Wednesday, May 17, 2017
தூர்வாரப்படும் குளங்கள்
ஊரெங்கும் குளங்களை தூர்வாருகிறார்கள்..திமுகவினர்..
#மகிழ்ச்சி..
..
நீர்நிலைகளை தொடர்ந்து பராமரிக்க தவறியதின் விளைவு எங்கும் வறட்சியே காண்கிறோம்.. முன்பெல்லாம் குளங்கள் ஏரிகள் கோடைகால நீர் பற்றாக்குறையை சமாளித்தது.. இப்போதெல்லாம் ஆட்சியாளர்கள் என்றில்லை சாதாரணமானவர்கள் கூட ஆக்ரமிக்கிறார்கள்.. அருகில் குடிசை போடுவது கொஞ்சம் கொஞ்சமாக நீர்நிலைகளை ஆக்ரமித்து கட்டடமாகவே கட்டிக்கொள்கிறார்கள்.. நீர்வழித்தடத்தில் பாசனத்திற்கான #பட்டாவாய்க்கல் எல்லாம் காணாமல் போய்விட்டது..விளைநிலங்கள் கட்டடமான பிறகு நீர்வழித்தடங்களை அடைத்து அல்லது மூடிவிட்டார்கள் அதனால் குளங்களுக்கு சிறிய குட்டைகளுக்கு நீர்வரத்தின்றி காய்ந்து அதையும் கொஞ்சம் கொஞ்சமாக மூடிவிட்டார்கள்.. சில குளங்களை நகராட்சி,ஊராட்சிகளே குப்பை மேடாக மாற்றிவிட்டது..
..
ஒரு லட்சத்து மேலான குளங்கள் காணாமல் போனதாக புள்ளிவிவரம் சொல்கிறது இன்னும் கொஞ்சம் கூடுதலாக கூட இருக்கலாம். அரசாங்கள் செப்பனிட்டு தந்தாலும் மீண்டும் வலுத்தவன் ஆக்ரமிக்கிறான்.. சென்னை உயர்நீதிமன்றத்தில் 89 தொடரப்பட்ட வழக்கில் .. நீண்ட காலத்திற்கு பிறகு
2004 ல் என நினைக்கிறேன்
நீர்நிலைகள் (குளங்கள், ஏரிகள்,நீர்வழித்தடங்கள்,வாய்கால்,கால்வாய் குட்டைகள்) மீது கட்டப்பட்ட கட்டிடங்கள்
எது தனிநபருககானதாக இருந்தாலும் பொது மக்கள் பயன்பாட்டிற்கானதானாலும் #வழிபாட்டுதலங்களாக இருந்தாலும் (கோவில்,மசூதி,தேவாலயம், )
ஆனாலும் அகற்றப்படவேண்டுமென உயர்நீதிமன்றம் தீர்ப்பே வழங்கியிருக்கிறது..
ஆனால் அதை எந்த அரசும் கண்டுக்கொள்ளவில்லை..
..
அரசாங்கம் மட்டுமே எல்லாவற்றையும் செய்யவேண்டுமென்பதில்லை.. பொதுமக்களே தங்கள் ஊரில் உள்ள நீர்நிலைகளை தூர்வாரி
செம்மையாக்கலாம் .. வரும் மழைக்காலத்தில் நீரை சேமிக்க உதவும்.. இப்போது திமுகவினர் எல்லா ஊர்களிலும் குளங்களை தூர்வார பணித்திருக்கிறார் நல்ல முயற்சி .. தளபதி அவர்களோடு நாமும் சேர்வோம்.. அவரது முயற்சிக்கு துணைநிற்போம்.. பாராட்டுவோம்..
..
#நல்லதலைவன்_கிடைத்திருக்கிறான்
#நம்பிக்கை_பிறக்கிறது……
..
தோழர். ஆலஞ்சி..
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment