Tuesday, May 23, 2017
தேசிய தலைவராகிறார்
#ஜூன்3..
வைரவிழா.. மிக முக்கியமான நாள்..
இரு காரணிகளுக்காக மிகவும் கூர்ந்து கவனிக்கிறது நாடு..
..
தமிழக அரசியலில் மிக நீண்ட அரசியல் பயணத்தில் தொடர்ந்து பல்வேறு பதவிகளிலும் அரசியல் சமூகப்பணி கலைப்பணி,
பொதுசேவைகளிலும் கட்சித்தலைமையிலும்..
என்பதாண்டு அரசியலில் அறுபதாண்டு சட்டமன்ற உறுப்பினராக தோற்க்கடிக்க முடியாதவராக இருக்கும் கலைஞருக்கு நன்றி கூறும் விழா.. புகழ்பாடுதல் என்பதை கடந்து ஒரு எளிய மனிதன்.. மிகவும் பிற்படுத்தப்பட்ட சமூகத்திலிருந்து சமூக அக்கறையோடு கூடிய நெடுவாழ்வில் யாரும் தொட முடியாத இதுவரை யாருமே தொட்டிராத உச்சத்தை தொட்டமைக்கு நன்றி கூறும் நல்விழா.. இந்த சமூகத்தை சிலர் மட்டுமே ஆண்டும் மற்றவரை அடித்தமர்த்தியும் ஏற்றதாழ்வை சொல்லி ஏமாற்றி வந்த கும்பலை வேரோடு பிடிங்கியெறிய இந்த பெருமகன் பெரியாரின் பார்வையோடு ஆற்றிய அரும்பணிக்கு #நன்றி கூறும் நல்விழா..
ஐம்பதாண்டுகாலம் தன்னை சுற்றியே அரசியலை சுழலவிட்ட தான் காட்டும்/பார்க்கும் திசைநோக்கி வெளிச்சத்தை பரடவிட்ட இந்த கிழட்டு சூரியனுக்கு நன்றி கூறும் நல்விழா..
..
மற்றொரு காரணியும் உண்டு இந்த விழாவின் மூலம் நாடு சிக்குண்டு தவிக்கும் தீய மதவெறிகூட்டத்திலிருந்து மீள வழிவகைசெய்யும்/ வழிகாட்டும் புதியபாதையை நோக்கிய பயணத்தின் முதல் படியாய் எப்போதும் சமூகநீதி பேசும் தமிழ் மண்ணிலிருந்து துவக்கம் குறிக்கும் விழா இது.. தேசிய தலைவர்களை ஒருங்கிணைக்க நல்லதொரு விடியலை நாடு காத்திருக்கும் வேளையில் இந்த விழா பேருதவிபுரியும்..
தளபதி.மு.க.ஸ்டாலின் புதியதொரு பாதையை வடிவமைக்கிறார்.. நல்லதொரு முயற்சியாய் சரியான ஜனநாயக பாதையை புரிதலோடுகூடிய மக்களின் மனமறிந்து செயலாற்றும் சிறந்த வழியை பின்தொடர்கிறார்.. அது தமிழகமக்களின் நன்மதிப்பை பெறுகிறது .. தளபதி அவர்களை தமிழகம் தாண்டி தேசியளவில் எடுத்துச்செல்ல ..தளபதியின் அடுத்த கட்ட வளர்ச்சியை நோக்கி நகர்த்தும் விழா இது..
..
கலைஞரைப்போல தேசிய தலைவர்களில் போற்றப்படும் ஒருவராக இந்தியா முழுவதும் பேசப்படும் நபராக தளபதியை இந்த விழா எடுத்துச்செல்லும்..
..
#நல்லகாலம்_பொறக்குது..
..
தோழர். ஆலஞ்சி
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment