Sunday, May 21, 2017

பலியாடு

மெகா கூட்டணி.. தமிழகத்தில் மெகா கூட்டணி உருவாகிறது..பாஜக தமாகா புதியதமிழகம் அதிமுக அணி.. எனக்கு கூட ஆகா பெரிய லெவலில் கூட்டணியோ என தோன்றியது மொத்தமாவே சொந்த ஊரில் தொகுதியில் (எங்கஊர்) 10,000 வாக்கு வாங்கமுடியாத வாசனும் , ஒட்டபிடாரத்தை தாண்டி யாருக்குமே தெரியாத கிருஷ்ணசாமியும், சிதல்சிதலா போன அதிமுக ஓபிஎஸ் அணியும் #பொய்க்காலில் நடக்க முயற்சிக்கும் பாஜகவும் ரஜினியை வச்சு செய்றாங்க.. .. நல்ல முயற்சி.. இப்படி செய்வதும் திமுகவிற்கு தனிப்பெருபான்மையை பெற மிக இலகுவாகிப்போகும்..அன்புமணியை சேர்த்துக்கொள்ளலாம் பாவம் முதல்வர் கனவை ..சில ஆண்டுகள் கழித்து தொடரலாம்.. யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம் ஆனால் தமிழகத்தில் மட்டும் தான் நேரடியாக .. எந்த மக்கள் பணியாற்றாமல் மக்களின் அன்றாட பிரச்சனைகளைப்பற்றிய அறிவில்லாமல் .. எந்தவொரு பிரச்சனைக்காகவும் போராடாமல் முதல்வர் நாற்காலி கனவோடு வரலாம்.. .. விஜயகாந்த் எப்படி நேரடி முதல்வர் வேட்பாளரோ அதே போல ரஜினியும் கனவோடு வர.. சில்லறை கட்சியில் கைதட்டுகின்றன.. விஜயகாந்தை இல்லாதாக்கியதைப்போல ரஜினியையும் #பித்துகுளியாக்க கதை எழுதுகிறார்கள்.. பாவம் இதெல்லாம் பழைய #திரைக்கதை என்பதறியாமல்.. பாஜகவின் கதவு திறந்திருக்கிறது என்கிறார் அமிர்ஷா.. சூசகமாக மிரட்டுகிறார்.. வருமானவரி சோதனை வருமோ.. எச்.ராசா கக்கூஸில் பொறுக்குவதாக EPS ஐ சொல்கிறார்.. உண்மையில் பாஜகதான் கக்கூஸில் பொறுக்குகிறது. கதவுதிறந்திருக்கிறதென்று.. .. ரஜினிக்கு இருக்கிற ஒரே மார்க்கம் வேறுவழியின்றி இந்துத்துவா பேசும் பாஜகவோடு இணைவது அல்லது வழக்கம் போல நழுவி நழுவி செல்வது.. இல்லையெனில் இருப்பதும் போகும்.. பணம் உட்பட.. ஒரு முறை திரு.சோ.ராமசாமி இந்துத்துவாவில் உறுதியானவர் மத நம்பிக்கையில் விசுவாசமானவர் ஆனால் இப்போதைக்கு வந்தால் நிச்சயமாக தோல்வியையே தழுவுவாரென சொன்னார் இப்போதைய அதிமுகவின் வெற்றிடம் ஆசைக்கொள்ள வைத்திருக்கிறது.. பாவம் பழைய திரைக்கதையில் நடிக்க வருகிறார்.. ஓடாதென அறியாமல். .. #பலியாடு.. .. தோழர். ஆலஞ்சி

No comments:

Post a Comment