Thursday, May 11, 2017

அரசியல்.. மையம் திமுக..

"அரசியல் லாபத்துக்காகவே கருணாநிதிக்கு வைரவிழா நடத்துகிறார்கள்" - பொன். ராதா கிருஷ்ணன்.. .. திமுக அரசியல் கட்சிதான் என்று யாராவது அவரிடம் சொல்லுங்கள்.. பாஜகவை அதன் பாசிச கொள்கையை வேரோடு பிடிங்கியெறிய தான் திராவிட இயக்கம் தொடர்ந்து போராடி வருகிறது.. திடீரென பாஜகவோடு கூட்டுவைத்தபோது தெரியவில்லையா என கேட்பது புரியும் .. சமூகநீதிக்கு எந்த குந்தகமும் வராது என்ற புரிந்துணர்வில் ஆதரித்தது அது வரலாற்றுப்பிழையாகியதும் அறிவோம் அதனால்தான் தொடர்ந்து பாஜகவையும் ஆர்எஸ்எஸ் சித்தாந்தவாதிகளையும் வேரறுக்க தொடர்ந்து போராடிவருகிறோம்.. .. இங்கே ஒன்றை குறிப்பிட்டாகவேண்டும்.. 1967 தேர்தல் ராஜாஜியோடு கூட்டுவைத்தது திமுக அய்யா பெரியார் கூட கடுமையாக விமர்சித்தார்.. தேர்தல் முடிவு வர தொடங்கியதும் ராஜாஜி மிஸ்டர் அண்ணாதுரை முதல்வர் யாரென்று முடிவு செய்துவிடலாமே என்றார் அருகிலிருந்த கலைஞர் தனிப்பெருபான்மையோடு திமுக வெல்லும் அண்ணாதான் முதல்வர் என்றார்.. அண்ணா அப்போது நாடாளுமன்ற உறுப்பினர் .. வாயடைத்துப்போனார் ராஜாஜி.. அறுதிப்பெருபான்மையை திமுகவெற்றிப்பெற்றது.. நேராக பெரியாரை சென்று பார்த்தார் .. பெரியாரின் காலடியில் அண்ணாவின் கண்ணீர் துளிகள்.. அப்போது பெரியாரிடம் நிருபர்கள் கேட்டார்கள் உங்கள் மனநிலை எப்படியிருக்கிறதென்று.. புதுமணப்பெண்ணைப்போல பூரித்துநிற்கிறேன் என்றார்.. ராஜாஜி அண்ணாவை சந்தித்து எங்களை ஏமாற்றிவிட்டீர்கள் என்றார் அதற்கு அண்ணா.. காலங்காலமாய் எங்கள் இனத்தையே ஏமாற்றி வருகிறீர்களே நான் இரண்டுநாள் ஏமாற்ற கூடாதா என்றார்.. .. பாவம் அழைப்பார்களென நம்பியிருந்தார்கள்.. எங்களுக்கு அழைப்பில்லையா என கேட்டும் பார்த்தார்கள்.. மிக அழகாக தளபதி அவர்கள் பதிலளித்தார்கள்.. திராவிட இயக்கத்தை ஒழிப்போம் என்று கூறும் பாஜகவை வைரவிழா நிகழ்ச்சி மேடையில் அமர வைத்து அவர்களுக்கு தர்மசங்கடத்தை ஏற்படுத்த நாங்கள் விரும்பவில்லை #தளபதிஸ்டாலின்.. இப்ப புரியுதா தமிழிசை/ பொன்னார் அவர்களே.. .. இழந்த முகவரியை மீட்கவே திமுக வைரவிழா நடக்குகிறது..என்போரே.. திமுகவின் முகவரியில் தமிழக அரசியலே நடக்கிறது... இல்லாத முகவரியில் நின்று கொண்டு கதைக்கிறீர்.. என்ன கத்தினாலும் தமிழகத்தில் உங்களுக்கு #முகவரி கிடைக்காது.. #அறிந்தால்_நலம்.. .. தோழர் ஆலஞ்சி..

No comments:

Post a Comment