Wednesday, May 31, 2017
திராவிட நாடு
ஜெயலலிதாவின் 68 சொத்துகள் பறிமுதல் செய்து உத்தரவிட்டிருக்கிறது ஜெயலலிதா வழியில் நடக்கும் தமிழக அரசு..
நல்லது.. இதிலிருந்து ஜெயலலிதாவை திருடி என ஒப்புக்கொண்டு தீர்ப்பை அமலாக்குகிறது.. அப்புறம் எப்படி மக்கள் பணத்தை கொள்ளையடித்த ஜெயாவின் படம் சட்டமன்ற வளாகத்தில் திறக்க முயற்சியெடுக்கிறது.. அதுவும் பிரதமரையே அழைத்துவந்து கிரிமினல் படத்திறப்பு மிகப்பொருத்தம்.. ஆம் நாளை கோட்சே சிலையை பாராளுமன்றத்தில் நிறுவ இந்த செயல் முன்உதாரணமாக அமையும்..
..
தமிழகத்தில் ஒரு ஆட்சி நடக்கிறதா என கேட்கும் அளவிற்கு மிக மோசமான அசாதாரண சூழல் நிலவுகிறது.. மாட்டிறைச்சிக்கான மாடுகள் விற்பதற்கு ஏற்படுத்திய சட்டவடிவை தடைசெய்திருக்கிறது மதுரை உயர்நீதிமன்றம் ஆனால் ஆளும் தரப்பில் முதல்வரும் அமைச்சர் ஜெயகுமாரும் டெல்லியில் தம்பிதுரையும் கவனமாக படித்துவிட்டு கருத்து கூறுவதாக சொல்லியிருக்கிறார்கள்.. எழுத்துகூட்டி படிக்க இத்தனை நாள் வேண்டுமா.. கேரளாவில் தனி சட்டமே இயற்றியிருக்கிறார்கள்.. கொஞ்சம் கூடுதலாய் திராவிட நாடு பேச செய்திருக்கிறார்கள்..இங்கே காலில் விழுந்து கிடக்கிற சொரணையற்ற அடிமைகளாய் .. வீரம் பேசிய கவுண்டன் கவிழ்ந்து கிடக்கிறான்..வெட்கம் வெட்கம்..பதவிக்காக இத்தனை தலைக்குனிவு தேவையில்லை..
..
இங்கே மற்றொன்றை சொல்ல வேண்டும் திராவிட நாடு கோரிக்கை வந்தவுடனே அவசர அவசரமாக தாழ்ந்தவனை(செ.கு.தமிழரசன்) பிடித்து திராவிடநாடு கோரிக்கை மாயை என புதிய தலைமுறை பேசவைத்திருக்கிறது.. திராவிடம் இருக்கும் ஆரியம் இருக்கும் வரை என்பதறியாதவராய் உளறிக்கொண்டிருக்கிறார்கள்.. எதற்கும் எல்லை உண்டென்பதை உணர்ந்து திரும்ப பெற வேண்டுமென தளபதி.ஸ்டாலின் இன்றைய போராட்டத்தில் எச்சரித்திருக்கிறார்..
..
எங்கள் எதிரிகளே.. எங்களினத்தோரை கொண்டே எதிர்கருத்தை சொல்ல வைக்க முயற்சிக்கிறீர்.. ( செ.கு.த..கிருஷ்ணமூர்த்தி.. தமிழிசை..) பாவம் சிறகொடிந்தவர்கள் இயலாமையில் ஏதாவது தேறாதா என அலைகிறவர்களை கொண்டு ஏவி விடுகிறீர்.. பாவம் முனைமழுங்கிய அம்புகள் அவை..
நாங்கள் எப்படி எதை தேர்வு செய்யவேண்டுமென
தீர்மானிப்பது நீங்கள் தான்..
தளபதியின் எச்சரிக்கை தொடக்கம் தான்..
சின்னபொறி அதுபோதும்.. தீக்கரையாகிவிடும் .
..
#எச்சரிக்கை
..
தோழர். ஆலஞ்சி
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment