Monday, May 22, 2017
மதம் தலைக்கேறிய..விசம்
இந்துவை திருடன் என்றவர்களையே வைத்து குளங்களை தூர்வார வைத்துவிட்டான் இறைவன் ..தமிழிசை..
..
தமிழிசை அவர்கள் அரசியலில் பச்சகுழந்தைன்னு நினைச்சா மத விடயங்களிலும் பாவம்..
இந்துவை திருடன் என்று கலைஞர் கூறியதாக சொல்பவர்களுக்கு சேர்த்தே சொல்கிறோம்.. இந்து என்றால் யாரென்று என்று மகா பெரியவர் என்று நீங்கள் நம்புகிற காஞ்சி ஸ்ரீசரஸ்வதி சுவாமிகள் தன் அருளுரையில்.. வாணிபம் செய்ய வந்த அரேபியர் நமக்கிட்ட பெயர் .. அதாவது இந்து என்கிறார்.. அதாவது இந்து என்ற சொல்லே நீங்கள் இப்போதிருக்கிற அல்லது நம்புகிற இந்து மதத்தில் இல்லை என்கிறார்..
..
இந்து என்ற சொல் பார்சிய மொழியிலிருந்து வந்ததென்கிறார் இதற்கு (இந்து) விளக்கமளித்த சுப்ரமணிய அய்யர்.. அதை தான் மேற்கோள் காட்டி கலைஞர் சொன்னாரே தவிர.. இந்துவை திருடனென கலைஞர் சொல்லவில்லை.. மற்றொன்று குளங்களை தூர்வார ஆண்டவன் பணித்தான் என்கிற பொருள்பட பேசியிருக்கிறீர்.. உண்மையில் ஆண்டவன் சொல்லிதான் திமுக எதையும் செய்யும்.. தமிழகத்தை ஆண்டவன் சொல்லி தான் எதையும் திமுக செய்யும்..
..
ஒரு முறை கடவுளை ஏன் பிடிக்கவில்லை என கேட்டதற்கு கடவுள் எனக்கு பிடிக்க வேண்டுமென்பதில்லை கடவுளுக்கு பிடிக்கிறதா என்பதுதான் முக்கியமென்றார்..கலைஞர்
ஆம் அவரவர் நம்பிக்கையில் தலையிடுவதில்லை .. சொல்வது என்பதுவேறு .. கடவுளைப்பற்றிய கருத்தில் உறுதியாக எதிர்ப்பதென்பது வேறு ஆனால் தடுப்பதென்பது வேறு ..
ஒருமுறை சாய்பாபா கலைஞரை அவரது இல்லத்திலேயே சந்தித்தார் அப்போது அவரது அபிமானிகள் கடவுள் மறுப்பாளரை ஏன் சந்திக்கவேண்டுமென கேட்டதற்கு உங்களுக்கு கலைஞராக தான் தெரியும் அவர் ராஜராஜனின் மறுபிறவி.. மன்னரை சந்தித்தேன் என்றார்..
இதை பதிவதன் நோக்கம் மற்றவர்களின் நம்பிக்கையில் நாங்கள் தலையிடுவதில்லை என்பதற்காகவும் யாரையும் புண்படுத்குவதல்ல எங்களின் நோக்கம் என்பதற்காகவும் தான்.. ..
..
தூர்வாருதல் நல்ல செயல் அதை விமர்சிப்பதில் கூட கடவுளை மதத்தை பயன்படுத்தும் #கேடுகெட்டவராக இருப்பதை எண்ணும் போது இந்த தமிழச்சி மீது கோவமே வருகிறது..
மதம் தலைக்கேறியதன் விளைவிது..
மதம் பிடித்தால் செய்தவறியாது போகும்..
..
தோழர். ஆலஞ்சி..
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment