Monday, May 22, 2017
திமுக தெளிந்த நீரோடை
அண்ணாவிற்கு பிறகு கலைஞரை எம்ஜிஆர் முதல்வராக்கினார்.. நாவலர் வந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும் சீமான்..
..
முதலில் இயக்க வரலாறு தெரியாமல் இதுபோல நிறைய பேர் பேசுகிறார்கள்.. அண்ணா மறைவிற்கு பிறகு தற்காலிக முதல்வராக நாவலர் பதவியேற்றார்.. திமுக செயற்குழு கூடி யார் முதல்வராக வேண்டுமென்று தீர்மானிக்கிறது..பெருவாரியான செயற்குழு/பொதுக்குழு உறுப்பினர் கலைஞர் பெயரையே முன்மொழிகிறார்கள் கலைஞர் முதலில் மறுத்தார் பிறகு எம்ஜிஆர், ப.உ.ச நாஞ்சிலார் போன்றவர்கள் கலைஞரை வற்புறுத்துகிறார்கள் அப்போது நாவலரும் மந்திரிசபையில் இடம்பெற வேண்டும் என நிபந்தனையோடு முதல்வராகிறார்..
..
அதே போல ஐம்பெருந்தலைவர்களில் கலைஞர் இல்லை என பேசுகிறார்கள்.. இந்தி எதிர்ப்பு வலுப்பெற்றிருந்த நேரம் டால்மியாபுரம் பெயரை அகற்ற கல்லக்குடியில் போராட்டத்திற்கு தலைமையேற்க அண்ணாவால் அனுப்பிவைக்கப்பட்டார் அப்போது சென்னையில் கைதானவர்கள் அண்ணா நடராஜன் நாவலர் உட்பட அப்போது தினத்தந்தி ஐம்பெரும் தலைவர்கள் கைதென்று முதல்பக்கத்தில் செய்தி வெளியிட்டது அதையே பின்வரும்நாள்களில் பேச தொடங்கினர் அன்றைய தினம் சென்னையில் இருந்திருந்தால் கலைஞரும் அந்த அட்டவணையில் வந்திருப்பார்..
..
நாவலர் என்றில்லை வேறுயாரும் கலைஞரை தவிர்த்து எம்ஜிஆர் உட்பட முதல்வராகியிருந்தால் திமுகவை #ஆழக்குழித்தோண்டி புதைத்திருப்பார்கள்.. நாவலர் சிறந்த பேச்சாளர் நல்ல திறமையான கல்வியாளர் அரசியல் அனுபவமுள்ளவர்.. அதெல்லாம் கட்சியை நிர்வகிக்க போதாது ..அரசை/ஆட்சியை நிர்வாக செய்ய பெரிய திறமையெல்லாம் தேவையில்லை ஆனால் கட்சியை தொடர்ந்து கட்டுகோப்போடு வைத்திருக்க மிகசிறந்த தலைமைப்பண்பு வேண்டும்.. இல்லையென்றால் ஆளுக்கொரு பக்கம் போய்விடுவார்கள்.. உதாரணம் தஞ்சைமாவட்டத்தில் மன்னைக்கும் கோ.சி.மணிக்கும் மாவட்ட செயலர் பதவியில் போட்டிவந்தது அப்போது தஞ்சை வந்தவர் இருவரையும் தன் காரில் அழைத்துக்கொண்டு கூட்டத்திற்கு போனார் தான் யாருக்கும் ஆதரவில்லை இருவருமே எனக்கு தேவை யாரை வேண்டுமானாலும் ஜனநாயக முறைப்படி தேர்வு செய்துக்கொள்ளுங்களென சொல்லாமல் சொன்னார்..
..
நாவலருக்கெல்லாம் அந்த தலைமைப்பண்பு தலைமையேற்கும் நிர்வாக திறன் இல்லை அதனால் அவரை குறைவாக மதிப்பிடுவதாக பொருளில்லை..மற்றொன்று கட்சியை தொடர்ந்து நடத்த மக்களின் செல்வாக்கும் மிக முக்கியம்..நாவலர் தனித்து நின்று களம்கண்டபோது ஆயிரத்தி சொச்சம் வாக்குகள் பெற்ற எஸ்.வி.சேகரைவிட குறைவாக வெறும் ஐநூறு வாக்குகளே பெற்றார் ..ஒரு தலைவனுக்கு மக்களின் ஆதரவு மிக முக்கியம்.. அது கலைஞருக்கு இருந்தது #கலைஞருக்கு_மட்டுமே_இருந்தது..
..
தொடர்ந்து கலைஞரை மட்டுமே குறிவைக்கிறார்கள் ஆனால் அவரின் சாதூர்யம் முன் செயலிழந்து போகிறார்கள்.. எதிரிகள் இன்று அதே அஸ்திரத்தை திரு.ஸ்டாலின் மீதும் பாய்ச்சுகிறார்கள்.. பாவம் பரிதாபகரமாய் தோற்றுக்கொண்டே..
காலம் தந்த கொடை #கலைஞரும்_தளபதியும்..
திராவிடஇயக்கம் தலைவனை தொடர்ந்து சரியாக தயார் செய்துக்கொண்டே இருக்கும் காரணம் இங்கே கொள்கையால் உணர்வால் இணாந்தவர்கள் வெற்று கூச்சலுக்கு
உணர்ச்சிவயப்பட்டு சீரழிந்து சோர்ந்துபோகமாட்டார்கள்..
..
#திமுக_தெளிந்தநீரோடை..
..
தோழர். ஆலஞ்சி..
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment