Friday, May 19, 2017

ரஜினி தலை காலி..

தமிழர்கள் ஏன் தரங்கெட்டவர்களாக நடந்துக்கொள்கிறார்கள் ரஜினி.. வலைதளங்களில் வரும் விமர்சனங்களை கண்டு ரஜினி திருவாய்மலர்ந்தது.. .. ஆம்.. தமிழனின் ரசனை தரங்கெட்டதால்தான் எம்ஜிஆரும் ஜெயலலிதாவும் தமிழக அரசியலில் காலம் கடத்த முடிந்தது.. சினிமாகாரனை/நடிகனை அரிதாரம் பூசி ஆளை மயக்கியவனை வைக்கவேண்டிய இடத்தில் வைக்காததால் தான் .. சினிமா பார்த்துவிட்டு அதை தியேட்டரிலேயே விட்டுவிட்டு வராததால்தான்.. காசுக்காக நடிப்பவன் அரசியலிலும் நடிப்பானென அறிந்து அறியாமல் போனதால்தான்.. இன்றைக்கு ரசனை தரங்கெட்டு போனதென சினிமா வியாபாரத்திற்காக அடிக்கடி மாறி மாறி அரசியல் வேடம் கட்டும் தரங்கெட்டவர்களுக்கெல்லாம் பதில் சொல்லவேண்டியிருக்கிறது.. .. சினிமாவை மனதில் ஏற்றி நிழலை நிஜமென்று நம்பி .. அரிதாரத்தில் கருப்பை எவனும் பூசாததால்..வெள்ளை நிறம் தமிழனை கொள்ளைக்கொண்டதால்.. அறிவு மழுங்கி ..சொல்பவனுக்கு செயலாற்றுபவனுக்கும் வேறுபாடறியாமல்.. சினிமா வசனத்தை தெருவில் பேசினாலும் கை தட்டி ரசிக்கும் எங்கள் ரசனை கீழ்த்தரமானதுதான்..மிக்க நன்றி.. ரஜினி அவர்களே.. தமிழனுக்கு உறைக்கிறமாதிரி சொன்னதற்கு .. .. இந்த தரங்கெட்ட ரசனைகாரர்கள் தந்த பொன்னில் மின்னுகிறீர்.. இப்போது கூட இந்த தரங்கெட்டவர்களை ஏமாற்றி இருக்கும் சில பொன்களையும் பிடுங்கதான் என்பதறிந்தும்.. சகித்துக்கொண்டிருப்பவன்.. ஒரு வார்த்தைக்காக.. மன்னிப்பு கேட்கவைத்த கர்நாடகவனை விட தரம்தாழ்ந்து நிற்பதை அவனுக்கு உறைக்கிற மாதிரி சொல்லியிருக்கிறீர்.. .. என்ன செய்ய இதிலிருந்து மீண்டு வந்தாலும் மீண்டும் மீண்டும் சவக்குழியில் தள்ளிவிடுகிற கொடுமை.. அறிவுக்கொண்டு எதையும் நோக்கமால் உயர் சிந்தனையை .. பகுத்தாயும் அறிவை ..தொலைநோக்கு கூடிய செயலாற்றலை வேண்டாமென வைத்ததால் கண்ட கழிசடைகளும் நம்மை தரங்கெட்டவர்களென பேசி திரிகிறது.. .. தமிழர்களுக்கு புரிந்தால் சரி.. #அரிதாரம்_நேரமானால்கலைந்துபோகும்.. .. தோழர். ஆலஞ்சி..

No comments:

Post a Comment