்லை சொந்த சமூகத்தினரின் செயல்களும் ,துரோகங்களும் மற்றவர்கள் மீதான அதீத நம்பிக்கையும் அந்த சமூகத்தின் வீழிச்சியை நோக்கி தான் இருக்கும்.. கருத்துவேறுபாடுகள் நல்ல தெளிவான சரியான பாதையை தரலாம் ஆனால் கொள்கை முரண்கள் வழிநெடுக முட்செடிகளை நட்டதைபோல ஆகிவிடும்.. .. பிற மாநிலங்களில் இல்லாத அளவிற்கு தமிழகத்தில் இஸ்லாமிய அமைப்புகள்/கட்சிகள் வளர என்ன காரணம்.. வேறெங்கும் காணபடாத இஸ்லாமிய பிரிவினைகள் இங்குமட்டும் எப்போதிலிருந்து வந்தது.. பி.ஜெ எனும் சமூதாய கெடுதி தமிழகத்தில் ஒற்றுமையை குறிவைத்து தகர்த்ததின் பின்னால் என்ற உண்மை நிறைய பேர் அறிந்திருந்தும் அந்த கயமையை தட்டிகேட்கவோ அல்லது புறக்கணிக்கவோ செய்யாததன் விளைவு.. ம.நே.ம.தொடங்கி அன்சாரி கிளை வரை.. அரித்துக்கொண்டிருக்கிறது சமுதாயத்தை என்பதுதான் நிதர்சனம் .. .. காலம் கடந்துவிடவில்லை கயவர்களை கலைந்து ஒருங்கிணைய வேண்டிய காலகட்டமிது.. கருத்துவேறுபாடுகள் ஒரு இயக்கத்தை சரியாக வழிநடத்தும் ஆனால் சில சுயநலவிசமத்தனங்கள் நிச்சயமாக எந்தவொரு இயக்கத்திற்கு பலன்தராது.. இஸ்லாமிய இயக்கங்களை இன்றைய காலகட்டத்தில் மிக சுலபமாக இல்லாமல் ஆக்க பாசிசவாதிகள் தேவையில்லை உள்ளிருக்கும் கயவர்களே போதும்.. நூற்றாண்டு கண்ட இயக்கம் தென்னகத்திற்குள் சுருங்கியதென் ..? என்றும் ஆய்வு செய்யவேண்டியிருக்கிறது.. தமிழகம் போன்ற மாநிலங்களில் இன்னமும் எஞ்சியிருக்கிற வேர்களை நம்புங்கள்.. சில கழிசடைகளில் கைகளில் கைபாவையாய் இளைஞர் ..கயவர்களின் மூளைச்சலவைக்கு ஆளாகியிருக்கிறார்கள்.. மீட்டெடுங்கள் மீண்டு வாருங்கள் ஒன்றுபட்டால்தால்தான் வென்றிட முடியும் என்ற யதார்த்ததை புரிந்துக்கொள்ளவேண்டும்.. நூற்றாண்டு பின்னிட்ட ஒரு இயக்கத்தை வலுசேர்ப்பது சமுதாயத்திற்கு மட்டுமல்ல நாட்டிற்கும் நல்லது.. .. #ஒன்றுபட்டால்_உண்டுவாழ்வு.. .. தோழர். ஆலஞ்சி

Wednesday, August 9, 2017

திமுக..

சிந்துபாடும் அருவியென சிதம்பரனார் பெருகி வந்தால் வண்டுபாடும் தமிழ்த்தென்றல் வாராமல் இருந்திடுமோ? தாய் அகத்தில் சுரக்கின்ற உணர்வோடு தாலாட்டு மொழியினிலே விடுதலைக்குப் போராடி வெற்றிகண்ட மாவீரர்-அவர், என் திருவாரூர்ப் பிறந்ததனால், "திரு.வி.க" ஆகிவிட்டார். நானோ…… "திரு.மு.க." ஆகவில்லை தி.மு.க ஆகிவிட்டேன்! -தமிழின முதல்வர் கலைஞர்.

முரசொலி

#முரசொலி.. ஒரு நாளிதழ் எழுபத்தைந்து ஆண்டுகள் தொடர்ந்து வருவதென்பது சாதாரணமான காரியமல்ல.. அதுவும் தொடர்ந்து திராவிட கொள்கைகளை தாங்கி வருவேண்டுமெனில் அதில் நிச்சயம் ஈர்ப்பு வேண்டும் .. ஆம் கலைஞரின் எழுத்துக்கிருந்த வசியம் தமிழர்களை தொடர்ந்து வாசிக்க செய்தது.. மிகப்பெரிய எண்ணிக்கையிலோ அல்லது பெரிய வருமானத்தையோ தரும் ஜனரஞ்சக பத்திரிக்கையல்ல விளம்பரங்களால் பக்கத்தை நிரப்பி காசு பார்க்கவில்லை.. ஒவ்வொரு வரியும் கொள்கை,தமிழ், தமிழர்நலன் சமூகநீதியென சமூகத்தின் மீதான அக்கறையை கொண்டு நடந்தது. .. இப்போது போல் முன்பெல்லாம் வலைதளங்களை செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்வதுபோல இயக்கம்/கட்சி சார்ந்தவிடயங்களை தெரிந்துக்கொள்ள முரசொலிக்காக காத்திருந்த காலம்.. கலைஞர் என்ன எழுதபோகிறார் /சொல்லபோகிறார் என எதிர்பார்ப்போடு முரசொலியை வாங்கிய காலம்.. கவிதை கட்டுரை கருத்தென கலைஞரின் வரிகள் மயக்கியகாலம்.. எங்களுர் படிப்பகத்திற்கு சிலநாட்கள் மதியத்திற்கு பிறகுதான் வரும் சிலநாட்கள் வராது மறுநாள் சேர்த்துவரும்.. அப்போது கூட அதை படிக்கிறபோது புதிதாய் செய்தியை தருகிறதைப்போல் இருக்கும் அதுதான் முரசொலியின் பலம்.. .. திருவாரூரில் கையெழுத்து பிரதியாக தொடங்கி கட்சியின் திராவிட இயக்கத்தின் பிரதான நாளேடாக வந்திருக்கிறதென்றால் அது கலைஞர் என்ற மனிதரின் எழுத்தும் செயலும் ஆற்றலும் தான்.. இப்போது இணையத்தில் வந்துவிடுகிறது என்றாலும் காத்திருந்து வாங்கிப்படித்த போது இருந்த மயக்கம் இப்போதில்லை.. .. கட்சி பத்திரிக்கை என்பதை தாண்டி ஜனரஞ்சமாக செயல்படாமல் போனது இழப்பை தந்திருக்கும் ஆனாலும் முரசொலி மீதான பார்வை கம்பீரமாக இருக்கிறது பாருங்கள் அது ஜனரஞ்சமாக்கப்பட்டிருந்தால் குறைந்து போயிருக்கும்.. தமிழர் வாழ்வில் ஒரு குறிப்பிட்டளவு தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது.. கடிமையாக உழைத்தால் கொண்ட கொள்கையில் உறுதியாக இருந்தால் எழுத்து கம்பீரமாக ,ஈர்க்ககூடியதாக இருந்தால் வெற்றிகரமாக வலம்வரமுடியுமென்பதற்கு முரசொலி சாட்சியம் வகிக்கிறது.. .. #முரசொலி_தமிழர்களின்கம்பீரம்.. .. தோழர். ஆலஞ்சி

கிறுக்குத்தனம்

இசை கூடாதென்கிறார் பி.ஜே.. இசையை தொடர்ந்து கேட்டால் சிந்திக்கும் திறன் குறையுமென கண்டுபிடித்திருக்கிறார்.. இசை.. புத்தியை மழுங்க செய்யுமா என கேட்டால் இல்லை இசை என்பது மன அமைதியை தரவல்லது .. சில இசைவடிவங்கள் மனிதனின் நரம்புமண்டலத்தில் ரசாயணமாற்றத்தை தரவல்லதென்கிறார் இசைஞானி இளையராஜா.. ஒருமுறை வேறொருவர் இசையமைத்த பாடல் கேட்டுக்கு கொண்டிருந்தபோது சில இசை வார்ப்புகள் மயக்கத்தை வரவழைத்ததாக அதாவது இந்த இசை தவறாக வடிவமைக்கப்பட்டிருக்கிறது அது சரியல்ல என்றார்.. ஆனால் இசையை சரியான நபர் கையாள்கிற போது மிக சிறந்த இசை வந்து நம்மை தாலாட்டும்.. .. இசையை தொடர்ந்து கேட்டால் சிந்திக்கும் திறன் குறையுமென சொல்வதை ஏற்கமுடியாது இசை நம்முள் சில மாற்றங்களை தரும் சில பாடல்களை கேட்கும் போது நம்மை ஏதோ செய்யும்.. கவலையை மறக்கவைக்கும் உணர்வை தூண்டும் காதல் வரும்.. கோவம் கருணை இப்படி உணர்வுகளின் மாற்றத்தை தரகூடும் ஆனால் அறிவின் மாற்றம் தருமா என்றால் அதை நம்புகிறவர்களின் உணர்ச்சியை,உணர்வை, மனநிலையை பொறுத்தது.. எம்ஜிஆர் பாடல் கேட்டு அவரை நம்பியதை போல.. அறிவுடையோரின் இசையை கேட்டால் அதை மனதேற்றால் அதைநோக்கி செலுத்தும் அதே போல் ஆன்மீகம் .. நாத்திகம் எதை சொன்னாலும் சொல்லும் இசைமொழி உங்கள் கவர்ந்தால் மட்டும் அதைநோக்கி செலுத்தும்.. ஆனால் காலம் வேறொரு வடிவத்தை ரசிக்க லயிக்க செய்கிறபோது மற்றொன்றின் மீது நாட்டம் வரும்.. .. இது உணர்வுகளோடு சம்பந்தபட்டதே தவிர அறிவோடல்ல.. இசை அழகிய உணர்வு.. அவ்வளவுதான்.. இன்றைக்கு பிடிக்கிற இசை மற்றொரு நாள் அதை இசையை கேட்கிற போது நமக்குள் எந்தவித உணர்வையோ மாற்றத்தையோ தருவதில்லை அன்றைய மனநிலையை பொறுத்தே ரசிப்பது வெறுப்பதும் கடந்துபோவதும் அவ்வளவுதான்.. இசையோடு சேருகிற போதுதான் கவிதைகள் கூட சட்டென்று மனதில் அப்பிக்கொள்கிறது.. இவர் நம்புகிற நேசிக்கிற வேதநூல் குர்ஆன் மிக சிறந்த கவிதை வடிவம்.. கவிதைகளில் இசையில் சிறந்து விளங்கிய அரேபியர்களை வெள்ளுவிளிக்கிறது குர்ஆன்..இதைவிட சிறந்த கவிதையை தரமுடியுமா என கேட்கிறது.. சிலர் குர்ஆனை ஓதுகிற போது (அது கூட இசைவடிவம்) நம்முள் ஒரு வித ஈர்ப்பை தருகிறது சிலர் அதை ஓதுகிற போது அத்தனை நயமில்லையோ என தோன்றுகிறது இது வேதங்கள் என்றில்லை எல்லா கவிதாகள் பாடல்களுக்கும் பொருந்தும். எதுவும் சிறந்த விளங்க மனதில் அப்பிக்கொள்ள இசையும் ஒரு காரணமாகிறது.. .. என்ன சொல்லவருகிறார் இசை கூடாதென சொல்லவருகிறாரா அப்படியெனில் அது கூடும்.. எனக்கு தெரிந்து உலகில் எல்லாவற்றையும் அறிந்த எல்லாவற்றிக்கும் விளக்கம் தருகிற .. எது சரி என்று மானிடர்களுக்கு போதிக்கிற மகாமேதை இவர் .. தனக்கு தெரியாதென்றோ அல்லது இதுகுறித்து வேறு யாரிடமாவது கேட்டு தெரிந்துக்கொள்ளுங்கள் என்றோ.. அல்லது வேறொருவரிடம் கேட்டு சொல்கிறேன் என்றோ சொன்னதே இல்லை எல்லாவற்றிக்கும் தீர்வு சொல்லும் மகான்.. ஒரு விடயத்தைப்பற்றி கேட்கிற போது நேரடியாக பதில் சொல்லாமல் சுற்றிவளைத்து நீண்ட விளக்கம் என்ற பெயரில் வளைத்தொடிக்கிறவர்கள் பொய்யர்கள்.. அதாவது தனக்கு சாதகமாக்க.., வழங்கி நிற்க செய்கிறாரென்றே பொருள்.. அதாவது உண்மையை மறைக்க முயலுதல் .. .. #கிறுக்குத்தனம் .. தோழர். ஆலஞ்சி

Tuesday, August 8, 2017

செயல்தலைவர் வழியில்

திரு.ஸ்டாலின் எதிர்க்கட்சி தலைவராக சிறப்பாக செயல்படுகிறார்.. தா.பா மற்றும் வைகோ.. கூட்டணிக்காக அல்ல இன்றைய சூழலில் திமுக தனித்து நின்றாலே மிகப்பெரிய வெற்றியை பெற முடியும் திருமா.. ஸ்டாலின் என்னை ஒரு பொருட்டாகவே மதிக்கவில்லை அன்புமணி... .. காலம் கடந்த ஞானோதயம்.. நடந்து முடிந்த தேர்தலிலேயே திமுக ஆட்சிக்கு வந்திருக்கவேண்டும்.. எல்லோருமே எதிர்பார்த்தது சிலரின் கயமைகளால் வாய்ப்பு தவறிப்போய் அதிமுக வென்று.. ஜெயலலிதா ஆட்சியும் மரணமும் ஜெயலலிதா வழக்கின் தீர்ப்பும் அதை தொடர்ந்து அதிமுகவை பாஜக மெல்ல தின்பதும் ..தமிழக உரிமைகள் ஒவ்வொன்றாய் எடப்பாடி அடகுவைப்பதும்.. தமிழக எப்போதுமில்லாத நிலையில் கவலைக்கொள்ள செய்திருக்கிறது.. ஆனாலும் .. நல்லதொரு நம்பிக்கையாய் திமுக அழுத்தமான தலைமையையும் இயக்கத்தின் அடுத்த கட்ட நகர்வை தளபதி கரங்களிலும் தந்திருப்பதும் நிம்மதி பெருமூச்சாய் ... .. இப்போது நடக்கிற ஆட்சியை இனியும் வைத்திருப்பதில் எந்த நியாமுமில்லை.. இதை தூக்கியெறிய துணைப்போவதால் தமிழக மக்கள் வாழ்த்துவார்களே தவிர வசைபாட மாட்டார்கள்.. அரசியல் இலக்கணத்தில் நேரம் பார்த்து கதை முடிப்பது கூட .. மக்களதிகார செயல் தான்.. எதுவரை அமைதி என்பதை நாம் தான் தீர்மானிக்கவேண்டும்.. ஜனநாயகத்தில் எதிர்க்கட்சிக்கென்று சில தார்மீக பொறுப்புகள் உண்டு மக்களை சிரமபடுத்துகிற வேட்டையாடுகிற அவர்கள் நலன்களுக்கு தடையாய் இருக்கிற பொறுப்பற்ற அரசை தூக்கியெறிவது கூட மக்களுக்கு செய்யும் உபகாரம்தான்.. இதுகூட ஜனநாயகநெறிமுறைதான்.. .. சரியான காலமிது என்பதற்கு நம்மோடு இருந்து நம்மை குறிபார்த்து எய்தவர்கள்.. முனைமழுங்கிய அம்புகளோடு இனியும் காரியமாய் எதுவும் செய்திட முடியாதென்பதறிந்து புகழ தொடங்கியிருக்கிறார்கள்... அவர்கள் வசைபாடிய போது எந்த மனநிலையில் இருந்தோமோ அதே மனநிலையில் அவர்கள் புகழ்கிற போதும் நமக்கு.. காரணம் வெற்றியை தோல்வியையும் நாம் சமமாக பார்த்தே பழகியவர்கள்.. ஆட்சி அதிகாரம் என்பது பணி செய்ய நல்வாய்ப்பாகவும்..எதிர்க்கட்சியாய் இருக்கிற போது மக்களோடு இணைந்து போராடுவதும் அவர்கள் நலன் சார்ந்து இயங்குவதுமாய் நம்மை பக்குவபடுத்தி தந்திருக்கிறார் கலைஞர் அவர்கள்.. இந்த ஆட்சியை அகற்ற நேரம் வந்துவிட்டதாகவே கருதுகிறேன் .. அதற்கான செயல்களை தளபதி நேர்பார்வையில் வருத்தப்படவேண்டும்.. தூக்கியெறிவோம்.. மக்கள் நலன்காக்க .. விரைந்து முடிப்போம் செயல்படுவோம்..செயல்தலைவர் வழியில்.. .. இனி அஞ்சோம்... #களைகளை_களைவோம் .. தோழர். ஆலஞ்சி

Monday, August 7, 2017

பாவிகள்.. காவிகள்

தமிழகத்தில் பாவிகளுக்கு இடமிருக்கும் போது காவிகளுக்கு இடமிருக்க கூடாதா தமிழிசை .. .. பாவிகள்தான் நாங்கள் எங்களை எச்சைகள் என்றும் பொறுக்கியென்றும் பேசிவிட்டு தலையோடு திரிகிறீர்களே நாங்கள் பாவிகள் எங்களை ஈரோட்டு பெருங்கிழவன் கட்டி போட்டிருக்கிறான் எத்தனை எதிர்ப்புகள் வந்தாலும் வசைபாடினாலும் செருப்பெறிந்தாலும் கருத்துக்களோடு மட்டுமே மோது என எங்களை செம்மைபடுத்தியிருக்கிறான்.. .. தமிழுக்கெதிராக தமிழனுக்கெதிராக பேசிவிட்டு தமிழகத்திலே நடமாட முடிகிறதே கர்நாடகாவிலே எச்.ராசாவை குருமூர்த்தியை போன்றோர் பேச முடிகிறதா.. மொழிக்கெதிராக கர்நாடக நலனுக்கெதிராக பேசிவிட்டு தெருவில் நடமாடிவிட முடியாது.. தேவடியாமகன் என இருட்டில் எழுதிவைத்தவனை பாவம் இருட்டில் எழுதியிருக்கிறான் அங்கே நமது செலவில் பெட்ரிமாஸ் லைட் வைப்போமென சொன்னவர்கள் நாங்கள். செருப்பெறிந்த போதும் அந்த இடத்தில் சிலைவைத்து நிமிர்ந்து நின்றவர்கள் .. அதனால் தான் கண்ட கண்ட கழிசடைகள் நீட் தேர்விற்கு விலக்களிக்காதது மகிழிச்சி அளிக்கிறதென பேசிவிட்டு அமைதியாக போகமுடிகிறது..நாங்கள் பாவிகள் தான்.. .. எங்கள் பெருங்கிழவன் அறிவுக்கொண்டு மோதென்றே எங்களை பழக்கியிருக்கிறான்.. எதையும் சிந்திந்துணரு .. அறிவேற்காததை ஏற்காதே மற்றவர்கள் கருத்திற்கு மதிப்பளி.. அவர்களின் உரிமைகளுக்கு தடையாகாதே அதே வேளை எதையும் பகுத்தாந்து ஏற்றுக்கொள்..உரிமைக்காக போராடு ஆயுதம் கொண்டல்ல அறிவுக்கொண்டு என பக்குவபடுத்தியிருக்கிறான்.. இதையெல்லாம் நாங்கள் ஏற்று நடப்பதால் தான் கலைஞரை திட்டியும் எங்களை பாவிகளென்றும் பொறுக்கிகளென்றும் சொல்லிவிட்டு நடமாட முடிகிறது.. .. யார் பாவிகள் அடுத்தவனை தாழ்ந்தவனாக எண்ணுகிறவன் அடுத்தவன் உரிமையை பறிப்பவன் ஒருசாராரை உயர்ந்தவனென்றும் மற்றவரை தன்னிலும் தாழ்ந்தவன் என்றும் பேசி திரிகிறவன்..ஏழைகள் வறுமை கோட்டிற்கீழே உள்ளவனை கைதூக்கிவிடாமல் பிச்சைக்காரன் என எள்ளிநகைக்கிறவன்.. எங்களவனை கொண்டே எங்களை குத்தி கிழிக்கிறவன் இவர்கள் பாவிகள்.. அதைவிட அடுத்தவன் உணவில் உணர்வில் தங்கள் சித்தாந்தத்தை திணிக்கிற காவிகள் .. மகாபாவிகள்.. .. #காவிகள்_மகாபாவிகள்.. .. தோழர். ஆலஞ்சி

ஆததாயி...

கோரிக்கைகள் நிறைவேற்றும் வரை தர்மயுத்தம் நடைபெறும் பன்னீர் செல்வம்.. இந்த ஆட்சியை கலைக்க சதி நடக்கிறது ஜெயகுமார்.. .. தர்மயுத்தம் அப்படின்னா என்னென்னு சத்தியமா தெரியல.. மகாபெரியவர் தெய்வத்தின் குரலில் இப்படிதான் சொல்கிறார் // #கொள்ளையடிக்கிறவன், நிலத்தைப் பிடுங்கிக் கொள்கிறவன், பிற ஸ்திரீயை அபகரிக்கிறவன் ..நெருப்புவைக்கிறவன் அதாவது குடிசையை கொளுத்துகிறவன் நிராயுதபாணியை ஆயுதம் கொண்டு தாக்குகிறவன்.. ஆகியவர்களை ஆததாயிக்களின் லிஸ்டில் வருகிறார்கள்.. அதாவது ஐந்து பெருங்குற்றம் செய்கிறவன் #ஆததாயி.. .. கொள்ளை அடித்தவனெல்லாம் அல்லது பதவி தந்தவரை கொள்ளையடித்தவனை புகழ்ந்து நின்றவன்.. அடித்த கொள்ளையில் பங்கு தந்து எஜமானரை குளிர்வித்தவன்.. பதவியை பறித்தவுடன் தர்மயுத்தம் என்பது நியாமில்லை.. அது சரி இதுவரை தர்மயுத்தம் முடிந்தபாடில்லையா.. ஏன் இந்த ஆட்சியை கலைத்துவிட்டு மக்களிடம் நீதி கேட்கலாமே.. அதற்கு முழு முயற்சி எடுக்கலாமே.. எடப்பாடி தினகரனை எதிர்ப்பதாக சொல்லும் இவர் எல்லாருக்கும் முந்தி சென்று மோடியுன் காலில் விழுவதேன்.. பதவிக்காக காட்டி கொடுக்கிறவன் பதவி தந்தவரையே ஏமாற்றுகிறனெல்லாம் தர்மயுத்தம் பற்றி பேசகூடாது.. .. ஆட்சியை கலைக்க பார்க்கிறார்கள்.. என்கிறார் ஜெயகுமார்.. எடப்பாடிக்கு ஆட்சியை பிச்சை போட்டதே சசிகலா தான் என்ற வெற்றிவேலின் பேச்சுக்கு பதில் இல்லை ஆம் உண்மையில் மத்திய அரசு சசிகலாவிற்கு தந்த நெருக்கடியை போல இந்திய அரசியலில் எவருக்குமே தந்ததில்லை ஜெயலலிதா கிரிமினல் என தெரிந்தும் முகர்ந்து பார்த்து மெச்சியவர்கள் சசிகலாவை சாக்கடை என்கிறார்கள்.. இதோ இப்போது நிதிஷ்க்கு வழங்கிய வாய்ப்பை கூட சசிக்கு வழங்கவில்லை அவசரகதியில் மாற்று ஏற்பாடு செய்வதற்கு அவகாசமல்லாமல் எடப்பாடியை கைக்காட்டினாரே தவிர .. கொஞ்சம் வாய்ப்போ அவகாசமோ இருந்திருந்தால் சசி குடும்பத்திலிருந்தே யாராவது வந்திருப்பார்கள் அப்போது இந்த ஜெயகுமார் போன்ற அடிமைகள் காலை நக்கி பிழைப்பு நடத்திருப்பார்கள்.. .. சசிகலாவை சரி என்பதல்ல நோக்கம்..எடப்பாடி பன்னீரை விட கேவலமானவர் அல்ல என்பதை சொல்லவேண்டியிருக்கிறது.. இந்த அரசும் ஆட்சியாளர்களும் விரட்டபடவேண்டியவர்கள் தமிழகத்திற்கு நல்லதொரு விடியலுக்காக இவர்களை போன்ற பதவிக்காக எதையும் செய்ய துணியும் மானங்கெட்ட கயவர்கள் அரசியலில் இருந்தே துரத்தப்பட வேண்டும்.. .. காலம் கனியும் நல்லதொரு விடியல் வரும். கீழ்வானம் சிவக்கும் #உதயசூரியன்_மெல்லென_சிரிப்பான்.. .. தோழர். ஆலஞ்சி

Sunday, August 6, 2017

திமுக ..எஃகு கோட்டை

கலைஞர் .. தமிழக அரசியலை துள்ளியமாக கணித்தவர்.. எந்தவொரு அமைப்போ கட்சியோ ஆரம்பிக்கும் போது சுருக்கமாக சிலர் வார்த்தைகளில் கருத்திடுவார்.. மதிமுகவிற்கு மறுபடியும் திமுக என்றார்.. அதிமுகவை பற்றி பேசும் போது. நடிக்கருக்கான கட்சி சினிமா கவர்ச்சி கட்சி மேக்கப்பில் ஜொலுக்கிறது கொள்கை எனும் ஆணிவேர் இல்லை காலம் கடந்து நிற்காது கலைந்து மறைந்து போகும் என்றார் .. எத்தனை நிதர்சனம் எவ்வளவு துள்ளியமான கணிப்பு ஆம் எம்ஜிஆர் தனது அபிமானத்திற்காக தொடங்கபட்ட கட்சி அது கவர்ச்சியை மட்டுமே மூலதனமாக கொண்டிருந்தது எழுபதுகளில் சினிமாவின் தாக்கம் தமிழக மக்களை மையம் கொண்டிருந்த காலம்.. சினிமாவை பொழுபோக்காக காணாமல் வாழ்வியலாக நம்பிய ஜனங்கள் நடிப்பை நிஜமென்ற நம்பிய மக்கள் அரிதாரம் பூசியவன் ஆண்டவனாக நடித்தாலும் அவன் ஆண்டவனில்லை என்கிற யாதார்த்தத்தை புரிந்துக்கொள்ளாத காலம் நேரமாக ஆக வேசம் கலையுமென்பதை உணர்கிற போது மெல்ல கரைய தொடங்கியிருக்கிறது .. .. கொள்கை ஆணிவேர் மக்களின் இதயங்களில் பதிந்ததால் தான்.. நிறைய வேறுபாடுகளிலும் திமுக தொடர்ந்து நிற்க முடிகிறது..எத்தனை விதமான எதிரிகள் அருகிலிருந்து அன்பாய் நடித்தவன் குரல்வளையில் கத்திவைக்கிற போதும் ஆணிவேர் வீழாது காத்துநின்றது.. அரசியலில் சமரசங்கள் தவிர்க்கமுடியாதென்றாலும் கொள்கையை விட்டுக்கொடுக்காமல் இயக்கம் ஒடுக்கபட்ட சமூகத்தை கை தூக்கிவிடவும் பிற்படுத்தபட்டவனின் உரிமைகளை காத்து ஆதிக்கம் செலுத்துவோரின் கோரபற்களை பிடிங்கி எறிந்தும்.. பாசிசத்தின் கோரதாண்டவத்தின் நிழல்கூட பாடாதவாறு காத்துநிற்க முடிந்தது.. தனிமனிதனை நம்பி அல்ல இயக்கம் இங்கே கொள்கை மறவர்கள் சமூகநீதியை பற்றிபிடித்துக்கொண்டு நிற்கிறார்கள் சரியான நபரை காலம் தேர்வு செய்கிறதே தவிர யாரையும் யாரும் இங்கே எடுத்தியம்ப முடியாது.. கருத்துசுதந்திரம் இங்கே பேணபடுகிறது அடிமைகளை வளர்த்துவிடவில்லை.. முறண்பட்ட கருத்தாயினும் இயக்கத்தில் பொதுவெளிகளில் விவாதங்களில் வைக்கமுடியும்.. தனிமனித விமர்சனங்கள் தவிர்த்து சுதந்திரமாக யாரும் கருத்திட முடியும்.. எதிராளிகளின் கருத்தை கூட காதோர்க்கும் கண்ணியம் இங்கே உண்டு அடக்குமுறை,திமிர்,அடிமைத்தனம், இவையெல்லாம் இங்கே காணமுடியாது.. காலங்கள் கடந்தும் திமுக வலிமையோடு இருப்பதற்கு அதிலும் தேர்தல் தோல்விகளின் போதும்.. அதே கம்பீரம் குறையாமல் நடைபோட .. சலவை செய்த கரைவேட்டியோடு வலம் வரமுடிகிறதென்றால் .. கலைஞர் சொன்னதைப்போல கொள்கையெனும் ஆணிவேர் அழியாமல் காத்துநிற்கிறது .. .. அதிமுகவின் கவர்ச்சி கலைந்து மறைந்து போகிறது.. திமுக கொள்கையால் கட்டமைக்கபட்டது காலம் கடந்தும் நிலைத்துநிற்கிறது.. .. தோழர். ஆலஞ்சி

Saturday, August 5, 2017

காதல் காமம்

.. காதுமடல் சிலிர்க்க நீ விடும் மூச்சில் கரைந்து நனைந்து.. உன்னுள் .. காணாமல் போனேன்.. கட்டிகரும்பாய் இனிப்பவனே.. நீ.. காதல் சொல்லும் பேரழகில்.. காமம் மறந்து போனேன்.. .. ராட்சசா திமிரில் விழும் உன் தோளுக்கடியில் முகம் புதைத்து என் நாசி நய்ந்து போனது இழுத்து விடும் பெரும்மூச்சு இன்பம் தந்தது.. .. காமம் .. அசிங்கமென்று சொன்னது. எவ்வளவு பொய்.. ஆழ்ந்து அறிந்து வீழ்ந்து கிடந்தால் அமுதம் கூட அரை காசுதான்.. .. காமம் பொய்யென்று யார் சொன்னார்.. சரியாய் சமமாய் நீண்டு கலவியால் பெருமகிழ்வு மகிழ்ந்ததை பேரு என்கிறேன்.. .. சரியானதாய் சரிசமமாய் கொடுத்தெடுத்தால் காமம் பேரழகு.. .. புற அழகில் மட்டும் வருவதல்ல காமம் அகமும் அறிந்துணர்ந்து ஆளத்தெரிந்து.. ஆழ்ந்தெடுப்பதில் அளவிளா..அளவிளா இன்பம் ..அதுவே காமம்.. .. தோழர். ஆலஞ்சி

இழிபிறவி..

sc என்ற இழிவு பட்டியலிருந்து... வெளியேற்ற வலியுறுத்தி போராட்டம்.. பள்ளர் இனத்தலைவர் என சொல்லிக் கொள்ளும் கிருஷ்ணசாமி.. .. இவர் வெளியேறி உயர்ஜாதி அய்யர் அய்யங்காராக கூட மாறி கொள்ளட்டும் அதற்காக sc பிரிவை பட்டியலினத்தை இழிஜாதி என சொல்ல இவருக்கு என்ன யோக்கியதை இருக்கிறது . இவரை மீது வன்கொடுமை சட்டத்தில் கைது செய்யவேண்டாமா.. .. அதாவது தாழ்த்தபட்டவர்கள் இழிவானர்கள் போன்ற தோற்றத்தை ..இதுவரை தாழ்த்தப்பட்டவனாக இருந்தவன் என சொல்ல வருகிறாரா.. தரம் தாழ்ந்து பேசுகிற வார்த்தை உண்மையில் இவரின் தரத்தை நமக்கு வெகுகீழாக காட்டுகிறது.. மிக மோசமான விமர்சனம் இது .. அதைவிட இவரின் மனநிலை ஏதோ தான் உயர்ந்தவன் மற்றவன் தாழ்ந்தவன் என்கிற போக்கை வெளிபடையாக காட்டுகிறது.. இவர் பட்டியலினத்தவன் என சொல்லிதான் மருத்துவம் பயின்றார்.. அப்போதெல்லாம் தெரியாதா..இதே பட்டியலினத்தவர் தொகுதியில் நின்றுதான் சட்டமன்றம் சென்றார் அப்போதே பொது தொகுதியில் நின்றிருக்கவேண்டியதுதானே.. வாக்கிற்கு மட்டும் தனி தொகுதி வேண்டியிருந்ததா..இப்போது ஏன் கசக்கிறது.. .. உண்மையில் மற்றவரை தாழ்வாக எண்ணும் மனநிலை கொடூர மனப்பான்மை உள்ளவர்களால் மட்டுமே முடியும் சக மனிதனை தாழ்த்தியும் தம்மை உயர்த்தியும் பிடிப்பவர்கள் மனநிலை பாதிக்கபட்டவர்களாகவே பார்க்கவேண்டும்.. உண்மையில் மதவெறி கொண்டு அலைபவன் கொடூரமானவர்கள் என்றால் அதைவிட தன் ஜாதியை உயர்த்தியும் பிற ஜாதியை கீழாகவும் பார்க்கிறவர்கள் வக்கிரமான மிக கொடூரமான மனநிலை பாதிக்கபட்டவர்கள்.. மதவெறியை தூண்டிவிடுகிறவனின் முதல் ஆயுதம் ஜாதியில் நீதான் உயர்ந்தவன் மற்றவர்கள் உன்னிலும் தாழே என புத்திசலவை செய்வதுதான் பிறகுதான் பிற மதங்களின் மீது குதிரை ஏறுவார்கள்.. .. என்னதான் sc பட்டியலினத்திலிருந்து bc/ mbc பிற்படுத்தபட்ட மிகவும் பிற்படுத்தபட்ட வகுப்பிற்கு சென்றாலும் ஏற்கனவே அங்குள்ளவர்கள் உங்களை இழிவாகவே பார்பார்கள்.. நீங்கள் பட்டியல் இனத்தவர் தாழ்ந்தவராக பார்த்தால் உம்மை பாப்பான் இழிபிறவியாக தான் பார்ப்பார்கள் அதைதான் எங்கள் #பேராசான்_பெரியார் உயர்ஜாதிக்காரர்களுக்கு நம்ம (sc st bc mbc) எல்லாருமே சூத்திரன் தான் என்பார்.. . முதலில் மனிதனை சக மனிதனாக சமமானவனாக உயர்ச்சி தாழ்ச்சியற்ற பிறவியாக பார்க்க தொடங்குங்கள்..மனிதம் தானாய் வரும்..இல்லையேல் மனிதாய் பிறந்தும் ஏதும் பயனில்லை.. .. #மனிதாய்_வாழ_பழகு.. .. தோழர். ஆலஞ்சி

Friday, August 4, 2017

நீட்..

காலம் தாழ்ந்து முறையிட்டதால் நீட் தேர்விலிருந்து விலக்களிக்க முடியாது பொன்.ராதா.. .. ஆரம்பம் முதலே தமிழகம் நீட்தேர்விற்கு எதிர்ப்பதை பொன்.ராதா அறிந்திருக்கவில்லையா.. திமுக தொடர்ந்து எதிர்ப்பதும் ஏன் முதலமைச்சராக இருந்தவரை ஜெயலலிதா மிக கடுமையாக எதிர்த்ததும் இந்த மரமண்டைக்கு தெரியாதா.. தமிழகத்தின் சார்பாக வெற்றி பெற்று சென்று கேரளாவிற்கு சாதகமாக பேசியவர்தானே இவர்.. .. தமிழக மாணவர்களின் எதிர்காலத்தை கேள்விக்குறி ஆக்கிவிட்டு தன் எஜமானர்களுக்கு ஆதரவாக பேசி திரிகிறார்.. முலைவரி கட்டமுடியாதென கூறி அறுத்துவிசியவளின் பேரன் காலில் விழுந்து கும்பிட்டு தன் குலத்திற்கே கேடாய் நிற்கிறான்.. இதோ மோடியின் சூழ்ச்சி இப்போது வெளிபட்டிருக்கிறதே என்ன பதில் சொல்ல போகிறார்.. அகில இந்தியளவில் மொத்த 28000 இடங்களில் ... 11020 இடங்களை குஜராத் மாணவர்கள் அதாவது ஏறக்குறைய 40% விழுக்காடு வெற்றி பெற்றிருக்கிறார்களே இது மற்ற மாநிலங்களை சேர்ந்த மாணவர்களின் உரிமையை பறிக்கும் செயலாகாதா.. குஜராத் மாநில மாணவர்களுக்கு எளிய கேள்வியை கேட்டு பெருமளவில் தேர்வாக வழி செய்தது அயோக்கியத்தனமில்லையா .. இதையெல்லாம் கேட்காத கண்டிக்காத அடிமைத்தனத்தில் ஊறிப்போன மரத்துப்போன ராதா அவர்கள் தமிழகம் காலம் தாழ்த்தி முறையிட்ட சொல்வது என்ன நியாயம் .. ஏன் இவருக்கு அந்த பொறுப்பில்லையா தமிழக மாணவர்களின் நலனை பாதிக்கிற நீட் தேர்வு இவர் தனது அதிகாரத்தை பயன்படுத்தி தடுத்திருக்ககூடாதா (அதிகாரம் இருந்தால் தானே) அல்லது மோடியிடம் சொல்லி இது எதிர்வினையாற்றும் என விலக்களித்திருக்கலாமே.. .. தமிழக அரசு காலம் தாழ்த்திருக்கலாம் அனுப்பிய நீட்தேர்வு மசோதா எங்கிருக்கிறதென்றே தெரியவில்லையென்ற பாப்பாத்தி திமிரில் பேசிய நிர்மலாவை கண்டித்து உடன் வழிவகை செய்திருக்கவேண்டாமா.. இவருக்கு தார்மீக பொறுப்பில்லையா..? வண்டிக்காரன் இல்லாததால் மாடு தாறுமாறாக ஓடிக்கொண்டிருக்கிறது.. தெரியாமல் வண்டியை ஓட்டுக்கிறவனோ திசை தெரியாமல் நிற்கிறான்.. இதெற்கெல்லாம் காலம் தரும் விடையாய் தீர்வாய் திமுகவை அறியணை ஏற்றுவதுதான் .. ஓரே வழி.. அதுவரை இவரை போன்ற அரைகுறைகள் துள்ளிகுதிக்கட்டும்.. கடைசியில் பலியாடாய் போவர்.. .. தோழர். ஆலஞ்சி

Thursday, August 3, 2017

கண்ணாடி..

கண்ணாடிக்கு வயதாகிவிட்டதோ.. முன்புபோல் அழகாய் இல்லை.. .. அம்மா தலைவாரிய போது அவளோடு சேர்ந்து சிரித்து நின்ற போது எத்தனை அழகாய் இருந்தது இந்த கண்ணாடி.. பள்ளிக்கு செல்லும் போது நான் பார்த்த அதே கண்ணாடி.. எத்தனை அழகாய் இருந்தது.. அரும்பு மீசை வர.. அண்ணனின் மல்லுவேட்டியை அவனுக்கு தெரியாமல் கட்டி நின்ற போது ஆஹா.. எவ்வளவு அழகு இந்த கண்ணாடிக்கு.. பெருநாள் திருநாளில் புத்தாடை உடுத்தி பூரித்து நின்றபோதெல்லாம் நல்ல ரசமாக இருந்தது இந்த கண்ணாடி காதல் வந்து தலையை சீவி..சீவி.. சிங்காரம் செய்த போதெல்லாம் எத்தனை பிரகாசமாய் .. ஜொலித்திந்த கண்ணாடி.. கல்யாண மாப்பிள்ளையாய் நலுங்கு தேய்த்து குளித்து நறுமணம் பூசி.. நின்ற போது பிரமித்து நின்ற கண்ணாடி.. கரம் பிடித்தவளை கழுத்தோடு சேர்த்தணைத்து காரியமாய் கிசுகிசுத்தை கண்டும் காணாமல் கள்ள மௌனம் காத்த கண்ணாடி.. .. நான் வரைந்த ஓவியம் என் கழுத்தை கட்டிக்கொண்டு கண்ணத்தில் முத்தமிட்டு தாடி குத்துத்துப்பா என்ற போது.. பேரழகாய் பெருமையாய் கர்வத்தோடு ஜொலித்த கண்ணாடி. .. என்னவாயிற்று இந்த கண்ணாடிக்கு ரசம் போனதோ.. முன்பு போல் அழகாய் இல்லை.. என் மீது பொறாமையோ என் அழகை பார்த்து பார்த்து புளித்துப்போனதோ .. ஆனால் ஒன்று சொல்வேன்.. ஏய்.. கண்ணாடியே.. நீ ... முன்பு போல் இல்லை புறத்தை பார்த்து பார்த்து புறத்தை காட்டி காட்டி உன் புறமும் மங்கிப்போனது இனியேனும்.. அகத்தை காட்டு அது .. பேரழகாய் மின்னும். .. தோழர். ஆலஞ்சி

Wednesday, August 2, 2017

அன்புமணி...

ஸ்டாலினிடம் கேட்டால் துரைமுருகன் பதில் தருகிறாரே.. அன்புமணி.. உண்மையில் துரை கூட பதில் அளித்திருக்க தேவையில்லை மாவட்ட செயலரே போதும்.. பதில் அறிக்கையில் இது துரைமுருகன் எழுதியதா என கேள்வியும் திமுக செய்த துரோகங்கள் என்றெல்லாம் சொல்கிறவர் திமுக செய்த போராட்டங்கள் அறிக்கைகளோடு பாமக போராட்டங்களையும் அறிக்கைகளையும் பட்டியலிடமா என கேட்கிறார். .. திமுக ஒரு போராட்டத்தை அறிவித்தால் அது எந்தளவிற்கு தாக்கத்தை தருமென மக்களுக்கு தெரியும் தினம் தினம் தெரு கோடியில் நின்று கத்துவதால் பலனில்லை எந்த போராட்ட வடிவமும் மக்களிடையே ஆதரவையும் ஆளும் அரசிற்கு சங்கடத்தையும் தரவேண்டும் இதுவரை பாமக அறிவித்த போரட்டங்கள் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறதா.. யாராவது சட்டை செய்கிறார்களா நாலோடு ஐந்தாக நின்றால் யார் கவனமும் வராது.. இதில் நாங்கள் தான் எதிர்க்கட்சியை போல செயல்படுகிறாராம்.. தேர்தலில் கட்டிவச்ச காசை கூட திரும்ப பெற வக்கில்லாதவர் நான் தான் சிறந்த மக்கள் செல்வாக்கு பெற்றவரென சொல்வது நகைச்சுவையாக கூட இல்லை.. .. என்னை பார்த்து காப்பி அடிக்கிறார் ஸ்டாலின் அடிக்கடி சொல்லும் வார்த்தை .. தமிழகத்திற்கே #அரசியல்_சொல்லி_கொடுத்தவரின் நிழலொட்டி வந்தவர்கள் நாங்கள் எதை எப்படி எங்கே செய்வதென அறிவோம்.. அடிக்கடி கூச்சல் போடுவதால் அரசியல்வாதியாகி விட முடியாது ஸ்டாலினைப்போல இவரும் நெடும்பயணம் செய்கிறார் என சொல்கிறோமா இல்லையே.. இவர் வன்னியர் அதிகம் வாழும் பகுதியில் புல்லட்டில் போகலாம் அது கூட அதே வன்னிய சமூகம் கைவிட்டதை மீண்டெடுக்க என்பதும் பெருவாரியான அந்தசமூகமக்களிடம் ஆதரவில்லையென்பதும் அறிவோம்.. முதலில் அரசியல் செய்ய கற்றுக்கொண்டு வரவேண்டும் ஒன்டிக்குகொன்டி வரியான்னு வேலைவெட்டி இல்லாதவன் வேணும்ன்னா சொல்லிக்கிட்டு திரியலாம்.. ஆனால் தளபதி அப்படியில்லை அவர் செயல்தலைவர் மட்டுமல்ல பொறுப்புள்ள எதிர்க்கட்சித்தலைவர்.. அவர் பதிலளிக்காததிலிருந்தே உமது மதிப்பும் யோக்கியதையும் புரிந்திருக்கும்.. தளபதி பதில் சொல்லவேண்டுமென்றால் முதலில் அதற்கான தகுதியை வளர்த்துக்கொள்ள வேண்டும்..அல்லது குறைந்தபட்சம் எம்எல்ஏ தேர்தலில் டெபாசிட் வாங்கியாவது இருக்கவேண்டும்.. அல்லது குறைந்த பட்சம் சிறியளவிலாவது மக்களின் மதிப்பை பெற்றிருக்கவேண்டும்.. திருமா கூட கட்டிவச்சகாசை பெற்றார்.. .. துரைமுருகன் பதிலளித்திருக்காரே என நினைக்கலாம்.. ரொம்ப சவுண்ட் அதிகமா போனா ஆப் பண்ணற சுவ்ட்ச் அண்ணன் கிட்டதான் இருக்கு அவர் கிண்டலா பதில் சொன்னாதான் சிலருக்கு உரைக்கும் அதனால சொன்னார்.. உனக்கு என்ன கேள்வி கேட்கணுமோ மறந்திடாமா எழுதிக்கிட்டு வா.. தம்பி பிரசன்னா போதும் அவர்கிட்ட பேசி ஜெயிட்டு..பிறகு வட்ட ..மாவட்டம்ன்னு பேசி ஜெயிட்டு பிறகு தளபதியை அழைக்கலாம்.. முதலில் கடைநிலையில் கட்சிக்காக உழைக்கிற திமுககாரனிடம் விவாதிக்க முடியுமா என்று பாருங்கள்.. .. என்னிடம் ஆட்சியை கொடுங்கள் ஒரே வாரத்தில் ஓஎன்ஜிசியை தமிழகத்தை விட்டே அனுப்புகிறேன் .. இதெல்லாம் மேடைபேச்சுக்கு சரி.. எம்ஜிஆர் தான் ஓஎன்ஜிசி க்கு அனுமதி தந்தார்.. ராஜஸ்தான் போன்ற மாநிலங்கள் அனுமதி மறுத்த போது இங்கே அழைத்துவந்தார் அரியலூர் போன்ற மாவட்டங்கள் வறண்டுபோக இதுவும் ஒருகாரணம்.. ஓஎன்ஜிசியை வெளியேற்ற வேண்டுமெனில் வழக்கு பேச்சுவார்த்தையென பலவருடங்கள் ஆகும் இதுகூட தெரியாமல் தன்னை சிறந்த நிர்வாகியென அவரே சொல்லிக்கொள்கிறார்.. #காலக்கொடுமை .. #முதலில்_தவழ_பழகுங்கள்.. .. தோழர். ஆலஞ்சி

அத்வாலே ..நிர்மலா..

திருநங்கைகள் சேலை அணியக்கூடாது மத்திய அமைச்சர் அத்வாலே.. பிச்சை எடுத்து தின்பவர்களுக்கு கேஸ் மானியத்தை நிறுத்தவில்லை பாப்பாத்தி நிர்மலா... .. திருநங்கைகளை இப்படிதான் உடையணியவேண்டுமென சொல்ல இவர்களுக்கென்ன உரிமை இருக்கிறது.. உ.பி.யை சேர்ந்த குடியரசு கட்சி தலைவர் மத்திய இணை அமைச்சர் அத்வாலே பேசியிருக்கிறார் முதலில் திருநங்கைகள் என அழைப்பதையே விரும்பாமல் கொச்சையாக பேசி திரிந்ததவர்களை கலைஞர் தான் திருநங்கைகளென அழைத்து அவர்களையும் இந்த சமூகம் மதிக்கவேண்டுமென செய்தார்.. ஹார்மோன்களில் ஏற்படும் மாற்றங்களால் ஆண் பெண்ணாக... அதை இந்த சமூக கொஞ்சம் இரக்கமின்றி வசைபாடுவதும் தொடர்ந்து கொண்டுதானியிருக்கிறது.. ஆண் பெண் இருபாலினங்களை அடுத்து மூன்றாம் பாலினம் என அழைக்கலாமென நீதிமன்றம் வலியுறுத்தியும் அவர்களுக்குரிய இடத்தை தர இந்த சமூகம் தொடர்ந்து மறுத்துவருகிறது.. இதில் இப்போது ஆண்களைப்போல உடையணிய வேண்டுமென அமைச்சரே பேசுவது முட்டாள்தனமானது அவர்களின் தனி மனித உரிமைகளை மட்டுமல்ல அவர்களின் விருப்பங்களுக்கெதிரானதும் கூட... திருநங்கை மட்டுமல்ல யாரையும் எந்த உடையணியவேண்டுமென நிர்பந்திப்பது அநாகரீகமானசெயல்.. நாளை பெண்கள் ஜீன்ஸ் போட கூடாதென்று கூட சொல்வார்கள்.. எவருடைய சுதந்தரத்திலும் தலையிட அரசுக்கோ ஆட்சியாளர்களுக்கோ உரிமை இல்லை.. .. பிச்சையெடுத்து தின்கும் கோவில் குருக்களுக்கு மானியம் ரத்து இல்லையென்கிறாரா.. ? நிர்மலா சமீபகாலமாக திமிரோடு பேசிவருகிறார் பிச்சையெடுத்து உண்பவர்களென யாரை சொல்கிறார்.. அர்ச்சனை தட்டை ஏந்தி நிற்கிறானே ஏழை குருக்கள் அவர்களை சொல்கிறாரா.. மனு ஸ்மிருதி பிராமணர் என்பவர் யாசித்தே உண்ண வேண்டும் என்கிறது கீதை.. அதைதான் சொல்கிறாரா..ஏனெனில் பார்பனர்களிலும் நிறைய உட்பிரிவுகள் உண்டு .. குருக்கள் வீட்டிலோ சாவுக்கு சடங்கு செய்யும் (திதி) பார்பான் வீட்டில் அய்யங்காரெல்லாம் சாப்பிட கூட மாட்டார்கள் பிச்சையெடுப்பவர்களிடம் பிடிங்கவில்லை என்ற திமிர்பேச்சு .. நேர்மையான முறையில் மக்களை சந்தித்து ஆதரவு பெற்று பதவிக்கு வந்திருந்தால் மக்களை மதிக்க தெரிந்திருக்கும்.. திறக்கப்படாத கதவுகளையே தங்களின் ஆயுதமாக்கி பதவிக்கு வந்தவர்களிடம் வேறென்ன எதிர்ப்பார்க்க முடியும்.. புறவாசல் வழியாக வருகிறவர்கள் பிச்சைகாரர்களை விட கேவலமானவர்கள்.. .. விடுதலை கிடைத்தும் இன்னும் மக்களை பிச்சைக்காரர்களாக வைத்திருப்பதை எண்ணி வருந்தப்படவேண்டாமா...என்ன காரணம் அனைத்து உயர்பதவிகளையும் ஒரு குறிப்பிட்ட சமூகமே அனுபவித்து மற்றவர்களை அவர்களிடம் அடிமையாக நடத்தியது யார்.? தொடர்ந்து மக்களை ஏழைகளாகவே வைத்திருந்தது யார் குற்றம்..? ஆட்சி அதிகாரமிருக்கிறதென்பதற்காக எதையும் செய்யலாம் எதைவேண்டுமானாலும் பேசலாம் எப்படி வேண்டுமானாலும் நடந்துக்கொள்ளலாம் என நினைத்தால் மக்கள் திருப்பி பதிலடி தருகிறபோது இருக்குமிடம் தெரியாமல் போவீர்கள்.. .. தோழர். ஆலஞ்சி