Monday, May 15, 2017
இஸ்லாமிய அமைப்புகள்
சில இஸ்லாமிய அமைப்புகள் ஆர்எஸ்எஸ் கைக்கூலிகளாக செயல்படுவதாக நண்பரொருவர் சொன்னார்.. அப்படியிருக்க வாய்ப்பில்லை அடித்துகூறவோ/கடந்துபோகவோ என்னால் முடியவில்லை..
..
ஆர்எஸ்எஸ் சித்தாந்தம் அறிந்தவர்கள் இதை மறுக்கமுடியாமல் கடந்து செல்லவேண்டியிருக்கிறது.. ஆரியர்களின் பிரதான எதிரிகள் என அறியபடுகிற திராவிட சமூகத்தை சிதைக்க விரும்பி அவர்கள் நடத்தும் நாடகங்களும் திரைமறைவு செயல்களையும் உற்று நோக்கின் சில உண்மைகள் புலப்படும்..
இந்திய துணைக்கண்டத்தை திராவிடன் தான் ஆண்டார்கள்.. அவர்கள் மொழியால் தமிழர்களாக அறியப்பட்டாலும் அதன் கிளை மொழிகளென அறியப்படுகிற தெலுங்கு மலையாளம் துளு,கன்னடமென பல்வேறு மொழிப்பிரிவுகளாக இருந்தார்கள்.. வரலாற்றாசிரியர் திரு. இரா.பாலகிருட்ணன் ..வட்டார மொழிகளின் ஒலி அளவைகள் The size of the sound
கிளை மொழிகளை தந்ததென்கிறார்.. குறிப்பாக திராவிட மொழிகள் பயன்பாட்டில் அதன் குறியீடுகள் தெரியுமென்கிறார்..குறிப்பாக இப்போது கூட மாவட்டங்கள் தோறும் உச்சரிப்பில் ஒலி அளவைகள் மாறுபடும்.. நெல்லைத்தமிழ் மதுரைத்தமிழ் .. தஞ்சைத்தமிழ் என்பதைப்போல..
ஆரியர்களுக்கு இந்திய துணைக்கண்டம் முழுவதுமாக ஆட்சியிலிருந்த திராவிடத்தை எதிர்த்தே நிற்கவேண்டிய சூழல் வந்தது..
..
விசயத்திற்கு வருவோம்..
இன்றைய சூழலில் திராவிடம் பேசுகிற கட்சிகளென்றால் அது திராவிடர்கழகமும் திமுகவும் தான்.. திராவிட கழகம் போராட்டம் கருத்தரங்கம், விழிப்புணர்வு பிரச்சாரம், வழக்கு, என்று தன்பாதையை வகுத்து செயல்படுகிறது .. அதுவரை ஆரியர்களுக்கு எந்த பிரச்சனையுமில்லை
ஆனால் திமுக அதிகாரத்தையும் சேர்த்து கேட்கிறது இங்குதான் அவர்களுக்கு இடைஞ்சல் வருகிறது அதனால்தான் நாலாபக்கமும் திமுகவை தாக்க /அழிக்க முனைப்போடு செயல்படுகிறார்கள்....
..
அவர்கள் அதிகாரத்தை கேட்காதவரை அவர்களுக்கு எந்த பிரச்சனையும் இல்லை மாறாக அதிகாரத்தை பிடுங்குவதையோ அல்லது தன்னைவிட தாழ்ந்தவன்/கீழாவன் என்பவனிடம் தருவதை விரும்பாமல் அல்ல பொறுக்கமுடியாமல் தான் அவர்கள் திராவிடம் பேசுகிற .. திமுகவை தனிமைப்படுத்த தொடர்ந்து செயல்திட்டங்களை முன்னெடுக்கிறார்கள் நேரடியாக ஊழல் வழக்கு ஆட்சிகலைப்பு ,என செய்தாலும் மீண்டும் மீண்டும் முன்னைவிட அதிக பலத்தோடு வீறுக்கொண்டு எழுவதை அவர்கள் ஜீரணிக்கவே முடியவில்லை.. அதற்காக மற்றொரு வழியில் இறங்குகிறார்கள்.. அதாவது திமுகவை தொடர்ந்து பின்துணைப்பவர்கள்.. நம்புகிறவர்கள் அவர்களின் தோழர்கள் ..இவர்களிடையே பிரிவினையை உண்டு செய்தால் ஓரளவு பலவீனப்படுத்த முடியும் தற்காலிகமாக என செயல்படுகிறார்கள்.. குறிப்பாக வெகுஜன மக்களிடையே மதரீதியான பிரிவினையை ஏற்படுத்த முயன்று தோற்றவர்கள் ஜாதிரீதியான பிரிவினைகளை கையிலெடுப்பவர்கள்.. திமுக நண்பர்கள் என அறியபடுகிற இஸ்லாமியர்களிடையே பிரிவினையை செய்து அதன் ஒரு பிரிவினரை திமுகவிற்கெதிராக திருப்பிவிடும் செயலை மிக சாமர்த்தியமாக செய்கிறார்கள்..
..
இது ஒருவகையில் பலனையும் தருகிறது.. இதன் மூலம் பலம்பெறுவது ஆர்எஸ்எஸ் என அறியாமல் திமுகவை எதிர்ப்பதன் மூலம் மறைமுகமாக உதவுகிறார்கள் இதை தெரிந்தே தான் செய்கிறார்கள் என்பதற்கு ஜெயலலிதாவை தொடர்ந்து பின்துணைத்ததே சான்று. ஜெயலலிதா பாசிச சித்தாந்தவாதி என அறிந்தும் தொடர்ந்து ஆதரித்தார்கள்..
இஸ்லாமியர்களை பிரித்தாளும் சூழ்ச்சி ஒரு பகுதி வரை வெறறிப்பெற்றதும் இப்போது தலித்களை அவர்களுக்கு வழங்கி நிற்க பிரித்தாளும் அதே யுக்தியை கையாள்கிறார்கள்..
..
இப்போது புரிந்திருக்கும்.. கபடநாடகம்..
..
தோழர். ஆலஞ்சி..
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment