Tuesday, May 23, 2017
அரசியல்வாதி
ஒரு அரசியல்வாதி எப்படி இருக்ககூடாதென்பதற்கு வேறெங்கேயும் விட தமிழகத்தில் நிறைய பேரை காணலாம்.. இதில் நீண்ட அரசியல் பின்ணணி கொண்டவர்கள் முதல் ஆதாயம் ஒன்றையே குறிக்கோளாய் கொண்ட சமூகஆர்வலர்கள்..? வரை
தமிழகம் சீரழிகிறது..
..
யார்வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாமென்ற ஒற்றை சௌகரியத்தை வைத்துக்கொண்டும் .. எதை வேண்டுமானாலும் பேசலாமென்ற கருத்து சுதந்திரத்தை தவறாக புரிந்துக்கொண்டும் வருகிறார்கள்.. வருகிறவர்கள் முதல் அரிச்சுவடியை சரியாக படித்திருக்கிறார்கள் திமுகவை எதிர்ப்பது..ஆனால் அந்த அரிச்சுவடியை தாண்டி அவர்களால் சிந்திக்கவோ செயல்படவோ முடியவில்லை பாவம் தெரியவில்லை..
..
பொதுவாழ்விற்கு வருவதற்கான தகுதியாக ஜாதி மதம் மொழி ..இதோடு சினிமாபுகழ் இதுதானென தமிழர்களை நம்பவைக்கிற ஊடகங்களும் அதை நம்பி வாய்சவடாலுமாய் வீர வசனம் ..? கத்தி கூச்சலிட்டு ஜனநாயகத்தை கேலி கூத்தாக்கும் இவர்களையெல்லாம் காணும் போது கோவம் வருகிறது.. நினைவேந்தல் நிகழ்ச்சியென சொல்லி கைதுசெய்யபட்டவர்கள் 36 பேர் நாங்கள் தான் எதிரிக்கட்சியென்கிற நிலைக்கு வந்துநிற்கிறது.. தமிழகம்..
..
மொழி இன உணர்வென்பது நம்மீது திணிக்கப்படும் செயல்மீது காட்டவேண்டியதை மறந்து அவர்களையே துணைக்கழைத்து இன்னும் சொல்லப்போனால் அடிமைகளாகவே இருப்பேன் என எழுதிதந்ததைப்போல அத்தனை விசுவாசமாய் பதவிஆசை மறைக்கிறது ..
இப்போது அரைகுறைகளின் கூச்சல் அதிகமாக கேட்கிறது அதிமுகவை சிதைத்து அந்த வெற்றிடத்திற்காக இங்கே பெரும்சண்டையே நடக்கிறது தினம் தினம் தொலைக்காட்சிகளில் நாடகங்கள் ஆக்ரோசமாய் ஆனால் கடைசியில் நகைப்பிற்குரியதாய் போகிறது..
..
திமுகவிற்கு யார் எதிரி என்பதில் தான் இப்போதைக்கு அவர்களிடத்தில் .. பாவம் அவர்கள் அறியவில்லை யாரை எதிரியாக தேர்வு செய்யவேண்டுமென திமுகவே தீர்மானிக்கும் என அறியாமல்.. இவரிகள் தங்களுக்குள் சண்டை போட்டுக்கொள்கிறார்கள்.. ..
மத இன மொழியை சொல்லி பிழைப்போரே..உங்கள் கால்கள் முதலில் தரையில் நிற்கட்டும் பிறகு ஓட்டத்திற்கு அழைப்பதா என நாங்கள் தீர்மானிக்கிறோம்..
..
#வெற்றுகூச்சல்_காதடைக்கிறது..
..
தோழர். ஆலஞ்சி
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment