Monday, May 15, 2017
பிச்சை கபூர்
பிச்சை கபூர்..
என் எதிர்வீட்டு அண்ணன்..
வாழ்வில் பலபடித்தரங்கள் நிறைய பாடங்களை உணர்த்திவிட்டுபோகும்.. ஒரு மனிதனின் வாழ்வியல் பக்கங்கள் மற்றவரிடம் பெரியதாக்கத்தை தந்துவிடும்..அதற்கு பிரபலமாக இருக்கவேண்டுமென்பதில்லை..
..
எப்படி வாழகூடாதென்பதும் எப்படி அதிலிருந்து மீண்டு வருவதென்பதும் சிலரை கண்டு படிக்கவேண்டும்..இளமையின் வேகத்தில் செய்கிற சின்ன சின்ன விடயங்கள் அடியோடு மாற்றிவிடும்.. அண்ணன் பலதரப்பட்ட கெட்ட நல்ல பழக்கங்களை கொண்டவர்.. அந்தகாலத்து காதல்மன்னன்.. இவர் காதல் வரம்புகள் மீறியதாக .. வழுக்கிவிடாததாக இருந்தது நிறைய பேரின் கோவமும் எதிர்ப்பும் இருந்தது ஆனாலும்,உளஉறுதியோடு இருந்தார்.. இலக்கணம் மீறிய காதல்..
..
அரசியல் பார்வை இவருக்கு இருந்தது திமுகவின் உடன்பிறப்பு இவர்.. கலைஞர் தஞ்சை வருகிறார் என்றால் எந்த வேலையாக இருந்தாலும் ,போய்விடுவார்..அதேபோல தேர்தல் வாக்குபதிவன்று அதிகாலையிலேயே கரைவேட்டி கட்டி பூத் ஏஜெண்டாக (வாக்குசாவடி முகவர்) இருப்பார்.. ஒருமுறை நாடாளுமன்ற தேர்தல் சில முகவருக்கான அட்டை மட்டுமே என்னிடம் இருந்தது வேட்பாளருக்கு ஒருவர்தான் என்ற நிலை வந்தபோது என்னிடமிருந்து திமுகவின் முகவர் அட்டையை வாங்கிக்கொண்டு போனார் நான் சுயேட்சையின் சார்பில் இருந்தேன்.. எந்த நேரத்திலும் விட்டுகொடுக்காதவர்.. திமுக மாநாடு என்றால் முதல்நாளே இரண்டு உடுப்புகளை எடுத்துக்கொண்டு போய்விடுவார்.. மாநாட்டு திடலிலேயேதான் இருப்பார்.. மாநாடு முடியும்வரை..
..
ஆன்மீகமவாதி.. எங்களுர் நான்குகொடி பிரசித்தம் ஆளுக்கொரு கொடி என போட்டிபோட்டு பிரித்துக்கொள்வார்கள் இவர் உடல்நலம் பாதிப்பிற்க்குள்ளாகும் வரை இவருக்கென்று ஒரு கொடி இருந்தது..அன்று மட்டும் மதுவை தொடகூட மாட்டார்..அவ்வளவு ..அச்சம்மிகு ஆன்மீகம் அவருடையது..
..
சாதாரண மனிதர்களிடையே தான் வாழ்வின் அர்த்தங்கள் பொதிந்துகிடக்கும்.. வாழ்வில் விழுந்தவர்கள் நம்பிக்கையோடு எழுந்திட முடியுமென்கிற பொருள் பதிந்த வாழ்கை இவருடையது..
..
இவரின் மறைவு நிறைய சேதி சொல்கிறது..
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment