Saturday, May 13, 2017
மாறன்..
#மாறன்..
திராவிட இயக்க வரலாற்றில் மறுக்கவோ மறைக்கவோ முடியாத பெயர்..
கலைஞர் மருமகன் என்ற நிலையை கடந்தும் அவரின் எழுத்தும் செயலும் நிறைய செய்திருக்கிறது.. ஆனாலும் சில வரலாற்றுப்பிழைகளும் நடந்தேற காரணிகளில் ஒருவரென்பதையும் மறுப்பதற்கில்லை ..
மிசா காலத்தில் சிறையிலிருந்தபோது தான் திராவிட இயக்கவரலாறு பாகம் 1 எழுதினார்.. நம் ஊனிலும் உணர்விலும் கலந்திட்ட நிகழ்வுகளின் வரலாற்று தொகுப்பு .. அவர் பத்திரிக்கைத்துறையிலும் திராவிட சிந்தனையை தூக்கிப்பிடித்து கொண்டே வந்தார் வளந்தார்.. தொலைக்காட்சி ஊடகத்தை சரியாக புரிந்துக்கொண்ட முதல்தமிழன் என்பார் ப.சிதம்பரம் ..
ஆம் தொலைக்காட்சி ஊடகத்தை மிக சரியாக கணித்தவர் ..
அதன் (சன்குழுமம்) வளர்ச்சியில் திமுகவின் பங்கு மிகப்பெரியது.. ஆனால் அவர்கள் புதல்வர்கள்..கலாநிதி,தயாநிதி தொடர்ந்து எடுத்துச்செல்லவில்லை.. கலைஞரின் பங்கையே திருப்பிதந்து முழுவதுமாக அவர்கள் கட்டுபாட்டிற்குள் கொண்டுவந்தார்கள்..
..
#மாறன்கள்
முரசொலி மாறன் சுப்ரமணிய்யரின் மகளை திருமணம் செய்த போது..
வெளியே வராத ஆரியபகை..
முரசொலி மாறனை மீறி செயல்ப்பட முடியாமல் போனது ஒருகாரணமாக இருந்தது..
மல்லிகா தன் மூத்த மகன் கலாநிதிமாறனுக்கு குடகுவில் இருந்து காவேரியையுமம
தயாநிதிக்கு பிரியாவை(thehindu குடும்பத்திலிருந்து) என இரண்டு பிரமாணப் பெண்களை மணமுடித்து தன் ஆரிய பாசத்தை வெளிப்படுத்தினார்..
அது அவர்களின் குடும்ப விசயமாக இருந்திருந்தால் நாம் பேச போவதில்லை..
காவேரி கலாநிதி சன் குழுமத்தில் நுழைந்தப் பிறகு..என்னெற்ற மாற்றங்கள் ..
திராவிடச் சிந்தனையிலிருந்து.
மாறி..காவிகளின் காலடியில்
கொண்டுப்போய் சேர்த்திருக்கிறது..
..
ஒரு மாபெரும் தலைவனின் வைரவிழா ஊரே கொண்டாடுகிறது கட்சிபேதமின்றி பெருவிழாவாக கொண்டாடவேண்டும்.. கலைஞர் பெயரை சொல்லி வளர்ந்த சன்குழுமம் மிகப்பெரியளவில் நிகழ்ச்சிகள் கருத்தரங்குகள் ..என கொண்டாடியிருக்கவேண்டும்.. கலைஞரை தலைமேல் தூக்கிவைத்து கொண்டாடியிருக்கவேண்டும் செய்யதவறியதேன்.. கலைஞர் டிவி கூட ஏதோ என்றுதான் நிகழ்ச்சிகளை செய்கிறது...
..
இவர்களின் செயல்கண்டு..
#பண்ணபழகடா_பச்சைபடுகொலை என்ற பாவேந்தர் வரிகள் நியாபகம் வருகிறது..
..
#சன்குழுமம்_மாற்றான்கையில்..
..
தோழர் ஆலஞ்சி..
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment