Friday, May 26, 2017

மாடு... மனிதனை தின்கிறது..

கால்நடைகளை இறைச்சிக்கா விற்க தடை மத்திய அரசு.. பசு காளை ஒட்டகம் சந்தைகளில் விற்க தடை கிறுக்கன்கள் கையில் நாடு காந்தி தேசத்தை பாப்பான் தேசமாக மாற்றிவிட நினைக்கிறார்கள். நான் என்ன உணவை உண்ணவேண்டுமென தீர்மானிக்க இவர்கள் யார்.. தனி மனிதரில் உரிமை அரசு தலையிட முடியாதென்கிறது சைவர்கள் உண்ணும் உணவைதான் மற்றவர்களும் உண்ணவேண்டுமென்பது எந்த வகை நியாயம்.. .. முதலில் இது சட்டரீதியாகவே சரியில்லாதது.. பெரும்பாலான மக்களின் உணவை தடை செய்ய சிறிய கூட்டம் மதத்தை கையிலெடுத்து வெறிக்கொண்டு ஆடுகிறது.. மாட்டை வெட்டாதே என கூறி மனிதனை காவுகேட்கிறது இந்த கேனபயகூட்டம்.. கடும்சட்டத்தின் மூலம் மக்களின் பழக்கவழக்க மாற்றிவிட முடியென எண்ணுகிற நினைப்பு பேரடியாகவே திரும்பும்.. ஆட்சியாளர்களின் சர்வாதிகார செயல் நீண்டநாட்கள் நிற்காது வெளிறி ஓடவேண்டிவரும்.. .. மாட்டிறைச்சி ஏற்றுமதிக்கு தடை விதித்தார்களா என்றால் இல்லை இறைச்சி ஏற்றுமதியாளர்கள் மாட்டிற்கெங்கே போவார்கள்.. சாதாரணமான விவசாயிகள் இனி மாடுகளை சந்தைகளில் வாங்க முடியாது விவசாயத்திற்கு வாங்கினாலும் கசாப்பிற்கென்று வழக்கு போடலாம். மாடுகள் விவசாயத்திற்கு பயன்படாமல் போகும் போது அதை என்ன செய்வது.. அதை பராமரிக்க செலவு செய்ய முடியாத நிலை வருமே.. சொற்பகாசிற்கு விற்றாலாவது வேறொரு மாட்டை வாங்க அந்த தொகை பயன்படுமே.. இதிலிருந்து மாட்டை மொத்தமாக பெரும் நிறுவனங்கள் வாங்கி அதைவெட்டி ஏற்றுமதி செய்யும்.. அதுதான் நடக்க போகிறது.. .. அடிமாடுகளை இனி என்ன செய்வது அப்படியே விட்டுவைத்தால் வியாதிதான் வரும்.. அதற்கும் செலவு செய்ய முடியாமல் ஏழை விவசாயிகள் தடுமாற போகிறார்கள்.. முட்டாள்தன முடிவுகள் ஆட்சியாளர்களை வீழ்த்தியிருக்கிறது.. ஹிட்லர் முதன்முதலில் யூதர்கள் வழிபாடு செய்ய தடை விதித்தார்.. கடைசியில் உயிர்வாழவே தடையென்றானது.. ஆனால் கடைசியில் ஹிட்லர் தான் வீழந்தார் .. ஒரு சமூகத்தின் மீதான அடித்தமர்த்தல் பன்முகதன்மை கொண்ட நாட்டில் நிலைக்காது.. நிறைய கருத்துவேறுபாடுகளை கொண்ட இந்திய தேசத்தில் ஒருசாராரின் வழிகளை பின்பற்ற சொன்னால் நாடு சிதறுண்டுபோகும்.. இப்படியே போனால்.. ஒருங்கிணைந்த இந்தியாவின் கடைசி பிரதமராக மோடி இருந்தாரென நாளை வரலாறு சொல்லும் #எச்சரிக்கை.. .. தோழர். ஆலஞ்சி

No comments:

Post a Comment