Monday, May 29, 2017

திராவிட நாடும் மாட்டுக்கறியும்

அடைந்தால் திராவிட நாடு இல்லையேல் சுடுகாடு என 1950 பேரறிஞர் அண்ணா முழங்கினார்.. திராவிட நாடு கோரிக்கை தந்தை பெரியாரால் முன் வைத்த போது அது பிரிவினைவாதத்தை மக்களிடையே வளர்க்கிறதென்ற எதிர்ப்பும் பலமாக வந்தது.. தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டு தென்மாநிலங்கள் அதன் வளர்ச்சியில் அக்கறையில்லாத அரசும்.. குறிப்பாக திராவிட இனத்தவர்களை புறந்தள்ளி அரசு அதிகாரத்தில் ஆளுமைக்கொண்டதும் .. ஒடுக்கப்பட்ட பிற்படுத்தப்பட்ட மக்களின் தேவை/உரிமை சார்ந்தும் திராவிட நாடு கோரிக்கையை வைத்தார்.. .. அரசியல் பங்களிப்பில் திமுக வருமென்ற நம்பிக்கையில் திராவிட நாடு கோரிக்கையை தற்காலிகமாக விடுகிறோம்.. என்றார்..ஆனால் நோக்கம்/காரணங்கள் அப்படியே இருக்கிறதென்றார்.. இதோ மீண்டும் உயிர்தெழ தொடங்கியிருக்கிறது டி.எம்.நாயர் மண்ணிலிருந்து.. இதை கேட்டவுடன் சிலர் பதட்டபடுகிறார்கள்.. மலையாளியை விட பாப்பானை நம்பலாம் என்கிறார் இதிலிருந்து பாப்பான் ஏமாற்றி வந்ததை ஒப்புக்கொள்கிறார்கள் இதுவரை வாய்மூடி இருந்தவர்கள் இவர்கள் மிகவும் ஆபத்தானவர்கள்.. தமிழிசை குரலில்/சொல்லில் பயம் தெரிகிறது பிரிவினைவாதிகளை இளைஞர்கள் நம்பவேண்டாமென்கிறார்.. பரந்த அகண்ட பாரதம் கேட்பவர்களுக்கு திராவிட நாடு கசக்கதான் செய்யும்.. .. மக்களின் உணவில் கை வைத்தவுடன்.. சாப்பிடும் தட்டை பிடிங்க நினைப்பவனின் மேல் கோவம் வருவது இயல்புதானே.. அதுதான் நடந்தது.. எம் மக்களின் உணவை வடநாட்டான் தீர்மானிக்கமுடியாதென கேரள முதல்வர் பிரணாய் விஜயனும் மாட்டுக்கறி தடையை ஏற்க முடியாதென கர்நாடக முதல்வர் சித்தராமையாவும் தெலுங்கானாவின் சந்திரசேகரராவும் நம்ம நாராயணசாமியும் எதிர்த்து அடிக்க தொடங்கி இருக்கிறார்கள்.. இன்னும் முழுமையாக படிக்கவில்லையென கமிழக முதல்வரும் தம்பிதுரை எம்பியும் வழக்கம் போல் அடிமைத்தனத்தை காட்டி நிற்கிறார்கள். தமிழகத்தில் எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பை பதிவு செய்திருக்கிறது.. பிரதான எதிர்கட்சியான திமுக 31 ந்தேதி போராட்டத்தை அறிவித்திருக்கிறது.. திராவிட நாடு முழக்கத்தை முன்மொழிந்த அண்ணாவின் இயக்கம் கையிலெடுக்கிறது.. காங்கிரஸின் மல்லிகாகிஜூன் கார்கே நாங்கள் மண்ணில் மைந்தர்கள் (திராவிடர்கள்) வந்தேறிகள் (ஆரியர்கள்) நீங்கள் என்பதை மறந்துவிட கூடாதென சொல்லியிருக்கிறார்.. நீறு பூத்த நெருப்பாய்..பெரியாரின் முழக்கம் #திராவிடநாடு ஐம்பதாண்டை கடந்தும் உயர எழுகிறது.. .. நாம் எந்த ஆயுதத்தை எடுக்கவேண்டுமென எதிரியே தீர்மானிக்கிறான்.. .. தோழர். ஆலஞ்சி

No comments:

Post a Comment