Thursday, June 1, 2017

கலைஞர்..

காதலி வரவிற்காக காத்து நிற்கும் காதலன் போல்.. தமிழ் கூறும் நல்லுலகு காத்திருக்கிறது.. தேனெடுத்து தினைமாவு கலந்து நீ தர வேண்டாம்.. வார்த்தை சித்தில் நம்மை வளைத்தெடுக்கவேண்டாம்.. உன் கரகரக்குலில் ஒரு வார்த்தை.. #என்உயிரினும்மேலான_உடன்பிறப்பே.. அது போதும்... காத்திருக்கிறது மொத்த தமிழகமும்.. வாஞ்சையோடு...காதல்கொண்டு.. .. மு.க.எனும் திராவிடத்தலைவனை காண ஆவலாய்..பெருங்கூட்டம் .. என்பதாண்டுகள் நிறைய ஏற்றதாழ்வுகள் ஆனாலும் கம்பீரமாய் வலம் வந்த சூரியன்.. இந்திய அரசியல் இதுவரை கண்டிராத அரசியல் சாணக்கியம்.. எதிர்த்தவனெல்லாம்..இடறிபோனான் அல்லது இடம்மாறி போனான்.. எதிரிகளின் படையை எப்போதும் கலங்கடிக்கும் ஆற்றல்மிகு அறிவுசார் சிந்தனை .. கடைசியில் எதிர்த்தவன் கூட புகழ்ந்தே போனான் எதிர்ப்பின் வலிமை கண்டு .. தோல்விகள் எப்போதும் கொண்ட கொள்கையில் மாற்றதை தரவில்லை மாறாக உரமேறிய தெம்பாய் எழுந்துநின்று ஆடியது.. .. எழுத்தும் சொல்லும் தமிழனின் வாழ்வில் வளமேற்றியது.. பதவியை தந்தபோது பணிக்கான வாய்ப்பாய் தமிழன் நலம் கண்டு சமூகநீதி காத்தது.. எத்தனை எத்தனை இடர்கள் .. அத்தனையையும் புன்முறுவலோடு ஏற்ற விந்தை இதுவரை யாரும் காணாதது.. அப்பப்பா எவ்வளவு துரோகிகள்.. கடைசி நிமிடம்வரை சிரித்து நின்று முகுகில் வாள் பாய்ச்சியவர்களை கூட சிறிய புன்னகையோடு மறந்து ஏற்றதை காணும் போது.. உள்ளத்தில் உயர்ந்த உள்ளம்..உறங்காதென்பதை உணர்ந்த கொண்டோம்.. பேரெடுத்து சொன்னால் பட்டியலே ஒரு புத்தகமாகும் அவ்வளவு துரோகிகள் ‍எதிரிகளைவிட துரோகிகளின் எண்ணிக்கை எண்ணிலடங்கா.. காட்டி கொடுத்தவன் கொல்ல துணிந்தவன் .. இலைமறைவில் எதிரிக்கு ஒற்றனாய் திரிந்தவன் உதட்டில் சிரிப்பாய் உள்ளத்தில் விசமாய் ... அப்பப்பா நெஞ்சே நடுங்குகிறது.. ஆனால் அத்தனையும் மறந்து மன்னித்து பணிசெய்து கிடைப்போமென .. வாழும் வரலாறாய்.. எழந்து நிற்கிறாய் ..யாரும் தொடமுடியாத உச்சத்தில்.. .. எதிரிகள் கூட எழுந்து நின்று கை கூப்புகிறான் உன் உயரத்தின் மகிமை கண்டு.. வா.தலைவா.. வந்து ஒரிரு வார்த்தை சொல்..அது இன்னும் சில நூற்றாண்டுகள்.. தமிழனை வாழவைக்கும்.. #உயிரினும்மேலான_உடன்பிறப்பே.. .. #இந்தியாவே_காத்திருக்கிறது_உன்_வரவிற்காக.. .. தோழர். ஆலஞ்சி

No comments:

Post a Comment