Tuesday, May 9, 2017

எது நீதி..

நீதி.. தள்ளாடுகிறது.. உச்சநீதிமன்றம் தன் நிலைப்பாட்டை தெளிவுப்படுத்தவேண்டிய கட்டாய சூழல் ஏற்பட்டிருக்கிறது.. நீதி யாருக்கு வழங்கப்படுகிறதென்று என யோசிக்கவைக்கிறது.. சட்டத்தின் முன் நிற்போரை கணக்கில் கொள்ளும் அவலநிலை .. உயர்மட்டத்தினருக்கு ஜாதிய அளவுகோலில் வழங்கப்படுகிற நீதியில் காட்டும் அவசரம்.. பிறருக்கென்கிற போது கள்ளமௌனம் காக்கிறது.. .. நீதிபதி கர்ணனின் குற்றசாட்டை ஆரம்பம் முதலே செவியேற்க மறுத்ததன் விளைவு ..அப்படியென்ன சொன்னார்.. உயர்நீதிமன்ற நீதிபதிகள் விலைபோகிறார்கள் என்ற குற்றசாட்டைதானே வைத்தார்.. அப்போது தொடங்கியது இப்போதுவரை முடிந்தபாடில்லை.. ஏறக்குறைய மெண்டல் என்கிற நிலைக்கு வந்து பரிசோதனையெல்லாம் செய்ய சொல்லியும்.. இவர் வன்கொடுமை தடுப்பு சட்டத்தை பயன்படுத்தி .. ஐந்தாண்டு ஆறுமாதம் சிறையென மாறி மாறி தீர்ப்பு சொல்லியும் நீதி காலுக்கிடையில் பந்தைப்போல.. .. இன்னமும் விடை தெரியவில்லை கர்ணனின் குற்றசாட்டிற்குபதில் என்ன..? நீதி யாருக்கு வழங்கபடுகிறது என்பது சரியா மிகசிறந்த உதாரணம் .. ஜெயலலிதா சொத்துகுவிப்பு வழக்கு.. 18 ஆண்டுகளுக்கு மேலாக இழுத்தடித்து தீர்ப்பு வந்த சில நாட்களுக்குள் பிணை வழங்கியது எந்த வகை நீதி.. தன் சொந்த உறவுகள் நீதிபதியாக இருக்கும் நீதிமன்றங்கள் வாதாட கூடாது என்ற நெறிமுறையை மீறி பரசுராம் வாதாடியதும் உடன் விரைந்து விசாரிக்கவேண்டுமென்றும் மூன்று மாதகாலத்திற்குள் தீர்ப்பை வழங்கவேண்டுமென்று அவசரம் காட்டியது.. எட்டாவது படிக்கிற மாணவனுக்கு தெரிந்த கணிதப்பிழையை தந்து விடுதலை செய்ததை கண்டிக்காதது ஏன்.. மேல்முறையீட்டு விசாரணை முடிந்து விரைந்து தீர்ப்பை வழங்காமல் காலம்தாழ்த்தி ஜெயலலிதா மரணத்திற்கு பின் வழங்கியது.. பட்டவர்த்தமாக தெரிகிறதே நூலின் வாடை.. இதைல்லாம் யார் சரிசெய்வது.. .. லல்லு பிரசாத் வழக்கில் தண்டனை பெற்றவுடன் மேல் முறையீட்டை விசாரிக்க 9 மாதம் சிறையில் இருக்க நேர்ந்ததே..ஜெயலலிதாவிற்கு ஒருமாத இடைவெளியில் பிணை வழங்கியதைப்போல லல்லுவிற்கு வழங்கவில்லையே ஏன்.. உச்சநீதிமன்றத்தில் யாருடைய ஆதிக்கம் இருக்கிறதென்பது தெரிந்த விடயம் தானே.. திரு.கர்ணனின் ஏட்டிக்கு போட்டி செயல் ஏற்றுக்கொள்ள முடியாது எனினும் அவர் கூறும் காரணங்களை ..கேள்விகளை புறந்தள்ளிவிட முடியாது.. .. விமர்சனமே செய்யகூடாதென்பது கூட #அநீதிதான்.. .. #நீதிமன்றங்கள்_சமநீதியோடு_செயல்படவேண்டும்.. .. தோழர் ஆலஞ்சி..

No comments:

Post a Comment