Sunday, May 14, 2017

கலைஞர்

கலைஞர் திறமைக்கு கொஞ்சம் கூட ஈடுகொடுக்கமுடியாதவர் ஸ்டாலின் .. தமிழிசை சௌந்தராஜன்.. .. உண்மைதான் தமிழிசை அவர்களே. தளபதி என்றில்லை இந்திய துணைக்கண்டத்திலேயே கலைஞரின் திறமைக்கு இணையானவர் என்று யாருமே இல்லை. அவரின் அரசியல் அறிவாற்றல் முன் நிற்கமுடியாதவர்களைதான் நாம் இதுவரை கண்டிருக்கிறோம்.. ராஜாஜி தொடங்கி இன்றுவரை கலைஞரின் சாதூர்யத்தால் விழுந்தவர்கள்தான் அதிகம்.. நான் வெற்றி தோல்விகளை சொல்லவரவில்லை ஜனநாயகத்தின் இருபக்கங்கள் அவை.. ஒரு இயக்கம் தோற்றுப்போனால் அதோடு திரைசீலை இழுத்துவிடுவார்கள்.. ஆனால் தோல்விகளில் கட்சியை கட்டுகோப்போடு நடத்துச்செல்வதென்பது இன்றைக்கும் யாராலும் முடியாமல் போகும்... .. தொடர் தாக்குதல்கள் பாசிசத்தின் கொடூரமான விசமேறிய கணைகள்.. இதோ இத்தோடு முடிந்ததென நகைத்தவர்களை வாயடைக்கவைத்த விந்தை.. வெற்றி தரும் போதெல்லாம் அது நமக்கு வழங்கப்பட்ட வாய்ப்பென கருதி இயன்றவரை இந்த சமூகத்தில் கடைகோடியில் நிற்பவனின் வாழ்வில் வசந்தத்தை கொண்டுவந்து.. அவனின் வளர்ச்சிக்கு பாடுபட்டு .. சமூகநீதியை எல்லோருக்கும் சமமான நீதியை பெரியாரின் பார்வையில் கண்டவர்.. .. விமர்சனங்களை கண்டு அஞ்சி ஓடியொளியவில்லை.. மிரட்டி வழக்கெல்லாம் தொடுத்து அடக்கிவைக்கவில்லை.. எதிர்மறை கருத்தாளனையும் மதித்து அவனுக்கு பாதுகாப்பு வழங்கிய மிகப்பெரிய ஜனநாயகவாதி .. யாரை எங்கே வைக்கவேண்டும் எந்த நேரத்தில் எதை பேசவேண்டும் என அறிந்த அரசியல்மேதை எப்போதும் பந்து தன்காலடியில் கிடக்கவைத்து.. தான் அடிக்கிற திசைநோக்கியே அரசியலை நகர்த்திய சாமர்த்தியன்.. என்பதாண்டுகள்.. அரசியலில் ஐம்பதாண்டுகள் தன்னைச்சுற்றியே சுழலவைத்த அரசியல் சாணக்கியன்.. .. எழுத்தும் சொல்லும்,செயலும் ஆளுமையோடு கூடிய அறிவார்ந்ததாய் வாய்த்தது இங்கே யாருக்குமில்லை.. இரண்டாயிரம் ஆண்டுகளில் இருவரை மட்டுமே சிறந்த தலைவர்களாக காணமுடியும் ஒன்று பெரியார் மற்றொருவர் கலைஞர் பெரியார் இந்த சமூகத்தின் ஏற்றதாழ்வை போக்க போராடினார்.. அதை செயல் வடிவில் செய்துகாட்டியவர் இந்த #பெரியாரின்நேரடிசீடன்_கலைஞர் .. இன்றைக்கு கலைஞரை கேலி செய்வோர் அடிப்படை அரசியல் தெரியாதவராக, அரைகுறை இனப்பற்றோடு ..சிலரின் உணர்ச்சிமிகு தூண்டுதலால் ஏதேதோ எழுதுகிறார்கள் .. இவர்களெல்லாம் விமர்சனம் செய்யவே தகுதியில்லாதவர்கள் அவரின் ஒற்றை திறமை முன் நின்று கதைக்க விவாதிக்க எவருக்கும் அருகதையில்லை.. .. கலைஞரின் அறிவாற்றல் முன் அரசியல் முன் நிற்பதற்கே யாராலும் முடியாது #காலம்தந்த_புதையல்..கலைஞர்.. அவரின் சிந்தனையையொட்டிதான் தளபதி நடக்கிறார்.. கலைஞர் தனிப்பெரும் தலைவர்.. #ஒப்பற்ற_ஓப்பிடமுடியாத_ஒரேதலைவன்… #கலைஞர்பெருமகன்.. .. தோழர் ஆலஞ்சி..

No comments:

Post a Comment