Friday, May 19, 2017
பெரியார் தேசமிது
போராளி..
அதற்குண்டான மரியாதையையே போய்விட்டது திரு.ரஜினிகாந்த் அவர்களே.. சதா கூச்சலிடுபவன் போராளியா .. தினம் தினம் வெவ்வேறு கருத்தில் நின்று பேசி பிறகு மடைமாற்றி பேசும் இவர்களையெல்லாம் போராளி என்கிறீர்கள் பாருங்கள் உங்கள் அரசியல் பார்வை அபாரம்..
..
மக்களின் பிரச்சனைகளை வெகுமக்களின் ஆதரவை திரட்டி போராடுகிறார்கள் சிலர். சொற்பமேயெனினும் தங்கள் பங்கை கொள்கைபிறழ் இல்லாமல் செய்கிறார்கள்.. மக்களை ஒருங்கிணைத்து ஜனநாயகத்தின் அறவழி பிறழாமல் ஆட்சியாளர்கள் குலைநடுங்கவைப்பவர்கள் இருக்கிறார்கள்..
ஆனால் இவர்கள் ஒன்றில் உறுதியாக இருப்பார்கள் அது அவர்கள் ஏற்றுக்கொண்ட கொள்கையில் உறுதியாக இருப்பார்கள்.
செயல்களில் தவறிழைப்பதும் அதனால் தோல்வியை தழுவுவதும்.. அரசியல் வாழ்வில் தடுமாற்றங்கள் தந்தபோதும் போராட்ட உணர்வு அவர்களிடமிருந்து மாறியதே இல்லை..
..
கோமாளிகளை.. கொள்கைப்பிழைகளை .. ஏமாற்றுபவர்களை.. வழிகெடுப்பவர்களை, அறிவிலிகளை.. எதற்கும் உதவாதவர்களை. எல்லாம் போராளிகளென சொல்லி அசிங்கப்படுத்தாதீர்..
..
படித்தவர் என்கிறீர்.. மனதிற்குள் வன்மத்தோடு ஜாதியை முன்னெடுக்கும் வெறிப்பிடித்தவர்களை
விரட்டப்படவேண்டாமா.. அது சரி.. பெரியாரின் பாதையை தான் தேர்ந்தெடுப்பேன் என்கிறீர்.. பெரியாரை பேசாமல் அரசியல் அரிச்சுவடியை கூட எழுதமுடியாதென்பதை உணர்ந்திருக்கிறீர்.. இதை கூட ஆண்டவன்தான் சொன்னானா..?
ஆண்டவனை ஆம் தமிழ் மண்ணை ஆண்டவனை (கலைஞர்) அவனின் அரசியலை படிக்காமல் பின் பற்றாமல் .. பேசாமல் ஒரு செயலும் இங்கே நடக்காது... பெரியாரின் பாதை சமூகத்தின் ஏற்றதாழ்வுகளை கலைவது.. சாதிகளை ஒழிப்பது.. மதம் கொண்டு அலைவோரை வேரோடு சாய்ப்பது..
இதெல்லாம் மதம் தலைக்கேறிய உங்களுக்கு சரிவராது ரஜினி..
..
போய் அடுத்தபடத்திற்கான தலைப்பு ரெடிசெய்யுங்கள்..
#பெரியார்தேசமிது....
..
தோழர். ஆலஞ்சி..
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment